Jump to content

முகவரி தொலைத்த முகங்கள்.


Recommended Posts

முகவரி தொலைத்த முகங்கள்.
மலைகள் இதளிற்காக..

சாத்திரி..பிரான்ஸ்

 ஸ்பெயின் நாட்டின் கலிலா என்கிற  கடற்கரை நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்களில் ஒன்றில்தான் வரதனின் வீடும் இருந்தது.அவரிற்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன்  வரதனைப் போலவே கப்பல் மாலுமி ஆனால் ஒரு உல்லாசப் படகின் மாலுமியாக இருக்கின்றான். மகள்  பாசிலோனா நகரில் தங்கியிருந்து உயர் கல்வி பயில்கிறாள்.மனைவி இரண்டு வருடங்களிற்கு முன்னர் தான் நோய்வாய்ப் பட்டு  இறந்து போயிருந்தாள். இப்போ  இந்த வீட்டில்  வரதனும் அவரது வளர்ப்பு நாயான புலி மட்டுமே. மகள் ஆசைப் பட்டு கேட்டதற்காக அந்த நாய்க்குட்டியை  வரதன் வாங்கிக்  கொடுத்திருந்தார். அதற்கு என்ன பெயர் வைக்கலாமென அனைவரும் ஆலோசித்தபொழுது  மகள்  ரைகர் என்று வைப்போம் என்றாள். அதென்ன ரைகர்  பேசாமல் தமிழில் புலி என்றே  வைப்போம் என்றார் வரதன்.நாயைப்போய் புலி எண்டு கூப்பிட ஒரு மாதிரி இருக்கு என்றாள் அவரது மனைவி.அப்போ ரைகர் என்று கூப்புடேக்கை மட்டும் ஒரு மாதிரி இருக்காதா என்று விட்டு புலி என்றே பெயரை வைத்து விட்டிருந்தார். அன்று காலைநித்திரையில் இருந்தவரை  அவரது மகளின் தொலைபேசி அழைப்பு எழுப்பிவைக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்  என்றுவிட்டு வைத்துவிட்டாள் அப்போதுதான் அவருக்கு தனது பிறந்தநாளே நினைவிற்கு வந்தது ஆனால் அதைப்பற்றி அவரிற்கு மகிழ்ச்சியோ கவலையோ எதுவும் இல்லை  நேற்றிலிருந்து லேசாய் விட்டு விட்டு நெஞ்சு வலிக்கிறது இண்டைக்கு  வைத்தியரிட்டை போகவேணும் என் நினைத்தபடி கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டதுமே அவர் எழுந்து விட்ட சத்தத்தைக் கேட்ட புலி வாலை ஆட்டிக்கொண்டு  அவரிடம் ஓடிவந்து குழைந்து கொள்ள  அதனது பாத்திரத்தில் உணவை நிரப்பி விட்டு தேனீரை தயார் செய்து கொண்டு வரவேற்பறைக்கு வந்த வரதன் தனது வழைமையான  வேலைகளில் முதலாவதை தொடங்கியவர் தனது மனைவியின் படத்தை சிறிது நேரம் உற்றுப்பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு அடுத்த படத்திற்கு மாறினார்.அவரிடமிருக்கும் அரிய படங்களில் அதுவுமொன்று அதனை பெரிதாக்கி வரவேற்பறையில் மாட்டியிருந்தார் ஒரு தீவின் கடற்கரையோரத்தில் பெரிய பாறை ஒன்றில் இரண்டு கைகளையும் கட்டியபடி மாலுமி உடையில் கம்பீரமாக நடுவே வரதன் நின்றிருக்க அருகில் பலர் நின்றிருந்தார்கள்.குட்டி மட்டும் பெரியதொரு மீனை இரண்டு கைகளிலும் ஏந்தியபடி   தேவாலயத்தில் மன்றாடுபவனைப்போல வரதனிற்கு முன்னால் முட்டுக்காலில் நின்றிருந்தான்.அந்தப் படத்தில் இருப்பவர்களில் குட்டி மட்டுமல்ல றோகன்.பத்தன் .ராஜன். ஆகியோரும் இப்போ உயிருடன் இல்லை.ஆனால் வரதன் மீன் குழம்பு சாப்பிடும் போதெல்லாம் குட்டி கட்டாயம் நினைவிற்கு வருவான் காரணம் அவனது கைப் பக்குவம் அப்படி.. குழம்பே தனி ருசியாக இருக்கும்.அந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெஞ்சு இன்னமும் கொஞ்சம் அதிகமாக வலிப்பது போலிருக்க  சோபவில் அமர்ந்தவர்  அப்படியே அன்றைய நாளின் நினைவுகளிற்கு பயணிக்க ஆரம்பித்திருந்தார்.
                        ...........................................                       .......................................................................
1995 ம் ஆண்டு டிசம்பர் மாதம்23ம் திகதி  மலை நேரம்  வங்கக் கடலின்  தெற்குப்பக்கமாக  இந்து சமுத்திரத்தில் சர்வதேசக் கடல்  எல்லையில்  அலைகளின்  தாலாட்டல்களோடு நங்கூரமிட்டிருந்தது  றெஜினா என்கிற  கப்பல். அன்று காற்று கொஞ்சம் அதிகமாகவே வீசிக்கொண்டிருந்தது  லோசான குளிரும் அடித்துக் கொண்டிருந்ததால் வேலைகளை வேகமாக முடித்தவர்கள்  தங்கள் கைகளில் இருந்த  கறுப்பு பெயின்ரை  முடிந்தவரை ரின்னரில் தேய்த்து கழுவி விட்டு  விட்டு கப்பலின்  முதலாவது தளத்தில் அமைந்திருந்த சமையலறையில்  ஆறுபேரும் குழுமியிருந்தார்கள். அனைவரது உடைகளிலும் கைளிலும் இன்னமும் கொஞ்சம் பெயின்ற் ஒட்டியிருக்கத்தான் செய்தது. குட்டியும் ராஜனும்..சித்தாவும் அன்றைய இரவுச் சமையலிற்கான ஆயத்தங்களை செய்யத் தொடங்க றோகனும் அன்ரனும் அன்றைய இரவு  இசை நிகழ்ச்சிக்காக  அவர்கள் பல நாடுகளிலும் வாங்கியிருந்த வாத்தியக் கருவிகளான  மத்தளம் கித்தார்.உடுக்கு என்பனவற்றை  கீழ் தளத்திலிருந்து சமையலறைக்கு கொண்டு வந்து தரையில் வட்ட வடிவமாக அடுக்கி வைத்தார்கள். அவர்களிடம்  ட்ரம்   வாத்தியக் கருவி இல்லாததால் வழைமை போல நான்கு அலுமினிய  சாப்பாட்டுக்கோப்பைகளை  எடுத்து கவிழ்த்து வைத்தான் அன்ரன்.இரண்டு விஸ்கிப் போத்தல்களை  மார்போடு கட்டியணைத்தபடி வந்த பத்தன்  .அப்பாடா ஒருமாதிரி பெயின்ற் அடிச்சு முடிச்சாச்சு  ஒரு நாளைக்கு நல்லா காய விடவேணும் நாளைக்கு கனக்க வேலையிருக்காது  அதாலை என்ஜோய் பண்ணுவம் என்றபடி அதனை கீழே வைத்து விட்டு  தனது பாக்கெற்றிலிருந்து  சிகரற் பக்கற் இரண்டையும் எடுத்து கீழே போட்டு விட்டு அமர்ந்தான். அன்றிரவிற்கான சமையலை தயார் செய்து விட்டு ராஜனும். குட்டியும் .சித்தாவும் வந்து  அமர றோகன் கித்தாரில் சுருதி சேர்க்கத் தொடங்கியிருந்தான்  அன்றிரவு  அன்ரன் தான் ட்ரம்மர். எந்த வாத்தியத்தை யார் வாசிப்பபது  என்கிற  ஒழுங்கு முறையெல்லாம் அங்கு கிடையாது  யார் எதை வேண்டு மானாலும் வாசிக்கலாம் ஏனெனில் யாருமே முறையாக  வாத்தியங்களை வாசிக்கத் தெரிந்தவர்கள் கிடையாது. சித்தா  கொஞ்சம்  நன்றாக  மத்தளம் அடிப்பான். றோகனும்  பத்தனும்  இயற்கையாகவே நன்றாகப் பாடுவார்கள்..பத்தன் அங்கிருந்த பிளாஸ்ரிக் கோப்பைகளிற்குள்  விஸ்கியை ஊற்றத் தொடங்க  அவர்களது  பாட்டுக் கச்சேரி ஆரம்பமானது
                                       .....................................                                 .......................................................
 இவர்களோடு சேராமல் வழைமைபோல கப்பலின் மேல் தளத்தில்  இருந்த  தனது மாலுமிக்கான அறைக்கு சென்ற வரதன்  சிகரற் ஒன்றை எடுத்து பற்றவைத்து இழுத்து விட்டபடியே.தொலைத் தொடர்பு கருவின் சத்தத்தை குறைத்து வைத்து விட்டு  கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் REGENA என்கிற  பெயரோடு  இதுவரை கடலில் பயணம் செய்துகொண்டிருந்த இந்தக் கப்பல்  இன்று  அதன் பெயர் அழிக்கப்பட்டு  பெயரற்ற  கப்பலாக வங்கக் கடலின் மேற்காக  சர்வதேசக் கடல் எல்லைக்குள்  ஏழு பேருடனனும்  உள்ளே  நவீன ஆயுதங்கள்  ஏராளமான எறிகணைகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் வெடிபொருட்கள் .  இராணுவத் தொழில் நுட்ப உபகரணங்களோடும் . அடங்கியகொள்கலன்களை  தாங்கியபடி  நங்கூரமிட்டிருந்தது.  . கப்பலின்  தலைமை மாலுமி வரதன் . அந்தக் கப்பலில் மற்றையவர்களை விட வயதில் அதிகமானவர் இவர்வர்தான் அதனாலேயோ என்னமோ மற்றவர்களுடன் அதிகம் பேசவும் மாட்டார். பெரும்பாலும் தானுண்டு தன் வேலையுண்டு என்று தனியாகவே  இருப்பார் நிறைய சிகரற் புகைப்பார் அவர்  மது அருந்தியதை இதுவரை யாரும் கண்டதில்லை அதே நேரம் கண்டிப்பானவரும்கூட.அடுத்ததாக  உதவி மாலுமி பத்தன்.றோகனும்  சித்தாவும் கப்பலின் பொறியியலாளர்கள் கப்பலின்  இயந்திரம் தொடக்கம்  தொலைத் தொடர்புக் கருவி  சமையல் அடுப்பு திருத்துவது  தொடக்கம்  சுட்டுப் போன  பல்ப்பு மாற்றுவது வரை அந்தக் கப்பலின் அனைத்து திருத்த வேலைகளும்  அவர்களுடையதுதான்.மற்றும் இவர்களிற்கு  உதவியாகவும் சமையல் போன்ற பணிகளை செய்பவர்களாக  ராஜன். அன்ரன்.குட்டி ஆகியோர் இருந்தார்கள்.ஆனாலும் அனேகமாக அவைருமே  அனைத்து வேலைகளையும் செய்யக் கற்றுக் கொண்டிருந்தனர். வரதனும் சித்தாவும் கப்பலை எப்படி திசை பார்த்து செலுத்துவது என்று மற்றவர்களிற்கு சொல்லிக் கொடுப்பார்கள். றோகன் திருத்த வேலைகளை சொல்லிக் கொடுப்பான். நெருக்கடியான  காலங்களில் கையிலிருக்கும் அல்லது  கிடைக்கும் பொருட்களை வைத்து எப்படி ருசியாக சமைக்கலாம் என்று குட்டிசொல்லிக் கொடுப்பான். கப்பல் ஓட்டுவதை விட குட்டியின் சமையலை கற்றுக் கொள்வதுதான் கடினமாகவும் அதே நேரம் அனைவரிற்கும் ஆர்வமான ஒன்றாகவும் இருந்தது.
                                               
