Jump to content

இந்தியத் தொழிலாளரை வெளியேற்றும் திராணி இலங்கைக்கு உள்ளதா?


Recommended Posts

http://tamilworldtoday.com/archives/5034

 

 

சித்திரைப் புத்தாண்டை கொண்டாடிய இலங்கையர்களுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியிடமிருந்து வழங்கப்பட்ட வாழ்த்துச் செய்தி ஒரு சம்பிரதாயபூர்வமானதாக இருக்கக்கூடும். ஆனால் இரண்டு விடயங்களில் இந்த வாழ்த்துச் செய்தி அசாதாரண நகர்வுகளை வெளிப்படுத்துகின்றது.

ஒன்று, கொரிய வளைகுடாவின் அதியுச்சப் பதற்றம் காரணமாக தென்கொரியாவுக்கான அவசரப் பயணத்தை மேற்கொண்ட வேளையிலும்கூட இலங்கைக்கான செய்தியை ஜோன் கெரி முன்னகர்த்தியமை!

இரண்டு, இலங்கைத் தீவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதலுக்கு இலங்கையுடன் இணைந்து ஒத்துழைப்பதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதான செய்தியும் இலங்கையருக்கான புத்தாண்டு செய்தியுடன் இணைந்தமை!

ஆக மொத்தம், இந்து சமூத்திரத்தின் 'குட்டி' மாங்காய்த்தீவு சமகால அனைத்துலக ஒழுங்கில் முக்கிய இடத்தை அதீதமாக பெற்றுவருவதற்கு ஜோன் கெரியின் வாழ்த்துச் செய்தி முதல் கொழும்பு டொக்யார்ட் பகுதியில் இருந்து இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் வரை சான்று பகர்கின்றன. 

 

http://tamilworldtoday.com/archives/5034

 

Link to comment
Share on other sites

கட்டுரை பிழையான அனுமாங்களை திணித்துவிட்டு பின்னர் தனது அலசலை ஆரம்பிக்கிறது. 

 

வட கொறிய தென் கொறிய நிலைமைக்கும், இலங்கை இந்திய நிலைமைக்கும் இடையில் பாரிய வித்தியாசம்.

 

1949 ல் வாக்குரிமை பறிக்கபட்டு 60% மலையகத் தமிழரை 1964ல் இந்தியாவுக்கு திருப்ப அனுப்ப உடன்படிக்கை செய்யப்பட்டது. இ்லங்கை நினைத்தால் செய்யும்.

 

இந்திய எதிர்ப்பு, மகிந்த பதவிக்கு வந்த நாளில் இருந்தே வந்துவிட்டது. இந்தியா தனது விருப்பத்தில் போருக்கு உதவியது.  இலங்கை வருடி அழைக்கவில்லை. கட்டுரையில் பாவிக்கும் "பெரியண்ணை" சொல் சல்மான் குர்திஷ் ஆல் நிராகரிக்கப்பட்டது. இலங்கையில் அதை பாவித்தால் தண்டிக்கப்பட கூட முடியும். இலங்கை உடன் படிக்கை ஒன்றின் கீழ் கொடுத்த எண்ணை குதங்களையே திரும்ப பெற முயல்கிறது. இந்திய தூதுவராலயத்து அதிகாரி ஒருவரின் மனைவிக்கு ஆசியர் வேலைக்காக கொடுத்து வீசா புதிப்பிக்கப்படவில்லை என்று இரண்டு மூண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு செய்தி யாழில் பதியப் பட்டிருந்தது. அதனால் இந்திய உத்தியோகத்தருக்கு விசா மறுப்பு மாணவர் போராட்டத்தின் பின் வந்தது அல்ல.

Link to comment
Share on other sites

இலங்கையானது அமெரிக்க கொள்கைவகுப்பில் முக்கியம் இடம் பிடிக்கலாம் (இன்னும் பிடிக்கவில்லை). அதற்கு தொடரும் மகிந்த சிந்தனை நிச்சயம் உதவும்.

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் மாற்றம் பல ஈடாடல்களுக்கு பின்னர்தான் வரும்.

 

இந்தியாவும் நமது விடுதலைக்கு எதிராக செயல்ப்பட்டிருந்தாலும், அமெரிக்காவின் நடத்தை பிரத்தியேகமானது. இந்தியா இந்திராகாந்தி காலத்தில் சிறிமாவுடன் ஒருவகை உறவில் இருந்தது. பின்னர் J.R. வந்தவுடன் மாறியது. தான் ஆயுதங்கள் கொடுத்து ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தது. ராஜீவ் பாதை மாறினார். பார்த்தசாரதியை திருப்பி அழைத்தார். புதிய தூதுவர்கள் மூலம் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தினார். இன்றைய காங்கிரசின் கொள்கைகள் வெறும் பழிவாங்கல்களே.  அதில் ஆராய பெரிதாக எதுவும் இல்லை.

 

அமெரிக்கா ஏன் புலிகளை எதிர்த்தது? சில கருத்தில்லா மாற்றுக்கருத்துக்களின் ஊகங்களைத் தவிர நான் சரியான பதிலை காணவில்லை.

1 .புலிகள் பயங்கரவாதிகளா.?(-ஏன் பயங்கரவாதிகள்?)

2. இலங்கை பிளவு படக்கூடாது என்பதாலா?(-ஏன் பிளவுபகடக்கூடாது).

