Jump to content

யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?


Recommended Posts

Facebook மாதிரி social networking site ஆக ஒன்றை உருவாக்கி குட்டன்களையும், குட்டிகளையும் சாய்த்துக் கொண்டு போவதற்கு வழி பார்க்கின்றீர்களா?

நல்ல யோசனை உதை தமிழில் மோகன் அண்ணாவையே செய்து தரும்படி கேக்கலாம்...!! ( ஏற்படும் செலவை பங்கு போடும் முயற்ச்சி செய்ய வேண்டும்)

உங்களுக்கு உடன் பாட்டு எண்றால் நானும் எனது வாக்கை இங்கே போட்டு விடுகிறேன்...!!

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply

வணக்கம்

மோகன் அண்ணாவின் கருத்துக்கும் கேள்விக்கும் நான் எதிர். காரணம் இந்த களத்தை நீங்கள் மூடுவதனால் மன உளைச்சல் மட்டுமல்ல என் உடன்பிறப்பையே இழந்தவன் என்கின்ற நிலையை அடைந்துவிடுவேன் ஏனெனில் நான் வளர்ந்த இடம் இது. என்னை அறிமுகம் செய்து வைக்க ஓரு விலாசமும் இதுதான். இந்த தளத்தை நான் என்றுமே மறந்ததில்லை. எங்கு சென்றாலும் முதலில் இங்கு வந்து செய்திகளை தகவல்களை பார்த்துவிட்டுத்தான் மற்றைய தளங்களிற்கு செல்வேன். ஏனோ தெரியவில்லை என்னையும் எழுத வைத்த தளம் இதுதான். தயவுசெய்து இதை மூடவேண்டாம்.

உங்களிற்கு இதை தொடர்ந்து நடாத்துவதற்கு நிதி வசதி குறைவாக இருந்தால் அதற்கு உதவுவதற்கு நான் எப்போதும் தயார். உங்களிற்கு கைகொடுக்க எப்போதும் தயராக இருக்கின்றேன்.

உங்களைப்போன்ற அன்பு நண்பர்களை அறிமுகம் செய்துவைத்த தளம் இது அதை அழிக்காதீர்கள்.

களவிதிகளிற்கு முரண்பாடாக நானும் சில நேரங்களில் செயற்பட்டிருக்கின்றேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன்.

நட்புடனும் நம்பிக்கையுடனும் பரணீதரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

உங்களிற்கு இதை தொடர்ந்து நடாத்துவதற்கு நிதி வசதி குறைவாக இருந்தால் அதற்கு உதவுவதற்கு நான் எப்போதும் தயார். உங்களிற்கு கைகொடுக்க எப்போதும் தயராக இருக்கின்றேன்.

நானும் தான்

Link to comment
Share on other sites

மீண்டும் தணிக்கை செய்யுமளவிற்கு கருத்துகள் இடம்பெறுவதை பார்க்கும்போது... சில திருந்தாத ஜென்மங்கள் இன்னும் இக்களத்தில் உலாவருவது வேதனைக்குரியதாகவே தென்படுகிறது. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் ஒவ்வொருவரும் உணர்ந்து பொறுப்புடன் யாழின் விதிகளுக்கு அமைய கருத்துக்கள் பகிரவேண்டும்.

Link to comment
Share on other sites

ஒருவர் எழுதும் ஆக்கமோ கருத்தோ அல்லது தலைப்போ கண்டனத்துக்குரியது என்று ஓருவர் நினைத்தால் REPORT என்றதை அழுத்தி புகார் செய்யலாம்.. அல்லது தனிமடலில் அவருக்கு எடுத்துக் கூறலாம். இதனால் விரோதங்களும் வீண் மனத்தாங்கல்களும் குறையும்.

அதைவிடுத்து நாங்களே நீதிபதியாகி கருத்துப் பதிந்தவர் மனம்நோக அங்கேயே பதில் கொடுப்பது நியாயமில்லை. கருத்தை பதிந்தவர் மனம் அவற்றை வாசிக்கும்போது எவ்வளவு பாதிப்படையும்? பலரும் படிக்கும் களத்தில் இவ்வாறு செய்வது அவரை நடுவீதியில் வைத்து திட்டுவதற்கு சமம் ! இந்த தவறை நானும் முன்பு செய்திருக்கலாம்.

ஆகவே உறவுகளே கோவிக்காமல் நான் சொன்னதை கருத்தாளர் நிலையில் இருந்து பார்த்து ஒரு முடிவு எடுங்கள்.

Link to comment
Share on other sites

யாரும் யாரையும் திட்டியமாதிரி தெரியவில்லையே.. நான் கூட மேலே வைத்த கருத்து பொதுவானதே!