 கப்பலின் இரு பக்கமும் நைலான் கயிறுகளும்.கயிற்று ஏணிகனும் தொங்க விடப் பட்டு   பலகைகளை இணைத்து  கட்டி  அதில் தொங்கிக் காண்டு நின்றபடியே மூன்று நாளாக  அனைவரும் சேர்ந்து   அதில் எழுதப் பட்டிருந்த  றெஜுனா என்கிற பெயரில் R  எழுத்தை  மட்டும் விட்டுவிட்டு மற்றையவற்றை  காஸ் லாம்பு மூலம்  சூடாக்கி அழித்து  அவற்றின் மீது கறுப்பு பெயின்ரை அடித்து முடித்திருந்தார்கள்..நாளை ஒருநாள்  பெயின்ற் நன்றாக காய்ந்ததும் ஸ்ரிக்கர்கள் போல வெள்ளைக் கலரில் தயாரிக்கப் பட்டிருக்கும் புதிய பெயரை அதில் ஒட்டிவிட்டு  லோக அதன் மேல் வெள்ளைப் பெயின்ரை அடித்து முடித்து விட்டு கப்பல் முல்லைத் தீவை நோக்கி தொடர்ந்து பயணிக்கவேண்டும்.எல்லாமே நன்றாக நடந்து முடிந்து விட வேண்டும் என்கிற தவிப்பு வரதனிற்கு இரண்டாவது சிகரற்றையும் பற்றவைத்து இழுக்கத் தொடங்கியிருந்தார்.
                    ...................................................                                      ........................................................
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாடலை  வரிசையாய் பாடி முடித்து  றோகன் தனது அபிமான பாடலான  சுறாங்கனியை படித்து முடித்திருந்தான்..இப்போ குட்டியின் முறை .குட்டி  தனது கரகரத்த குரலில் தோல்வி நிலையென நினைத்தால்  மனிதன் வாழ்வை நினைக்கலாமா..டெய்ங் டொய்ங்....என்று பாடத் தொடங்க   யாரும் இசையமைக்ககாமல்  குட்டியை பாத்து கையெடுத்து கும்பிட்ட படி இருந்தார்கள்..தயவு செய்து  நீ பாட்டு படிக்கக் கூடாது எண்டு எத்தனை  தரம் சொல்லியிருக்கிறம்.அதுவும் இந்தப் பாட்டுக்கு எப்பிடியடா   மேளம் அடிக்கிறது ராசா.. பாடாதை ராசா என்றான் றோகன். சரி பாட்டுத்தானே படிக்கக் கூடாது  பொறுங்கோ வாறன் என்றபடி மடமடவென படிகளில்  கீழ்த் தளத்திற்கு இறங்கி அவனது அறைக்கு போய் மடித்த ஒரு கடதாசியை கொண்டு வந்தவன்  இது என்ரை  ராசாத்திக்காக  எழுதின கவிதை ஒண்டு வாசிக்கிறன் எல்லாரும் கேட்டிட்டு  எப்பிடியிருக்கு  எண்டு சொல்லுங்கோ என்றவன்  தொண்டையை  செருமி  சரி செய்தபடியே   நான்காய் மடித்திருந்த  கடதாசியை  பிரித்து  படிக்கத் தொடங்கி னான்.
அவ்வப்போது
வட்டமிடும்  
மீன் கொத்திகளிடமும்
அலையிடையை
துள்ளிப்போகும்
மீன்களிடமும்
தூரத்தே
மிதிதந்து போகும்
கடல் செடிகளிடமும்
சிறு புள்ளியாய்
ஆகாயத்தில்
அவ்வப்போது  பறந்து போகும்
விமானத்திடமும்
உன் மூக்குத்தியைப்  போலவே
இரவில்  
மின்னும் நட்சத்திரங்களிடமும்
ஆழ்கடலில்
அவ்வப்போது
நான் செய்து  போடும்
கடதாசிக்
கப்பல்களிடமும்
உனக்காக  ஒரு சேதி
சொல்லியனுப்பியிருக்  கின்றேன்
அவை  உனக்கு கிடைக்காது  என்று
தெரிந்திருந்தும் கூட
ஏன் தெரியுமா??
என்னைப் போலவே  
அவைகளிடம் நீயும்
எனக்காக
சேதிகள் சொல்லியனுப் பியிருப்பாய்
என்று எனக்குத் தெரியும்.
என் ..ராசாத்தி..
படித்து முடித்து  நிமிர்ந்த  குட்டியின் கண்கள் நிரம்பியிருந்தது.மற்றைய அனைவரிடமும் ஒரே மெளனம் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.அந்த சில செக்கன் மெளனத்தை உடைப்பதற்காக சாப்பாட்டுக் கோப்பைகளில் ட்ரம் வாசித்துக் கொண்டிருந்த அன்ரன்  ஒரு  ட்ரம் வாத்திய கலைஞனைப் போல மடமடவென அவற்றில் தட்டிவிட்டு .குட்டியின்  ராசாத்திக்கான கவிதையை தொடர்ந்து  இப்பொழுது  றோகன் அவர்கள்  எங்கள்  சமையல் சக்கரவர்த்தி குட்டிக்காக ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு என்கிற பாடலைப் பாடுவார் என்று அறிவித்ததும் றோகன் கிட்டாரை தட்டியபடி பாடத் தொடங்கியிருந்தான்.பாடலின் முடிவில் அங்கு வந்த வரதன் பாடல் முடியும் வரை காத்திருந்து விட்டு ..பெடியள் எல்லாரும் சாப்பிட்டு படுங்கோ நாளைக்கு கப்பலை கொஞ்சம் துப்பரவு செய்யவேணும் என்றபடி  ஒரு கோப்பையை எடுத்து தனக்கான சாப்பாட்டை போட்டவர் பத்தனைப் பார்த்து  நீ இரவுக்கான சென்றியை பிரிச்சக் குடு என்றபடி சாப்பாட்டோடு தனது மாலுமி அறைக்கு ஏறிப் போகத் தொடங்கியிருந்தார்.
இந்த உலகத்திலேயே நடுக் கடலிலை நிக்கிற கப்பலுக்கு சென்றி போடுறவர் நம்ம வரதன் அண்ணை மட்டும்தான்.  இவருக்கு முதல்லை  தண்ணியடிக்கப் பழக்கவேணும்  அப்பதான்  நாங்கள் நிம்மதியாய்   இருகக்லாம் என்றபடி றோகன் கித்தாரை அதன் உறைக்குள் போட மற்றவர்களும் சிரித்தபடி வாத்தியக் கருவிகளை  ஒழுங்கு படுத்தி விட்டு சாப்பிடத் தயாரானார்கள்.
                                               .......................................................................
