Jump to content

மன்னார் கூராய் கிராம மக்களின் அவலமும் சிங்களவரின் அத்துமீறலும்


Recommended Posts

mannar-kuray.jpg

 

மன்னார் கூராய்கிராமத்தில் தென்பகுதியை சேர்ந்த சிங்களவர் ஒருவர் அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்தி போலி அனுமதிப்பத்திரத்தை தயார் செய்து மண் அகழ்வில் ஈடுபட்டு வருகிறார் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

குருணாகலை சேர்ந்த யூட் மாக்கஸ் பேனாண்டே என்ற சிங்களவரே என்பவரே சட்டவிரோதமாகவும் பலவந்தமாகவும் மண்அகழ்வில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. கூராய் கிராமத்தில் ம.சண்முகராசா, சி.புவனேஸ்வரன் ஆகியோருக்கு வயல் காணிகள் முறையே எல்.டி.ஓ 60, எல்.டி.ஓ 56 இலக்க வயல்காளுக்கான அனுமதிபத்தரம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தென்பகுதியை சேர்ந்த இந்த சிங்கள நபர் தன்னிச்சையாக அரசியல்வாதிகளின் செல்வாக்கினை பயன்படுத்தி கூராய் மக்களுக்கு சொந்தமான காணியில் வேறுஇடங்களில் அகழ்வு செய்யப்படும் மண்களை கொண்டு வந்து நிரப்பி வைத்து தென்னிலங்கைக்கு எடுத்து செல்கிறார்.

இது தொடர்பாக கடந்த 09.10.2013ம் ஆண்டு பாதிக்கப்பட்ட நபர்களினால் வழங்கப்பட்ட கடிதத்தினை அப்போதைய கிராம சேவகர் உறுதிபடுத்தி இக் கிராமத்தை சேர்ந்த இருவருக்கு வயல் காணிக்கான அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுள்ளது என உறுதிபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் மன்னார் பிரஜைகள் குழு அம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய அக் கிராமத்திற்கு கடந்த புதன்கிழமை 16.04.2014 சென்றிருந்தது. இதனை அடுத்து அக்கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் மாவவட்ட செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைப்பதற்கு அக் கிராம மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகள் பின்வரமாறு.

1 கோடைற் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் முற்று பெறாமை

2 கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு மண் அகழ்விற்கான அனுமதிபத்திரம் உள்ள போதும் அதனை பயன்படுத்தமுடியாமை

3 அரசியல் செல்வாக்கை பயன்னடுத்தி குருநாகலில்லிருந்து இங்குவந்தள்ள சிங்களவர் ஒருவர் கிராமத்திற்குட்பட்ட ஆற்றுப்பகுதியில் இக் கிராம மக்களை அண் அகழவிடாமல் தான் அவற்றினை அகழ்ந்து லாபம் அடைதல்

4 இவ் மண் அகழ்வினால் இக் கிராமத்தின் பாரம்பரிய தொழிலாகிய மேட்டுநில பயிர்செய்கை நிலம் உவர் நீராக மாறிவருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமைநிலைக்கு தள்ளப்பட்டு வருகிறமை

5 தென்பகுதியை சேர்ந்த சிங்கள நபர் இக் கிராமத்தில் வசிக்கும் நபருடைய சொந்தகாணியில் மண்களை பலவந்தமாக சேகரித்து வைப்பதினால் சொந்த காணிகாரர் அவரது காணியினை பாவிக்கமுடியாமலுள்ளமை. அது தொடர்பாக கடந்த இரண்டு வருடங்களாக கவல்துறையினரின் கவனத்திற்கு இதை கொண்டுவந்த போதிலும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படாமை.

6 30 குடும்பங்களை கொண்ட கிராமத்தில் 11 குடும்பங்களுக்கே சமூர்த்தி நிவாரணம் கிடைக்கின்றமை எனினும் எனைய குடும்பங்ளுக்கும் சமூர்த்தி நிவரணத்தினை பெற்றுத்தர வழியமைத்து கொடுக்க வேண்டும் என குறித்த 6 கோரிக்கைகளை முன்வைத்தள்ளனர்.

இதேவேளை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூராய் கிராமத்தில் மீள்குடியோற்றப்பட்டுள்ள மக்கள் பல்வேறு நடமுறை சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். யுத்த நிறைவின் பின் 2010ம் ஆண்டு பின்னரான காலப்பகுதியில் 30 குடும்பங்களை கொண்ட 115 நபர்கள் மீள்குடியோற்றப்பட்டு பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இது வரையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாரத்தினை உயர்த்துவதற்கோ அல்லது அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இம் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி, பாதைகள், போக்குவரத்து, சுகாதாரம், வீட்டத்திட்டங்கள் என்பன கோள்விகுறியாகவே அமைந்தள்ளது

குறிப்பாக வீட்டத்திட்டத்தை எடுத்துக்கொண்டால் 26 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் கடந்த 2011ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இவ் வீட்டுத்திட்டத்தினை கோடைற் நிறுவனம் வழங்கியுள்ளப்போதிலும் வீடுகள் சரியான முறையில் நிர்மாணித்து கொடுக்கவில்லை. வீடுகள் அரைகுறையாக காணப்படுகிறது.  இம் 30 குடும்பங்களில் சுமார் 11 குடும்;பங்களோ சமூர்த்தி திட்டத்தின் கீழ் உதவி பெறுகின்றனர்.

குறித்த கிராமத்தில் 26 மாணவர்கள் உள்ளனர் இவர்களில் 7 மாணவர்கள் பல மைல்கள் தூரம் சுவிச்சக்கரவண்டியில் தமது கல்வியினை தொடர்ந்து வருகின்றனர். இம் மாணவர்களில் பலர் இக் கிராமத்திலிருந்து பலமைல்கள் சென்று கல்வி பயில்வதில் உள்ள பிரச்சினையினை அடுத்து வெளியிடங்களுக்கு இடம் பெயர்ந்து கல்வியினை பல அசவுகரியங்களுக்க மத்தியில் கற்றுவருகின்றனர்.

இவ்வாறாக பல சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் வாழ்ந்துவந்தாலும் இவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகள் தொடர்பில் போராடக்கூடிய அற்றல்கள் இல்லாதவர்களாக காணப்படுகிறது   இம்மக்கள் குறிப்பாக தமது உரிமைகள் தொடர்பாக வெளிப்படத்துவதற்கு முடியாதவர்களாக பயஉணர்வுடன் காணப்படுகின்றனர்.

இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக வெளியில் தெரிவித்தால் கிடைக்கும் உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற பய உணர்வில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  குறிப்பாக கடந்த வடமாகாண தேர்தலின் போது இக் கிராமத்திற்கு சென்ற பல கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை இவர்களுக்கு கொடுத்திருந்தாலும் தேர்தலுக்கு பின் அப்பகுதிக்கு இன்றுவரை சென்று பார்க்கவில்லை என இம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

http://www.thinakkathir.com/?p=57912

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.