Jump to content

ஸ்கொட்லாந்து பிரிவினையின் பின்புலம் – சில குறிப்புக்கள் : சபா நாவலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்து பிரிவினையின் பின்புலம் – சில குறிப்புக்கள் : சபா நாவலன்

yesorno.jpg

அத்லாந்திக் சமுத்திரத்தின் உள்ளே தலையை நுளைத்து பிரித்தானியாவை உதைத்துக்கொண்டிருக்கும் அழகிய குடாநாடு தான் ஸ்கொட்லாந்து. ஏறக்குறைய 790 தீவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அழகான தேசம். பிரித்தானியாவின் இன்னொரு அங்கமான இங்கிலாந்திலிருந்து பயணித்தால் அழகிய நீண்ட மலைகளும் அருவிகளையும் அண்மித்த லேக் டிஸ்ரிக்கைத் தாண்டும் போதே ஸ்கொட்லாந்து எல்லைய அடைந்துவிட்டதாக உணரலாம். எடின்பரோ ஸ்கொட்லாந்தின் தலை நகரம். விசாலமான வீதிகளும், விண்ணைத் தொடத கட்டடங்களும் ஆர்ப்பாட்டமில்லாத தலை நகரம் ஒன்றை அறிமுகப்படுத்தும். கிளாஸ்கோ ஸ்கொட்லாந்தின் தொழில் நகரம். உலகில் அதிகம் பணப்பரிவர்த்தனை நடைபெறும் நகரங்களில் கிளாஸ்கோவையும் ஒன்றாகக் குறிப்பிடுவார்கள்.

நிலப்பிரபுத்துவ மன்னராட்சியிலிருந்து முதலாளித்துவம் உதித்த போது பிரான்சில் மன்னர்கள் அழிக்கப்பட்டார்கள். பிரித்தானியாவில் தமது அழிவைப் புரிந்துகொண்ட மன்னர்கள் இணைந்து முதலாளித்துவத்துடன் சமரசம் செய்துகொண்டார்கள். அவ்வகையான ஒரு சமரசத்தின் வெளிப்பாடே 1706 ஆம் ஆண்டில் பிரித்தானியாவுடன் ஸ்ட்கொடாலாந்து இணைந்து கொண்டதைக் குறிப்பிடலாம். ஸ்கொட்லாந்து, இங்கிலாந்துடன் வட அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளின் இணைவையே பிரித்தானியா என்கிறார்கள்.ஐக்கிய ராஜ்யம், பெரிய பிரித்தானியா என்றெல்லாம் இக் கூட்டாட்சியை அழைப்பது வழமை.

பிரித்தானியாவுடன் ஸ்கொட்லாந்து இணைந்து கொண்ட முன்னூறு ஆண்டுகள் கடந்த பின்னர் ஸ்கொட்லாந்து பிரிந்து தனியரசு அமைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது.

ஐக்கிய ராஜியத்தின் நாடுகளில் ஒன்றாக ஸ்கொடலாந்து இணைந்த போது ஸ்கொட்லாந்தில் நெருப்பெரிந்தது, மக்கள் மத்தியில் எதிர்ப்பும் வன்முறைகளும் வெடித்தன.

எதிர்வரும் 18ம் திகதி ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதா இல்லையா என்ற சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பிரிந்து செல்லவேண்டும் என்பதற்கான ஆதரவு அதிகரித்துச் செல்ல இங்கிலாந்திலும் ஏனைய பகுதிகளிலும் பதற்றம் நிலவ ஆரம்பித்துள்ளது.

ஸ்கொட்லாந்து தேசியம் தனியாகப் பிரிந்து செல்கின்ற அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளதாலேயே பிரிவினையைப் பெரும்பாலானவர்கள் ஆதரிக்கும் நிலை தோன்றியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

தேசியம் என்பது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை உடைத்துக்கொண்டு முதலாளித்துவம் முகிழ்ச்சி பெறுவதற்கான காலகட்டத்திற்குரிய குறிப்பான தத்துவம். முதலாளித்துவத்தின் தோற்றத்துடனேயே தேசங்கள் உருவாகின்றன.

