Jump to content

தென்னாபிரிக்க விஜயம் ஆக்கபூர்வம் : விசேட பிரதிநிதி விரைவில் வருகின்றார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தென்­னா­பி­ரிக்க விஜயம் ஆக்­க­பூர்­வ­மாக அமைந்துள்ளது. இலங்­கையில் இடம்­பெற்ற கரு­மங்கள் மற்றும் யுத்த காலத்­திற்கு பின்னர் வட­கி­ழக்கில் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் இரா­ணுவக் கெடு­பி­டிகள், இன­வி­கி­தா­சா­ரத்தை மாற்றும் செயற்­பா­டுகள் நல்­லி­ணக்கம் தொடர்­பி­லான அர­சாங்­கத்தின் பொறுப்­புக்­கூறல் உள்­ளிட்ட முக்­கிய பல விட­யங்­களை உயர் மட்ட அதி­கா­ரி­க­ளுடன் இடம்­பெற்ற சந்­திப்­புக்­களின் போது நாம் தெளி­வாக எடுத்துக் கூறி­யுள்ளோம். அத்­துடன் தென்­னா­பி­ரிக்க அரசில் இலங்கை விவ­கா­ரங்­களை கையாளும் விசேட பிர­தி­நிதி சிறில் ராம­போஷா உள்­ள­டங்­கிய உயர்­மட்ட குழு­வினர் வெகு­வி­ரைவில் இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்­ளனர் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.
R.-Sampanthan_4.jpg
 
கடந்த ஒன்­பதாம் திகதி தென்­னா­பி­ரிக்­கா­விற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான குழு­வினர் அங்கு தென்­னா­பி­ரிக்­காவில் ஆளும் தேசிய காங்­கி­ரஸின் பல்­வே­றுப்­பட்ட உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி கடந்த ஞாயி­றன்று நாடு திரும்­பி­யி­ருந்­தனர்.
 
இந்­நி­லையில் தென்­னா­பி­ரிக்க விஜயம் தொடர்­பாக கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கூறு­கையில் :-
 
இலங்­கையில் நடை­பெற்ற பொது­ந­ல­வாய மாநாட்டின் போது இங்கு வருகைத் தந்­தி­ருந்த தென்­னா­பி­ரிக்க ஜனா­தி­பதி ஜெயகப் சூமா இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு குறித்து எம்­முடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக தென்­னா­பி­ரிக்­கா­விற்கு வருகை தரு­மாறு அழைப்பு விடுத்­தி­ருந்தார். இருந்­த­போதும் ஜெனீவா கூட்­டத்­தொ­டரின் பின்னர் எமது தென்­னா­பி­ரிக்க விஜயம் தொடர்­பாக இறுதி முடி­வெ­டுப்­ப­தற்­காக நாம் தீர்­மா­னித்­தி­ருந்த நிலையில் மீண்டும் தென்­னா­பி­ரிக்­கா­விற்கு வருகை தரு­மாறு எமக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.
அதன் பிர­காரம் அங்கு சென்­றி­ருந்த நாம் ஆளும் தேசிய காங்­கி­ரஸின் பல உயர் மட்ட அதி­கா­ரிகள் குழு­வி­ன­ருடன் சந்­திப்­புக்­களை நடத்­தி­யி­ருந்தோம்.
 
குறிப்­பாக தென்­னா­பி­ரிக்­காவின் வெளி­வி­வ­கார அமைச்சர் ஆசிய விவ­கா­ரங்­களை கையாளும் பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் உள்­ளிட்ட குழு­வி­ன­ரையும் சந்­தித்­தி­ருந்தோம். மேலும் தென்­னா­பி­ரிக்க ஜனா­தி­ப­தியால் இலங்கை விவ­கா­ரங்­களை கையாள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சிறில் ராம­போ­ஷா­வினை சந்­தித்து நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தோம். சிறில் ராம­போ­ஷா­வினை பொறுத்­த­வ­ரையில் தற்­போது அவர் இலங்கை விவ­கா­ரங்­களை கையாள்­வ­தற்­காக ஜனா­தி­பதி ஜேக்கப் சூமா­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தோடு எதிர்­வரும் தென்­னா­பி­ரிக்க உப ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ளார்.
 
பெரும்­பாலும் அப்­ப­த­விக்கு ஆளும் தேசியக் காங்­கி­ரஸின் சார்பில் அவரே தெரி­வா­கு­வ­தற்­கான வாய்ப்­புக்­களே காணப்­ப­டு­கின்­றன. மேலும் கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்கும் வெள்­ளை­யி­னத்­த­வர்­க­ளுக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தை­களின் போது முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டே­லா­வுடன் இணைந்து பணி­யாற்­றி­யுள்ளார். இவர் தலை­மை­யி­லான உயர் மட்­டக்­கு­ழு­வினர் இலங்­கைக்கு வெகு­வி­ரைவில் விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ளது. அதன் பின்னர் அடுத்தக் கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளன.
 
