Jump to content

நான் பார்த்த சாத்திரி!!


Recommended Posts

ஆரம்பத்திலே சாத்திரியார் ஒரு உண்மை சம்பவத்தை சிறுகதையாக யாழில் எழுதினார்.. அதுதான் அவரது முதலாவது படைப்போ என்னமோ.. சில வசன நடைகளை தவிர்த்து பார்க்கும்போது அங்கே அவரது எழுத்தார்வம் மிகவும் தாராளமாகவே பொதிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதிலிருந்து அவரை அவரது ஆக்கங்கள் மூலமாக அவதானிக்க ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல சம்பவங்கள் கடந்தகால அனுபவங்களாக.. நிகழ்வுகளின் விமர்சனங்களாக.. கட்டுரைகளாக வெகுவேகமாகவே அவரது எழுத்தாற்றலும் சிந்தனைகளும் விரிந்துகொண்டே சென்றன.

அவரது ஆரம்பகால விமர்சனக் கட்டுரைகள் மூஞ்சையைப் பொத்தி அடிக்கிறமாதிரி இருக்கும். மூஞ்சையைப் பொத்தி அடிச்சால் அடிவாங்கினவனும் திருப்பி அடிக்கத்தானே முயற்சிப்பான்.. அதேபோல எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் சிலர் மிகவும் சினத்துடன் 'அவர் ஒரு மனுசனா..' என்னும் போக்கில் என்னுடன் தொலைபேசியில் பேசுவார்கள். நானும் அப்போது யாழில் இணைந்து பதில் எழுதுங்கள் என்று கூறிவிடுவேன். அவர்கள் யாழில் உள்ளார்களா இல்லையா என்பதை நான் அறியேன். :)

ஆனால் சாத்திரியின் அந்தக் கட்டுரைகளைப் பார்க்கும்போது எனக்கு மனதுள் சிரிப்பாக இருக்கும். ஏனெனில் 90களில் Dosல் ஆதமி போன்ற தமிழ் எழுத்துகளை பாவித்த காலத்தில் வெளியிட்ட கடல் என்ற சஞ்சிகையிலும் இப்படியான வகை கட்டுரைகளை எழுதியிருந்தோம். அதனால் திரும்ப வந்த அடிகளையும் தாங்கியிருக்கிறோம். அதற்கும் ஒரு துணிவும் அதன் தாக்கங்களைத் தாங்கும் குடும்பமும் வேண்டுமல்லவா?! :)

எழுத்தாளன் என்பவன் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன். அவன் எளிதில் உணர்ச்சிவசப்படுவதால்தான் அந்த உணர்வுகளை எழுத்தில் இறக்கிவைக்க முடிகிறது. அதுமட்டுமல்ல.. தனது உணர்வுகளை மற்றவனுடன் பகிர்ந்துகொண்டு அதை ஒரு அறிவித்தலாக அல்லது அனுபவமாக தான் சார்ந்த சமுதாயத்தில் பதிவுசெய்ய விளைகிறான். இந்த விளைவு இல்லாவிட்டால் தாக்கும் உணர்வுகளைச் சமாளிக்க மது.. போன்ற எத்தனையோ விடயங்களை நாடிவிட்டுப் போகலாம்.

ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படும் எழுத்தாளன்.. அந்த உணர்வுகளை தனது எழுத்தனுபவங்களைக் கொண்டு நிதானமாகச் சிந்தித்து ஒரு சீரான முறையில் எழுத்தாக்குகிறான் என்பதுதானே உண்மை?! ஆக உணர்ச்சிவசப்படுபவன் அந்த உணர்வுகளை ஒரு பக்குவமான நிலைக்குகொண்டு வரும்போதுதானே எழுத்தாளனாகிறான். இது அந்த எழுத்தாளனது அனுபவங்களைப் பொறுத்தே காத்திரமாகிறது.

நானும் முன்பொரு முறை இதே யாழில் முற்றம் என்னும் பகுதியில் எனது ஆக்கங்களை உணர்ச்சிவசப்பட்டு அகற்றினேன். ஒரு சில தினங்களின் பின்னர் அது தவறு எனப் புரிந்து மீண்டும் நானே இணைத்தேன். இது வெறும் உணர்வுகளை கட்டுப்படுத்த தவறியதன் விளைவு.

தற்போது அதேநிலையில் சாத்திரி அவர்கள்.. என்னைப் பொறுத்தளவில் சாத்திரி ஒரு நல்ல எழுத்தாளர். இன்றைய நடப்புகளை தனது எழுத்தாற்றல்மூலம் வாசகரிடம் சேர்க்கும் வல்லமை பெற்றவர்.