இலங்கை போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தைப் பேணும் சமூக அமைப்பிற்கு எதிராக மக்கள் போராட விழைகின்ற போதும் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடத் தலைப்படுகின்ற போதும் தேசியம் தேசம் என்ற கோட்பாடுகள் தோன்றுகின்றன. ஸ்கொட்லாந்தைப் பொறுத்தவரை பிரிவினை என்பது தேசிய உணர்வின் அடிப்படையில் தோன்றியது என்பதை விட இன்றைய நவ- தாரளவாதப் பொருளாதாரத்தின் தோல்வியை தேசியமாக அல்லது அது சார்ந்த அடையாளமாக ஸ்கொட்லாந்து அரசியல்வாதிகள் முன்வைக்கிறார்கள்.

பிரிவினைக்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் அண்ணளவாக ஐம்பதிற்கு ஐம்பது என்ற அளவில் கருத்துக்கணிப்புக்களைப் பெற்றுள்ளனர். பிரித்தானியாவின் எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சிகளும் பிரிவினைக்கு எதிரான இருபத்து நாங்கு மணி நேரப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. பிபிசி ஊடகம் பிரிவினைக்கு எதிரான உளவியல் யுத்ததை நடத்துவதாக அதன் அலுவலகத்தின் முன்னால் இன்று ஆர்ப்பட்டம் ஒன்று நடைபெற்றது.

ஸ்கொடலாந்து பிரிவினைக்கான ஆதரவு வெற்றிபெறும் அளவிற்குப் பெருகும் என்பதை பிரதமர் கமரனோ அன்றி பிரித்தானிய அதிகாரவர்க்கமோ எதிர்பார்த்திருக்கவில்லை. இவ்வளவு காலமும் மௌனமாயிருந்த கமரன் வெற்றியை நோக்கி கருத்துக்கணிப்புக்கள் வெளியான வேளையில் புதிய கவர்ச்சிகரமான திட்டங்களுடன் முன்வருகிறார்.

ஒரு குடும்பத்தின் உறுப்பினர் பிரிந்து செல்ல முற்படும் போது ஏற்படும் வலியை போன்று இதயம் உடைந்து பேசுகிறேன் என்று கமரன் உணர்ச்சிவயப்படுகின்றார்.

ஒன்றிணைதலின் சிறப்பு என்ற தலையங்கத்தில் நடைபெறும் பிரிவினைக்கு எதிரான பிரச்சாரத்தில் லண்டனைத் தலமையகமாகக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்துள்ளன.

இவர்கள் பிரிவினைக்கு எதிரான பிரச்சாரம் ஸ்கொட்லாந்து மக்கள் மத்தியில் எதிர்மறையான மாற்றத்தையே தோற்றுவித்துள்ளது. இணைந்திருங்கள் என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கணப்பொழுதும் பிரிந்து செல்வதற்கான ஆதரவு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

பிரிவினைக்கு எதிரான இறுதி ஆயுதமாக பல்தேசியப் வியாபார நிறுவனங்கள் ஸ்கொடலாந்து மக்களை மிரட்ட ஆரம்பித்துள்ளன. ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லுமானால் ரோயல் பாங் ஒப் ஸ்கொட்லாண்ட் தனது தலைமையகத்தை லண்டனுக்கு மாற்றிவிடப்போவதாகக் கூறுகிறது.

பிரிவினையின் எதிர்விளைவைப் புரிந்துகொள்வதற்கு அரசியல்வாதிகளும் மக்களும் தவறிவிட்டனர் என்று எச்சரிக்கிறார் டொச் பாங் பொருளியலாளர் டேவிட போல்கேர்ஸ் லன்டோ.ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லுமானால் 1930 ஆம் ஆண்டிற்கு இணையான உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.டொச் பாங் இன் மற்றொரு பொருளியலாளர் பிலால் ஹபீப், பிரிந்து சென்றால் ஸ்கொட்லாந்தின் பொருளாதாரம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும் பிரித்தானியா முழுவதையும் இது பாதிக்கும் என்று கூறுகிறார்.

மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர், பி அன்ட் கியூ மற்றும் ரிம்சன்ஸ் ஆகிய பல்தேசிய வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களும் தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லுமானால் விலைகள் அதிகரிக்கும் என மக்களை அச்சத்திற்கு உள்ளாக முற்படுகின்றனர். லோயிட்ஸ் வங்கி ஸ்கொட்லாந்தை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்துள்ளது.

பொதுவாக அனைத்து பல்தேசிய வியாபார நிறுவனங்களும் வங்கிகளும் பிரிவினையை எதிர்க்கும் நிலையில் சிறு வியாபாரிகளும். சிறிய அளவில் காணப்படும் தேசிய உற்பத்தியோடு தொடர்புடைய முதலீட்டாளர்களும் பிரிவினையை ஆதரிக்கின்றனர்.

பல்தேசிய வியாபார ஊடகங்கள் ஸ்கொட்லாந்து பிரிவினை தொடர்பான தகவல்களை இருட்டடிப்புச் செய்கின்றன. அலையாக எழுந்துள்ள பிரிவினைக்கான ஆதரவை மறைத்து தமது சொந்த விருப்புக்களைத் தகவல்களாக வெளியிடுகின்றன.

பல்தேசிய வியாபார நிறுவனங்களதும், வங்கிப் பொரு முதலைகளதும் மிரட்டலுக்கு எதிரான மக்கள் போராட்டமாக பிரிவினைக் கோரிக்கை மாறிவிட்டதால் இதற்கு இடது சாரி சாயம் பூசப்படுகின்றது. ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் தாம் இடதுசாரி தேசியவாகிகள் என்கிறார். சோசலிசக் கட்சியோடு கூட்டுவைத்திருக்கிறோம் மக்கள் நலனே தமது குறிக்கொள் என்கிறார்.

ஸ்கொட்லாந்தில் மட்டுமன்றி பிரித்தானியா முழுவதிலும் மக்கள் முதலாளித்துவ நெருக்கடியின் பலிகடாக்களாக்கப்பட்டுள்ளனர்.பல்தேசிய வியாபாரிகளின் கொள்ளை மக்களின் வாழ்க்கைத் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கடனாளிச் சமூகம் ஒன்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்கள் நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்கே வழி தெரியாது விழிக்கின்றனர்.

அதிகரிக்கும் வேலப்பழு, குறைவடையும் ஊதியம், பொருட்களின் விலையேற்றம் என்று மக்கள் முதலாளித்துவக் கொள்ளைக்காரர்களின் பிடியில் நசுங்கிச் செத்துப்போகிறார்கள்.

இதே நிலை தான் ஸ்கொட்லாந்திலும் காணப்படுகின்றது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான புதிய திட்டங்களை முன்வைப்போம் என்கிறார்கள் பிரிவினைக் கட்சிகள்.

முதலாளித்து நெருக்கடி தேசியமாக மாற்றப்பட்டு ஸ்கொட்லாந்து மக்களுக்குத் தற்காலிக தன்நம்பிக்கையை வழங்கியிருக்கிறது. இதற்கு எதிரான முழக்கங்களிலிருந்தே பிரிவினைக்கான குரல் எழுவதால் அது இடது சாரித் தன்மை பெற்றதான தோற்றப்பாட்டைத் தருகின்றது.

ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் சல்மண்டோ அன்றி அவரது தேசிய வாதக் கட்சியோ இடதுசாரிகள் அல்ல. இடதுசாரிகள் என்று தம்மை அறிவித்துக்கொள்ளும் கட்சிகள் கூடப் போலியானவர்களே. இந்த நிலையில் ஸ்கொட்லாந்து பிரிவடைந்தாலும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மீள உள் நுளைவதும், ஸ்கொட்லாந்து மக்களின் வாழ்வை ஆக்கிரமித்துக் கொள்வதும் தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிடும்.

