Jump to content

மனதை கவர்ந்த face book பதிவுகள்


Recommended Posts

டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

40 நிமி. ·

இத்தன வருசமா இங்க குப்ப கொட்னதுக்கு அசிஸ்டன்ட் டைரக்டராவாவது அலைஞ்சிருக்கலாம். தேவயானில ஆரம்பிச்சு டிடி வரைக்கு அவனுகதான் கவ்விட்டு போறானுக

Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply

சிகா பார்த்திபன்

1 மணிநேரம் முன்பு

Hussain Thala Rasigan

என்ன ஒரு வில்லத்தனம்...?.

கணவன் - செல்லம் எந்திரிடா

நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க

மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி

தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல

அதுக்குள்ள வந்துட்டாங்களா ?

வா்றவங்க ஒரு போன்

பண்ணிட்டாவது வரலாம்ல

இனி காலையில டிபன், மதியம்

சாப்பாடுன்னு மூணு நேரமும்

வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ

பேசுறத கேட்டு

கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...

மனைவி - போனா போவட்டும்

அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்

(ஐந்து நிடங்கள் கழித்த)

கணவன் - உண்மையாலுமே அவங்க

போயிட்டாங்கடி..

மனைவி - ஐயா....! ஜாலி

கணவன் - போறப்ப அத்தையையும்

மாமாவையும்

பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது

மனைவி -- (சற்று அதிர்ச்சியுடன்)

வந்தது எங்க அப்பா அம்மாவா ?

கணவன் -- (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே)

ஆமா

Link to comment
Share on other sites

Parthiban Viru JS Roshi

25 நிமிடங்களுக்கு முன்பு

உன் நெற்றியில் வியர்க்கும்போதுதான் நான் நினைத்தேன்.. அடடா நிலவிலும் நீர் இருக்கிறதென்று"......................!!

:D :d

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகா பார்த்திபன்

1 மணிநேரம் முன்பு

Hussain Thala Rasigan

என்ன ஒரு வில்லத்தனம்...?.

கணவன் - செல்லம் எந்திரிடா

நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க

மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி

தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல

அதுக்குள்ள வந்துட்டாங்களா ?

வா்றவங்க ஒரு போன்

பண்ணிட்டாவது வரலாம்ல

இனி காலையில டிபன், மதியம்

சாப்பாடுன்னு மூணு நேரமும்

வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ

பேசுறத கேட்டு

கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...

மனைவி - போனா போவட்டும்

அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்

(ஐந்து நிடங்கள் கழித்த)

கணவன் - உண்மையாலுமே அவங்க

போயிட்டாங்கடி..

மனைவி - ஐயா....! ஜாலி

கணவன் - போறப்ப அத்தையையும்

மாமாவையும்

பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது

மனைவி -- (சற்று அதிர்ச்சியுடன்)

வந்தது எங்க அப்பா அம்மாவா ?

கணவன் -- (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே)

ஆமா

 

உப்புடி உங்கை கன வீடுவளிய நடக்குது.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி பட்டாசு கொளுத்தி 'விழுப்புண்' பெற்றுருக்கிறீர்களா? :lol:

 

https://www.facebook.com/photo.php?v=10203864897927560&set=vb.1374055902&type=2&theater

 

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா...! மத்தாப்பு லுங்கி கட்டி ஆடட்டுமா...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி பட்டாசு கொளுத்தி 'விழுப்புண்' பெற்றுருக்கிறீர்களா? :lol:

 

https://www.facebook.com/photo.php?v=10203864897927560&set=vb.1374055902&type=2&theater

 

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா...! மத்தாப்பு லுங்கி கட்டி ஆடட்டுமா...!!