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry462032 இந்த இழையில் 17ம் திகதிக்குப் பிறகும் கருத்துகள் நீக்கப்பட்டதைப் பார்த்தே அக்கருத்தை எழுதினேன். அக் கருத்துகளுக்கு உரியவர்கள் யாரென்பதுகூட எனக்குத் தெரியாது.

Link to comment
Share on other sites

ஒருவர் எழுதும் ஆக்கமோ கருத்தோ அல்லது தலைப்போ கண்டனத்துக்குரியது என்று ஓருவர் நினைத்தால் REPORT என்றதை அழுத்தி புகார் செய்யலாம்.. அல்லது தனிமடலில் அவருக்கு எடுத்துக் கூறலாம். இதனால் விரோதங்களும் வீண் மனத்தாங்கல்களும் குறையும்.

அதைவிடுத்து நாங்களே நீதிபதியாகி கருத்துப் பதிந்தவர் மனம்நோக அங்கேயே பதில் கொடுப்பது நியாயமில்லை. கருத்தை பதிந்தவர் மனம் அவற்றை வாசிக்கும்போது எவ்வளவு பாதிப்படையும்? பலரும் படிக்கும் களத்தில் இவ்வாறு செய்வது அவரை நடுவீதியில் வைத்து திட்டுவதற்கு சமம் ! இந்த தவறை நானும் முன்பு செய்திருக்கலாம்.

ஆகவே உறவுகளே கோவிக்காமல் நான் சொன்னதை கருத்தாளர் நிலையில் இருந்து பார்த்து ஒரு முடிவு எடுங்கள்.

வசி

நீங்கள் எதை வைத்து இப்படி எழுதினீர்களோ புரியவில்லை. ஆனால் உங்கள் கருத்துப்படி ஒருவரின் கருத்தோ அல்லது அவரால் இணைக்கப்பட்ட ஒரு தலைப்போ கண்டனத்திற்குரியதென்றால் அவரை அந்தப் பக்கத்திலேயே விமர்சிப்பது தவறென்கின்றீர்கள். ஆனால் இதைவிடக் கேவலமாக இந்தக் களத்திற்கு எதுவிதத்திலும் சம்பந்தப்படாத ஒரு நிறுவனத்தையோ அல்லது தனிப்பட்ட நபரையோ எந்தவித ஆதாரமுமில்லாது இங்கே அவர்களை தம் கற்பனைகளுக்கேற்றவாறு உண்மைகளை மறைத்து கேவலமாக சித்தரித்தும் அவர்களது தொலைபேசி இணைப்புகளைத் தந்தும் தம்மை தேசியவாதிகளாகக் காட்டிக் கொள்ள சிலர் செய்யும் களவிதிகளை மீறிய அத்துமீறல்களை விட இது கேவலமானதா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா,

விகடவி,சோழியன் அண்ணா அவையள் சொன்ன கருத்தே எனதும்.

ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பும் மிக அவசியம். உங்களுக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்யத் தயாராய் இருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

சரி அப்ப நீங்கள் தாராளமாய் எல்லாரையும் திட்டி எழுதுங்கோ..

:)

உங்கள் கருத்திற்கான பதிலைத் தான் நான் சொல்லியிருக்கிறேன். மற்றும்படி இங்கே யார் யாரை திட்டி எழுதியுள்ளார்கள். அதைக் குறிப்பிடுங்களேன். சோழியான் கேட்டதைத் தான் நானும் கேட்கிறேன். பதிலைத் தாருங்களேன்.

:(:(:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை திருப்பி கூப்பிட்ட எல்லாருக்கும் அதோடை தனிப்பட கடிதம் எழுதி கூப்பிட்டவைக்கும் நன்றியோடை வணக்கத்தையும் சொல்லுறன். :rolleyes:

அப்பிடியே அப்பாடா ஒண்டு துலைஞ்சுது எண்டு சந்தோசப்பட்டவைக்கு என்னாலை ஒண்டும் செய்யேலாது உங்கடை தலைவிதி அப்படி :lol:

Link to comment
Share on other sites

என்னை திருப்பி கூப்பிட்ட எல்லாருக்கும் அதோடை தனிப்பட கடிதம் எழுதி கூப்பிட்டவைக்கும் நன்றியோடை வணக்கத்தையும் சொல்லுறன். :lol:

அப்பிடியே அப்பாடா ஒண்டு துலைஞ்சுது எண்டு சந்தோசப்பட்டவைக்கு என்னாலை ஒண்டும் செய்யேலாது உங்கடை தலைவிதி அப்படி :)