3. இந்தியாவின் உதவி தேவைப்பட்டதால் அதன் எதிரிகளான புலிகளை எதிர்த்ததா?

4. புலிகள் அமெரிக்காவின் எதிரிகளான ஈரான், வட கொறியா போன்றவற்றிடம் ஆயுதங்கள் வாங்கினார்களா? அல்லது சர்வதேச கடத்தல்களில் ஈடுபட்டார்கள் என்ற கதைகள் உண்மையா? (அதற்காக மட்டும் ஈழத்தமிழரின் சுதந்திரப்போரை அமெரிக்கா நசுக்கியதா?)

5. புலிகள் முட்டாள்கள், இலங்கை இராஜதந்திரம் கூடியது என்பதாலா?

.........

 

 

இலங்கை ராஜதந்திரம் கூடியது என்றால் இன்றைய இடர்ப்பாடுகளிலிருந்தும் அது தன்னைத்தான் இலகுவில் வெளிக்கொண்டுவந்து விடும். ஆனால் இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து இன்று அது இருந்துதிருக்க வேண்டிய அரசாட்சி, பொருளாதார முன்னேற்றங்களை காணாமல், ஒரு மத, ஒரு மொழி, சர்வாதிக்கார அரசாக மாறியிருப்பது அதன் ராஜதந்திர சிறப்பில் பெரிய பள்ளம் இருப்பதை மூடி மறைக்க தவறுகிறது.

 

புஸ்காலத்தில் அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கையில் இருந்த ஓட்டைகள் எதுவும் இரகசியமல்ல. ஆனால் அமெரிக்கா புலிகளுக்கு எதிராக செயல்ப்பட்ட வெற்றியின் பின்னனி, பிரதானமாக கதிர்காமர் ஒஸ்போர்ட் பல்கலைகளகத்தில் படித்த அரசியலில் மேற்குநாட்டு அரசியலை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தமையே. பிளேக் இலங்கை வந்த போது மிகத்திறமையான இராஜதந்திரி ஒருவரால் கையாளப்பட்டார். அவர் வரும் போது தான் ஜோன் கொப்பின்சில் படித்தவர் என்பதால் இலங்கை மூன்றாம் தர நாடு என்று மிகவும் அசண்டை கேட்டாக இருந்துவிட்டார். கதிர்காமர் தனது லொபியிங் தந்திரங்களை பாவித்து கவனமாக மேற்கு நாடுகளை கையாண்டுவிட்டார். பிளேக் இலங்கை வரமுன்னரே அமெரிக்கக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த புதிய மாற்றத்தை செயல்ப்படுத்தவே பிளேக் அனுப்பிவைக்கபட்டிருந்தார். இதனால் அவர் கதிர்காமர் கிண்டிய பொறிக்கிடங்கில் போய் விழுந்ததிலும் பெரிய ஆச்சரியம் இல்லை.

இலங்கையில் நடத்தையின் படி அது கதிர்காமரின் லொபியிங் தந்திரத்தைத்தான் பெரித்துபடுத்துகிறது. அமெரிக்காவை உள்நாட்டில் வெளிப்படையான வாய்ப்பேச்சுக்களால் எதிர்க்கிறது.  இதுவரையில் அமெரிக்க கேட்டபடி ஜனநாயபாதையில் செல்ல மறுக்கிறது. இது தமிழர் விடையத்தில் மட்டுமல்ல, முஸ்லீம், சிங்களவர் விடையத்திலும் இலங்கை அமெரிக்க ஆலோசனைகளை மதிப்பதில்லை. இவற்றின் பின்னர் அமெரிக்க அரசியலில் தாக்கம் ஏற்படுத்தவென்று, லொபி கம்பனிகளை வாடகைக்கு அமர்த்துகிறது.

 

இலங்கை இந்த கடைசி முயற்சியிலும் சில வெற்றிகளை கண்டிருப்பதால் அமெரிக்கா இலங்கையை பற்றி முழுவதாக உணர்ந்து தனது வெளிநாட்டுக்கொள்கைகளை ஏற்படுத்திக்கொள்ள முன்னர் பல ஈடாடல்களை சந்திக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உந்த‌ இஸ்கோர‌ பார்த்து  ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது   கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை.........................................
    • வணக்கம் வாத்தியார்.........! பெண் குழு : சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க { மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2) பெண் : { கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ } (2) பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம் பாா்த்தது கொஞ்சம் பெண் : ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது பெண் : ஒரு மின்சாரம் பாா்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன் பெண் : என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் ......! --- கண்ணாளனே எனது கண்ணை ---
    • உண்மைதான். ஆனால் ஏமாற்றப்படுகிறார் என்றே நான் நினைக்கிறேன். நிச்சயமாக தன்நலத்தின் பால் இதை அவர் செய்வதாக நான் நினைக்கவில்லை. அப்படி என்றால் என்றோ செய்திருக்கலாம்.
    • சா......என்னா அடி ........ நாய்  பேய் அடி அடிக்கிறார்கள்....... பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கு...... ஷாரூக்கானைப் பார்க்கத்தான் கஷ்டமாய் இருக்கு....... ஆனால் நானும் கே.கே.ஆர் தான் வெல்லும் என்று பதிந்து இருக்கின்றேன்.........!  😂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.