அன்று வானிலை கொஞ்சம்  மோசமாகவே  இருந்தது  அலைகள் பெரிய மலைப்பாம்புகள் போல வளைந்து நெளிந்து  கப்பலில் மோதி அசைத்துக்கொண்டிருக்க  வரதன்  கப்பலை அலைகளின் போக்கிற்கு  ஏற்ப திசை திருப்பி  அதன் அசைவை குறைத்துவிட்டு வரும்போது மற்றையவர்கள்  கப்பலிற்கு புதிதாக ஒட்டுவதற்காக ஸ்ரிக்கர்கள் போல தயாரிக்கப்பட்டு வைத்திருந்த R.SAMIR என்கிற பெயரை கப்பலின் மேல் தளத்தில்  வரிவையாக அடுக்கிமுடித்திருந்தார்கள்.அதனை வரதன் ஒரு தடைவை சரி பார்த்துக் கொண்டிருக்கும் போதே..  சரி நான் முதல் இறங்குறன் என்றபடி கயிற்று ஏணியில் குட்டி இறங்கத் தொடங்கியிருந்தான் .ஜயோ  என்கிற சத்தத்தை கேட்டு அனைவரும் ஓடிப்போய் கீழே எட்டிப் பார்த்தபோது கடல் நீரில் மெல்லிய வட்ட வடிவ நீர்த்திவலைகளில் சிகப்பு நிறம் விரிந்து சென்று கொண்டிருந்தது.வட்டமாய் சுற்றிவைக்கப் பட்டிருந்த  கயிற்றை  இடுப்பில்  கட்டி   விட்டு கடலில் குதிக்கத் தயாரான பத்தனை தடுத்து நிறுத்திய  வரதன் ராஜனோடு சேர்ந்து  கயிற்றைப் பிடித்து மெதுவாக கடலில் இறக்கியதும்.கை கால்களை அடித்து தத்தளித்தபடி கடலின் மேல் மட்டத்திற்கு வந்த குட்டியை எட்டிப் பிடித்த பத்தன்  அவனது கைகளை  தனது தோளில்  போட்டு முதுகோடு இணைத்து வரதன் எறிந்த இன்னொரு கயிற்றால் கட்டிக்கொள்ள அனைவருமாக சேர்ந்து அவர்களை கப்பலிற்குள் இழுத்த எடுத்து  கப்பலின்  மேல் தளத்தில் குட்டியை கிடத்தினார்கள்.அவன் முனகியபடியே  மயக்க நிலைக்கு போய்க்கொண்டிருந்தான்.
அவசரமாக முதலுதவிப் பெட்டியை துக்கிக் கொண்டு ஓடிவந்த றோகன் குட்டியை புரட்டிப் போட்டு இரத்தம் வழிந்துகொண்டிருந்த அவனது பிடரிப் பகுதியில் ஒரு துணியை வைத்து அழுத்திப் பிடித்துக்கொள்டிருக்க  அன்ரன்  காயப்பகுதியை  சுற்றியிருந்த தலை முடிகளை  மள மளவென கத்தரிக்கோலால்  வெட்டியபடியே டேய்..சேவிங் றேசர் ஒண்டு கொண்டு வாங்கோ என கத்த கப்பலின் படிகள் வழியே கீழே ஓடிப்போன பத்தன்  தனது  தாடி வழிக்கும் சேவிங்  றேசரை கொண்டு வந்து நீட்டினான்.தலைமுடி குட்டையாய் வெட்டிய பகுதி முழுவதையும் மெதுவாக  ராஜன் வழித்து முடித்ததும் காயத்தில் அழுத்திப் பிடித்திருந்த  துணியை விலக்கிய றோகன் காயத்தின்  மீதும் இருந்த முடிகளை வெட்டிவிட்டு இரண்டு அங்குலம் அளவிற்கு கிழிந்து போயிருந்த  அவனது காயத்தை விரல்களால் அழுத்தி இணைத்துப் பிடித்து தையல் போடத் தொடங்கியபோது அவனது பெரு விரல் குட்டியின் தலையில் உள்ளே அமிழ்வதை உணர்ந்தவன் நிமிர்ந்து  வரதனைப் பார்த்து  மண்டையோடு உடைஞ்சிருக்கு  கீழை விழேக்குள்ளை  தலை பலகையிலை  அடிபட்டிருக்கு  என்றபடி தைத்து முடித்து அதன் மீது மருந்து போட்டு துணியால் தலையை சுற்றி கட்டுப் போட்டு முடிக்கும் போதே குட்டி முழுவதுமாய் மயங்கிப் போயிருந்தான்.
                                ...........................................                                      ........................................................
குட்டி மோசமாக காயமடைந்த விடயம் உடனடியாக தாய்லாந்திலிருந்த தலைமையகத்திற்கு தெரிவிக்கப் பட்டது. கப்பல் தரித்து நிற்கும் திசையை  சரியாக கேட்டு அறிந்துத கொண்டவர்கள்  அடுத்ததாக  என்ன செய்யலாமென்பதை மீண்டும் அறிவிப்பதாக சொல்லியிருந்தார்கள்.அன்று பகல்  முழுதும்  ஒருவரோடு ஒருவர் அதிகம் பேசிக்கொள்ளாமலேயே ஒரு பக்கம் முழுதுமாக பெயர் மாற்றும் வேலையை முடித்திருந்தார்கள். அன்ரிரவு குட்டி கண் விழித்துப் பார்த்தான் தலையை அசைக் முயன்றான் முடியவில்லை கழுத்திற்கு மேலே தலை வீக்கமடைந்திருந்தது .என்ன செய்யுதடா என்று அவனது முகத்திற்கு  நேரே குனிந்து கேட்ட றோகனிடம். முடியேல்லையடா..தலை சரியா வலிக்குதடா.என்றபடி எழுந்திருக்க முயன்றான் அவனால் முடியவில்லை  டேய்..காலை அசைக்க ஏலாமல் இருக்கடா கை மட்டும் அசைக்கிற மாதிரி இருக்கடா வலிக்குதடா என்று சத்தமிடத் தொடங்க அவனது தலையில் போடப் பட்டிருந்த துணிக் கட்டையும் மீறி காயத்திலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியிருந்தது.றோகன் அவசரமாக  முதலுதவிப் பெட்டியில் இருந்து வலி மருந்து ஊசியை  எடுத்து குட்டிக்கு ஏற்றிவிட்டு  அவனது கைகளை இறுக்கமாக பிடித்தக் கொண்டிருந்தான்.சிறிது நேரத்தில் குட்டிக்கு வலி குறைந்திருக்கவேண்டும் டேய் எல்லாரும் சாப்பிட்டிங்களாடா யார் சமைச்சது என்று கேட்டதும். நான் தான் சமைச்சனான்  சாப்பிடவேண்டியது இவங்கடை தலைவிதி என்று சொன்ன ராஜனிடம்  டேய் என்ரை உடுப்பு பையிலை ஒரு பர்ஸ் இருக்கு அதை ஒருக்கா எடுத்துத்தாடா என்றான் குட்டி. ராஜன் எடுத்துக் கொடுத்த பர்சை  சிரமப் பட்டு வலக்கையால் வாங்கி பிரித்துப் பார்த்தவன் கண்களில் ஒரு மகிழ்ச்சியோடு  இத்தனை நாளா நீங்கள் கேட்ட  என்ரை ராசாத்தி இதுதான்ரா என்று காட்டினான் பாஸ்போட் அளவு கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் இரட்டைப் பின்னலோடு சிரித்துக்கொண்டிருந்தாள்..அந்தப் படத்தையே உற்றுப் பார்த்தக் கொண்டிருந்தவன். டேய் ஆறு வருசமா காதலிக்கிறம்  இந்த வருசம் கப்பல்லை இருந்து இறங்க அனுமதி கேட்டிருக்கிறன் அப்பிடி அனுமதி கிடைச்சால் என்ரை ராசாத்தியை  கலியாணம் கட்ட முடிவெடுத்திருந்தனான். சில நேரம் நான் செத்துப் போயிட்டால் தயவு செய்து பாரமான பெரிய இரும்பு ஒண்டோடை என்ரை பிணத்தை கட்டி கடல்லை போட்டு விடுங்கோடா.ஏனெண்டால் என்ரை பிணம் மிதந்து போய் சில நேரம் இலங்கை கரையிலை கிடந்து அது செய்தியா வந்து நான் செத்திட்டன் என்கிற செய்தி அவளிற்கு தெரியவேண்டாம் அவள் தாங்கமாட்டாள் என்றபோது கன்னங்கள் வழியே வழிந்த கண்ணீர்  படுக்கையில் விழத் தொடங்க . சே .. உனக்கு ஒண்டும் இல்லையடா  கெதியா சுகமாயிடும் திரும்பவும் நீ சமைச்ச சாப்பாட்டை நாங்கள்  சாப்பிடவேணும் என்று றோகன் ஆறுதல்படுத்தினான். மீண்டும் குட்டிக்கு வலியெடுக்கத் தொடங்க  இந்தத் தடைவை றோகன் மயக்க மருந்தை செலுத்தினான்.