சுவரில் இருக்கும் படத்தை, அகற்றி விட்டுப் பார்த்தால், எல்லாமே 'யாழ்ப்பாணம்' மாதிரி தான் கிடக்குது! :lol:

 

சீன வெடி கொழுத்துபவரின் ' சண்டிக்கட்டு' உட்பட! :D

Link to comment
Share on other sites

கல்யாணத்துக்கு அப்புறமும்

ஒரு பொண்ணு தன்னோட செல் நம்பர்

மாத்தாம அதே சிம் கார்டு யூஸ்

பண்ணுன அவள் தான் கலியுக சீதை என அறிக......!

Link to comment
Share on other sites

உன் பெயரை நானும்

என் பெயரை நீயும்

ஒரே மரத்தில்

ரகசியமாய்

செதுக்கி வைத்ததில்

ஊர் முழுக்க

"கிசு கிசு" ஆகிப் போனது

நம் காதல் !!!!

Link to comment
Share on other sites

வெங்கடேஷ் ஆறுமுகம்

5 மணிகள் · தொகுத்தது ·

‪#‎பந்திக்கு_முந்துங்க‬

ஒரு கோப்பை இட்லி..! (மதுராந்தகம் ஹை-வே-இன் ஓட்டல்)

சென்னை மதுரை நெடுஞ்சாலையில் பிரயாணிப்பவர்களே (சொந்த வாகனத்தில்) உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மதுராந்தகத்தில் அமைந்துள்ள ஹை-வே-இன் ஹோட்டல்.! பொதுவாக வெளியூர் பயணங்களில் நல்ல ஓட்டல் அமைவது கர்ணப் பரம்பரையில் பிறந்தவர்க்கு கூட அமையாது அதற்கு ஸ்பெஷல் புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும்.!

இந்தக் கடை உண்மையில் அந்த புண்ணியம் செய்தவர்க்கு அமைந்த கடை.. உயர்தர சைவக்கடை என இவர்கள் எழுதலாம் ஆனால் இவர்கள் அப்படி ஏதும் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை.. பெரு நகரத்தின் உயர்தர சைவ உணவகங்களை விட விலை குறைவு... உணவின் தரமும் அதன் சுவையும் அதை தயாரிக்கும் நேர்த்தியும் பாராட்டத்தக்கது..!

எண்ணெய் குடிக்காத பூரி மசித்த உருளைக்கிழங்கு மசால், நெய் மணக்கும் குழைந்த முந்திரி வெண்பொங்கல், புளிக்காத பொன்னிறத்தில் வார்த்த தோசை, மிளகும் முந்திரியும் சேர்த்த ரவா தோசை, முறுகலான மசால் தோசை, சுடச்சுட கிடைக்கும் ஸ்பெஷல் வடை இப்படி பல இருந்தாலும் ஹை லைட் ஒரு கோப்பை இட்லி தான்!அதென்ன கோப்பை இட்லி

இட்லி எப்படி கோப்பையில் வரும் என்று கேட்கிறீர்களா.. ஆம் அது தான் அக்கடையின் பிரசித்தமான சாம்பார் இட்லி..! ஹை-வே-இன் ஓட்டலின் சிறப்பே அதன் சாம்பார் தான்.. பொதுவாக நல்ல சாம்பாரை வைத்தே அந்த ஓட்டலின் இதர உணவுகளைப் பற்றி சொல்லி விடலாம்.. சாம்பார் வைப்பது ஒரு கலை..அதை ரசித்து செய்பவரே சிறந்த மாஸ்டர்..!

மிகச் சிறப்பாக சாம்பார் வைப்பவர் தான் எல்லா உணவுகளையும் சிறப்பாக செய்வார் என்பார் என் தந்தை.. எங்கள் கடைக்கு வேலைக்கு வரும் மாஸ்டர்களுக்கு முதல் பரீட்சையே அதுதானாம்..! சாம்பார் சிறப்பாக அமைந்து விட்டால் உணவுக்கு தனி ருசி வந்துவிடுமாம்..!

அந்த சாம்பாரில் தான் எத்தனை வகை..! சாப்பாட்டு சாம்பார் வேறு டிபன் சாம்பார் வேறு..!

