Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2014]


Recommended Posts

சுற்றுலா நுழைவிசைவில் வந்த ராதிகாவை நாடுகடத்த சிறிலங்கா தயக்கம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டல் கருத்துக்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருவதால் சில கருத்துக்கள் நீக்கப்பட்டு திரி பூட்டப்படுகின்றது.

ஆக்கபூர்வமான விமர்சனங்களை விடுத்து சீண்டல் கருத்துக்களை தொடர்ச்சியாக வைப்பவர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply

இந்திய துணைத்தூதர் தேவயானி பற்றிய நம்பகத்தன்மை இல்லாத காணொளி இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. பரபரப்புக்காக நம்பகத்தன்மையற்ற பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

மீண்டும் இணைக்கப்பட்ட இந்திய துணைத்தூதர் தேவயானி பற்றிய நம்பகத்தன்மை இல்லாத காணொளி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஊர்ப்புதினத்தில் UN finds cluster bombs in Sri Lanka எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. இச்செய்தி 2012 இல் வெளிவந்த பழைய செய்தி.

 

மேலும் ஆங்கிலத்தில் உள்ள பதிவுகள் யாழ் திரைகடலோடி பகுதியில் இணைக்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

நான் என்ன செய்ய எனும் திரியில் ரதியால் எழுதப்பட்ட கருத்து ஒன்று அங்கிருந்து நகர்த்தப்பட்டு புதுத் திரியாக நாற்சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பிஞ்சிலை பழுத்தது எனும் திரியில் இருந்து பல சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறவுகள் தலைப்புக்கு சம்பந்தமான ஆரோக்கியமான கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

இரு மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை: யாழில் சம்பவம் எனும் திரியில் தலைப்பின் திசையைத் திருப்பும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறவுகள் தலைப்பை ஒட்டிக் கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

கள உறவின் மின்னஞ்சலை திருடியது யார் ? எனும் திரி பல தவறான ஊகங்களை உருவாக்குவதால் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பிரேம்கோபால் மற்றும் அவர் மனைவி ஆடிய நடனம் எனும் திரியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

பிரபாகரனுக்கும் எனக்கும் இடையில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதில்லை – 'தி இந்து'வுக்கு இரா.சம்பந்தன் செவ்வி எனும் திரியில் பண்பற்ற சொல்லாடலைக் கொண்ட சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

தனிப்பட்ட நபர்களின் Facebook இல் பதியப்பட்ட கருத்துகளை யாழில் அவர்களது சம்மதம் இல்லாமல் பதிவதை தவிர்க்கவும். அவ்வாறு பதிந்த ஒரு கருத்து நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

தனிப்பட்ட நபர்களின் Facebook இல் உள்ள விடயங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைப்பு ஒன்று நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

'யாழில் நேபாள இராணுவத் தளபதி...' என்ற தலைப்பிலிருந்து சில அநாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

புலிகளின் முன்னாள் போராளிகளை கிளிநொச்சியில் இரகசியமாகச் சந்தித்த ஸ்டீபன் ராப்! – ஏற்பாடு செய்த ஐஓஎம் மீது பாய்கிறது அரசாங்கம் எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்' என்ற தலைப்பில் ஒருமையில் விளித்து எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

சைவமதத்தவரும் கிறிஸ்த்தவரும் திருமணம் செய்யும் போது எனும் திரி அகற்றப்படுகின்றது,

 

நன்றி

Link to comment
Share on other sites

தமிழ் பாடசாலையில் மதுபான அனுமதி திரியில் பார்வை இழந்தவர்களை அவமதிக்கும் விதமாக உவமானங்களுடன் எழுதப்பட்ட கருத்துகள் நீக்கப்பட்டன.

 

மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் எந்தக் கருத்துகளும் அனுமதிக்கப்பட மாட்டாது.