:rolleyes:நான் ஒரு 4 மணித்தியாலம் உண்ணாவிரதமிருப்பம் எண்டு யோசிக்க நீங்கள் வந்திட்டியள் :) . அதாலை என்ரை உண்ணாவிரதத்தையும் கைவிட்டிட்டன். :D அப்படியே வரும் போது முனியையும் பிடித்து வந்திருக்கலாமே?? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை திருப்பி கூப்பிட்ட எல்லாருக்கும் அதோடை தனிப்பட கடிதம் எழுதி கூப்பிட்டவைக்கும் நன்றியோடை வணக்கத்தையும் சொல்லுறன். :lol:

அப்பிடியே அப்பாடா ஒண்டு துலைஞ்சுது எண்டு சந்தோசப்பட்டவைக்கு என்னாலை ஒண்டும் செய்யேலாது உங்கடை தலைவிதி அப்படி :)

எங்கை அந்த நேரம் தனிமடல் அனுப்பமுடியாமல் இருந்துச்சு :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா, முனிவர் இருவரும் நலம் தானே!!

நீங்கள் இருவரும் எதற்காக அவசரப்பட்டு வெளியேற வேண்டும்? மோகனே மனம் மாறி களத்தை தொடர்ந்து நடத்துவதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் நீங்களிருவரும் உங்கள் கருத்துக்களால் தொடர்ந்தும் இணைந்திருப்பதே முறையானது. ஒரு நல்ல நட்பானது தனது நண்பனின் இக்கட்டான சூழ்நிலையில் அவனுடன் இணைந்திருந்து கைகொடுத்து காப்பாற்றுவதே. எனவே நீங்கள் இருவரும் யாழ் களத்தின் நல்ல நண்பர்கள் இல்லையா?? தயவுசெய்து தொடர்ந்து இணைந்திருங்கள்.

எப்போவும் இணைந்திருபோம் நம் உறவுகளிடம் வசம்பு அண்ணன் :rolleyes:

Link to comment
Share on other sites

எப்போவும் இணைந்திருபோம் நம் உறவுகளிடம் வசம்பு அண்ணன் :)

:rolleyes:கு.சா விற்காக 4 மணித்தியாலம் உண்ணாவிரதமிருப்போமென்று யோசிக்க அவர் வந்திட்டார். அட உங்களுக்காவது 4 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருப்போமென யோசிக்க நீங்களும் வந்திட்டீங்க. :lol:

:) அதாலை எனது 4 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகின்றது என்பதை இத்தால் சகலருக்கும் அறியத் தருகின்றேன். :D

Link to comment
Share on other sites

யாழ் தளத்தில இப்ப ஆக்களுக்கு ஏதோ முத்திரை குத்துறீனமாம். தமிழால் இணைவதிண்ட, தமிழராய் உயர்வதிண்ட மகிமை இதில தெரியுது. மோகன் அண்மையில குடுத்த அதிர்ச்சி வைத்தியம் காணாதுபோல இருக்கிது.

அப்ப குத்தவேண்டியான் அண்ணாச்சிக்கு ஒரு முத்திரை......

முதுகில ஒரு சிரியையும்...... கு$#%ல ஒரு சிங்கத்தையும் குத்தவேண்டியான்.... :huh::rolleyes::unsure:
Link to comment
Share on other sites

யாழ் தளத்தில இப்ப ஆக்களுக்கு ஏதோ முத்திரை குத்துறீனமாம். தமிழால் இணைவதிண்ட, தமிழராய் உயர்வதிண்ட மகிமை இதில தெரியுது. மோகன் அண்மையில குடுத்த அதிர்ச்சி வைத்தியம் காணாதுபோல இருக்கிது.

நீங்க வேற, எனக்கு என்ன சந்தேகம் என்டா மோகன் அண்ணை துறப்பை துலைச்சிட்டாரோ என்று! ஏனெண்டா சிலபேர் இங்க துறப்பும் கையுமா திரியினம்?