கொஞ்சம் தண்ணீராக நிறைய காய்கறிகள் இருந்தால் அது சாப்பாட்டு சாம்பார்.. அதாவது இலையில் ஊற்றினால் ஓடுவது சாப்பாட்டு சாம்பார்.. டிபன் சாம்பார் அப்படி அல்ல கெட்டியாக இருக்க வேண்டும்..இலையில் ஊற்றினால் ஓடாமல் மெதுவாக பாயாசம் போல பரவவேண்டும் ஒரிரு காய்கள் தான் இருக்கும்.. நிறைய காய்கள் இருக்காது..!

பொதுவாக டிபன் சாம்பார் சிவாஜி மாதிரி... சிங்கம் சிங்கிளாக வரும் என்பது போல ஒரு காய் சாம்பாராக தான் செய்வார்கள் வெங்காய சாம்பார், பூசணி சாம்பார், முருங்கை சாம்பார், பருப்பு சாம்பார், தக்காளி சாம்பார் என ஏதாவது ஒரு காயை மட்டுமே சார்ந்திருக்கும்..! இதற்கெல்லாம் பேரரசனாக ஒரு சாம்பார் உள்ளது.. !

அதுதான் அரைத்துவிட்ட சாம்பார்..! அதாவது கையால் மசாலா அரைத்து வைப்பது.. இதற்கு தான் ஈடு இணையில்லை.. சரியாக அமையாவிட்டால் சமையலும் சொதப்பிவிடும்.. பொதுவாக அரைத்த சாம்பாரில் சின்ன வெங்காயம் பரங்கிக்காய் போடுவார்கள்.. அதை சாப்பிடும் போது சிணுங்கும் குழந்தையின் பிடிவாதம் போல மெல்லிய இனிப்பு இருக்கும்.!

ஆனால் ஹை-வே-இன் ஓட்டலின் சிறப்பே அந்த இனிப்பு சுவை இல்லாது.. சாம்பார் நல்ல சுவையுடன் மணமாக இருப்பது தான்.. அவர்கள் பூசணி பயன் படுத்துவதில்லை சின்ன வெங்காயம், முருங்கை, அவரை என்று பயன் படுத்துகிறார்கள்.. சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது கூட அந்த இனிப்பு தெரியாத அளவு பக்குவமாக சமைக்கிறார்கள்..!

ஒரு பெரிய கோப்பையில் சூடாக 3 இட்லிகள் கோப்பை நிறைய சாம்பார் ஒரு ஸ்பூன் நெய்.. அதிலும் சாம்பாரின் சூடு அபாரமாக இருக்கும்.. மெல்ல ஸ்பூனால் அதை விண்டு சாம்பாரில் நனைத்து ஊதி ஊதி முதல் வாய் சுவைப்பது முதல் காமத்திற்கு ஈடானது.. அவ்வளவு ருசி.! சூடான உணவு எப்போதும் சுவையாக இருக்கும் அதிலும் இந்த காம்பினேஷன் சூப்பர்..!

இதற்கு தரும் தேங்காய் சட்னி.. பெரிய ஹீரோ படத்தில் நடித்த ஹீரோயின் போல.! அதிக ஸ்கோப் இருக்காது..யாரும் அதை தீண்ட மாட்டார்கள்.. ஆனால் கூடுதலாக சாம்பார் வாங்காமல் சாப்பிடுபவர்கள் அரிது.! இந்த சாம்பார் இட்லி ஜோடியை சிவாஜி -பத்மினிக்கு இணையாக சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும்..!

இங்கு எந்த அரசுப் பேருந்தும் நிற்பதில்லை எனும் போதே இதன் தரம் உங்களுக்கு தெரியும்..! தென்னிந்திய வட இந்திய உணவுகளும் சூப்பர் என்றாலும் இந்த ஓட்டலின் ஹீரோ - ஹீரோயின் சாம்பார் இட்லி தான் காலை 10 மணிக்கு மேல் கிடைக்காது.. என் பயணங்கள் சரியாக அங்கு ஒன்பது மணிக்கு இருப்பதை போல திட்டமிட்டு போவேன்..!மாலையிலும் கிடைக்கும்...