பிரித்தானியாவில் ஓரளவாவது உற்பத்தி நடைபெறும் நாடாக ஸ்கொட்லாந்து காணப்படுகிறது. விஸ்கி, உலர் உணவு, விவசாயம் போன்றவற்றோடு எண்ணை, எரிவாயு போன்ற வளங்களையும் ஸ்கொட்லாந்து கொண்டுள்ளது. இவை அனைத்தையும் ஸ்கொட்லாந்து மக்களுக்காகப் பயன்படுத்தப்போவதாக பிரிவினை கோரும் கட்சிகள் கூறுகின்றன. இவை தேசியச் சாயலை வாழங்கினாலும், ஏற்கனவே பல்தேசியக் கொள்ளையர்களின் பிடியிலிருக்கும் தேசிய உற்பத்தியை மீட்பதற்கான எந்தத் திட்டத்தையும் முன்வைக்க இயலாத நிலையிலேயே ஸ்கொட்லாந்து அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. இடது சாரி அரசியல் என்பது பழைமைவாதத்தை தேசியமாக்கு மீள வழங்குவதல்ல. சமூகத்தின் முழு உற்பத்தி முறையும் மாற்றமடைதல் என்பதிலிருந்தே அது ஆரம்பமாகும். அவ்வாறான எந்தத் திட்டங்களும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

பல்தேசிய் வியாபார நிறுவனங்களின் பொருளாதாரக் கொள்ளையை எதிர்கொள்ள வேண்டுமானால் ஸ்கொட்லாந்து மக்கள் சமூகப் புரட்சி ஒன்றை நடத்துவதே இறுதித் தீர்வாக அமைய முடியும். முதலாளித்துவ நெருக்கடியிலிருந்தும், பிரித்தானியா என்ற கிழட்டு ஏகாதிபத்தியத்திடமிருந்தும் விடுதலையடவதற்கான தற்காலிக தீர்வாக ஸ்கொட்லாந்து மக்கள் கருதினாலும் அது இறுதித்தீர்வல்ல என்பதை விரைவிலேயே உணர்ந்துகொள்வார்கள். எது எவ்வாறாயினும் பிரித்தானிய ஆளும்வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் பலவீனப்படுத்தும் ஸ்கொட்லாந்துப் பிரிவினை உலகின் ஒடுக்கப்படும் மக்களுக்கு சார்பானதே.

http://inioru.com/?p=41986

Link to comment
Share on other sites

நல்லதொரு ஒருங்கிணைப்பான கட்டுரை...

மிக முக்கிய விடயங்களாக மருத்துவமும் உயர்கல்வியும் ஸ்கொட் லாண்டில் இலவசமாக கிடைப்பவை.. பிரித்தானியாவில் இவை இரண்டுமே மிகவும் செலவீனமான விடயங்கள்...

இங்கிலாந்தில் பல்கலைக்களகத்துக்கான கட்டஙங்களாக குறைந்தது 35,000 பவுண்டுகள் முதல் அறவிடப்படுகிறது.. அதோடு மருத்துவ செலவுகளும் மிகவும் அதிகம்...

பிரிந்து போனபின்னர் இவைகளுக்கு மக்கள் கிடைக்க நிறைய செலவளிக்க வேண்டி இருக்கும் என்பது NO vote காறர்களின் முக்கிய பிரச்சாரமாக இருந்தது...

Link to comment
Share on other sites

வாக்கெடுப்பில் தனி நாட்டிற்கான வாய்ப்பினை இழந்த ஸ்காட் இன மக்கள். தேசிய இன மக்களும் அடக்கியாளும் அரசுகளும் கற்க வேண்டிய பாடங்கள் !

