Jump to content

காலத்தின் எதிரொலிகளைப் பாடுபவன் - நேர்காணல் கவிஞர் வாசுதேவன்


Recommended Posts

க.வாசுதேவன். கவிஞர்மொழிபெயர்ப்பாளர்ஓவியர்என பன்முக ஆளுமைகளோடு இயங்கிக்கொண்டு இருப்பவர். தமிழ் மொழியில் முதன்முதலில் பிரெஞ்சுப் புரட்சியை எழுதிய ஈழப் புலம்பெயரி. எதையும் தர்க்கித்துப் பார்க்கும்  மொழியாடல் கொண்ட ஒருவர்.   இவைகளைக் கடந்து தமிழ் சமூகத்தின் ஒடுங்குதல் அல்லது உறைநிலை மீது பெரும் கோபம் கொண்ட ஒரு படைப்பாளி.

 

தொலைவில்அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே  ஆகிய இரண்டு கவிதைத்தொகுப்புகளையும் தேர்ந்து எடுக்கப்பட்ட 19 நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிதைகள் என்ற கவிதை மொழிபெயர்ப்பையும் பிரெஞ்சுப் புரட்சி என்ற வரலாற்று நூலினையும் எழுதி இருக்கிறார். 2007 ம் ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுப்பாக தொலைவில்” கவிதைத் தொகுதி கனடா தமிழ் தொட்டத்தினரால் தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 தமிழினத்தின்  துயர் படிந்த வரலாற்றின் பாடுகளை பிரேஞ்சுமொழிக்கு மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் இவர் மொழிபெயர்ப்புக் கலையை இளையவர்களிடம் முன்னெடுக்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளார். 

 

எளிமையான சொல்லாடல்கள் அதேவேளை அர்த்தசெறிவு மிகுந்த பிரயோகங்கள் என புதுக்கவிதையின் நுண்மையூடாக தாயகத்துக்கப்பால் படைப்புக்களை நிகழ்த்திவருபவர்களிடையே தனக்கென குறிப்பிட்டுச் சொல்லகூடிய கவிதைப் பாணியினை கொண்டுள்ளவர்.

 

சோறும் கறியும் அத்தோடு சிறிதே கள்ளும் கொடு

யார்முதுகும் சொறிவானடியுன் இளையமகன்

மாலைப்பொழுதுகளில் சிறுவரைப் போல

மகிழ்ந்துவிளையாட கோவிலொன்றும் கொடு

போதுமடி அவனுக்கது”  

 

என்று தமிழ்ச்சமூகத்தின் முகத்தில் சாட்டையால் அடிக்கும் வாசுதேவனை நெருங்கினால்எளிமையான நண்பராக சங்கடமில்லாமல் அணுகமுடியும். சமூகத்தின் பல அடுக்குகளிலும் தன் கரங்களைக் கொண்டிருப்பதாலோ என்னவோ எல்லோரிடமும் நெருக்கத்தினை இயல்பாகவே கொண்டுவிடுகிறார். 

 

எப்போதும் சமூகத்தின் பலமாக  உரையாடல்களே இருக்கிறதென்பதில் மாற்றுகருத்துக்கள் எதுவுமில்லாத நிலையில் நிகழ்ந்திருக்கும் ஒரு உரையாடல் இது. -நெற்கொழு தாசன் 

***************************************************************************************************************************************************************

 

பரிஸ் அகிலனாக ஆரம்பித்த இன்றைய வாசுதேவனின் இடம் ?

 

இலக்கியம் என்பது எப்போதும் எனது இலக்காக இருந்ததில்லை. இலக்கியத்தால் புரட்சி செய்து விடலாமென்றோ அல்லது அது சமூகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றோ நான் தனிப்பட்ட முறையில் ஒரு போதும் நம்பியதில்லை.  இப்போதும் அப்படியொரு நம்பிக்கையில்லை. அவ்வாறு நம்பியவர்களில் மிகப்பெரும்பான்மையினர் ஏமாற்றத்தைத்தான் தழுவிக்கொண்டனர். என்னைப் பொறுத்த வரையிலும் இலக்கியம் என்பது ஒரு தாகம். அது பசி. தவிரக்கமுடியாத வெளிப்பாடும்உள்வாங்கலும். அகிலன் இறந்து விட்டான். வாசுதேவன் இறந்து விட்டான். நான் இன்று இன்னொருவன். நாளையும் இன்னொருவன்.

 

பிரஞ்சுப் புரட்சி உலகியல் மாற்றங்களுக்கு வித்திட்ட ஒரு பெரும் வரலாற்று நிகழ்வு. தமிழில் அதை எழுதத் தூண்டிய காரணம் ஒரு வரலாற்று நோக்குனராக நோக்குனராக அன்றில் இருந்து இன்றுவரை புரட்சிகளுடாக நிகழும் மானிடவியல் மாற்றங்கள் பெருமைப்படக்கூடடியனவா ?