அடுத்த முறை மதுராந்தகம் வழியாக சென்றால் ஹை-வே-இன்னின் சாம்பார் இட்லியை சுவைக்க மறக்காதீர்கள்..!

மொதலாளி அந்த தொழில் ரகசியம் என்னன்னா..!

சமையலுக்கு தேவையானவை:

அரைத்த சாம்பார் 5 அல்லது 6 பேருக்கு சமைக்க..

துவரம் பருப்பு - 100கி... க.பருப்பு - 25 கி... வரகொத்தமல்லி - 20கி... வரமிளகாய் - 20 கிராம்... ஒரு முழு கேரட்... ஒரு சிறிய அல்லது பாதி முருங்கைக்காய்... பரங்கிக்காய் துண்டு சிறியது... உரித்த சின்ன வெங்காயம் 10... அரைமூடி துருவிய தேங்காய்... தக்காளி 3... ஒரு ஸ்பூன் நெய்... நல்லெண்ணெய் 50 மிலி... முழு மிளகு & சீரகம் - இரண்டும் தலா ஒரு சிட்டிகை.. கருவேப்பிலை கொத்தமல்லி கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க... உப்பு -தேவைக்கு... காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்...

சமைக்கும் முறை : துவரம் பருப்பை நன்கு குழைவாக வேக வைத்து எடுத்து தனியாக வைத்து.. பிறகு வாணலியில் 25 ml எண்ணை விட்டு மிளகு,க.பருப்பு, வரகொத்தமல்லி, வரமிளகாய் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.. சிவந்த பின்பு அடுப்பை அணைத்து விட்டு துருவி வைத்த தேங்காயை இதில் கொட்டி வறுக்கவும்.. தேங்காய் சேர்க்கும் போது அடுப்பு எரியக்கூடாது தேங்காயும் நன்கு கலந்தவுடன் கடைசியாக சீரகம் சேர்த்து இறக்கி வைக்கவும்.. இதை நன்கு ஆற வைத்து மிக்சியில் தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.. இப்போது மீண்டும் வாணலியில் கடுகு உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு தாளித்து வெட்டி வைத்துள்ள முருங்கை, தக்காளி, பரங்கி காய்கறித்துண்டுகளை வாணலியில் கொட்டி வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.. காய்கறிகள் வெந்ததும் மிக்சியில் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்... நன்கு கொதித்ததும் து.பருப்பை சேர்த்து கிளறி நுரை அடங்கும் அளவில் உப்பு சேர்த்து நெய்விட்டு இறக்கி விடவும்.. சுவையான அரைத்த சாம்பார் ரெடி..! இட்லி, தோசை, வெண்பொங்கல், உப்புமா, பணியாரம் அனைத்திற்கும் ஏற்றது..!

Link to comment
Share on other sites

கட்சியினர் சுய பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் - கருணாநிதி

// இருக்குற காசையெல்லாம் எடுத்து உண்டியில்ல போடு உடன்பிறப்பே .. சுசகமா நடந்துக்கோங்க

:D :d

Link to comment
Share on other sites

பகுத்தறிவு என்றால் என்ன?

கள்ளை ஒழிப்பதற்காக, நன்றாக வளர்ந்திருக்கும் தென்னந்தோப்பையே வெட்டி வீழ்த்துவதற்கு பெயர் தான் ‪#‎பகுத்தறிவு‬

Link to comment
Share on other sites

பகுத்தறிவு என்றால் என்ன?

கள்ளை ஒழிப்பதற்காக, நன்றாக வளர்ந்திருக்கும் தென்னந்தோப்பையே வெட்டி வீழ்த்துவதற்கு பெயர் தான் ‪#‎பகுத்தறிவு‬

 

பகுத்து அறிவது பகுத்தறிவு. பெரியார் சொன்னார் என்கிற காரணத்தினால் அச்சொல்லை வெறுப்பது எப்படி சரியாகும்?  :rolleyes:

 

ராஜபக்ச திருப்பதிக்குப் போய்விட்டார் என்பதற்காக தமிழர்கள் போகக்கூடாதா? :D

Link to comment
Share on other sites

பிரதி பலன் எதிர்பாராமல் செய்கின்ற உதவி மட்டுந்தான் ...