உணர்வுகள் வரும் போகும்.. பெறும் உணர்வுகளை எவ்வாறு பொறுமையுடன் எழுத்தில் வடிக்கிறோமோ.. அதேபோல் எழுத்துக்கு வரும் கருத்துகளால் விமர்சனங்களால் ஏற்படும் உணர்வுளையும் பொறுமையுடன் சீர்தூக்கிப் பார்த்து செயற்படுவதுதான் எழுத்தாளனுக்கு அழகும் பெருமையும்.

எழுத்தால் அடிக்கும்போது அடிபடுபவன் தரும் அடிகளையும் தாங்கி திரும்ப தாக்கி வெற்றிபெறுவதுதான் ஒரு ஒரு எழுத்தாளனை சமூகத்தில் நிலைநிறுத்தும். ஆகவே சாத்திரி அவர்கள் தனக்கான தடைக்காலம் முடிந்ததும் மீண்டும் யாழில் கருத்துகளை ஆக்கங்களை தொடர்ந்து எழுதவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அவர் இக்கருத்தை பார்வையாளனாவது இருந்து அவதானித்து உள்வாங்குவார் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு காலத்தில் ஏதாவது ஒன்று பேசப்படும் பொருளாக இருக்கும்

தற்போது யாழில் "சாத்திரி" :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழி அண்ணா தனது அனுபவத்தில் சாத்திரி என்ற கள உறவு பற்றி தெளிவுறச் சொல்லி இருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றே..!

சாத்திரி ஒரு எழுத்தாளனாக தான் சொல்ல விரும்புவதை தனது வடிவில் சொல்லக் கூடியவர். அதனால் அவர் தனது எழுத்துக்கள் மூலம் நிறைய வாசகர்களைக் கவர்ந்தும் இருக்கிறார். பிரச்சனையும் பட்டிருக்கிறார்.

அவருடைய பல ஆக்கங்களோடு முரண்படாத போதும் சில ஆக்கங்கள் மக்களது மேன்மை பொருந்திய நம்பிக்கைகளுக்கு பாதகமாக அமைந்திருந்த நிலையில் அவற்றோடு இணைந்து அவரோடு விவாதம் செய்திருக்கிறேன். என்ன அவர் இலகுவில் தனது தவறை ஒத்துக் கொள்ளமாட்டார்..! ஆனால் கோபப் படுவார். அது சோழியண்ணா சொன்னது போல.. எழுத்தாளர்களின் சுபாவம் போலும்..!

அண்மையில் அவர் கள விதிக்கு மாறாக நடந்து கொண்டதை இட்டு ஏற்பட்ட தடை என்பது அவருக்கான ஒரு வழிகாட்டலாக இருக்குமே தவிர அவரின் எழுத்தாளுமையை அது பாதிக்காது என்றே நம்புகிறேன். சோழியண்ணா சொன்னது போல தடையை + ve ஆக எடுத்து சாத்திரி தனது படைப்புக்களை இன்னும் ஸ்திரமாக உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

நிச்சயமா.. சாத்திரியோ.. எவருமோ.. அவரவரின் படைப்பளவில் நாம் தவறு காணும் போது.. அதை நிச்சயம் சுட்டிக்காட்டியும்.. மெருகு காணும் போது வாழ்த்தியும் நிற்போம்..! சாத்திரியும் வாசகர்களின் விமர்சனங்களை நக்கலாக நளினமாக நோக்காது அதனுள் பொதிந்திருக்கும் உள்ளார்ந்த கருத்துக்களை சிந்தனைகளை உணர்ந்து ஆக்கங்களில் அவற்றை பிரதிபலிப்பது.. இன்னும் இன்னும் அவர் தன்னை எழுத்துலகில் ஸ்தரப்படுத்த உதவும்.

எழுத்துக்களுக்கு அப்பால்.. யாழ் கள உறவாக.. சாத்திரி எமக்கும் நல்ல நண்பரே. அவரோடு தனிப்பட்ட முறையில் தொடர்புகள் இல்லாத போதும் பிரச்சனைகளும் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

காய்க்கிற மரத்துக்குத்தானே கல்லெறி விழும். என்ட பாசையில சொன்னா வடிவான பெட்டயளத்தான் பெடியள் சுழட்டுவாங்கள் (இதுக்கு என்னிடம் ஆதாரம் இல்லை, எதோ அனுபவத்தில கண்டதை எழுதியிருக்கிறன் :icon_mrgreen:)

Link to comment
Share on other sites

காய்க்கிற மரத்துக்குத்தானே கல்லெறி விழும். என்ட பாசையில சொன்னா வடிவான பெட்டயளத்தான் பெடியள் சுழட்டுவாங்கள் (இதுக்கு என்னிடம் ஆதாரம் இல்லை, எதோ அனுபவத்தில கண்டதை எழுதியிருக்கிறன் :icon_mrgreen:)

அப்பிடியும் மரம் அந்த இடத்திலயே நின்று காய்க்கும்.. ஆனா...?? மரம் பெட்டர் என்கிறீங்க.. அப்படித்தானே?!! :)

Link to comment
Share on other sites

தற்போது அதேநிலையில் சாத்திரி அவர்கள்.. என்னைப் பொறுத்தளவில் சாத்திரி ஒரு நல்ல எழுத்தாளர். இன்றைய நடப்புகளை தனது எழுத்தாற்றல்மூலம் வாசகரிடம் சேர்க்கும் வல்லமை பெற்றவர்.