 

பிரஞ்சுப்புரட்சியை  எழுதவேண்டும் எனும் எண்ணம் உண்மையில் எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை. அதுபற்றி நிறைய வாசித்து அறியவேண்டும் எனும் ஆவலே என்னில் மேலெழுந்து நின்றது. பிற்காலத்தில்தமிழில் பிரஞ்சுப் புரட்சி பற்றிய நூல்களின் பெருவறுமையை உணர்ந்துகொண்டபோதுதான் இப்புரட்சியின் வரலாற்றை நூலாக எழுதவேண்டும் எனும் எண்ணம் என்னை ஆக்கிரமித்தது.

 

புரட்சி எனும் சொல்லுக்கு நாம் கொடுக்கும் வரைவிலக்கணத்தைப் பொறுத்தே அதன் மானிடவியல் மாற்றங்கள் பற்றி நாம் சிந்திக்கலாம். மானிட வாழ்வின் நிலையை உயர்த்தும் நோக்கிலும்மானிட வாழ்வில் மகிழ்வையும்மலர்ச்சியையும் கொண்டுவரும் நோக்கிலும் ஆற்றப்பட்டவை அனைத்தும் புரட்சிகளே. இந்த இலக்கிற்கெதிராக செயற்பட்டவையெல்லாம் பிற்போக்கு வாதச் செயற்பாடுகளே. இக்கோணத்தில் பார்த்தால் புரட்சிகளின் இலக்கு எட்டப்படும் நிலையில் அவை பெருமைப்படக்கூடியவையே.

 

யேசுநாதரோ அல்லது மொகமது நபியோ செய்த ஆத்மீகப்புரட்சியை எடுத்துக்கொண்டோமானால்அவை மானிட விடுதலையின் நோக்கில் முன்னெடுக்கப்பட்டவையே. ஆனால்இதே புரட்சிகளின் விளைவாகஇதே புரட்சிகளின் பெயரால் மானிடத்திற்கு ஏற்பட்ட சேதங்களும் ஏராளம் ஏராளம். இருப்பினும் இப்புரட்சிகளின் இலக்குகளையோ அன்றில் அதன் வெற்றிகளையோ நாம் கறைபடுத்திக் கொள்ளலாமா ?  ஒவ்வொரு புரட்சியிலும் நாம் அவதானிக்கும் மானிடவியல் மாற்றங்களில்மானிடத்திற்குச் சாதகமான விளைவுகளும்பாதகமாக விளைவுகளும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.  பாதகமான பக்கங்களை மாத்திரம் பார்வையிட்டு புரட்சிகள் மீது நாம் தீர்ப்பு வழங்குவதைத் தவிர்த்துக் கொள்வதே அறிவார்ந்த விடயமாக இருக்கக்கூடும். எந்தப் புரட்சிபற்றியும் ஒரளவேனும் புறநிலை சார்ந்த தீர்ப்பை வழங்குவதற்கு அப்புரட்சி நடைபெற்றதன் பின் ஆகக்குறைந்தது அரை நூற்றாண்டேனும் நாம் காத்திருக்கவேண்டும்.

 

மேற்கு நாடுகளால் நிகழ்த்தப்படும் ஒரு போராட்டம் அல்லது எழுச்சி புரட்சி என வரையறை செய்யப்படுவதையும்அதே நிகழ்வுகள் ஏனைய தளங்களில் நிகழும்போது பயங்கரவாதம்‘ என வரைபுக்குள்ளாக்கப்படுவதையும் எப்படி எதிர் கொள்கிறீர்கள் ?

 

பயங்கரவாதம் என்பது காலத்திற்கேற்பவும்இடத்திற்கேற்பவும் வேறு வேறான அர்த்தங்களைக் கொள்ளக்கூடியது என்பது இந்த நவீன காலத்தில் யாருக்கும் இரகசியமான விடயமல்ல. அடக்குபவர்களின் அடக்கு முறைக்கு மானிடவிடுதலை முன்னெடுப்பு என்றும்அடக்கப்பட்டவர்களின் எதிர்ப்போராட்டத்திற்கு பயங்கரவாம் என்றும் பெயரிடுவது நவீன காலத்தின் குறியீடு.  வல்லமை படைத்தவர்களின் சொல்லாளு மையும் அவர்களின் ஊடகங்களும்  தம் விருப்புகளையும்தம்மிலக்குகளையும் மற்றவர்கள் தலையில் திணிப்பதற்காக எடுத்துக் கையாளும் முறைமைகளே இவைகள். இவற்றை எதிர்கொள்ள முடியாது. இவை மிகப்பலம் வாய்ந்த நிறுவன மயப்படுத்தப்பட்ட ஊடகங்களின் தலையீட்டாலும்தெரிந்தோ தெரியாமலோ அவற்றுடன் ஒத்தூதும் அறிவிலிகளாலும் வியாபகம் பெறுகின்றன.  இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இவையனைத்தும் மனிதாபிமானம்மனித உரிமைகள் எனும் போர்வைகளின் தோற்றத்துடனேயே  நடாத்தப்படுகின்றன.

