Jump to content

'இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படலாம் ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட முடியாது'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

HARDEEP%20S.%20PURI.jpg

இந்தியாவுக்கு வழங்கிய அரசியல் மீளிணக்கப்பாடுகள் மற்றும் அதிகாரப்பகிர்வு வாக்குறுதிகளை சிறிலங்காவை ஆட்சி செய்யும் 'சகோதரர்கள்' இன்னமும் நிறைவேற்றவில்லை. 

இவ்வாறு The Hindu [April 9, 2013] ஆங்கில நாளேட்டில் ஐநாவுக்கான இந்தியாவின் முன்னாள் பிரதிநிதியான HARDEEP S.PURI எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

இந்தியாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையானது உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டேதயன்றி காரணிகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. 

இந்தியா தற்போது யதார்த்ததை அடிப்படையாகக் கொண்டு தனது வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்காது அரசியல் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகின்றது. இதற்கு சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை மற்றும் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்தமை என்பன சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். 

இந்திய மத்திய அரசாங்கம் பிராந்திய உணர்வலைகளைப் புறக்கணிப்பதுடன், தனது சிறிய அயல்நாட்டில் இடம்பெறும் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதை கைவிட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

1956ல் சிறிலங்காவை ஆட்சி செய்த S.W.R.D.பண்டாரநாயக்க, சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல்படுத்தினார். இதனை இந்திய மத்திய அரசாங்கத்தின் அரசியல் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் வரவேற்றனர். இது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுக்கான ஒருங்கிணைப்பு என இந்திய அரசியல் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருசாரார் கருதினர். இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு சில ஆண்டுகளின் பின்னர், சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ் மக்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடாத்தப்பட்டனர். 

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட புறக்கணிப்புக்களும் பாரபட்சங்களும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. தமிழ்ப் புலிகளைத் தலைமை தாங்கிய பிரபாகரனால் யாழ்ப்பாண மேயராகக் கடமையாற்றிய அல்பிரட் துரையப்பா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. 

புலிகள் அமைப்பை பெரும்பாலான சிங்களவர்கள் பயங்கரவாதிகள் என விபரித்தனர். புலிகளை இந்தியாவின் உதவியுடனேயே வெற்றி கொள்ள முடியும் என சிங்களவர்கள் நம்பினர். அதாவது இந்நிலையில் இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, சிறிலங்காவில் தோற்றம் பெற்ற புலிகள் அமைப்பை அழித்து சிறிலங்காவின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பதற்கு இந்தியாவின் பங்களிப்பை வழங்கவேண்டும் எனத் தீர்மானித்தார். 

அதாவது இந்தியாவானது சிறிலங்கா பிளவுபடுவதை தடுப்பதற்கு மட்டுமல்லாது சிறிலங்காவில் தோற்றம் பெற்றிருந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆதரவை வழங்கும் என்கின்ற அடிப்படைத் தீர்மானத்தை ராஜீவ் காந்தி முன்வைத்தார். பல்கலாசார, பல்லின, பல்மொழிகளைப் பேசும் நாடான சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் சமமாகவும் கௌரவத்துடனும் நடாத்தப்பட வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட நிலையிலும் கூட முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சிறிலங்காவுக்கான தனது ஆதரவை வழங்கினார். 

அனைத்துலக சமூகமானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையையோ அல்லது மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவோ கேள்வி கேட்கவில்லை. குறிப்பாக இறுதியில் 100 நாட்கள் வரை மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மட்டுமே அனைத்துலக சமூகம் தனது கேள்விகளை முன்வைத்துள்ளது. சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர் மீறல்கள் தொடர்பான காணொலிகள் மற்றும் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்த ஆவணங்களைக் கொண்டு மார்ச் 2012ல் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரின் போது தீர்மானம் ஒன்றை முன்வைத்தது. ஆனால் இது ஒரு மிகச்சிறிய முயற்சி மட்டுமே. கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு சிறிலங்கா செயற்படவேண்டும் என அமெரிக்காவின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் சிறிலங்கா தன் மீதான போர்க் கால குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மழுப்பலான பதிலையே வழங்கி வருகிறது. 

சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் மீளிணக்கப்பாடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைளை எடுக்கத் தவறிய நிலையில், 2012ல் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த இந்தியா 2013ல் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தையும் ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 

இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றிலிருந்து சிறிலங்கா தப்பிப்பதில் இறையாண்மை ஒருபோதும் வெற்றிகொள்ளவில்லை. தனது நாட்டில் முன்வைக்கப்படும் தீர்மானங்களை இந்தியா ஆதரிக்காதமை நியாயமற்றது. இதற்கும் அப்பால், இது தொடர்பில் இந்தியா நெறிமுறை சார் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. கோட்பாடு மற்றும் தேசிய நலன் ஆகியன ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்காவிட்டால், தேசிய நலன் என்பது அரசாங்கத்தின் மேலாண்மைக்கு உட்பட்டுவிடும். 

1983ல் கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து பாரபட்சப்படுதலைத் தடுத்தல் மற்றும் சிறுபான்மை இனங்களைப் பாதுகாத்தல் தொடர்பான உபஆணையகத்தில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என பரவலாகக் கோரப்பட்டது. 