தென்­னா­பி­ரிக்க தரப்­பி­ன­ருடன் ஆக்­க­பூர்­வ­மான முறையில் இடம்­பெற்ற சந்­திப்­புக்­களின் போது நாம் எமது நிலைப்­பாட்டை உறு­தி­யாகத் தெரி­வித்­தி­ருந்தோம். இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வுக் குறித்து தெளி­வாக எடுக்­கூ­றி­ய­தோடு இங்கு நடை­பெற்ற அனைத்து கரு­மங்கள் தொடர்­பா­கவும் கூறினோம். மேலும் யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் வட­கி­ழக்கில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் கெடு­பி­டிகள் இன­வி­கி­தா­சா­ரத்தை மாற்றும் செயற்­பா­டுகள் குறித்தும் அவர்­க­ளி­டத்தில் சுட்­டிக்­காட்­டி­ய­தோடு மீண்டும் அச்­ச­மற்ற நிலைமை வட­கி­ழக்கில் ஏற்­பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான இலங்கை அர­சாங்­கத்தின் பொறுப்பு கூறும் கடப்­பாட்­டையும் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். நாம் குறிப்­பிட்ட அனைத்து விட­யங்கள் தொடர்­பிலும் தென்­னா­பி­ரிக்க தரப்­பினர் உன்­னிப்­பான கவ­னத்தைச் செலுத்­து­யி­ருந்­தனர்.
 
முன்­ன­தாக பொது­ந­ல­வாய மாநாட்­டிற்கு தென்­னா­பி­ரிக்க ஜனா­தி­பதி இலங்­கைக்கு வரு­கைத்­தந்­தி­ருந்த சம­யத்தில் இலங்கை அரச தரப்­பி­னரே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தைகள் இரண்­டாண்­டிற்கும் மேலாக தடைப்­பட்­டி­ருப்­பதைக் சுட்­டிக்­காட்டி அதனை முன்­னெ­டுப்­ப­தற்கு தென்­னா­பி­ரிக்­காவின் உத­வியை நாடி­யி­ருந்­தனர். அதன் பின்­னரே தென்­னா­பி­ரிக்க அரச தரப்பு எம்மை அணு­கி­யி­ருந்­தது. எனவே விரைவில் விஜயம் மேற்­கொள்­ள­வுள்ள தென்­னா­பி­ரிக்க உயர்­மட்டக் குழு­வினர் எமது நிலைப்­பாட்­டினை அர­சாங்­கத்­திற்கு கூறு­வார்கள் என எதிர்­பார்க்­கின்றோம். ஆகவே அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களைப் பொறுத்தே அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கூட்­ட­மைப்­பி­னரால் கவனம் செலுத்­தப்­படும் என்றார்.
 
அர­சாங்­கத்­துடன் பேச்­சுக்­களை ஆரம்­பிப்­ப­தற்கு முன்னர் வடக்குஇ கிழக்குப் பகு­தியில் அச்­ச­மற்ற- இயல்­பான சூழ்­நிலை திரும்ப வேண்டும் என்று தென்­னா­பி­ரிக்கத் தரப்­பிடம் தாம் வலி­யு­றுத்­தி­ய­தாகஇ தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.
 
தென்­னா­பி­ரிக்கா சென்­றி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான உயர்­மட்­டக்­குழு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு திரும்­பி­யுள்ள நிலையில்இ அந்தப் குழுவில் இடம்­பெற்­றி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தமது பயணம் குறித்து கருத்து வெளி­யிட்­டுள்ளார்.
 
ஆபி­ரிக்கத் தேசியக் காங்­கி­ரசின் துணைத் தலைவர் சிறில் ராம­போசா தலை­மை­யி­லான குழு­வினர் இலங்கை வந்து பல்­வேறு தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சுக்­களை நடத்­த­வுள்­ளனர்.
இலங்கை அர­சுக்கும்இ தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யே­யான பேச்­சுக்கள் இரண்டு ஆண்­டு­க­ளுக்கும் மேலாகத் தடைப்­பட்­டுள்ள நிலையில்இ அதை மீள ஆரம்­பிப்­பது குறித்த பேச்­சுக்­களை முன்­னெ­டுக்க தென்­னா­பி­ரிக்கா முன்­வந்­துள்­ளது.
 