உங்கள் புண்ணிய கணக்கில் சேரூம் ...

Link to comment
Share on other sites

இயக்குனர் ஸ்ரீதர் அவரின் படத்துக்கு இசையமைக்க

தொடர்ந்து ஆறு முறை வந்தார் ..

அத்துனை படங்களுக்கு எம் எஸ் வி இசையமைத்து விட்டு என்னிடம் வருவது எனக்கு ஏற்புடையதாக தெரியவில்லை !

நிச்சயம் அவர் இசையினை மதிப்பிட முடியாது..

.

ஐந்து முறை தவிர்த்து வந்த நான் ஆறாவது முறையாக சொல்லிவிட்டேன்..

சார்,, உங்களுடைய 56 படங்களுக்கு எம் எஸ் வி அண்ணா இசையமைத்துள்ளார்.. அதில் எங்கும் எதிலும் எந்த தொய்வும் இருந்ததில்லை.. எல்லாமே சிறப்பான பாடல்கள்..!

.

உங்கள் அவசரத்துக்கு பாடல்களை போட்டு கொடுத்துவிட்டு. அதை போல அல்லாமல்

ஸ்ரீதர் பட பாட்டு கெட்டு விட்டது என்று அந்த கெட்ட பேரை நான் வாங்கி கொள்ள தயாரில்லை..இசையமைக்க முடியாது என்று மறுத்து விட்டேன்..!

>

அங்கே இருந்த பாரதிராஜா , அமர் எல்லாமே நீ சரியான மண்டைக்கனம் பிடித்தவன் என்று திட்டினர்.. அவர்களை போலவே பலரும்.!

>

ஆனால் அன்றிரவு நான் நிம்மதியாக தூங்கினேன்..

>

அதன் பின்னர் எம் எஸ் வி அவர்களை சந்தோசமாக சந்திக்க முடிகிறது..

நவராத்திரி நாளில் வந்த எம் எஸ் வி இடம் இதை சொன்ன போது ஆச்சரியமாக கேட்டார்..

>

நான் இப்படித்தான் .. எதற்காக ஒத்துக்கொள்வேன்.. ஏன் மறுக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்..

சில சமயங்களில் எனக்கே கூட தெரியாது.. .

>

பாஸ்கரும் , அமரும் , பாரதிராஜாவும் போல மண்டைக்கனம் என்று சொன்னாலும் ..ஆமாம் என்று சொல்லிவிட்டேன்.!

>

அன்றிரவு நிம்மதியாக தூங்கினேன் !

‪#‎இளையராஜா‬ !

Link to comment
Share on other sites

அடுத்தவனுக்கு கிடைத்தது

என்று சக மனிதன்

பொறாமைப்படாத ஒரே

விஷயம் ‪#‎மரணம்‬ மட்டுமே

‪#‎படித்ததில்_உரைத்தது‬

Link to comment
Share on other sites

வி. சபேசன்

2 மணி நேரம் முன்பு

இன்று கலைஞருக்கு 91 வயதாகிறது.

ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கலைஞரை பலர் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு அறியாமை, மனப்பிறழ்வு, கயமைத்தனம் என்று நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

கலைஞர் மீதான வெறுப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு அரசியலில் கலைஞரின் பக்கம் நிற்கிறார்கள் என்பதற்காக, எங்களோடு மிகக் கடினமான காலங்களில் எல்லாம் துணையாக நின்று ஆதரவு தந்த ஐயா வீரமணி, ஐயா சுபவீரபாண்டியன் போன்றவர்களை வசைபாடுகின்ற அளவிற்கு மனப்பிறள்வு முற்றிப் போய்க் கிடக்கின்றது.