                               ...........................................                               ............................................................
கப்பலில் இருக்கும் உதவிப் படகு ஒன்றின்  மூலம் மேலும்  பர்மாவின் ஒரு  கரையோர நகரத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் அங்கு வைத்தியத்திற்கான ஏற்பாடுகள்  செய்து விடுவதாகவும் அதே நேரம் குறித்த நாள் குறித்த நேரத்திற்கு கப்பல் முல்லைத் தீவுக் கடலிற்குள்  நுளைந்து விடவேண்டும் என்கிற உத்தரவோடு   அன்றிரவு தாய்லாந்திலிருந்து பதில் வந்திருந்தது.மறுநாள்  சித்தாவும் றோகனும் படகு மூலம் குட்டியை பர்மாவிற்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டு வருவதாக முடிவெடுத்திருந்தார்கள்.அன்றிரவு ஒருவரோடு ஒருவர் பேசாமல் மெளனமாகவே கழிந்து கொண்டிருந்தது.ராஜனே குட்டிக்கு பக்கத்திலிருந்து கவனித்தக்கொண்டிருந்தவன்  அசதியில் தூங்கிப் போய் விட்டிருந்தவன் அதிகாலையளவில் திடுக்கிட்டு கண்விழித்தவன் குட்டியை பார்தவன் திடுக்கிட்டவனாய் அவனது மூக்கில் கையை வைத்துப் பார்த்துவிட்டு இதயத்தில் காதையும் வைத்துப் பார்த்தவன்  அடுத்த அறையில்  நித்திரையிலிருந்த  றோகனை அவசரமாக தட்டியெழுப்பிக் கூட்டி வந்தான்.  ஓடிவந்த றோகன் குட்டியின் கையில் நாடி பிடித்துப் பார்த்து விட்டு  கைகளை குறுக்காக அவனது இதயத்தில் வைத்து பலமாக பலமுறை விட்டு விட்டு அமுக்கியவன் ராஜனைப பார்த்து  தலையை மெதுவாக இடம் வலமாக அசைத்தான்.
குட்டி இறந்து விட்ட செய்தியை தாய்லாந்து தலைமையகத்திற்கு வரதன் அறிவித்தார்  உடலை கடலில் விசி விட்டு பயணத்தை தொடருமாறு கட்டளை வந்திருந்தது.குட்டியின் உடலைச் சுற்றி நின்றவர்களிடம் வந்த வரதன் விடயத்தை சொன்னதும்  றோகனும் சித்தாவும்  எதிர்த்ததோடு கப்பல்  பயணிக்கின்ற வழியில்  கப்பலை நிறுத்தி படகில் உடலை எடுத்துச் சென்று எங்காவது ஒரு  நாட்டுக் கரையில் அல்லது தீவில் புதைத்துவிடலாமென்று வாதிட மற்றையவர்கள் மெளனமாக நின்றிருந்தனர்.கப்பலில் உள்ள பொருட்களின் பெறுமதி என்பது மட்டுமல்லாமல் அது குறித்த நேரத்திற்கு கொண்டு போய் சேர்க்கவேண்டிய கட்டாயம் கப்பல் சர்வதேச எல்லையில் இருந்து விலகி வேறு பாதையில் பயணித்தால் இந்திய இலங்கை கடற்படையால் வரக்கூடிய ஆபத்துக்கள் என்ன என்று எல்லாமே வரதன் சொல்லிப் பார்த்தார்.ஆனால் றோகனும் சித்தவும் விடுவதாக இல்லை பொருட்களை இறக்கி விட்டு திரும்பும்வரை 12 நாட்களிற்கு குட்டியின் உடலை சமையலறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில்  பாதுகாக்கலாமா என்றும் ஆலோசித்தார்கள் ஆனால் அவை  ஒரு உடலைப் புகுத்த முடியாத சிறிய சதுரவடிவங்களாக வடிவமைக்கப்பட்டிருந்தது.அப்போதுதான்  ஏதோ யோசித்தவனாக சித்தா அனைவரையும் மாலுமி அறைக்குள் அழைத்துப் போனவன் அங்கிருந்த கணணியில் கப்பலின் பயணப் பாதையை வரதனிற்கு காட்டியபடி அண்ணை இங்கை பாருங்கோ நாங்கள் போற பகுதியிலை இந்தப் பக்கமா  நிக்கோபர் தீவுகள் இருக்கு  கப்பலை  கிழக்குப்பக்கமா E 51 கோட்டிலை   கொஞ்சம் நகர்த்தினால் போதும்  இந்த இடத்திலை இருந்து நாங்கள்  வழக்கமா போற நாவல்த்தீவு  கிட்டத்தான் இருக்கு நாங்கள் படகிலை  உலலைக் கொண்டுபோய் இங்கை புதைச்சிட்டு வந்திடுவம் கப்பலும் சொன்ன நேரத்துக்கு  சொன்ன இடத்திற்கு போய் சேர்ந்திடும் ஒரு பிரச்சனையும் இல்லை . குட்டியை  வைத்தியத்திற்கு பர்மாவிற்கு  கொண்டு போறதுக்கும் நாங்கள்  இவ்வளவு தூரம் போய் இதேயளவு றிஸ்க் கட்டாயம் எடுத்திருக்கத்தான் வேணும் நீங்கள் மனம் வைச்சால் செய்யலாமண்ணை என்று மடமடவென்று பேசிவிட்டு அனைவரையும் பார்த்தான்.
தனது குறுந்தாடியை  சில  வினாடிகள் சொறிந்தபடி யோசித்த வரதன் சரி ..கெதியா பேர் மாத்திற வேலையளை முடிப்பம் சித்தா சொன்ன இடத்திற்கு போறதுக்கு மூன்று நாள்பயணம் செய்யவேணும்  உடலைக் கொண்டு போய் புதைச்சிட்டு வாறதுக்கு ஆறு மணித்தியலம் தரலாம் அதுக்குள்ளை எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்திடவேணும் அதே நேரம் குட்டியின்ரை உடலை நாலு நாளைக்கு இப்பிடியே வைச்சிருக்க  ஏலாது அதை  ஒரு போர்வையாலை நல்லா சுத்தி அதுக்கு மேலை பொலித்தீன் ஒன்றாலையும் முழுதா மூடி சுத்திக்கட்டி கப்பலின்ரை அடித்தளத்திலை கொண்டு போய் வையுங்கோ அங்கை  குளிரா இருக்கும் அதாலை  லேசிலை பழுதாகாமல் இருக்கும் என்று சொன்னதும் அனைவரும் ஒரு நிம்மதிப்பெமூச்சோடு மிகுதி வேலைகளைத் தொடருவதற்காக அங்கிருந்து கிழம்பிப் போனார்கள்.