உணர்வுகள் வரும் போகும்.. பெறும் உணர்வுகளை எவ்வாறு பொறுமையுடன் எழுத்தில் வடிக்கிறோமோ.. அதேபோல் எழுத்துக்கு வரும் கருத்துகளால் விமர்சனங்களால் ஏற்படும் உணர்வுளையும் பொறுமையுடன் சீர்தூக்கிப் பார்த்து செயற்படுவதுதான் எழுத்தாளனுக்கு அழகும் பெருமையும்.

எழுத்தால் அடிக்கும்போது அடிபடுபவன் தரும் அடிகளையும் தாங்கி திரும்ப தாக்கி வெற்றிபெறுவதுதான் ஒரு ஒரு எழுத்தாளனை சமூகத்தில் நிலைநிறுத்தும். ஆகவே சாத்திரி அவர்கள் தனக்கான தடைக்காலம் முடிந்ததும் மீண்டும் யாழில் கருத்துகளை ஆக்கங்களை தொடர்ந்து எழுதவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அவர் இக்கருத்தை பார்வையாளனாவது இருந்து அவதானித்து உள்வாங்குவார் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்!! :rolleyes:

அவரது எழுத்துக்களை யாழ்களத்தில் மீண்டும் காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் கதைகளும் நாட்குறிப்புகளும் என்னை மிகவும் கவர்ந்தவை. நகைச்சுவையாகவும் இரட்டை அர்த்தத்திலும் எழுதும் திறமை கொண்டவர். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.

அவரோடு நான் சில சமயங்களில் முரண்பட்டே வந்துள்ளேன். அதை அவருக்கு தெரிவித்தும் வந்துள்ளேன். அவரும் சில திரிகளுக்கு என் போன்றவர்களை வரவேண்டாம் எழுதவேண்டாம் என்று சொல்லியே திரியை ஆரம்பிக்கும் அளவுக்கு எமக்குள் புரிந்துணர்வு இருந்துள்ளது. இருக்கிறது.

அதேநேரம் எதைப்பகிடியாக எழுதணும் எதை எழுதக்கூடாது என்ற எனது நிலைப்பாட்டையும் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். அதைர அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தற்போது நடப்பது சட்டமீறல் சம்பந்தமானது. அதை நிர்வாகமும் அவரும்தான் தீர்க்கணும்.

அதேநேரம் காமம் என எழுதப்பட்ட திரியில் முழுப்போராளிகளையும் ஒருவித காமகளியாட்டக்காறர்கள் என திசை திருப்பியதால் அதை மட்டுப்படுத்தும்படி நிர்வாகத்திடம் நானும் கேட்டுக்கொண்டேன் என்பதை தெரிவிப்பதிலலிருந்து நான் ஒழிந்து கொள்ளமாட்டேன்.

நான் யாழில் செலவிடும் நேரம் எவருக்கானது என்பதை என்றும் ஞாபகம் வைத்திருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியால் "கலாச்சாரக் காவலர்" என்று பட்டம் வழங்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். கோமகன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் காட்டிய எதிர்ப்பு தவறாகப் புரியப் பட்டு இப்படி ஒரு பெயர் கிடைத்தது. சாத்திரி உட்பட பல தமிழ் எழுத்தாளர்கள் காமத்தை விபரித்து அல்லது முன்னிறுத்தி எழுதுவதை "முற் போக்கு" என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யாராவது முகம் சுழித்தாலும் "இது எல்லா சமூகத்திலும் நடப்பது தான், தமிழர்கள் விதி விலக்கா? " என்பார்கள். நான் இவர்களுக்கு எப்போதும் சொல்லும் பதில்: காமம், கலவி, ஓரினச் சேர்க்கை, பாலியல் தொழில் இவையெல்லாம் எல்லாச் சமூகத்திலும் எல்லாக் காலங்களிலும் நடப்பது, மனித இனம் இருக்கும் வரை தொடர்ந்து நடக்கும். ஒரு விஷயம் பல ஆண்டுகளாக நடக்கிறது என்பதற்காக அதை நாங்கள் அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. "பெண்ணடிமைத் தனம் கூட பல ஆண்டுகள் பழையது, அதனால் இது சாதாரணமான விஷயம்" என ஒரு "முற்போக்கு" எழுத்தாளர் எழுதி விட முடியுமா? பாலியல் தொழிலும் அன்ரி மாரோடான காம லீலைகளும் சாதாரணமான விடயங்கள் என்ற பிரதிமையை சாத்திரி உட்பட யாழில் எழுதும் எழுத்தாளர்கள் ஏற்படுத்துவதை எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் யாழ் பல வயதினரும் பார்க்கும் ஒரு தளம். எதை எழுதுகிறோம் என்ற கட்டுப் பாடு இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