இஸ்ரேலியர்கள் தம்மால் கைப்பற்றப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் வாழ்ந்த பாலஸ்தீன மக்கள் மீது திட்டமிட்ட முறையில் மனித உரிமை மீறல்கள் பலவற்றைக் கட்டவிழ்த்துவிட்ட போது இத்தகைய தீர்மானம் ஒன்றுக்கு ஆதரவாக இந்தியர்கள் வாக்களித்திருந்தனர். தேசிய நலனுக்கு இடையூறில்லாமால் இந்தியா ஒரு நாட்டுக்கு எதிராகத் தீர்மானம் முன்வைக்கும் போது இந்தியர்கள் ஆதரவளித்தனர். தமிழ்நாட்டில் சிறிலங்காத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் உணர்வலைகள் தட்டிக்கழிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஏப்ரல் -மே 2009ல் சிறிலங்கா, இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மதித்து நடக்காதது ஏன்? 

இந்தியா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட முடியாது. சிறிலங்காத் தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்கள் ஆகியோருக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அபிப்பிராயத்தை மிக வெற்றிகரமாக கையாண்டனர் என்ற கருத்து நிலவுகிறது. இவ்வாறான உணர்வுநிலை நாம் தட்டிக்கழிக்க முடியாது. 

13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதே தற்போது தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கக் கூடியாது. 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என ஏற்கனவே சிறிலங்கா, இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தது. 

தமிழ்மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் இதயசுத்தியுடன் கூடிய தீர்வை வழங்கும் வரை இந்தப் பிரச்சினை நீண்டுகொண்டே செல்லும். அ.இ.அ.தி.மு.க, தி.மு.க மற்றும் ஏனைய தமிழ்நாட்டின் அரசியற் கட்சிகள் சிறிலங்கா வாழ் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டு அவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

"இங்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் அது தேசிய தலைமைத்துவம் துப்பாக்கி முனையில் இருப்பதற்கு ஒப்பானதாகும். இதனால் மாகாண சபைக்கு அதிகாரம் வழங்க நாம் விரும்பவில்லை" என மார்ச் 27, 2013 அன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருந்தார். 

இந்தியாவுக்கு வழங்கிய அரசியல் மீளிணக்கப்பாடுகள் மற்றும் அதிகாரப்பகிர்வு வாக்குறுதிகளை சிறிலங்காவை ஆட்சி செய்யும் 'சகோதரர்கள்' இன்னமும் நிறைவேற்றவில்லை. இது நாட்டில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவதையும் சமமாக மதிக்கப்படுவதையும் தடுக்கின்றது. 

சிறிலங்கா நாடாளுமன்றைப் பலப்படுத்தும் விதமாக இந்நாட்டின் அரசியல் மூலோபாயம் வகுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கொழும்பிலுள்ள முஸ்லீம் வர்த்தக நிலையம் மீது புத்த பிக்குகளின் தலைமையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான தாக்குதல்கள் சிறுபான்மையினரின் மொழி, மதம் மற்றும் கலாசார உரிமையைப் பறிப்பதாக காணப்படுகிறது. இந்நிலையில் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் இந்தியாவானது சரியான தீர்மானத்தை எடுத்துள்ளது. 

சிறிலங்காவில் தற்போது சீனா அதிக செல்வாக்குச் செலுத்தி வருவதானது கெட்டவாயப்பாகும். நடைமுறைக்கு அப்பால், சீனர்களை எளிதில் ஏமாற்றமுடியாது என்பது உண்மையாகும். இந்தியா சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்ததைப் பயன்படுத்தி சிறிலங்காவின் பொருளாதார மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை சீனா பயன்படுத்திக் கொள்கிறது. 

சிறிலங்கா, இந்தியாவின் மிக நெருங்கிய நாடு மட்டுமல்லாது, கலாசாரம் மற்றும் பௌதீக ரீதியாகவும் இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. இதனுடன் இந்தியா மிக நெருங்கிய உறவைக் கட்டியெழுப்ப வேண்டும். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டின் தமிழ் குடிமக்களை கௌரவத்துடனும், மதிப்புடனும், சமமாகவும் நடத்தாவிட்டால், இந்திய மத்திய அரசாங்கம் சிறிலங்கா தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட உறவையே பேணவேண்டியேற்படும். 

இந்தியாவானது சிறிலங்கா விடயத்தில் தவறான அறிதல்கள், மிகப் பிழையான தகவல்களைக் கொண்டு தனது தெரிவுகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டால், இந்தியா இறுதியில் அவமானத்தையே சந்திக்கும். 
*Hardeep S. Puri is India’s former Permanent Representative to the United Nations in New York.

 

http://www.puthinappalakai.com/view.php?20130412108096

 

Link to comment
Share on other sites

//தமிழ்ப் புலிகளைத் தலைமை தாங்கிய பிரபாகரனால் யாழ்ப்பாண மேயராகக் கடமையாற்றிய அல்பிரட் துரையப்பா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. //

 

ஐநாவுக்கான இந்தியப் பிரதிநிதியாக முன்னாளில் ஒரு சர்தார்ஜீ பதவி வகித்த விடயம் வேதனை தருகிறது. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது அவற்ற பிழை இல்லை. இங்க இருந்து போன  அமிர்தலிங்கம்.. வரதராஜப்பெருமாள் கோஸ்டிகளும்.. உதைத்தான் ரகசியமா சொல்லிக் கொடுத்தது. றோவுக்கு அவை சொல்ல றோ அதை இன்னும் வடிவா அழங்கரிச்சுச் சொல்லிக் கொடுத்திருக்குது. எல்லாத்திற்கும் நாங்களே தான் காரணம் இசை..!

 

மக்களின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கக் கூடிய நல்ல தலைவர்களை நாம் சரியாக இனங்காணவும் பாதுகாக்கவும் தவறிவிட்டோம். இன்றும்.. இன்னும் அதையே செய்கிறோம்..! :(:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.