  கப்பல் பெயர் மாற்றும் வேலைகளை முடித்துக்கொண்டு தொடர்ந்த பயணத்தின் நான்காவது நாள் அதிகாலை சூரியன் லேசாய் சோம்பல் முறித்து கடற்போர்வையை  விலக்கி எழத் தொடங்கியிருந்த நேரம் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் உதவிப் படகில்  குட்டியின் உடலும் பள்ளம் தோண்டுவதற்கு வேண்டிய உபகரணங்களும் ஒரு  நீலக் கலர் பிளாஸ்ரிக்பேப்பரால் மூடப்பட்டிருந்தது. சித்தாவும் .றோகனும்.அன்ரனும் படகில் போய் குட்டியின் உடலைப் புதைத்துவிட்டு வருதாக முடிவெடுத்திருந்தார்கள். சித்தா  உதவிப் படகில் எரிபெருளை சரிபார்ததோடு மேலதிகமாகவும் இரண்டு  எரிபொருள் கேன்களை எடுத்து வைத்து விட்டு  திகை காட்டி தொலைத் தொடர்புக் கருவி  பைனாக்குலர்  என வேண்டி அனைத்தையும் தயார் செய்து வைக்க கப்பலின் சமயலறைப் பகுதிக்கு சென்ற றோகனும் அன்ரனும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த  கைத் துப்பாக்கிகளை எடுத்து சரிபார்த்து இடுப்பில் செருகிக் கொண்டு படகில் ஏறி அமர்ந்தார்கள். படகு மெதுவாக கடலில் இறங்கியதும்  கப்பலுடனான அதன்  இணைப்பை அன்ரன் எடுத்துவிட சித்தா படகை இயக்கினான் கப்பலில் நின்றவர்களைப் பார்த்து றோகன் கை கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்  படகு நாவல்த்தீவை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்தது.
                                                       ..................................................................
நாவல்த் தீவு என்பது அதன் உண்மையான பெயர் அல்ல நிக்கோபர் தீவுக் கூட்டத்தில் மனிதர்கள் வாழாத ஒரு அழகான தீவு.மலைக்குன்றுகளோடு ஒரு ஏரியும் காடுகளையும்  விலங்குகளையும்  பறவைகளையும் கொண்ட இந்தப்பூமியில் உள்ள  சொர்க்கம் என்று அந்தத் தீவைச் சொல்லலாம். கடற்கரையிலிருந்து  இரண்டு கிலோ மீற்றர் தூரம் காட்டினூடாக  பயணம் செய்தால்   அந்த அளகான ஏரியை அடையலாம். அந்தத் தீவு நாவல் மரங்களை  அதிகமாகக்கொண்டுள்ளதால்  அதற்கு இவர்களாகவே வைத்தபெயர்தான் நாவல்த்தீவு.வேலைகள் எதுவும் இல்லாத தருணங்களில் கப்பலை பாதுகாப்பான  சர்வதேசக்கடல் பகுதியில் நங்கூரமிட்டுவிட்டு  படகு மூலம் இந்தத் தீவிற்கு வந்து ஏரிக் கரையோரம்     கூடாரம் அமைத்து தங்கி  மனப் பாரங்கள் அனைத்தையும்  இறக்கி வைத்து  உலகத்தையே மறந்து அங்குள்ள  தென்னை மரங்களின் இளநீரும் வழுக்கையும்  சூரை நாவல் பழங்களை  ரசித்தும் .மிருகங்களை வேட்டையாடி சமைத்துண்டு சில நாட்கள் மகிழ்ச்சியாய் இருப்பது  இவர்களது வழைமை. அந்தத் தீவிற்கு இவர்களைத் தவிர வேறு யாருமே வந்து போனதற்கான தடயங்கள் எதனையும் அதுவரை அவதானித்திருக்கவில்லை. அந்த நாவல்த்தீவில் ஏரிக்கரையோரம்  பரந்து விரிந்து வளர்ந்திருந்த ஆலமரத்தடியில்  குட்டி சமைத்த உணவை  இரசித்து உண்டு அவனோடு அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த இடத்திலேயே அவனது உடலைப் புதைப்பதாக முடிவெடுத்திருந்தான் றோகன்.
படகு சுமார் இரண்டு மணி நேரப் பயணத்தின் பின்னர்   சித்தா  துல்லியமாக  அவர்கள்  வழைமைபோல் நாவல்த்தீவில்  கரையிறங்கும்  இடத்திற்கு  படகினை  கொண்டு வந்து  சேர்த்திருந்தான்  யாருடையதாவது நடமாட்டம் இருக்கிறா எனக் கவனித்தவர்கள்   படகை தள்ளி கரையில் ஏற்றியதும் குட்டியின் உடலைத் தூக்கி கடற்கரையில் கிடத்தினார்கள் அதிலிருந்து துர் நாற்றம்  வீசத்தொடங்கியிருந்தது எனவே அதனை அப்படியே தூக்கிக் கொண்டு போக முடியாது என்பதால் அன்ரன்  பெரியதொரு தடியை வெட்டி எடுத்துவர அந்தத் தடியோடு  குட்டியின் உடலை சேர்த்துக் கட்டி சித்தாவும்  அன்ரனும் தோழில் தூக்கிக் கொள்ள றோகன் மற்றைய  பொருட்களை  தூக்கியபடி ஏரிக்கரையை  அடைந்திருந்தார்கள்.  அங்கு   நின்றிருந்த குரங்குகள்  அவர்களைக் கண்டு பயந்தபடி  ஓடிப்போய் மரங்களில் ஏறிக் கொள்ள  உடலை ஆலமரத்தின் அடியில்   வைத்து விட்டு   அன்ரனும் சித்தாவும்  கிடங்கை வெட்டியபடியே  எகிப்திய மம்மி போல் சுற்றிக் கட்டப் பட்டிருந்த குட்டியின் உடலையே வெறித்துப் பர்த்தபடி நின்றிருந்த றோகனிடம்..டேய்  அங்கையே நிக்காமல்  சாப்பாட்டிற்கு ஏதாவது வழிபண்ணு  பண்டி முயல் எதையாவது  கொண்டுவா என்றதும். பார்வையை விலக்கிய றோகன் பண்டி முயல்  தேடிப் பிடிக்க நேரமாகும் இண்டைக்கு தொங்குமான்தான் தான்  என்றவன்   இடுப்பில்  செருகியிருந்த துப்பாக்கியை  உருவியபடி பயந்தோடிப்போய்  மரங்களில் ஏறியிருந்த குரங்கு ஒன்றை குறிபார்த்தான்  அதன் மடியில் ஒரு குட்டி கட்டிப் பிடித்திருந்ததை  கவனித்தவன் கையை தாழ்த்தி மறுபக்கம் சலசலப்பு வந்த   இன்னொரு மரத்திற்கு பார்வையை  திருப்பியிருந்தான்  அங்கு இரண்டு குரங்குகள் சண்டை பிடித்துக் கொண்டிருந்தன  இரண்டையும் மாறி மாறி குறிபார்த்துக் கொண்டிருந்தான்  சண்டை பிடித்துக் கொண்டிருந்த குரங்குகளில் ஒன்று மற்றொன்றை   அடித்து அதன் காதினை கடித்து விட்டு பல்லை இழித்து உறுமி மரக் கிழையை வேகமாய் உலுப்பிக் கொண்டிருக்க  அடி வாங்கிய குரங்கு காது பிய்ந்து இரத்தம் ஒழுகியபடி  ஓடிப்போய் மரக்கிளைக்கு பின்னால்  பதுங்கியபடியே வழிந்த தனது இரத்தத்தை கையால் தொட்டு நக்கிக் கொண்டிருக்க அந்தக்குரங்கை நோக்கி றோகன் குறிவைத்தான்.