சாத்திரி நல்லவர், வல்லவர், வடிவானவர், நல்லா எழுதக் கூடியவர். அண்மைய கால அவரது எழுத்துக்கள் நிலாந்தன் தன் ஆறாவடு விமர்சனத்தில் சொல்லியிருந்தது போன்று யுத்தகாலங்களின் இன்னுமொரு சாட்சியாக நாளை நிச்சயம் பார்க்கப்படும். முள்ளிவாய்க்காள் கதிக்கு பின்னால் உறைந்து இருக்கும் பல உண்மைகளை துணிவுடன் எழுதி வருகின்றவர். சிலரது எழுத்துக்கள் வாசிக்கும் போது visual லாக மனதுக்குள் விரிந்து செல்லும்; சாத்திரியின் எழுத்து நடையும்இவ்வாறானதே.

எழுத்துகளுக்கு அப்பால், பல சமயங்களில் அவரது அலைவரிசையும் எனது அலைவரிசையும் ஒத்து போயிருப்பதை அவதானித்துள்ளேன். யாழுக்கு வெளியேயும் நண்பர்களாக தொடர்ந்து இருக்க இந்த அலைவரிசை தான் உதவுகின்றது என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நல்லவர், வல்லவர், வடிவானவர், நல்லா எழுதக் கூடியவர். அண்மைய கால அவரது எழுத்துக்கள் நிலாந்தன் தன் ஆறாவடு விமர்சனத்தில் சொல்லியிருந்தது போன்று யுத்தகாலங்களின் இன்னுமொரு சாட்சியாக நாளை நிச்சயம் பார்க்கப்படும். முள்ளிவாய்க்காள் கதிக்கு பின்னால் உறைந்து இருக்கும் பல உண்மைகளை துணிவுடன் எழுதி வருகின்றவர். சிலரது எழுத்துக்கள் வாசிக்கும் போது visual லாக மனதுக்குள் விரிந்து செல்லும்; சாத்திரியின் எழுத்து நடையும்இவ்வாறானதே.

எழுத்துகளுக்கு அப்பால், பல சமயங்களில் அவரது அலைவரிசையும் எனது அலைவரிசையும் ஒத்து போயிருப்பதை அவதானித்துள்ளேன். யாழுக்கு வெளியேயும் நண்பர்களாக தொடர்ந்து இருக்க இந்த அலைவரிசை தான் உதவுகின்றது என நினைக்கின்றேன்

அது நிலாந்தனா அல்லது சயந்தனா :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

ஆகா மொத்தத்தில் சாத்திரி எழுதுவதிலும் தவறில்லை அவரை 15 நாள்மாட்டும் தடைசெய்ததும் தவறில்லை என்ற நிலைப்பாட்டுக்கே அனைவரும் வருகிறார்கள் போல?

சோழியன் அண்ணா சொன்னது போல்:

நானும் முன்பொரு முறை இதே யாழில் முற்றம் என்னும் பகுதியில் எனது ஆக்கங்களை உணர்ச்சிவசப்பட்டு அகற்றினேன். ஒரு சில தினங்களின் பின்னர் அது தவறு எனப் புரிந்து மீண்டும் நானே இணைத்தேன். இது வெறும் உணர்வுகளை கட்டுப்படுத்த தவறியதன் விளைவு.

அந்த உணர்வுக்கு சாத்திரி ஜயா அடிமையானார் அதனால் அவர் ஆக்கங்களை நீக்கினார்

அதே போல் யாழ்கள விதிகளுக்கு நிழலி கட்டுப்பட்டு அவரை தடை செய்தார்.

தட்ஸ் ஆல்.,,

இனி சாத்திரி செய்ய வேண்டியது 15 நாள் முடியா தனது பயனத்தை யாழில் தொடரவேண்டியது தான் அந்த பயணத்தில் நானும் ஒரு வாசகனாக வருகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னனைப்பொறுத்த வைரைக்கும் சாத்துக்கு நடந்தது எப்ப பிழை விடுவான் அதுவும் தேசியம் அல்லது புலி என்று பா(கா)த்து இருந்து பழி தீர்க்கப்பட்டிருக்கு.இங்கு யாரோ சொன்ன மாதிரி காய்கிற மரம் தான் எறி வாங்கும்.சாத்து தொடர்ந்தும் எறி வாங்க எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சோழியன் அண்ணை! கன காலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்......ஒருசில விடயங்களை ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

சாத்திரியின் எழுத்து பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல எழுத்தாளர். அவர் தொடர்ந்து யாழில் எழுதவேண்டும். எங்களால் அறியபடாத பல சம்பவங்களை அவருடைய பார்வையில் மிக தெளிவாக தருவதில் அவருக்கு நிகர் யாருமில்லை. அவருடைய எழுத்துகளை மேலும் எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த தளபதி சோழியானை களத்தில் கண்டது மகிழ்ச்சி.