 

வரலாற்றைப்பாருங்கள் பயங்கரவாதிகள் என் முத்திரை சூட்டப்பட்ட பலரை அது புனரமைத்திருக்கிறது. சமகாலத் தீர்ப்புகள் அரசியல் சார்ந்தவை. வரலாறு உண்மையைத் தேடிச்செல்வது.

 

ஒவ்வொரு வரலாற்று ஆசிரியர்களுக்கும் தனித்தனியான நோக்கமும் பார்வையும் உண்டு என உங்கள் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள. அப்படியாயின் வரலாற்றின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விடாதா இதனூடாக உங்களை மீள் சோதனை செய்ய முடியுமா ?

 

வரலாற்றை எழுதுதல் என்பது அறுதியாக வரையறை செய்யப்பட்ட ஒரு விஞஞானம் அல்ல. விஞ்ஞான விதிகள் கூட நிரந்தரமானவையல்ல.  எந்த வரலாறும் தன்னை ஒரு முகத்துடன் காட்டிக்கொண்டதாக வரலாறில்லை. ஆனால் வரலாறு பற்றிய பார்வைகள் அதன் ஆய்வு முறைமைகளாலும் மற்றும் ஆய்வாளரின் வரலாற்ரறிவு போன்ற பல்வேறு காரணிகளாலும் நிபந்தனைப்படுத்தப்படுவன. வரலாறு பற்றிய ஆய்வு காலப்போக்கில் மாற்றங்காணக்கூடியது.  உலகின் அண்மையக்காலத்தைய சம்பவங்கள் வரலாறாகும்போது நாம் இங்கிருக்க மாட்டோம்.  ஆனால்,உதாரணமாக நாம் இல்லாது போது நடைபெற்றநாம் நேரடியாகச் சாட்சியமாக இல்லாதிருந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற பிரஞ்சுப்புரட்சி வரலாற்றைப் பொறுத்தவரையும் பெரிதாக மறுபரிசோதனை செய்யத் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.

 

மறுபரிசீலனை என்னும் சொல்லை தற்போது அடிக்கடி குறிப்பிட்ட ஒரு தமிழ் இலக்கியச் சூழலில் கேட்கக்கூடியதாக இருக்கிறது. முன்னர் அவன் பிடித்த முயலுக்கு மூன்று காலிருந்தது. இப்போ இவன் பிடித்த முயலுக்கு ஐந்து காலாக உள்ளது’ என்றவாறான விவாதங்கள் பயன் தருவனவையல்ல. இவைபற்றிக் காலங்காலமாக மறுபரிசீலனை செய்து கொண்டேயிருக்கலாம்.  பாரதூரமான விடயங்களை அவற்றின் பெறுமதி சார்ந்து சிந்திக்கவேண்டும். சுய தேவைகளை அல்லது சுயலாபங்களை முடிந்தளவு விலத்தி வைக்கும் பக்குவம் வரலாற்றை அணுகுபவர்களுக்கு வேண்டும். மூக்கு நுனியை உற்றுப் பார்ப்பதுதான் வராலாற்றை  அறிதல் என நம்புபவர்களின் பார்வைக் கோளாறுகளால் உருவாகும் தீங்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளல் அவசியம்.

 

நாம் சம்பந்தப்பட்டிருந்த அல்லது சாட்சியமாக இருந்த சம்பவங்கள் வரலாறாகும் போது நாம் எல்லோரும் மறுபரிசிலினைக்கு உள்ளாகுவோம். அது வரவிருக்கும் வரலாற்றாசிரியர்கள் சார்ந்த விடயமாகவிருக்கும்.

 

பிரான்ஸ் ஒரு பல்லின கலாசாரபண்பாட்டுத் தளத்தின் மையம். இதில் தமிழ் சமூகத்தின் வினைத்திறன் எப்படியிருக்கிறது ?

 

பிரான்ஸ் பல்லினக் கலாச்சார பண்பாட்டு மையத்தின் தளம் என்று கூறுவது பொருத்தமான ஒன்றல்ல. பிரான்சின் பெருநகரங்கள் பல்லினக் கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறதென்பதே உண்மை. பிரஞ்சு நாட்டின் மிகப்பெரும்பான்மையான  கிராமிய நிலப்பரப்பில் பல்கலாச்சாரத்தின் சுவடுகள் இல்லை. அவை தமக்கேயான  வாழ்வியலைப் பேணி நிற்கின்றன. இதை அனுபவ ரீதியாகக் கண்டுணர்ந்துள்ளேன்.  இந்தச் சூழ்நிலையில் தமிழ் சமூகம் மிகப்பெரும்பான்மையாக விளிம்பு நிலையிலேயே இருக்கிறது என்பதுதான் உண்மை.