டுமீல் என்கிற வெடிச் சத்தத்தை கேட்ட குரங்குகள்  பறவைகள் பற்றைகளிற்குள்  இருந்த ஊர்வன  என அனைத்துமே  அந்தத்  தீவையே அதிர வைக்கும் அளவிற்கு சத்தமிட்டபடி எல்லாப் பக்கமும் சிதறியோடின. எதுக்கடா அடிச்ச  குரங்கை விட்டிட்டு  அடிவாங்கின குரங்கை சுட்டனி என்கிற ராஜனின்  கேள்விக்கு  என்னைப் பொறுத்தவரை தோற்றுப் போனதுக்கு பிறகு உயிர் வழுறதிலை அர்த்தம் இல்லை அது  குரங்காயிருந்தாலும் சரி என்றபடி குண்டடிபட்டு தெப்பென விழுந்த குரங்கை போய் எடுத்து வந்த றோகன் ஒரு மரக் கிளை இடுக்கில் அதன்  தலையை  செருகிவிட்டு  அதற்கு கீழே நிலத்தில் சவளால்  கிடங்கை   தோண்டியவன் இடுப்பு பட்டியின் கூட்டில் மடித்து செருகி வைக்கப் பட்டிருந்த கத்தியை எடுத்து விரித்து குரங்கை உரித்து அதன் தோல்  குடல் அனைத்தையும் அந்தக் கிடங்கிற்குள் போட்.டு மூடி முடித்தான்.அங்கு எழுத்த பெரும் சத்தம் கொஞ்சம்  கொஞ்சமாய் குறைய ஆரம்பித்திருந்தது.  உரித்து முடித்த குரங்கு பார்ப்பதற்கு அப்போதுதான் பிறந்த ஒரு குழந்தையைப்போல இருந்தது. காட்டு இலைகளை வெட்டி அதன் மீது வைத்து விட்டு  காய்ந்து போயிருந்த  தடிகளைப் பொறுக்கி  ஒருஇடத்தில் குமித்து நெருப்பை மூட்டியவன்  ஒரு தடியை வெட்டி அதன் ஒரு முனையை  சீவி கூராக்கி அதில் குரங்கை குத்தி நெருப்பில் பிடித்து வாட்டத் தொடங்கியிருந்தான்.
கிடங்கை வெட்டி முடித்திருந்த சித்தாவும் அன்ரனும்  றோகனையும் அழைக்க மூவருமாகச் சேர்ந்து குட்டியின் உடலை கிடங்கில் போட்டு மண்ணால் மூடிவிட்டு குரங்குகள் மீண்டும் அந்தக் குழியை தோண்டி விடாமல் இருக்க அதன் மீது அங்கிருந்த கற்களையும் மரக் கிழைகளையும்   எடுத்து அதன் மீது அடுக்கினார்கள்.அதன் பின்னர் தென்னையில் ஏறிய அன்ரன் சில இளம் தேங்காய்களை உதைந்து வீழ்த்தினான்.குடிப்பதற்கு வசதியாக சீவியிருந்த  ஒரு தேங்காயையும் வாட்டிய  குரங்கின் ஒரு தொடையையும் குட்டி புதைக்கப்பட்ட குழியின் கால்பகுதியில் ஒரு இலையில் சித்தா வைத்ததும்.மூவருமாக  அங்கு தலை குனிந்து சில வினாடிகள் மெளன அஞ்சலி செலுத்தியவர்களின் கண்கள் கலங்கியிருந்தது. அதன் பின்னர் ஒருவரோடு ஒருவர் அதிகம் பேசிக் கொள்ளாமல் வாட்டிய குரங்கு இறைச்சியை உண்டு இளநீரை குடித்து விட்டு  நாவல்த்தீவை விட்டு புறப்படும்போது டேய் ..நேரம் கிடைக்கிற ஒரு நாளைக்கு குட்டியை புதைச்ச இடத்திலை ஒரு சமாதி கட்டவேணும் என்று விட்டு கடலையே வெறித்தக்கொண்டிருந்தான் றோகன்.தீவு அவர்களை விட்டுத் தூரமாகிக் கொண்டிருந்தது.
                                 ....................................................                    .....................................................
அன்றிரவு கப்பலின் மேல்தளத்தில்  றோகன் கையில் விஸ்கி போத்தலை வைத்தபடி சிகரற்றை புகைத்தபடியிருந்தான்.மாலுமி அறைக்குள் சென்ற ராஜன் வரதனிடம் மெதுவாக  அண்ணை..றோகன் கனக்க குடிச்சிருக்கிறான் சொன்னாலும் கேக்கிறான் இல்லை   நீங்கள் கொஞ்சம் போய் சொல்லிப் பாருங்கோ..என்றான்.றோகனின் அருகில் வந்த வரதன் கையிலிருந்த பிளாஸ்ரிக் கிண்ணத்தை நீட்டினார்.போதையில் சுருங்கியிருந்த றோகனின்  கண்கள்ஆச்சரியமாக விரித்தபடி என்ன ?..விஸ்கி வேணுமா என்றதும். தலையை மெதுவாக மேலும் கீழுமாக ஆட்டிய வரதன் றோகன் கிண்ணத்தில் ஊற்றிய விஸ்கியை தண்ணீர் கலக்காமலேயே ஒரு மடக்கில் குடித்தவர்.நானும் தண்ணியடிக்கிறனான்தான் ஆனால் எங்கடை வேலையளை முடிச்சிட்டு ஓய்வா இருக்கிற நேரத்திலை மட்டும். இந்த தண்ணியடிக்கிறது மட்டுமில்லை  உணர்ச்சிவசப்படுறது.பாட்டுப் படித்து கும்மளம் அடிக்கிறது.அழுகிறது.எல்லாமே எனக்கு தந்த வேலையை முடிச்சிட்டுத்தான்.இதுகளிலை கவனத்தை சிதற விட்டால் எங்கடை வேலை செய்ய முடியாமல் போயிடும் இப்ப கப்பல்லை இருக்கிற பொருள்களையெல்லாம் பத்திரமா கொண்டு போய் சேர்க்கவேண்டியதுதான்  எங்கடை முதல் வேலை பிறகுதான்  மிச்சமெல்லாம் ..நல்லா பழகிட்டு இப்பிடி இழப்பு வரேக்கை  கஸ்ரமாயிருக்கும். அதாலைதான் நான் உங்களோடையே அதிகமா கதைக்கிறேல்லை. இதெல்லாம் உனக்கும் போகப் போக பழகிடும் போய் படு என்று றோகனின் தோழில் தட்டி விட்டு வரதன் மீண்டும் மாலுமி அறைக்குள் போய்விட எதையே நினைத்த றேகன் அவசரமாய் கீழ்தளத்திற்கு சென்று  படுக்கையறையில் குட்டியின் பயணப்பையை திறந்து ஆராய்ந்தான் அதற்குள் எதுவுமே எழுதப்படாத வெற்று டயறி ஒன்றும் அவனது கடவுச்சீட்டு கப்பலில் வேலை செய்வதற்கான ஆவணங்கள் அடையாள அட்டை என்பனவற்றை எடுத்துப் பார்த்தான்.அவற்றில் எழுதப் பட்டிருந்த பெயர் விலாசங்கள் எல்லாமே போலியானதாகத்தானிக்கும் என்பது றோகனிற்கு தெரியும் அவனது பர்சை திறந்து பார்த்தான் ராசாத்தியின் சிரித்த கறுப்பு வெள்ளை புகைப் படமும் மடித்து வைக்கப் பட்டிருந்த குட்டி எழுதிய கவிதையும் இருந்தது அவற்றை  எடுத்துக்கொண்டு மீண்டும் கப்பலின் மேற்தளத்திற்கு வந்தவன் போத்தலில் கொஞ்சமாய் மீதமிருந்த விஸ்கியையும் குடித்து முடித்துவிட்டு அந்தப் போத்தலிற்குள் குட்டி எழுதிய கவிதைக் கடதாசியில் ராசாத்தியின் புகைப் படத்தையும் சுருட்டிபோத்தலிற்குள் போட்டவன் அதனை நன்றாக இறுக்கி மூடிவிட்டு கடலிற்குள் வீசியெறிந்தான்..குட்டியின் கவிதை வரிகளைப் போலவே அந்தக் கவிதையும் ராசாத்தியின் கைகளிற்கு போய் சேராது என்பதும் றோகனிற்கு தெரியும்  முழங்கால்களை மடித்து  தலையைத் தொங்கப் போட்டபடி  அங்கேயே அமர்ந்திருந்தான் வரதன் கப்பலை  முல்லைத் தீவுக் கடலை நோக்கி செலுத்திக்கொண்டிருந்தார்.
                        ...............................................................              .......................................................................
தொலைபேசி மணியடித்துக் கொண்டிருந்தது வரதன் அதனை எடுப்பதற்கு முயற்சித்தார் முடியவில்லை புலி வழமைக்கு மாறாக அவரைப் பார்த்து குரைத்துக் கொண்டேயிருந்தது.இப்பொழுது வரதனிற்கு நெஞ்சு வலி இல்லை  அவர் பஞ்சைப்போன்று அந்தரத்தில் மிதப்பதைப் போன்றதொரு உணர்வு  ஒரு ராக்கெற்றின் வேகத்தை விட அதிகமாய்  காற்றைக் கிழித்தக் காண்டு வானத்தில் பறந்தார் இன்னொரு சூரியகுடும்பம்  முன்னாலும் நட்சத்திரக் கூட்டங்கள் அவர் பின்னாலும் தெரிந்தது அதேயளவு வேகத்தில் மீண்டும் கீழே இறங்கினார்  அந்தப் படத்தில் இருந்த  அதே தீவின் கடற்கரையோரத்தில் பெரிய பாறை ஒன்றின் முன்னால் அவரது மனைவியும்  றோகன்.சித்தா.குட்டியுடன் வேறு நண்பர்களும் அவரைப்பார்த்து கையசைத்தனர்.கடற்கரையோரத்தில் தடிகள் நடப்பட்டு கலர் கலராக பலூன்கன் பறக்கவிடப்பட்டு அங்கு ஒரு மேசைமேல்  வர்ணக்கலரில் ஒரு கேக்கும் வைக்கப்பட்டிருந்தது அந்தரத்தில் பறந்துகொண்டிருந்த வரதன் அவர்களருகே சென்று தரையிறங்கினார்.மனைவி அவரை அழைத்து கேக்கை  வெட்டவைத்து ஒரு துண்டினை அவரிற்கு ஊட்டிவிடும்போது  சுற்றி நின்று அனைவரும் கைதட்ட றோகன் தனது கித்தாரை வாசித்தபடி "பிறந்தநாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்" என்று படிக்கொண்டிருந்தான். ஆனால் வரதனின் காதுகளில் புலி குரைக்கும் சத்தம் ஒலித்துக்கொண்டேயிருந்தது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டைகர் புலியாய் மாறியதும் அழகு.

