Jump to content

தமிழீழப் பிரகடனமும் Exile government உம்..!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடு நிசி தாண்டி.. நித்திரையின் நடுவே.. கனவில் ஒரே உற்சாகம்.. சில ஐடியாக்கள் கனவில் உதித்திருந்தது... கனவில் கண்டது நனவானால்.. இன்னும் உற்சாகமாக இருக்கும் என்பதால்... இதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்..

 

காலனித்துவத்திற்கு முந்திய எமது ஆட்சிய அதிகாரங்களின் இருப்புக்கான ஆதாரங்கள்..

 

காலனித்துவத்தின் போதான எமது நில ஆக்கிரமிப்புக்கான ஆதாரங்கள்..

 

காலனித்துவம் கையளித்த அதிகார மையம் சிங்களத்திடம் போய் சேர்ந்ததற்கான ஆதாரங்கள்..

 

கடந்த காலங்களில்.. சிங்களம் இனப்படுகொலைகள் மூலம்.. கலவரங்கள் மூலம்.. எமது அரசியல் மற்றும் வாழ்வுரிமையை பறித்த துயரம்...

 

தனிச் சிங்களச் சட்டம்.. சிறீ திணிப்புகள்.

 

சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட அரசியல் சமூக.. பொருண்மியப் புறக்கணிப்புக்கள்.

 

சிறுபான்மையினர் ஆட்சி அதிகாரத்தில் முக்கியம் பெற முடியாத அவர்களின் சம அரசியல்
வாழ்வுரிமையை உறுதிப்படுத்த முடியாத அரசியல் அமைப்பு.

 

சிங்கள அரசின் நீதித்துறையின்  ஊடாக சிறுபான்மையினருக்கு சரியான நீதி கிடைக்க உத்தரவாதமின்மை.

 

சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவதோடு அவர்களின் வாழ்விடங்களும்... மத
உரிமைகளும்.. மொழி உரிமைகளும் கலாசாரங்களும் திட்டமிட்டு பறிக்கப்படுகின்றமை.

 

அமைதி வழிப் பேச்சுக்களும் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டமையும் அமுலாக்கல் இன்றி செத்துப் போனமையும்.

 

விடுதலைப் போராட்டக் கருக்கொள்ளல்.

 

தனித் தமிழீழத்திற்கு 1977 இல் மக்கள் வழங்கிய ஜனநாயக தேர்தல் மூலமான அங்கீகாரம்.

 

விடுதலைப் போராட்டம் தந்த இனங்காட்டிய de facto state இன் எல்லைகளும் மறைமுகமான சர்வதேச அங்கீகாரங்களும்.

 

வடக்குக் கிழக்கு மாகாண சபை செய்த.. தமிழீழத் தனியரசுக்கான 1990 பிரகடனம்.

 

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான மக்கள் ஆதரவும் இருப்பும்.

 

நாடு கடந்த தமிழீழ அரசு கொண்டுள்ள தமிழீழ சாசனம்.

 

தமிழகத்தில் தனித் தமிழீழத்தை ஆதரிக்கும் சட்டமன்ற தீர்மானங்களும் மக்களும்.

 

மலேசியாவில் தனித் தமிழீழத்தை அங்கீகரிக்கும் மக்கள்.

 

உலக அளவில் தனித் தமிழீழத்தை அங்கீகரிக்கும் மக்கள்.

 

தனியான கொடி. தனியான மொழி.

 

தனியான தேசிய அடையாளங்கள்.

 

தனியான தேசிய இன உரிமத்துக்கான அடையாளம்.

 

பூர்வீக நிலத்திற்கான வரலாறுகள்.

 

தொடரும் திட்டமிட்ட இன அழிப்புகளும்.. போர்க்குற்றங்களும்.. மனிதப் பேரிடர்களும்.

 

தொடரும் மக்களின் உள்நாட்டு வெளிநாட்டு இடம்பெயர்வுகள்.

 

தொடரும்.. நில ஆக்கிரமிப்புக்களும் இராணுவ பரிபாலனங்களும்.

 

தொடரும் சிங்கள பெளத்த பேரினவாத தீவிரவாதமும் அதன் பால் சிறுபான்மையினர் சந்திக்கும் நெருக்கடிகளும்.

 

தொடரும் அரச ஆதரவு பெரும்பான்மை இன கருத்தியல் திணிப்புக்கள்.

 

தொடரும் மனித உரிமை மீறல்களும்.. நீதிப் புறக்கணிப்புகளும்.

 

தொடரும் அரசியல்  உரிமைக்கான புறக்கணிப்புக்கள்.

 

தொடரும் அரச ஆதரவு துணை இராணுவக்குழுக்கள் சார்ந்த அரசியலும்.. நிர்வாகமும்.