 

இனரீதியாக தமிழ் எனும் அடையாளம் பிரான்சில் ஈழத்தமிழரின் வருகையின் பின்னரே பரவலாக்கம் கண்டது. ஒருகாலத்தில் ஈழத்தமிழர்களை அகதிகள்’ என்ற நோக்கில்  தம்மை பிரஞ்சுக்காரர்கள்’ எனக் கருதும் இங்கு வாழும் பாண்டிச்சேரியர்கள் ஏளனமாகக் கருதினார்கள். காலணித்துவ உளச்சிக்கலில் புதைந்திருந்த இவ்வாறானவர்கள் காலப்போக்கில் தம் கருத்து நிலைகளை மாற்றிக் கொண்டார்கள். காரணம்தமிழ் எனும் அடையாளம் ஈழத்தமிழர்களால் பரவலாக்கம் அடைந்தபோது அந்த அழகான போர்வையை அவர்களும் போர்த்திக் கொண்டார்கள். இது ஒட்டு மொத்தத் தமிழர்களுக்குமான சாதகமான விடயமே.

 

கடின உழைப்பாளிகள் என்ற வகையில் குறிப்பாக ஈழத்தமிழர்கள் நகர்ப்புறக் கலாச்சாரத்தில் தமக்கென ஒரு  இடத்தைத் தக்கவைத்துள்ளார்கள் என்பது மறுக்கமுடியாத விடயமே. எனினும் தற்போது நம்மவர்களையும் மீறி பங்களாதேசத்தவர்கள் தம்மை பெரும் உழைப்பாளிகளாக பிரான்சில் நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளார்கள் என்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வியாபாரத் துறையில் தமிழர்கள் தமக்கென இடத்தைப் பிடித்துள்ளார்கள் என்பதற்கான அடையாங்களும் நிறையவே தென்படுகின்றன.  கல்வித்துறையிலும் ஈழத்தமிழரின் இரண்டாவது தலைமுறையினர் சோடை போகாதுள்ளனர்.அரி தளவு  எண்ணிக்கையானவர்கள் சாதனைகளையும் நிகழ்த்திக்காட்டியுள்ளனர்.

 

இருப்பினும் சமூககலைகலாச்சாரஅரசியல் விடயங்களை தூக்கிநோக்குவோமானல் நாம் இன்னமும் விளிம்பு நிலையில்தான் இருக்கிறோம் என்பது வெளிப்பாடடையும். நமது கலை கலாச்சாரத்தின் ஒடுங்கிய தன்மை எமை வெளிப்புறத்தை நோக்கிய விரிவாக்கதைத் தடை செய்துள்ளது. இந்தியச் சினிமாவி லேயே இன்னமும் எமது கலாச்சாரம் வேர்கொள்வது துரதிஸ்டசவமானது.

 

 

மேற்குறித்த ஈழத்தமிழரின் இரண்டாவது தலைமுறையினர் தங்களின் அடையாளமாக எதைக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் உளவியல் மற்றும் குடும்பப் பிணைப்புகள் எவ்வாறு இருக்கிறது ?

 

இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது அத்தனை இலகுவானதல்ல.  புலம் பெயர்ந்த தமிழர் களின் இரண்டாவது தலைமுறையினரில் மிகப் பெரும்பான்மையானவர்கள் ஒருவகையான இரட்டை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அங்கும் இல்லாத இங்கும் இல்லாத ஒரு இருப்புத்தான் அவர்களுடையது எனக் கருதவேண்டியிருக்கிறது. ரீன் ஏஜ்’ இனரின் நிலைதான் துன்பகரமான நிலை. இவர்களினுடைய பெற்றோர் புரிந்துணர்வு இல்லாதவர் களாகவும் கலாச்சாரப்’ பற்றுள்ளவர்களாகவும் இருப்பார்களேயானால் இவ்விளையோர் தம்முடன்போராடும் அதே வேளையில் பெற்றோருடனும் போராட வேண்டிய நிலையில் வீட்டில் ஒரு வேடமும் வெளியில் ஒரு வேடமுமாக வாழத் தண்டிக்கப்படுகிறார்கள். பெற்றோரைத் திருப்திப்படுத்தவேண்டும் எனும் ஆதங்கமும் அதே வேளையில் பொதுச் சமூக அல்லது கல்விசார் வெளியில் மற்றையவர்களைப்போல் சாதாரணமாக’ வாழவேண்டும் எனும் அவர்களது துடிப்பிற்குமிடையில் தோன்றும் முரண்பாட்டைச் சமாளிப்பதற்காக அவர்கள் வேடந்தாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதைச் சரியான முறையில் கையாண்டு வெற்றிகொள்பவர்களும் இருக்கிறார்கள். துவண்டுதோல்விகண்டு கிளர்ச்சி செய்து தடுமாறுபவர்களும் இருக்கிறார்கள். பெண் பிள்ளைகள்தான் இவ்வியடத்தில் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