மறப்போம் மன்னிப்போம்

தடையை எடுத்து உடனேயே ஆளை உள்ளுக்கு விடுங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சாத்தண்ணாவின் எழுத்தைவிட தலைவருடன் நின்று போராடிய முன்னாள் போராளி என்பதால்தான் அதிக விருப்பம், தலைவரின் மூச்சு காற்று பட கொடுத்து வைத்தவர்,

இதுவரை அவருடன் தனிமடலில் கூட தொடர்பு கொள்ளவில்லை, அவரில் உள்ள மதிப்பு பன்மடங்கு,

பிரான்ஸ் வரும் போது சந்திக்க விரும்பும் முதல் உறவு அவர்தான்

Link to comment
Share on other sites

மூத்த தளபதி சோழியானை களத்தில் கண்டது மகிழ்ச்சி.

மறப்போம் மன்னிப்போம்

தடையை எடுத்து உடனேயே ஆளை உள்ளுக்கு விடுங்கப்பா.

ஆகா.. இந்த தள(அதி)பதி மோகன்தானே?!! :)

வணக்கம் சோழியன் அண்ணை! கன காலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்......ஒருசில விடயங்களை ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றீர்கள்.

தொடர்ந்து எழுதுபவர்களை இழக்கக் கூடாது என்ற உணர்வுதான்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவின் இணைப்பில், சாத்திரிக்கு ஏன் முன்னறிவித்தல் கொடுக்கப் படவில்லை என்பதற்கான விளக்கம், மிகத் தெளிவாகவேயுள்ளது!

சாத்திரியும், ஒரு எழுத்தாளன் என்ற முறையில், மனத்தின் ஆதங்கத்தால், எடுக்கப்படும் முடிவுகள் நிலையானவை அல்ல என்பதை அறிவார்!

எத்தனை தடவைகள், நாங்கள் ஒரு காலத்தில் எடுத்த முடிவுகளைத் திரும்பிப்பார்க்கும் போது, நமக்குள்ளேயே சிரித்து விட்டிருக்கின்றோம்!

பதினைந்து நாட்கள், சாத்திரியார் தனது முடிவைத் திரும்பத் திரும்பச் சிந்தித்து இருப்பார்! ஒரு தெளிவையும் அடைந்திருப்பார்!

திரும்பி வருவார் என்றே நினைக்கிறேன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் நகைச்சுவை எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அண்மையில்... அவரின் எழுத்துக்களில் பல மாற்றங்களை காணக் கூடியதாகவிருந்தது.

உதாரணத்துக்கு, சனல் 4 சம்பந்தமான தலைப்பு ஒன்றில்... "காந்தி செத்துட்டாரா?" என்று எழுதியதை வாசித்து முகம் சுழிக்க வேண்டி ஏற்பட்டது.

அவர் இன்னும் ஒரு கிழமையில் மீண்டும் வருவார், என்று நிச்சயமாக நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியால் "கலாச்சாரக் காவலர்" என்று பட்டம் வழங்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். கோமகன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் காட்டிய எதிர்ப்பு தவறாகப் புரியப் பட்டு இப்படி ஒரு பெயர் கிடைத்தது. சாத்திரி உட்பட பல தமிழ் எழுத்தாளர்கள் காமத்தை விபரித்து அல்லது முன்னிறுத்தி எழுதுவதை "முற் போக்கு" என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யாராவது முகம் சுழித்தாலும் "இது எல்லா சமூகத்திலும் நடப்பது தான், தமிழர்கள் விதி விலக்கா? " என்பார்கள். நான் இவர்களுக்கு எப்போதும் சொல்லும் பதில்: காமம், கலவி, ஓரினச் சேர்க்கை, பாலியல் தொழில் இவையெல்லாம் எல்லாச் சமூகத்திலும் எல்லாக் காலங்களிலும் நடப்பது, மனித இனம் இருக்கும் வரை தொடர்ந்து நடக்கும். ஒரு விஷயம் பல ஆண்டுகளாக நடக்கிறது என்பதற்காக அதை நாங்கள் அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. "பெண்ணடிமைத் தனம் கூட பல ஆண்டுகள் பழையது, அதனால் இது சாதாரணமான விஷயம்" என ஒரு "முற்போக்கு" எழுத்தாளர் எழுதி விட முடியுமா? பாலியல் தொழிலும் அன்ரி மாரோடான காம லீலைகளும் சாதாரணமான விடயங்கள் என்ற பிரதிமையை சாத்திரி உட்பட யாழில் எழுதும் எழுத்தாளர்கள் ஏற்படுத்துவதை எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் யாழ் பல வயதினரும் பார்க்கும் ஒரு தளம். எதை எழுதுகிறோம் என்ற கட்டுப் பாடு இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

நன்றி ஜஸ்டின்,

எனது கருத்தும் இதுதான்.