எங்கள் பக்கத்தில் நடந்த தவறுகளை மறைக்கின்ற கயமைத்தனமே இதில் முக்கியமானது. எங்களின் தவறுகள் பேசப்படுவதில்லை. மேற்குலக நாடுகளின் பங்கு இதில் என்ன என்பது பற்றி பேசப்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் முதற் குற்றவாளி ஆக்கப்பட்டு விட்டார்.

போர் முடிவதற்கு பத்து நாட்களின் முன்னர் நடேசன் தமிழக வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளிக்கிறார். அதில்தான் தீபன் போன்ற தளபதிகள் வீரச்சாவு அடைந்து விட்டார்கள் என்பதையும் அறிவிக்கின்றார்.

அதில் நடேசன் போரின் நிலைமை பற்றி சொல்கின்ற போது 'இராணுவத்தினர் பலத்த அழிவை சந்தித்து விட்டார்கள், களைத்துப் போய் விட்டார்கள், நாங்கள் நடந்து போயே அவர்களை விரட்டி அடிக்கின்ற நிலையில் நிற்கின்றோம்' என்பதாக சொல்கின்றார்.

உண்மையில் போராட்டம் அழியப் போகிறது என்கின்ற செய்தி கலைஞருக்கு சரியான முறையில் தெரிவிக்கப்பட்டதா என்கின்ற கேள்வி இங்கே இருக்கின்றது. அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால், அழிவை தடுப்பதற்காக கலைஞர் தெரிவித்த ஆலோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட்டதா என்கின்ற இன்னொரு கேள்வியும் இருக்கின்றது.

கலைஞர் தமது பதவியை ராஜினமா செய்திருந்தால், தமிழ்நாட்டில் திமுக இயக்கம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கும். ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாயே திறந்திருக்க மாட்டார். புலிகளால்தான் மக்கள் அழிகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்திருப்பார்.

முள்ளிவாய்க்கால் முடிவு எக்காரணம் கொண்டும் மாறியிருக்காது.

ஈழத்தில் ஒரு இன விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்றால், அதே போன்று தமிழ்நாட்டில் ஒரு சமூக விடுதலைப் போராட்டம் ஆண்டாண்டு காலமாய் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அதில் திமுக கட்சியினதும் கலைஞரினதும் பங்களிப்பும் தேவையும் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் வாழ்க!

Link to comment
Share on other sites

வி.சபேசன் சார்.. நல்லாவே சமாளிக்கிறீங்க... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வி. சபேசன்

2 மணி நேரம் முன்பு

இன்று கலைஞருக்கு 91 வயதாகிறது.

ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கலைஞரை பலர் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு அறியாமை, மனப்பிறழ்வு, கயமைத்தனம் என்று நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

கலைஞர் மீதான வெறுப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு அரசியலில் கலைஞரின் பக்கம் நிற்கிறார்கள் என்பதற்காக, எங்களோடு மிகக் கடினமான காலங்களில் எல்லாம் துணையாக நின்று ஆதரவு தந்த ஐயா வீரமணி, ஐயா சுபவீரபாண்டியன் போன்றவர்களை வசைபாடுகின்ற அளவிற்கு மனப்பிறள்வு முற்றிப் போய்க் கிடக்கின்றது.

எங்கள் பக்கத்தில் நடந்த தவறுகளை மறைக்கின்ற கயமைத்தனமே இதில் முக்கியமானது. எங்களின் தவறுகள் பேசப்படுவதில்லை. மேற்குலக நாடுகளின் பங்கு இதில் என்ன என்பது பற்றி பேசப்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் முதற் குற்றவாளி ஆக்கப்பட்டு விட்டார்.

போர் முடிவதற்கு பத்து நாட்களின் முன்னர் நடேசன் தமிழக வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளிக்கிறார். அதில்தான் தீபன் போன்ற தளபதிகள் வீரச்சாவு அடைந்து விட்டார்கள் என்பதையும் அறிவிக்கின்றார்.