 

மேற்கத்தையநகர்ப்புறச் சாம்பாருக்‘ கலாச்சாரத்தில் அடையாளம் என்பது ஒரு விசித்திரமான விடயம். பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் மேற்குலக நகரங்கள் வெளிப்படையாக இனவாதத்தை தூக்கிப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. வெள்ளையர்களுக்கான’ முன்னுரிமை அனேகமாக எல்லா மட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. என்னதான் மனித உரிமை பற்றிப் பேசினாலும் சட்டங்கள் எவையாயிருப்பினும் நடைமுறைவாழ்வில் இனவாதம் தலைகாட்டத்தான் செய்கிறது.

 

இந்நிலையில்நமது இரண்டாவது தலைமுறையின் உளவியல்அடையாளம் எதுவாக இருக்கமுடியும்?  முதல் தலைமுறையினரை சோறுகள்’ என்று எள்ளி நகையாடும் இரண்டாவது தலைமுறையினரும் இருக்கின்றனர் தானே.  இந்த இரண்டாவது தலை முறையின் உளவியல்  அடையாளம் தெளிவற்றது என்றுதான் கூறுவேன். இருப்பினும் தெளிவற்ற உளவியல் அடையாளமென்பது கட்டாயமாகப் பாதகமானது என்று கூறுவதும் அத்தனை இலகுவானதல்ல.

 

 

ஈழ மற்றும் புலம்பெயர் தமிழக்கவிதைகள் சுய புலம்பல்கள் அல்லது அரசியல் பிரச்சாரக் கூற்றுக்களே தவிர அவை கவிதைகள் அல்ல என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிதே. இது குறித்து ?

 

இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் யாரென்பதை உற்று நோக்கிப்பாருங்கள். அவர்களில் முதன்மையானவர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியில் மனிதர்களே இல்லை என்றும் தாமே உலகின் முதல் தர  இலக்கியவாதிகள் என்றும் தம்மைக் கருதிக்கொண்டிருப்பவர்கள். ஈழத்தில் நடைபெற்று முடிந்தது வெறும் குழுச்சண்டையென்றும் அது காரணமற்ற வன்முறையின் வெளிப்பாடென்றும் பிரகனடம் செய்பவர்கள். மற்றும் மூன்றாந்தர இடதுசாரிகள். இத்தரப்பினரில் பாட்டாளி வர்க்கப்’ போர்வையில் சோம்பல் வளர்ப்பவர்களும் அடங்குவர். இவர்களைக் கேட்டீர்களானால்இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்து 70 வருடங்களாகப் போகும் நிலையிலும் இன்னமும் யூதர்கள் ஏன் அழுது கொண்டிருக்கிறார்கள் எனக்கேட்பார்கள். இதுபோன்றவர்களின் போலி மனிதாபிமானமும் மாற்றோர் துன்பமறியாமையும் இவர்களை இலகுவாக முகமூடி களைந்து அடையாளம் காட்டிவிடுகின்றன.

 

அப்படியானால் இடதுசாரிய மற்றும் வர்க்கச் சிந்தனைகள் வெறும் சிந்தாந்தக் கோட்பாடுகள்தானா அவற்றினால் இன்று பயனேதும் இல்லையா 

 

மனிதகுலம் எப்போதுமே அடக்குபவர்கள் எனவும் அடக்கப்படுபவர்கள் எனவும் பிரிந்தே கிடக்கிறது. இந்த இருமை நிலையிலிருந்து அது எப்போதும் தப்பிக்கப்போவதில்லை என்றும் கூறிவிடலாம். ஆனால்அடக்குப்படுபவர்கள் எப்போதும் ஏதோ ஒரு வடிவில் தம் அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப்போராடிக்கொண்டே வந்திருக்கிறாரகள். பல உரிமைகளை வென்றெடுத்தும் உள்ளார்கள்.  இருப்பினும்அடக்குமுறைக்கெதிரான உரிமைப்போராட்டங்கள்  கோட்பாடுகளாக  வரையறுக்கப்படுவதற்கு முன் நடைபெற்ற போரட்டங்களையும்அதன் பின்னர் நடைபெற்ற போராட்டங்களையும் ஒப்பீடு செய்வோமானால் சில உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம். மாக்சிய-லெனினிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டஅதாவது கட்டமைக்கப்பட்டஅமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள் அல்லது புரட்சிகள் சர்வாதிகார அரசுகளின் தோற்றங்களுக்குக் காரணமாக இருந்தன. குறிப்பாக  கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும்ருசியாவையும் உதாரணங்களாகக் காட்டலாம். இவ்வரசுகள்  பாட்டாளி வர்க்க’ அரசுகளாக அல்லாது  ப்யூரோகிராசி’ களாகவேயிருந்தன. பின் உலகச் சூழ்நிலைகளுக்குத் தாக்குப்பிடிக்காது  தளர்ந்துதள்ளாடி உதிர்ந்து போயின.  சனநாயக அரசுக் கட்டமைப்புகளுள் பாட்டாளிகளுக்குள்ள  போராட்ட உரிமை  ப்யூரோக்கிராசி-கம்யூனிசக் கட்டமைப்புக்குள் இருக்கவில்லை என்பது வெள்ளிடைமலை.  சிலர் கம்யூனிசத்தை பூசைக்குரிய விடயமாக்கி அங்கு சில கடவுளர்களையும் உருவாக்கி வைத்துள்ளார்கள்.  கோட்பாடுகள் மனித குலத்திற்குச் செய்த நன்மைகளை விடவும் தீமைகள் அதிகமானவையென்றே எனக்குத் தோன்றுகிறது.