நானும் சாத்தண்ணாவின் எழுத்தைவிட தலைவருடன் நின்று போராடிய முன்னாள் போராளி என்பதால்தான் அதிக விருப்பம், தலைவரின் மூச்சு காற்று பட கொடுத்து வைத்தவர்,

இதுவரை அவருடன் தனிமடலில் கூட தொடர்பு கொள்ளவில்லை, அவரில் உள்ள மதிப்பு பன்மடங்கு,

பிரான்ஸ் வரும் போது சந்திக்க விரும்பும் முதல் உறவு அவர்தான்

இயக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் தலைவரில் விசுவாசம் கொண்டவர்கள் என்று கூறமுடியாது,

முன்னையகாலங்களில் இயக்கத்தில் இருந்த இயக்க போராளிகள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளமாட்டார்கள் இவரைப்போல் சிலர் தான் இயக்கத்தில் இருந்ததாக கூறிக்கொண்டு இவர் எழுதும் தனது சொந்தகருத்துக்களை புனித இலட்சியம் கொண்ட இயக்கத்துக்கு மாசுவிளைவிக்கும் வகையில் எழுத அனுமதிக்கமுடியாது

சாத்திரியாரின் நகைச்சுவை எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அண்மையில்... அவரின் எழுத்துக்களில் பல மாற்றங்களை காணக் கூடியதாகவிருந்தது.

உதாரணத்துக்கு, சனல் 4 சம்பந்தமான தலைப்பு ஒன்றில்... "காந்தி செத்துட்டாரா?" என்று எழுதியதை வாசித்து முகம் சுழிக்க வேண்டி ஏற்பட்டது.

அவர் இன்னும் ஒரு கிழமையில் மீண்டும் வருவார், என்று நிச்சயமாக நம்புகின்றேன்.

நன்றி தமிழ்சிறி,

இவர் எழுதியதைப்பார்த்து என்னையும் ஆச்சரியப்பட வைத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபாவளிக்கு சரவெடி இல்லாமலா? யாழ் களம் சாத்தர் இல்லாமலா? 

அவர் இன்னும் சூடா வந்து தளத்தை பிரிச்சு மேயபோறார். 

Link to comment
Share on other sites

இதில் இன்னொரு விடயத்தையும் எழுத வேண்டும் என நினைக்கின்றேன்

நாம் 2008 இன் இறுதிப் பகுதியில் 'யாழ்கள கனடா உறவுகள் சந்திப்பை' நிகழ்த்தும் போது எம்மை தூற்றியவர்கள் பலர். தூற்றியதுடன் நின்று விடாமல் அதில் கலந்து கொண்ட கள உறவுகளின் மனைவிமாரையும் கொச்சையாக வேறு தளங்களில் எழுதி இருந்தனர். அந்த நேரத்தில் எம் நிகழ்வை வாழ்த்தி எம்மை பாராட்டி ஊக்கப்படுத்தியவர்களில் முக்கியமானவர் சாத்திரி !!

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்,

 

இன்று சாத்திரியின் வலைப்பூவிற்கு சென்று சர்ச்சைக்குரிய 'காமம்' எனும் பகுதியில் எழுதப்பட்டுள்ளதை வாசித்தேன். அதில் பல விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன. அதில் பயிற்சி முகாமில் நடைபெற்றதாக கூறப்படும் சில விடயங்களும் (காமம்) விபரிக்கப்பட்டு உள்ளன‌.

 

குறிப்பிட்ட தொடர்கதையில் காமம் பகுதியை நீக்குவதற்கு நிழலி அவர்களினால் கீழ்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது:

 

"பல பல கள உறவுகளின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப (ரிப்போர்ட் பண்ணியும் தனிமடல்கள் மூலமும் நீக்குமாறு கேட்கப்பட்டன) சாத்திரியின் கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை என்ற திரியில் சாத்திரியால் பதியப்பட்ட 'காமம்' என்ற பதிவும் அது தொடர்பான பதில்களும் அகற்றப்படுகின்றன."

 

நான் யாழ் களத்தை கடந்த கடந்த ஏழு ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன், ஐந்து ஆண்டுகளாக எழுதியும் வருகின்றேன். எனது அனுபவம், பார்வையின் அடிப்படையில் சாத்திரி எழுதிய தொடர்கதையின் குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டது தவறாகவே எனக்கு தெரிகின்றது.