யாழ் கள நிர்வாகிகளே!!! இவ்வாறான தொத்து வியாதிக்கு இடமளித்தால் யாழ்களத்தை இழுத்து மூடவேண்டி வரும் அல்லது இதுபோல களமொன்றை நான் தொடங்கவேண்டி வரும்.
Link to comment
Share on other sites

என்னை திருப்பி கூப்பிட்ட எல்லாருக்கும் அதோடை தனிப்பட கடிதம் எழுதி கூப்பிட்டவைக்கும் நன்றியோடை வணக்கத்தையும் சொல்லுறன். :huh:

உங்களை திருப்பி கூப்பிட சொல்லி மடல் போட்டு இருந்தீர்கள்... மன்னிக்கவும் நேரம் இன்மையால் உங்களை கூப்பிட்டு எழுத முடிய இல்லை.... :huh::rolleyes::unsure:

Link to comment
Share on other sites

உங்களை திருப்பி கூப்பிட சொல்லி மடல் போட்டு இருந்தீர்கள்... மன்னிக்கவும் நேரம் இன்மையால் உங்களை கூப்பிட்டு எழுத முடிய இல்லை.... :huh::rolleyes::unsure:

:)அட கு.சா உங்களுக்குமா போட்டிருந்தார். :huh::D எனக்கு அனுப்பின மடலில் இப்படி எனக்கு மட்டும் தான் போட்டிருப்பதாக எழுதியிருந்தார். :huh:

Link to comment
Share on other sites

இது நம் சில உறவுகளின் நடவடிக்கை போன்று சின்னப் பிள்ளைத்தனமாக இருக்கு...

நான் யாழ் களத்தின் நீண்ட கால வாசகன்... என்னை போல் நிறைய வாசகர்கள் யாழ் களத்திற்கு உள்ளார்கள்...நான் கூட நிறைய எனது முந்நாள் பல்கலைக்கழக நண்பர்களுக்கு சிபாரிசு செய்து உள்ளேன்...

எனக்கு தெரிந்து தற்போதைய யாழ் கள உறவுகள்(எல்லோரும் அல்ல).. தட்டி கொடுப்பதை விட.. திட்டிக்கெடுப்பதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள்... இந்நிலை மாறினால் யாழ் களம் புதுப்பொலிவு பெறும் என்பது எனது அப்பிப்பிராயம்...

நன்றி

Link to comment
Share on other sites

என்ரை சந்தேகத்தை தீர்த்து வைத்த மோகன் அண்ணைக்கு நன்றி....

....போராட்டத்தில கொல்லப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கும், பொதுமக்களுக்கும் அஞ்சலி செய்ய எழுதின கருத்தை தலைப்புக்கு சம்பந்தமில்;லை என்று தூக்கி இன்னும் துறப்பு தன்ரை கையிலதான் என்பதை உறுதி செய்திருக்கிறார்!

நல்ல விசயம்... ஆனா உப்பிடி தலைப்புக்கு சம்மந்தமில்லாத கருத்துகளை எல்லாம் தூக்கினால் யாழ்களத்தில ஒரு கருத்தும் மிஞ்சாதே.....?

சரி சரி.... உங்கடை கஸ்டம் விழங்காம நான் கேள்விகளை கேட்க பிறகு நீங்கள் விரக்தியடைய... ஏன் எனக்கு பொல்லாப்பு....!

Link to comment
Share on other sites

என்ன இப்பிடி சொல்லிட்டியள்...??? யாழ்களம் இயங்குவதா..? இல்லையா என தீர்மானிக்கவேண்டியவர் இயக்குணர். ஐயா உங்கள் முடிவுகள் எப்படி இருந்தாலும் நாம் வரவேற்கிறோம். ஏன் எனில் களத்தினை இயக்குவதில் படும்பாட்டினை நான் அறிவேன். ஆனால் ஒன்று கருத்துக்களத்தில் அவ்வளவுக்கு நீங்கள் இணைத்திருக்கவேண்டிய அவசியமோ, அதிகமான பணமோ செலவு செய்யத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் உங்கள் முடிவுகள் உறுதியாக இருக்கட்டும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் ஐயா!

உந்த அமாவாசை பறுவத்துக்கு மட்டும் வந்து குலைக்கிறவையாலைதான் பிரச்சனை வருது போலை கிடக்கு :) இல்லாட்டி பாவிக்க வேண்டிய குளிசையளை நேரகாலத்துக்கு எடுக்காதவையும் இஞ்சைவந்து கிறுக்கிறதாலையும் பிரச்சனை வருது போலைகிடக்கு :unsure:

என்ன கோதாரியோ எனக்கும் பின் வரிசையிலை நிண்டு குலைச்சு குலைச்சு பழகிப்போச்சு :o என்ரை வாயும் சும்மா கிடக்காது பழஞ்சீலை கிழிஞ்சமாதிரி எப்ப பாத்தாலும் புறுபுறுத்துக்கொண்டு :D

Link to comment
Share on other sites

வணக்கம் மோகன் அண்ணா.

கடந்த வாரம் என்னை பதிவு செய்ய முயற்சித்தேன், ஆனால் புதியவர்களை இணைப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை பார்த்தேன்.

ஆனால் மறுபடியும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையிட்ட

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.