மூக்குத்தியைப்  போல மின்னும் நட்சத்திரங்கள் தந்த கவிதையும் அழகு.

முகவரி தொலைத்து நின்ற முகங்களும் அழகு.

வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கு.சாஸ்திரியின் எழுத்து நடை தெரியவில்லை :lol: அதை எல்லாம் விடுங்கோ அந்தக் கப்பல் கரை சேர்ந்ததோ :o

Link to comment
Share on other sites

டைகர் புலியாய் மாறியதும் அழகு.

மூக்குத்தியைப்  போல மின்னும் நட்சத்திரங்கள் தந்த கவிதையும் அழகு.

முகவரி தொலைத்து நின்ற முகங்களும் அழகு.

வாழ்த்துகள்.

 

உண்மை சம்பவத்தை புனைவுகளோடு கதையாக்கியிருந்தேன். நான் எழுதியதை  அப்படியே இங்கு இணைத்ததால்  சில எழுத்துப் பிழைகள் உள்ளது நேரம் கிடைக்கும் போது திருத்துகிறேன். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல கதை சாஸ்த்ரி, உங்கள் அனுபவக்கதைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
அது ஏன் சாஸ்த்ரி, Spain & Portugal  இந்த நாடுகளில் மாத்த்ரம் தமிழர்கள் அறவே இல்லை?. அங்கு குடியெர முடியாதா? அல்லது அகதிகள் அனுமதிக்கபட மாட்டார்களா? அல்லது வறுமையான ஐரோப்பிய நாடுகள் என்ற காரணத்தினாலா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் கதைக்கு நன்றிகள்......போராட்டத்தின் வலிகள் ,,,,,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் கப்பலில் வேலை செய்பவர்கள் அனுபவத்தை கதை வடிவில் தந்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதியவிடயங்கள் எல்லாம் அதிகம் பரிச்சயமானவைபோல் இருக்கிறது...காரணம் என்னுடைய தந்தையின் அனுபவங்களை கதைகதையாகக் கேட்டிருக்கிறேன்...அதேபோல் சகோதரர்களின் கப்பல் பயணம் பற்றிய கதைகள் பலவற்றைக்கேட்டிருக்கிறேன்... கப்பலில் செல்லாமலே அதனோடு அதிக பரிச்சயப்பட்டதுபோல் உங்கள் கதையில் மனம் லயித்துக் கொண்டது. நன்றி.

Link to comment
Share on other sites

 

நல்ல கதை சாஸ்த்ரி, உங்கள் அனுபவக்கதைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
அது ஏன் சாஸ்த்ரி, Spain & Portugal  இந்த நாடுகளில் மாத்த்ரம் தமிழர்கள் அறவே இல்லை?. அங்கு குடியெர முடியாதா? அல்லது அகதிகள் அனுமதிக்கபட மாட்டார்களா? அல்லது வறுமையான ஐரோப்பிய நாடுகள் என்ற காரணத்தினாலா?

 

 

ஸ்பெயின் நாட்டில்  பல தமிழர்கள் வாழ்கிறார்கள்.போர்ச்சுக்கல்லில் தமிழர்கள்  வாழ்கிறார்களா தெரியவில்லை.அதே நேரம் இந்த நாடுகளிலும் அகதி விண்ணப்பங்கள் கோர முடியும்  ஆனால் இவை  வசதிகள்  வேலை வாய்ப்புக்கள் குறைந்த நாடுகள் என்பதால் எம்மவர்கள் இந்த நாடுகளை விரும்புவதில்லை என நினைக்கிறேன்.கொலண்டிற்கும் பிரான்சிற்கும் ஜெர்மனிக்கும் நடுவில் இருக்கும் பெல்ஜியத்தில் தமிழர்கள் அதிகம் இல்லாததும் இதுவே காரணமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

திரைப்படம் பார்த்த உணர்வு...

 

கனபேரிற்கு அப்படித்தான் :)

கதை இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கு.சாஸ்திரியின் எழுத்து நடை தெரியவில்லை :lol: அதை எல்லாம் விடுங்கோ அந்தக் கப்பல் கரை சேர்ந்ததோ :o

 

அது பழைய ஆக்கள் துரோகிகள் அனுப்பிய கப்பல் என்பதால் பத்திரமாய் போய் சேர்ந்திருக்கும்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரியார்... நீண்ட நாட்களின் பின்னர் மனதை நெருடும் ஒரு கதையுடன் வந்திருக்கின்றீர்கள்!

 

நீங்கள் என்றுமே யாழின் செல்லப்பிள்ளை... ஏன் தோட்டத்து மல்லிகையில் பதிந்தீர்கள்? 

 

யாழ் உங்கள் முற்றம்...!

 

கதையை நகர்த்திய விதம் நன்றாக உள்ளது... மரணத்தை வர்ணித்த விதமும், நீங்கள் அங்கே சென்று பார்த்து வந்தது போலவே உள்ளது!

 

அங்கும் தண்ணீர் இருக்கிற படியால், பனையும், தென்னையும் நிச்சயமாய் இருக்கும் தானே!

 

வரதனின் வாழ்வும் அங்கும் வளமாகவே இருக்கப்போகின்றது!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

 

அது சரி...... உங்கள் புலிக்குட்டிக்கு... அது தான் மீனுவுக்கு, வீரத் தழும்புகள் குணமாகி விட்டதா? கழுத்தில போட்டிருந்த சாமானைக் கழட்டியாச்சா?   :D

Link to comment
Share on other sites

 

நல்ல கதை சாஸ்த்ரி, உங்கள் அனுபவக்கதைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
அது ஏன் சாஸ்த்ரி, Spain & Portugal  இந்த நாடுகளில் மாத்த்ரம் தமிழர்கள் அறவே இல்லை?. அங்கு குடியெர முடியாதா? அல்லது அகதிகள் அனுமதிக்கபட மாட்டார்களா? அல்லது வறுமையான ஐரோப்பிய நாடுகள் என்ற காரணத்தினாலா?

 

முன்றாவது தான் பதில் .போத்துக்கல் வேலை இல்லா திண்டாட்டம் நிறைந்த நாடு .ஸ்பெயின் அப்படி இப்படி .ஜெர்மனும் பிரான்சும் லண்டனும் ஒல்லாந்த்தும் சொல்லி வேலையில்லை.அவர்கள் தரும் பணத்துடன் வாழ்க்கை நடாத்தலாம்.பெல்ஜியம் உதவி செய்தது எம்மவர் ஏன் அங்கு போகவில்லை என எனக்கு தெரியாது .(நான் அங்கு பலரை சந்தித்தேன் ).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல் அழகாகக் கதையை நகர்த்தியுள்ளீர்கள் சாத்திரி. தொடர்ந்தும் கதைகளை எழுதுங்கள் நீண்ட இடைவெளி விடாது. கையோடு எங்கள் யாழில் ஒரு காதல் கதையிலும் இணைந்துகொண்டீர்கள் என்றால் எமக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்றாவது தான் பதில் .போத்துக்கல் வேலை இல்லா திண்டாட்டம் நிறைந்த நாடு .ஸ்பெயின் அப்படி இப்படி .ஜெர்மனும் பிரான்சும் லண்டனும் ஒல்லாந்த்தும் சொல்லி வேலையில்லை.அவர்கள் தரும் பணத்துடன் வாழ்க்கை நடாத்தலாம்.பெல்ஜியம் உதவி செய்தது எம்மவர் ஏன் அங்கு போகவில்லை என எனக்கு தெரியாது .(நான் அங்கு பலரை சந்தித்தேன் ).