 

1. தொடர்கதையின் தலைப்பிலேயே கவர்ச்சி, காதல், காமம், கண்ணியமான நட்பு, கடந்துவந்தபாதை என்பதில் காமம் என்பதும் அடங்குகின்றது. வாசிக்கும்போது தொடர்கதையின் முதல்பகுதியிலேயே அதன் கனதி தெரிகின்றது. அவ்வாறான நிலையில் காமம் பகுதியும் வரப்போகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். காமம் பகுதி எவ்வளவு கனதியாய் இருக்கும் என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே அதை ஏன் நிர்வாகம் ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளவில்லை? ஆரம்பத்தில் தொடர்கதையை அனுமதித்துவிட்டு இடையில் ஓர் பகுதியை அகற்றுவதை ஓர் படைப்பாளியாக என்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

 

2. குறிப்பிட்ட தொடர்கதையை ஆயிரக்கணக்கில் வாசகர்கள், கருத்துக்கள உறவுகள் பார்வையிட்டுள்ளார்கள். ஏராளம் பதில் கருத்துக்கள் வந்துள்ளன. ஆனால் சிலர் (பலர்? எத்தனைபேர்? 4? 5? 6?) தனிமடல் ஊடகவும், முறைப்பாட்டுப்பெட்டி ஊடாகவும் கூறியதன் அடிப்படையில் கதையில் காமம் பகுதியை நீக்கியது தவறாகவே தெரிகின்றது. ஒரு ஆக்கம் வந்தால் போற்றியும், தூற்றியும் கருத்துக்கள் வருவது வழமை. அதிலும் சர்ச்சைக்குரிய பகுதிகள் வரும்போது கருத்தாளர்கள் உணர்ச்சிவசப்படுவது வழமை. அதற்காக அடி, நுனி தெரியாமல் நடுவால் கத்தரித்தால் அடிப்படையில் விவாதம் என்பது பொருள் அற்றதாகிவிடும். இதை இயலாமையின் வெளிப்பாடாகவே பார்க்கவேண்டி உள்ளது. யதார்த்தத்திற்கு புறம்பான ஓர் மாயை உலகை சிருஷ்டித்து அந்த மாயை உலகினுள் கனவு காண்பதற்கே இப்படியான 'மறைப்புக்கள்' உதவும்.

 

3. சாத்திரி தனது தொடர்கதையின் ஓர் பகுதி நீக்கப்பட்டதால் மனமுடைந்து தான் எழுதிய பதிவுகளை நீக்குவதற்கு யாழ் நிர்வாகமும் நிச்சயம் காரணமாக அமைந்துள்ளது. நீங்கள் ஓர் படைப்பாளியாக இருந்தால் அதை - வேதனையை, அவமானத்தை நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும். யாழ் இணையம் பற்றி மோகன் வெளிப்படையாகவே கூறியுள்ளார் நேரம் இல்லை, அதிககவனம் செலுத்தமுடியவில்லை என்று. இவ்வாறே கருத்துக்களத்தை நிர்வகிக்கும் நிழலி, இணையவனின் சிரமங்களையும் நாம் இலகுவில் புரிந்துகொள்ளமுடியும். அமரர் வசம்பு அவர்களின் நினைவுப்பகிர்வு பற்றிய ஓர் பகுதியில் கருத்துக்களம் பற்றிய சில சிக்கல்களை, சிரமங்களை நான் ஏற்கனவே கூறினேன். இந்தவகையில்...

 

இத்தகைய கசப்பான அனுபவங்கள், நடந்தவை நடந்தது போக... சாத்திரிவிடயத்தில் யாழ் கருத்துக்களத்தில் விடயங்கள் சுமுகமாகவும், நியாயத்துடனும் அமைவதற்கும், கையாளப்படுவதற்கும் கூறக்கூடிய ஆலோசனைகள்:

 

1. சாத்திரியின் வலைப்பூவில் ஏற்கனவே யாழில் பதியப்பட்ட பிரதான கருத்துக்கள் உள்ளன. எனவே நீக்கப்பட்ட கருத்துக்களை யாழில் மீண்டும் அந்தந்த இடங்களில் ஒட்டியதன் பின் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ள கதைகளை மீண்டும் கதைகதையாம் பகுதிக்கு இலகுவில் கொண்டுவரப்படமுடியும். இதற்கு சாத்திரியினதும், நிர்வாகத்தினதும் ஒத்துழைப்பு தேவை.

 

2. சாத்திரியின் கவர்ச்சி, காதல், காமம், கண்ணியமான நட்பு, கடந்துவந்தபாதை தொடர்கதையை ஆரம்பத்தில் உள்ளதுபோலவே தொடர அனைவரும் ஒத்துழையுங்கள். கதையில் கூறப்படும் பகுதிகளுடன் உடன்பாடு இல்லாவிட்டால் உங்கள் பார்வையை அங்கு கூறுங்கள், தவறுகள் காணப்பட்டால் அவற்றை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். இவை சாத்தியப்படாவிட்டால் கதையை வாசிக்காதீர்கள்.