300x202xscot-referumdum-300x202.jpg.page

ஸ்காட்லாந்து செல்லும் வரை நான் ஐக்கிய அரசாங்கத்தில் உள்ள எல்லா நாடுகளும் ஒரே பண்பாடு, ஒரே மொழி கொண்ட தேசங்கள் தான் என்று எண்ணியிருந்தேன். இங்கிலாந்து மக்களும் வெள்ளையின மக்கள் தான் ஸ்காட்லாந்து மக்களும் வெள்ளையின மக்கள் தான். இவர்கள் இருவருக்குள் என்ன பெரிய வேறுபாடுகள் இருக்கப் போகிறது என்று எண்ணியிருந்த எனக்கு ஸ்காட்லாந்து சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் தனித்துவமான இனம். அவர்களுக்கான மொழி, உணவுப் பழக்கங்கள், பாரம்பரிய உடைகள், குடும்ப வாழ்க்கை முறைகள் என எல்லா வகையிலும் இங்கிலாந்து மக்களிடம் இருந்து வேறுபடுகின்றனர் ஸ்காட் இன மக்கள். ஐக்கிய அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் ஸ்காட்லாந்து மக்களுக்கான தனி பாராளுமன்றம் அவர்களுக்கு உள்ளது. இங்கிலாந்து நாணயத்தில் இருந்து வேறுபட்ட நாணயம் ஸ்காட்லாந்துக்கு உள்ளது. ‘பவுண்ட்ஸ்’ என்று பொதுவாக சொன்னாலும் ஸ்காட்டிஷ் பவுண்ட்ஸ் என்பது இங்கிலாந்து பவுண்ட்ஸ் போல இருக்காது. நாணயங்களில் கூட அவர்களுக்கான உரிமை இருக்கிறது.

 

மேலும் ஸ்காட்லாண்டு நாட்டிற்கு தனி குடிவரவு சட்டம் உள்ளது. ஐக்கிய அரசாங்கம் பொதுவான நுழைவு சீட்டை கொடுத்தாலும் ஸ்காட்லாண்டு நாட்டின் குடிவரவு சட்டங்கள் இங்கிலாந்தில் இருந்து வேறுபடும். அப்படி ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட நாடாகவே ஸ்காட்லாந்து இன்று வரை விளங்கி வருகிறது. எனினும் ஸ்காட்லாந்து மக்கள் தங்களை ஆங்கிலேயே மக்களிடம் இருந்து வேறுபட்டு நிற்கவே ஆசைப் படுகின்றனர். தங்களை பெருமைமிக்க ‘ஸ்காட்’ என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகின்றனர். ஸ்காட்லாந்து முழுமையாக ஐக்கிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தனி நாடாக உருவாக வரலாற்றில் ஒரு சிறப்பான வாய்ப்பு அமைந்தது, அது தான் ஸ்காட்லாந்து மக்களிடம் எடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பு. இந்த வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து பிரிந்து போக வேண்டும் என்று 45 % மக்களும், பிரிய வேண்டாம் என்று 55 % மக்களும் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் ஸ்காட்லாந்து தனிநாடாக உருவெடுக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்புக்கு பின்னர் இங்கிலாந்து பிரதமர் ஸ்காட்லாந்து மக்களுக்கு கூடுதல் அதிகாரமும், ஸ்காட்லாந்து அரசுக்கு கூடுதல் தன்னாட்சியும் வழங்கவேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். இது 45 % மக்கள் ஸ்காட்லாந்து தனி நாடாக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு கிடைத்த பரிசாகும். தனி நாட்டிற்கு ஆதரவாக வாக்களித்த மக்களும் இப்போது ஏமாற்றம் அடையவில்லை. அவர்களுக்கான , அவர்களது பண்பாட்டை, உரிமைகளை தக்க வைக்கக் கூடிய அதிகாரம் இப்போது அவர்களுக்கு கிடைக்க உள்ளன. ஐக்கிய அரசாங்கம் இன்னும் சிறப்பான கூட்டாச்சியை நோக்கி நகரும் எனத் தெரிகிறது. ஸ்காட்லாந்தில் குவிந்து வரும் வெளிநாட்டினரை கட்டுப்படுத்த புதிய கொள்கைகள் உருவாக்கப்படும். இங்கிலாந்து தற்போது உருவாக்கியுள்ள கடுமையான குடிவரவு சட்டங்கள் மேலும் வலுவடையும் என்றே தெரிகிறது. இதன் மூலம் ஸ்காட்லாந்து மக்களின் மொழி, மண், இன உரிமைகள் மேலும் பாதுகாக்கப்படும்.