அதில் நடேசன் போரின் நிலைமை பற்றி சொல்கின்ற போது 'இராணுவத்தினர் பலத்த அழிவை சந்தித்து விட்டார்கள், களைத்துப் போய் விட்டார்கள், நாங்கள் நடந்து போயே அவர்களை விரட்டி அடிக்கின்ற நிலையில் நிற்கின்றோம்' என்பதாக சொல்கின்றார்.

உண்மையில் போராட்டம் அழியப் போகிறது என்கின்ற செய்தி கலைஞருக்கு சரியான முறையில் தெரிவிக்கப்பட்டதா என்கின்ற கேள்வி இங்கே இருக்கின்றது. அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால், அழிவை தடுப்பதற்காக கலைஞர் தெரிவித்த ஆலோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட்டதா என்கின்ற இன்னொரு கேள்வியும் இருக்கின்றது.

கலைஞர் தமது பதவியை ராஜினமா செய்திருந்தால், தமிழ்நாட்டில் திமுக இயக்கம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கும். ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாயே திறந்திருக்க மாட்டார். புலிகளால்தான் மக்கள் அழிகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்திருப்பார்.

முள்ளிவாய்க்கால் முடிவு எக்காரணம் கொண்டும் மாறியிருக்காது.

ஈழத்தில் ஒரு இன விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்றால், அதே போன்று தமிழ்நாட்டில் ஒரு சமூக விடுதலைப் போராட்டம் ஆண்டாண்டு காலமாய் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அதில் திமுக கட்சியினதும் கலைஞரினதும் பங்களிப்பும் தேவையும் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் வாழ்க!

 

தமிழகத்தின் முதலமைச்சராக  எத்தனை முறை  இருந்தார்....??

இதைக்கூட தெரிந்து கொள்ளாமல்..........???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் முதலமைச்சராக  எத்தனை முறை  இருந்தார்....??

இதைக்கூட தெரிந்து கொள்ளாமல்..........???

 

 விசுகர்! நரம்பில்லாத நாக்கால் எப்படியும் கதைக்கலாம் என்பதற்கு இவர்கள்தான் உண்மையான உதாரண புத்திரர்கள்.
Link to comment
Share on other sites

calculator வந்தது ..வாய் கணக்கு மறந்தது ..cellphoneல் message text செய்து வார்த்தைகள் சுருங்கியது.... smartphone வந்தது ... spelling மறந்தது... மொத்தத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நம் மூளையை முடக்கியது...

Link to comment
Share on other sites

காதல்ங்கிறது ஒரு ‪#‎competition‬. அதுல நீ முதல்ல ஏமாத்துறியா, இல்ல அவ முதல்ல ஏமாத்துறாளாங்க்றது தான் போட்டியே .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல்ங்கிறது ஒரு ‪#‎competition‬. அதுல நீ முதல்ல ஏமாத்துறியா, இல்ல அவ முதல்ல ஏமாத்துறாளாங்க்றது தான் போட்டியே .......

உங்களுக்கான சந்தர்ப்பம் மிக மிக குறைவு
Link to comment
Share on other sites

முகநூளில் காதல் கண்டியில் சம்பவம் 65 வயது தாத்தா 17 வயது பொண்ணு கூட loves செய்தி கேள்வி படலியா? உங்க வயசுக்காரங்களுக்கே சந்தர்பம் இருக்கும் போது நமக்கு இருக்காதா என்ன...:D

Link to comment
Share on other sites

உலகத்துலயே ரொம்ப சீரியஸான விஷயம் காமெடி பண்றது.,

உலகத்துலயே ரொம்ப காமெடியான விஷயம் சீரியஸா இருக்குறது...

Link to comment
Share on other sites

கல்லடுப்புல கறிக்கொழம்பு வச்சப்ப கரி புடிக்கிற குண்டா மூஞ்சிங்களா, அடுத்தவன தாழ்த்தி பேசாம, உங்கள உயர்த்தி காமிக்கவே மாட்டீங்களா.............?

:D :d

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.