Link to comment
Share on other sites

போதியளவுக்கு விவாதித்தமையாலும், எமக்கிடையே மேலும் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் நீண்டு செல்கின்றமையாலும் இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம் எனும் திரி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

முற்றிலும் சீண்டும் விதமாகவும்,  குறிப்பிட்ட மதத்தினை அவதூறு செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட திரி ஒன்று அகற்றப்படுகின்றது.

 

உலகில் விமர்சனங்களுக்கு அப்பால்பட்டு எதுவும் இல்லை. எந்த மதத்தினையும் விமர்சிப்பதற்கு யாழில் அனுமதி உண்டு. அது இந்து சமயம் மீதான விமர்சனமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மீதான விமர்சனமாக இருந்தாலும் சரி. ஆனால் அந்த விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாகவும், ஆரோக்கியமானதாகவும்,  வெவ்வேறு மதங்களை பின்பற்றுவர்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தா வண்ணமும் இருத்தல் வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்க.

 

நன்றி.

Link to comment
Share on other sites

குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர் எனும் திரியில் வெவ்வேறு மதங்களை பின்பற்றுபவர்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்த முனையும் வகையில் கருத்தாடல் நகர்வதால் திரி பூட்டப்படுகின்றது.
 

Link to comment
Share on other sites

'நெடுந்தீவில் நட்சத்திர விடுதியினை அமைக்க மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ களமிறங்கியுள்ளார்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. அனாவசியமாக சக உறுப்பினரை ஒரு திரிக்குள் இழுத்துக் கருத்து எழுதுவதைத் தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முதலிரவில் 21 முறை உறவு வைத்த மணமகன் – மனைவி தப்பி ஓட்டம்! எனும் திரியில் ஆபாசமான கருத்து ஒன்றும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

 

யாழ் களம் அப்பட்டமாகப் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் கருத்துக்களுக்கான இடம் அல்ல என்பதை கள உறவுகளுக்கு நினைவூட்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

'வேண்டும் என்றால் கூறுங்கள்' என்ற தலைப்பு வீணான பிரச்சனையை உருவாக்குவதால் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

தீபச்செல்வன் மீது எறியப்படும் துரோகக்கற்கள் எனும் திரியில் தனிப்பட்ட முகப்புத்தக உரையாடல்கள் இணைக்கப்படுவதாலும் ஆக்கபூர்வமற்ற வெறும் குற்றச்சாட்டான கருத்துக்கள் நீள்வதாலும் திரி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

கள விதி:

 

4. நிரந்தரத் தடை தவிர்ந்த ஏனைய நடவடிக்கையை ஒருவர் மீது எடுக்கப்படும் போது அவருக்கு ஆதரவாக திரி திறக்கப்படுவது அனுமதிக்கப்பட மாட்டாது. இதே போன்று ஒருவர் நிர்வாகத்தின் நடவடிக்கை மீது கோபம் கொண்டு நிரந்தரமாக விலகுகின்றேன் என விலகினால், அவரை மீண்டும் கருத்துக்களத்துக்கு வரச் சொல்லி திறக்கப்படும் திரிகளும் அனுமதிக்கப்பட மாட்டாது.
 
 
இந்த விதிக்கு அமைய தற்காலிக தடை விதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆதரவளிக்கும் முகமாக திறக்கப்பட்ட திரி பூட்டப்பட்டு நீக்கப்படுகின்றது.
 
--------------
 
தனிநபர் தாக்குதல், 'நாயே' என்பதைப் போன்ற மோசமான சொற்களால் சக உறுப்பினரை விமர்சித்தல், யாழ் கள உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக கீழ்த்தரமாக விமர்சித்தல்,  தகாத சொற்களை பிரயோகித்தல் போன்றவை எக்காரணம் கொண்டும் பொறுத்துக் கொள்ள முடியாதவை. இவற்றை எவர் செய்யினும் அவரது அரசியல், கொள்கை, அவரது பங்களிப்பு என்பன பற்றிக் கருத்தில் கொள்ளாது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
 
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.