 

இதிலிருந்து இந்தியா, இலங்கை, சீனா போன்ற கிழக்கு நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன ?

தேசிய இனங்களை அடிக்கி ஆளும் இந்தியா, இலங்கை, சீனா போன்ற நாடுகள், ஐக்கிய அரசாங்கம் எப்படி ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி அதிகாரம் கொடுத்துள்ளதோ அதே போல தன்னாட்சி அதிகாரத்தை தேசிய இனங்களுக்கு வழங்க முன்வர வேண்டும். ஒற்றை மொழி, ஒற்றை இனம், ஒற்றை பண்பாடு போன்ற மனித குல விரோதமான கொள்கைகளை இந்த அரசுகள் கைவிட வேண்டும். குறிப்பாக இந்தியா, அனைத்து மாநிலத்திற்கும் முழுமையான தன்னாட்சி உரிமைகளை வழங்கி பாராளுமன்றத்திற்கு இணையான அதிகாரத்தை மாநில சட்டமன்றங்களுக்கும் கொடுக்க வேண்டும். ராணுவம் உள்ளிட்ட சில முக்கியமான துறைகளை மட்டுமே நடுவண் அரசின் கீழ் வைத்துக் கொண்டு மற்ற அனைத்து துறைகளையும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவருதல் வேண்டும்.

 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான மொழிக் கொள்கை , கல்விக் கொள்கை, குடிவரவுக் கொள்கைகள அந்தந்த மாநிலங்களே தீர்மானிக்க அனுமதி அளிக்க வேண்டும். இதில் நடுவண் அரசும் தலையிடக் கூடாது. எங்கோ டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றும் நடவடிக்கையில் நடுவண் அரசு ஈடுபடக்கூடாது. தேசிய இன உரிமைகளில் டெல்லி அரசு தலையிடக் கூடாது. தமிழகத்தின் சட்ட திட்டங்களை, உரிமைகளை நடுவண் அரசும், டெல்லி ஊடங்கங்களும் மதிக்க வேண்டும்.

 

என்றாவது ஒரு நாள் தேசிய இனங்கள் தாங்கள் தனிநாடாக பிரிந்து போக வேண்டும் என்று எண்ணினால் பிரிந்து போவதற்கான உரிமையை நடுவண் அரசு வழங்க வேண்டும். பொது வாக்கெடுப்பு மூலமாக நடுவண் அரசு அதற்கு உதவ வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மட்டுமன்றி , இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இப்போது இருக்கும் ஈழ தேசத்திற்கும் பொது வாக்கெடுப்பு முறையில் ஈழ நாட்டு கோரிக்கையை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். ஈழத் தமிழர்களிடைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தியாவில் அடிமைப் பட்டிருக்கும் வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், தமிழகம் போன்ற தேசங்களிலும் பொதுவாக்கெடுப்பு நடத்த நடுவண் அரசு உதவ வேண்டும்.

 

தேசிய இன அரசியல் உரிமைகளை நடுவண் அரசுகளிடம் இருந்து முழுமையாக மீட்க மாநில அரசுகள் அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும். மக்களும் போராட வேண்டும். அப்போது தான் உண்மையான கூட்டாச்சி முறை இந்தியாவில் மலரும். இலங்கையிலும் ஈழ தேசம் உருவாகி தமிழின மக்கள் உரிமைகளுடன் வாழமுடியும்.

 

 http://newsalai.com/?p=27642#sthash.eM0bGezT.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.