 

சாத்திரியின் இத்தொடர்கதை ஏறக்குறைய ஒருவரின் (சாத்திரியின்) சுயசரிதைபோல் உள்ளது. சுயசரிதையின் ஓர் பகுதியை எங்களுக்கு சொல்லாதே என்றும் எமக்கு விருப்பமான பகுதியை மட்டுமே கூறு என்றும் படைப்பாளிக்கு கட்டளையிடுவதாகவே இங்கு நடந்த சம்பவங்களை பார்க்கவேண்டியுள்ளது.

 

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்புக்கு இரன்டாவது பச்சை குத்தியது நான் தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களது போராட்டம் பின்னடைந்துவிட்டது என்று சொல்லுபவர்களே, அதனுடைய காரணங்கள் என்னவென்று பார்க்க விளைவதில்லை. போராடத்தில் ஈடுபட்டவர்களும் மனிதர்கள்தான் அவர்களும் பல்வேறுபட்ட நெருகடிகளுக்கூடகவே பயணித்தார்கள் என்பதையும் , அவர்களுக்கும் ஏனையவைகளைப் போல மன உளைச்சல்கள் இருந்திருக்கும், இருந்தது என்று சொன்னால் அது அவர்களை பற்றி நாங்கள் கொண்டிருந்த (மாய) விம்பத்தை தகர்த்து விடும், எனவே அப்படியான செய்திகள், கதைகள் எழுதக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்கள். அப்படி எழுதுபவர்களையும் "மாற்று" கருத்து கொண்டவர்கள் என்ற (இழிவான) பட்டத்தை வழங்க தயாராக உள்ளார்கள். சின்ன வயதில் எனது பேரனார் சொன்ன "அவை மற்ற பார்ட்டி ஆக்கள்" என்பதன் அர்த்தம் இப்போதுதான் அதன் சரியான பொருளுடன்/வலியுடன் தெரிகிறது.

ஆயுத போராட்டத்தின் முடிவில், ஆயிரம் ஆயிரம் போராளிகளும், தளபதிகளும், சரணடையும் போது அல்லது சிலரின்/பலரின் வார்த்தையாலப்படி "ஆயுதங்களை மௌனித்த" போது "செய் அல்லது செத்துமடி" என்கிறவர்களாய் எதிரியிடம் போகவில்லை, நாங்களும் உங்களில் ஒருவர் எங்களுக்கும் உங்களை போன்ற வாழுகிற, அழுகிற, சிரிக்கிற உரிமைகள் இருக்கு, எங்களையும் உங்களுடன் சேர்த்து கொள்ளுங்கள் என்றுதான் வந்தார்கள். அவர்களில் பலர்/சிலரைத்தான் சிங்களம் மனித வேட்டையாடினது, அதைதான் இன்று நாங்கள் பேசுகிறோம். அப்படி அழிந்த மறைந்த மனிதர்களுக்குத்தான் நிஜாயம் கேட்கிறோம்? அந்த பாதையை தாண்டி வந்தர்வர்களுக்குதான் வாழ்வுதேடி அவர்களும் அலைகிறார்கள் எங்களில் இயன்றவர்களும் உதவுகிறார்கள்.

இதிலே அவர்களுக்கும் இடையிடையே "மனிதகுனங்ககளும்" இருந்தது என்று எழுதினால் அதை தடை செயவேண்டும் என்று கடிதம் எழுதும் அன்பர்களும், அது காலத்தின் தேவை என்பவர்களும், ஒன்றை மறந்து விடுகிறார்கள், பிரபாகரனையும் மனிதனாக சிந்திக்க மறக்கும் கூட்டந்தான் சனல் நாலில் இருந்த எல்லாவற்றையும் அதிலே இருந்த பிரபாகரனின் இறப்பு பற்றிய பகுதியால் தவற விட்டு விட்டு இருக்கிறார்கள். காலம் இன்னும் ஓடும், சனல் நாலில் அடுத்த வெளியீடு என்னவாக இருக்கும் என்று யாருக்கு தெரியும்? அப்படி வரும் போது எங்களில் இன்னும் சிலர் மொட்டாக்கு போடவேண்டி வரலாம். அதுவரைக்கும் "மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்....."

மற்றும்படி சாத்திரி என்ன சாத்திரி, எழுதுங்கோ ஆனால் நாங்கள் எதை விரும்புவோம் என்று நாடி பிடித்து எழுதுங்கள். நீங்கள் எப்படித்தான் எழுதினாலும் எங்கடை நாலு பச்சை விழாட்டி அது உங்கடை கடைகணக்கு கொப்பியில எழுதின புண்ணாக்கு கணக்குத்தான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.