 

ஈழத் தமிழ் கவிதைகளின் படிமம் குறியீடு தொன்மம் உருவகம் போன்றன சிறைப்பட்டிருப்பதாக கருதுகிறீர்களா ?

 

ஈழத் தமிழ் கவிதைகள் மாத்திரமல்ல. உலகக் கவிதைகளுக்கும் இதுபொருந்தும். பண்பாட்டு விழுமியங்களும்,அவற்றின் வரலாற்றுப் போக்கிலான கூர்ப்பும்மொழியியற் கூறுகளினூடே கடத்தப்படும் படிமங்களும்வாழ்வுச்சுவடுகளும் இன்றிஅவற்றின் சிறைப்படுத்தலின்றி  இலக்கியம் சாட்சியாக வெளிப்படவே முடியாது. கவிதை இதற்கு எவ்வாறு விதிவிலக்காக முடியும் குறிப்பாக ஈழத்துக்கவிதைகள் இவ்விதிகளிலிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்ளமுடியும்?

 

வாசுதேவனின் கவிதைகளின் மையம் ?

 

எவ்விதச் சந்தேகமுமின்றி வாசுதேவனின் பிரக்ஞையே.

 

தொலைவில்’, ‘அந்த இசையைமட்டும் நிறுத்தாதே’ என  இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிடுள்ளீர்கள். இப்போது உங்கள் படைப்புகளில் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள் ?

 

பொதுவாகவே எழுதும் கவிதைகள் என்பவை வாழ்பனுபவங்களின் எதிரொலிகளே. வாழ்க்கை பயணிக்கும் பாதையும்அது சிந்தனையில் ஏற்படுத்தும் தாக்கங்களுமே கவிதையின் மூலங்களாகின்றன. ஓரு தொகுப்பிலிருந்து இன்னொரு தொகுப்பிற்குத் தாவும் போது அது பாரிய அனுபவப் புரட்சி என்று கருதுவது ஒருவகையில் அப்பாவித்தனமானது. வாழ்க்கைப் பாதையின் எதிரொலிகளாக் கவிதைகள் முளைக்கின்றன. அவ்வளவுதான்.

 

பொதுவாக கவிஞர்கள்கவிதைகள் மேல்தான் விமர்சனம் வைக்கப்படும். நீங்கள் வாசகர்கள் மேல் எப்படியானதொரு விமர்சனத்தை முன் வைப்பீர்கள் ?

 

நமக்கு நாமே நீண்ட காலத்திற்குப்பொய்கூறுதல் சாத்தியமற்ற விடயம். தமிழ் கவிதைகளின் வாசகர்கள் யார் சாதாரண மக்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் கவிதையுலகிலிருந்து வெளியேதான் நிற்கிறார்கள். அவர்கள் கவிதை மொழியால் ஈர்க்கப்படுவதில்லை. சற்று மிகைப்படுத்திக் கூறுவதானால் கவிஞர்கள்தான் மாறி மாறித் தங்கள் கவிதைகளை வாசிக்கிறார்கள். தமக்குத் தாமே புகழரம் சூடிக்கொள்கிறார்கள். புத்தக வெளியீடுகளைப் பார்க்கின்றபோது மீண்டும் மீண்டும் ஓரே முகங்களைத்தானே நாம் பார்க்கிறோம். மீண்டும் மீண்டும் ஒரே இலக்கிய அரசியல்’ தானே மேடையேறிக்கொண்டிருக்கிறது.  வாசகர்கள் மேல் வைக்கக்கூடிய விமர்சனம் என்பது கவிஞர்கள் மேல் வைக்கப்படும் விமரசனம் என்று முடிவடைவகின்றது. ஏனெனில் மிகப்பெரும்பான்மையான வாசகர்களும் கவிஞர்களே. இதனால்தான் தமிழ் கவிதையுலகில் விமர்சனம் என்பது சோடைபோன விடயமாகக் கிடக்கிறது.