ஒரு நடு­நி­லை­யா­ள­ராக இல்லாவிட்டாலும், அனுசரணையாளர் என்ற வகையில் இலங்கை அரசுக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே அவர்கள் செயற்படுவார்கள்.
இலங்கை அரசின் வேண்டுகோளின்படியே அனுசரணையாளர் எனும் பொறுப்பை தென்னாபிரிக்கா ஏற்றுள்ளது. அதை நாங்களும் வரவேற்கிறோம்.
 
பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முன்னர் வடக்கு,கிழக்குப் பகுதியில் மக்களிடையே அச்ச உணர்வற்ற இயல்பான நிலை திரும்ப வேண்டும் என்பதை எமது தரப்பு தென்னாபிரிக்கத் தரப்பிடம் வலியுறுத்தியது.
 
சிறில் ரமபோசா தலைமையிலான குழுவினர் இலங்கை வந்து சென்ற பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த விடயங்கள் தெளிவாகும்.
 
அரசியல் தீர்வுத் திட்டத்தின் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
Link to comment
Share on other sites

ராமபோசா இலங்கை வந்து சிங்களவன் கொடுக்கும் சமபோசாவை சாப்பிட்டிட்டு போவார். ஒன்றுமே நடக்காது. இது ஐய்நா விசாரணைக்காக மஹிந்தவின் கண்துடைப்பு நாடகம். ஆனானப்பட்ட புலிகளுடன் பேசியே ஒன்றும் நடக்கவில்லை. மஹிந்தவும் சம்பந்தரும் ராமபோசாவின் துணையுடன் பேசியா எதுவும் நடக்கபோகுது.  :D  :D  :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமபோசா இலங்கை வந்து சிங்களவன் கொடுக்கும் சமபோசாவை சாப்பிட்டிட்டு போவார். ஒன்றுமே நடக்காது. இது ஐய்நா விசாரணைக்காக மஹிந்தவின் கண்துடைப்பு நாடகம். ஆனானப்பட்ட புலிகளுடன் பேசியே ஒன்றும் நடக்கவில்லை. மஹிந்தவும் சம்பந்தரும் ராமபோசாவின் துணையுடன் பேசியா எதுவும் நடக்கபோகுது.  :D  :D  :lol: 

அதெல்லாம் சரி, சீமான்!

 

சம்பந்தம் ஆரின்ர பக்கம்?  :o

Link to comment
Share on other sites

 

 

seeman

Posted 16 April 2014 - 06:08 AM

ராமபோசா இலங்கை வந்து சிங்களவன் கொடுக்கும் சமபோசாவை சாப்பிட்டிட்டு போவார். ஒன்றுமே நடக்காது. இது ஐய்நா விசாரணைக்காக மஹிந்தவின் கண்துடைப்பு நாடகம். ஆனானப்பட்ட புலிகளுடன் பேசியே ஒன்றும் நடக்கவில்லை. மஹிந்தவும் சம்பந்தரும் ராமபோசாவின் துணையுடன் பேசியா எதுவும் நடக்கபோகுது.   :D   :D   :lol: 

seeman

உறுப்பினர்

கருத்துக்கள உறவுகள்

PipPip

310 posts

Gender:Male

Location:USA

Interests:Sports, Reading, music, martial art, yoga, meditation

Posted Yesterday, 05:57 PM

இசைக்கலைஞன், on 17 Apr 2014 - 04:42 AM, said:

ஜெனீவா நாடகத்துக்கு ஊறுகாய் தென்னாபிரிக்கா.. தீர்மானம் சரிவந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அலைக்கழிச்சிருப்பினம்.. பாவம் தென்னாபிரிக்கா.. :D

ஏற்கனவே தென்னாபிரிக்க முன்னாள் தலைமை நீதிபதியிடம் சிங்களவன் நன்கு மாட்டிகொண்டான். மீண்டும் அடுத்த தென்னாபிரிக்க உப ஜனாதிபதியிடமா பொல்லு கொடுத்து அடிவாங்குவான் சிங்களவன். ராமபோசா தாங்கள் கொடுக்கிற சமபோசாவை மட்டும் சாப்பிட்டு போகும் மலையாழி அல்லவென்பது சிங்களவனுக்கு நன்கு தெரியும். என்ன இருந்தாலும் தென்னாபிரிக்காவின் தலைமை நீதிபதியிடமும் உபஜனாதிபதியிடமும் ஒரே நேரத்தில் தலையை கொடுப்பதற்கு சிங்களவன் அவ்வளவு முட்டாளா என்ன. :D :D :D:lol:

" பலமே வாழ்வு பலவீனமே மரணம்"

மரணத்தின் வலியிலிருந்து சுதந்திரம் பிரசவிக்கபடுகிறது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.