 

உள்ள இடமெல்லாம் தவண்டனிச்சனீங்கள் ஏன் கனடாவிலை போய் இறுகினனீங்கள் அண்ணே??????  :icon_mrgreen: 

 

கனடாவில் செய்யக்கூடிய சுத்துமாத்துக்கள் ஐரோப்பாவில் செய்யமுடியாது. :icon_idea:
 
அர்ஜுனத்தவிர்த்து இதர கனடா உறவுகள் என்னை மன்னிக்கவும். :)
Link to comment
Share on other sites

 

உள்ள இடமெல்லாம் தவண்டனிச்சனீங்கள் ஏன் கனடாவிலை போய் இறுகினனீங்கள் அண்ணே??????  :icon_mrgreen: 

 

கனடாவில் செய்யக்கூடிய சுத்துமாத்துக்கள் ஐரோப்பாவில் செய்யமுடியாது. :icon_idea:
 
அர்ஜுனத்தவிர்த்து இதர கனடா உறவுகள் என்னை மன்னிக்கவும். :)

 

சந்திரனில  தண்ணி இருக்கு என்று யாரும் விஞ்ஞானி சொன்னா அவர் சந்திரனில இருந்ததாக அர்த்தப்படாது .கொஞ்சம் உலக அறிவை வளர்க முயலுங்கள் .

வர வர பழைய பஞ்சாங்கங்களுக்கு விளக்கம்  எழுதுவதிலேயே எனக்கு நேரம் போகுது . :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரனில  தண்ணி இருக்கு என்று யாரும் விஞ்ஞானி சொன்னா அவர் சந்திரனில இருந்ததாக அர்த்தப்படாது .கொஞ்சம் உலக அறிவை வளர்க முயலுங்கள் .

வர வர பழைய பஞ்சாங்கங்களுக்கு விளக்கம்  எழுதுவதிலேயே எனக்கு நேரம் போகுது . :icon_mrgreen:  

 

ஒண்டில் ஒரு படி மேலை வாங்கோ  இல்லாட்டி ஒரு படி கீழை இறங்குங்கோ............ஒண்டுமேயில்லாமல்..திருப்பித்திருப்பி ஒருக்கால் சொன்னதையே எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறியள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டில் ஒரு படி மேலை வாங்கோ  இல்லாட்டி ஒரு படி கீழை இறங்குங்கோ............ஒண்டுமேயில்லாமல்..திருப்பித்திருப்பி ஒருக்கால் சொன்னதையே எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறியள்...

 

ph1.jpg

 

அவருக்கென்ன.....

அதைத்தான்.... கேட்டு, திருப்திப் பட்டுக் கொள்கிறார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

his-masters-voice-copy.jpg?w=510

 

கிழடு... வத்தினாலும், திருந்த மாட்டார். :D

ஹ்ம்ம்ம்...... என்னத்த.... சொல்ல...... :lol:

Link to comment
Share on other sites

நானும் நவீனனும் கிரிக்கெட் பற்றி கதைக்கொண்டிருக்கும் போது நான் எப்பவும் அதிகம் ஸ்கோர் பண்ணும் பாட்ஸ்மேன் Tendulkar என்று சொல்ல நவீனன் இல்லை தான் அதிகம் ஸ்கோர் பண்ணும் பட்ஸ்மன் Ricky Ponting  என்று சொல்ல

குமாரசாமி அண்ணை வந்து நானும் ஸ்கோர் பார்க்கின்றேன் எப்பவும் Total  என்பவன் தான் கனக்க அடிக்கும் பட்ஸ்மன் என்கின்றார் . :icon_mrgreen:

தெரியாத விடயங்களில் வாயை விட கூடாது . :icon_idea: .

இனி உலகசெய்தி இணைப்பவர்கள் உக்கிரேயின் பற்றி செய்தி இணைத்து பின் சவுத் கொரியா பற்றி செய்தி இணைத்தால் அண்ணைக்கு மண்டை சுத்த போகுது 

"இவன் நேற்று உக்கிரேயினில் நின்றான் இண்டைக்கு எப்படி சவுத் கொரியாவில் நிற்கின்றான் " என்று .

Link to comment
Share on other sites

சாத்திரியார் கப்பலில் வேலை செய்பவர்கள் அனுபவத்தை கதை வடிவில் தந்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதியவிடயங்கள் எல்லாம் அதிகம் பரிச்சயமானவைபோல் இருக்கிறது...காரணம் என்னுடைய தந்தையின் அனுபவங்களை கதைகதையாகக் கேட்டிருக்கிறேன்...அதேபோல் சகோதரர்களின் கப்பல் பயணம் பற்றிய கதைகள் பலவற்றைக்கேட்டிருக்கிறேன்... கப்பலில் செல்லாமலே அதனோடு அதிக பரிச்சயப்பட்டதுபோல் உங்கள் கதையில் மனம் லயித்துக் கொண்டது. நன்றி.

 

இந்த விடுமுறைக்கு நீங்களும்  ஒரு உல்லாச கப்பலிலை கியூபா போயிட்டு வாங்கோ கப்பல் அனுபவம் கிடைச்சிடும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்றுதான் வாசிதேன்.  கதைக்கு நன்றி சாத்திரி,

Link to comment
Share on other sites

இன்றுதான் வாசிதேன்.  கதைக்கு நன்றி சாத்திரி,

 

வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி :)

Link to comment
Share on other sites

பலமுறை கதையை வாசித்தேன் கதையாகத் தெரியவில்லை.
உணர்ச்சிகளை உறங்கச்செய்து கருமத்திலேயே கண்ணாக இருந்த ஒரு நிகழ்வு.
அதீத நம்பிக்கை நம்பியிருந்தவர்களால் சிதைக்கப்பட்ட வேதனை.
எதனையும் நம்பமுடியாமல் செய்துள்ளது. தன்னம்பிக்கை உட்பட..
நிகழ்வும் கருத்துகளும் அதைத்தான் சொல்ல விழைகிறது
அடிமுடியை யாரும் இன்றுவரை கண்டதில்லை. :(

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரியார்... நீண்ட நாட்களின் பின்னர் மனதை நெருடும் ஒரு கதையுடன் வந்திருக்கின்றீர்கள்!

நீங்கள் என்றுமே யாழின் செல்லப்பிள்ளை... ஏன் தோட்டத்து மல்லிகையில் பதிந்தீர்கள்?

யாழ் உங்கள் முற்றம்...!

கதையை நகர்த்திய விதம் நன்றாக உள்ளது... மரணத்தை வர்ணித்த விதமும், நீங்கள் அங்கே சென்று பார்த்து வந்தது போலவே உள்ளது!

அங்கும் தண்ணீர் இருக்கிற படியால், பனையும், தென்னையும் நிச்சயமாய் இருக்கும் தானே!

வரதனின் வாழ்வும் அங்கும் வளமாகவே இருக்கப்போகின்றது!

தொடர்ந்து எழுதுங்கள்!

அது சரி...... உங்கள் புலிக்குட்டிக்கு... அது தான் மீனுவுக்கு, வீரத் தழும்புகள் குணமாகி விட்டதா? கழுத்தில போட்டிருந்த சாமானைக் கழட்டியாச்சா? :D

உங்கள் அன்பான கருத்துக்கு நன்றிகள் இந்த கதை நான் வேறு ஒரு இதழிற்கு எழுதியதால் இங்கு பதிந்தேன். அடுத்ததாக  அந்தத் தீவில் தென்னை மரங்களே அதிகமாக இருப்பதாக அறிந்தேன். பனை மரம் வளர்வதற்கு  அதன் கால நிலை வெப்பம் அதிகமான இடங்களாக  இருக்கவேண்டும் என நினைக்கிறேன். காரணம் இந்தியவில் தமிழ்நாட்டில்  பெப்பம் மற்றும் சுண்ணாம்பு மண்ணை கொண்ட வேதாரணியம்  பகுதிகளில் அதிக பனைகள் உள்ளது கேரளாவில் தென்னைகள் மட்டுமே உள்ளது  அதே போல கர்நாடகாவில் வரண்ட பகுதிகளிலேயே பனையை காண முடிந்தது. அதே போல   நான் திரிந்த நாடுகளில் கம்போடியாவிலும். லவோசிலும் அதிக பனைகள் இருந்தது. தாய்லாந்து  விட்நாம் இந்தோனோசியாவில்  பனைகள் அரிதாகவே இருந்தது..மீனுவின் வீர தழும்பு மாறி விட்டது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இக்கதை கண்ணில் பட்டது, நல்ல அனுபவப் பகிர்வு, நன்றி சாத்திரியார்...!!! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.