 

19ம் நூற்றாண்டுப் பிரஞ்சுக் கவிதைகளுக்கும் இன்றைய பிரஞ்சுக் கவிதைகளுக்குமிடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஊடாக நிகழ்ந்த சமூகத்தாக்கம் என்னஇவற்றோடு ஒப்பிடும்போது தமிழ்க்கவிதையின் சூழல் எப்படியிருக்கிறது ?

 

மொழி எதுவாக இருப்பினும் கவிதை சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தியது அல்லது ஏற்படுத்தும் என்று எண்ணுவது எத்தனைதூரம் பொருத்மானது என்று கேட்கத் தோன்றுகிறது. கவிதை சமூகத்தையும் சமகாலத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது. அதன் சாட்சியமாகக் கூட இருக்கிறது. ஆனால் அது சமூக மாற்றத்தின காரணியாக இருந்ததா என்றால் என்னைப் பொறுத்தவரையில் இல்லையென்றுதான் கூறுவேன்.  தமிழ்க்கவிதையின் நிலையும் இதுவேதான்.

 

ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளீகள். ஓவியராக வாசுதேவன் பயணித்திருக்கும்  தூரம்ஓவியராக இருந்து கவிஞர் வாசுதேவனை விமர்சித்தால் திருப்தி கிடைக்கிறதா?

 

அனைத்துக் கலைகளின் மூலமும் நுண்ணுணர்வுகளே. குகைகளில் ஓவியம் வரைந்த ஆதிமனிதர்களும் தமது நுண்ணுர்களை தம்மால் முடிந்த வகையில் வெளிப்படுத்தினார்கள்.  இசைஓவியம்இலக்கியம்நடனம் என இன்னோரன்ன கலைவடிவங்கள் அனைத்தும் மனிதர்களின் மரணத்திற்கெதிரானதும்அபத்தத்திற்கு எதிரானதுமான புரட்சிகளே. ஒவியம் வரைவதென்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு தியானம்போதைத் தேடல். அது ஒரு பயணம் அல்ல.  இவ்வகையில் ஓவியத்துறையில் பயணித்திருக்கும் தூரம் என ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை. குளியலறைக்குள் நின்று பாடும்போதும்கவிதையொன்றை எழுதும்போதும் அன்றில் ஒவியம் ஒன்றை வரையும்போதும் நான் வேறு வேறு மனிதனாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அனைத்துமே அகத்தின் வெளிப்பாடுகள்தான். அனைத்தினதும் ஊற்றுக்கண்கள் ஒன்றேதான்.

 

எண்பதுகளின் பிற்பகுதிகளில் இருந்து பொது வெளியில் இயங்கி வரும் நீங்கள்அதிகளவு பல்லின இலக்கியவாதிகளுடன் நெருக்கங்களைக் கொண்டிருக்கும் நீங்கள்ஈழத்தமிழ் மக்களின் துயரங்களைவலிகளை இழப்புகளைஇலக்கியப் படைப்புகளை அவர்களிடம் எவ்வளவு தூரம் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள் ?

 

தனிப்பட்ட முறையில் என்னாலான பகிர்வுகளை மேற்கொண்டிருக்கிறேன். ஒரு கடமையாக அல்ல. ஆனால் இயல்புநிலையானசாட்சியமற்ற பகிர்வுகளாக. அண்மைக்காலமாக  ஈழத்தின் துயர்படிந்த கவிதைகளை பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கத்  தொடங்கியிருக்கிறேன். அவை எப்போது ஒரு தொகுப்பாக வெளிவரும் என்பதை என்னால் சொல்லமுடியாதுள்ளது. தனிமனிதனாக இவ்வாறானதொரு வேலையை விரைவில் செய்து முடிப்பதற்கான கால அவகாசம் எனக்குப் போதாதுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்  அடுத்த தலைமுறையினர் சிலரை ஒருங்குகூட்டி அவர்களுக்கு மொழிபெயர்ப்புக் கலையைக் கற்பிக்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளேன்.  அடுத்த தலைமுறை இருமொழிப் பயிற்சி பெற்று  இலக்கிய மொழிபெயர்ப்புத் துறைக்குள் செல்லவேண்டிய ஒரு கட்டாயத் தேவையிருக்கிறது. எமது புலம்பெயர்வு அதற்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.  எத்தனை காலத்திற்குத்தான் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டிருப்பது ?

 

 

ஈழத்தில் மிலேச்சத்தனமான இன அழிப்புக்குள்ளான நிலையில் அந்த வலிகளை சுமந்து கொண்டு புலம்பெயர் ஈழத்தமிழினம் செல்லும் திசை உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா ?

 

நிச்சயமாக இல்லை. ஈழத்தில் இன அழிப்பே நடைபெறவில்லை என்று கூறுபவர்களும் நம் மத்தியில்தானே இருக்கிறார்கள். பேரினவாத ஆளும் வர்க்கத்திற்கு உரோமத்தை வருடிவிடுபவர்கள் நம் மத்தியில்தானே இருக்கிறார்கள். சிங்கள மக்களில் சிறு தொகையினரேனும் நடைபெற்ற அநீதிக்காக வருந்துகையில்தம் தனிப்பட்ட வஞ்சம் தீர்ந்ததாக எம்மில் சிலர் வெளிப்படையாகவே கூறிக்கொள்கிறார்களே. இதைத்தான் நான் மூக்கறையனிசம்‘ என்று அழைக்கிறேன்.

 

ஈழத் தமிழ் சமூகம் பிளவுண்டதும்சிதறுண்டதுமானது. அதை மேன்மேலும் பிளவுபடுத்தும் திட்டமிட்ட நோக்கில் செயற்படுபவர்கள் தங்களது குறுகியகால நோக்கங்களில் வெற்றி பெறக்கூடும். ஆனால்நீண்ட காலவிளைவுகளுக்கு அவர்களே பலியாகப்போவதைத் யாராலும் தவிர்க்கமுடியாது.

 

தமிழ்நாட்டிலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி மிக அதிகமாக தமிழ் செயற்பாடாளர்கள் எதிர்கொள்ளும் ஒரு வன்முறை துரோகிப்பட்டம். இதன் மூலம் எதைக் கண்டடையப்போகிறோம் ?

 

தன் இருப்பு நிலையில் மற்றும் கருத்து நிலையில் சுமூகமாக இருக்கக்கூடிய சமூகத்தில்மக்கள் மத்தியில் இவ்வாறான சொல்லுபயோகங்கள் தேவைப்பவடுதில்லை. இச்சுமூக நிலையில்லாத நிலையில் ஒரு வித கூட்டு பரனொய்ட்’ மனோபாவம் தானாகவே உருவாகிவிடுகிறது.  போர்க்காலச் சூழலும்பகைச் சூழலும் இம்மனோ நிலையின் அடிப்படைக் காரணிகளாக அமைந்து விடுகின்றன. இது தமிழ்ச் சமூகத்திற்கு மட்டும் சொந்தமான ஒரு விடயம் என்று கருதிவிடாதீர்கள். மனிதகுலம் ஒட்டுமொதத்திற்கும் இதுதான நிலை. எங்கெல்லாம் தேசியஇனமத அடையாளங்களின் இருப்பு நிலை தடுமாறுகிறதோ அங்கெல்லாம் துரோகிகள் இருப்பார்கள். யார் சார்பாக  யார் துரோகி என்பதைப் பல்வேறு விடயங்கள் தீர்மானிக்கின்றன. வெற்றிகளும்தோல்விகளும் காலமும் இடமும் இச்சொல்லின் அர்த்தத்தை அவ்வப்போ மாற்றிக் கொள்கின்றன. அவ்வளவுதான்.

 

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்களிடம் வழக்கொழிந்து போய்க் கொண்டிருந்த சாதியங்கள் பற்றிய உரையாடல்கள் மீள அதிகரித்திருப்பது குறித்து ?

 

சாதீயம் பற்றிய உரையாடல்களையும்சாதிய இருப்பு நிலையையும் நான் ஒன்றுபடுத்திப் பார்ப்பதில்லை. சாதிகளின் இருப்பு நிலைக்கும்அது தொடர்பான உரையாடல்களுக்குமான உறவு பற்றிய ஒரு தெளிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமாதொன்றாகும்.  ஏனெனில் இவ்வுரையாடல்கள் பல்தரப்பட்டவை. சாதிய அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை கூர்மைப்படுத்தும் உரையாடல்களும் உண்டு. அதை தணித்து சாதியக் கலைப்பை அல்லது கலப்பை தோற்றுவிக்கும் உரையாடல்களும் உண்டு. இவையெல்லாம் சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் அணுகப்படல்வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் சாதிக் கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா அல்லது வீழ்ச்சியுற்றிருக்கிறதா என்னும் கேள்விக்கான விடையிலிருந்து இது ஆரம்பிக்கப்படலாம். சாதியப்பாகுபாட்டின் இன்மை  தமிழ்தேசியத்தைப் பலப்படுத்தும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை.

 

நன்றி : ஆக்காட்டி சஞ்சிகை. (புரட்டாதி -ஐப்பசி)

                                           

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் , வேலணைக்  கவிஞர் ,மொழிபெயர்ப்பாளர்   வாசுதேவன்  அவர்களின் பணி  மேன்மேலும் தொடர எனது  நல்வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.