 

மக்களின் ஜனநாயக உரிமைகள் ஊடக சுதந்திரம் உட்பட ஏனையவை பறிக்கப்பட்டு வருகின்றமை.

 

தனித் தமிழீழ அரசை அங்கீகரிக்கக் கூடிய நாடுகளின் இருப்பு.

 

தனித் தமிழீழ அரசை அங்கீகரிக்கக் கூடிய சர்வதேச புகழ்பெற்ற scholars இருப்பு.

 

தனித் தமிழீழத்தை வேண்டும்.. தமிழ் அரசியல் புத்திசீவிகளின் இருப்பு.

 

சர்வதேசத்தின் சட்டப் பிரமானங்களுக்கு உட்பட்டு ஒரு ஆட்சி அமைக்கக் கூடிய கடப்பாட்டை உணர்ந்துள்ள மக்கள் இனம்.

 

கடந்த கால சர்வதேச மத்தியஸ்தங்களுடனான பேச்சுக்களும் அவற்றில் வலியுறுத்தப்பட்ட விடயங்களும்.

 

எமது விடுதலைப் போராட்டத்தின் பால் மக்கள் செலுத்திய உயிர் விலைகளும்.. அவர்கள் அதன்பால் தன்னிச்சையாகக் கொண்டிருந்த பற்றுறுதியும்.

 

இப்படி பல காரணிகளின் அடிப்படையில்..

 

எமக்குரிய நிலத்துடன் நாம்... சுதந்திரமாக வாழக் கூடிய நிலைக்கு.. ஒரு தீர்வை
பெற்றுத்தர சர்வதேசத்திற்கு ஒரு கால அவகாசம் வழங்கி அதற்குள் அது சிறீலங்கா
அரசிற்கு வலுவான அழுத்தம் கொடுத்து தமிழ் மக்கள் அங்கீகரிக்கக் கூடிய தீர்வை பெற்றுத் தர வேண்டிக் கொள்வது.

 

அப்படி இல்லாத பட்சத்தில் தனித் தமிழீழ நாட்டைப் பிரகடனம் செய்வதோடு.. அதே
நேரத்தில் அதற்கான ஒரு Exile government ஐ அறிவிப்பதும்.. இது நாம் எதிர்காலத்தில் சர்வதேச பூகோள அரசியல் பொருண்மிய இராணுவ பரிமானங்களின் மாற்றங்களோடு எமது நிலத்தில் எமக்கான தேசத்தை மீட்க வகை செய்யலாம் இல்லையா..??! இது குறித்து உங்கள் கருத்து என்ன...???! இதில் எவ்வளவு சாத்தியப்பாடுகள் உள்ளன..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்க‌ர் நித்திரை வரா விட்டால் ஒரு ந‌ல்ல‌ புத்த‌க‌மா எடுத்து வாசிக்கிற‌தை விட்டுப் போட்டு இப்ப‌டியா மைல் க‌ண‌க்கில‌ ப‌ட்டிய‌ல் போடுற‌து? இதுக்கு ஒருவ‌ரும் ஏன் ப‌தில் எழுத‌ இல்லையென்று என‌க்கு கொஞ்ச‌ம் புரியுது!

 

 

சுருக்க‌மாக‌ச் சொன்னால் இதில‌ உள்ள‌ ப‌ல‌ விச‌ய‌ங்க‌ள் ஏற்க‌ன‌வே ப‌ல‌ராலும் யோசிக்க‌ப் ப‌ட்டு ந‌ட‌த்த‌ப் ப‌ட்டிருக்கு அல்ல‌து ந‌ட‌க்குது. ஆனால் வெற்றி எதுவும் பெரிதாக‌ இல்லை. எங்க‌ளுக்குள்ள‌ பெரிய‌ த‌டை எங்க‌ளுக்கிடையிலான‌ ஒற்றுமையின்மை. அதை தீர்த்தால் ம‌ட்டுமே நாம் ஏதாவ‌து செய்ய‌லாம். அதில்லாம‌ல் ஒரு முன்னேற்ற‌மும் இருக்காது. சித‌றிக் கிட‌க்கிற‌ த‌மிழ் த‌ர‌ப்பை எப்ப‌டி இன்னும் சித‌ற‌டிக்க‌லாம் என்று ம‌ட்டும் தான் சிறி ல‌ங்காவும் அமெரிக்காவும் இந்தியாவும் யோசிக்கும் (ஏனெண்டால் த‌மிழ் ஈழ‌ம் உருவாவ‌தில் இந்த‌ நாடுக‌ளுக்கு இப்ப‌ க‌ண்ணில‌ தெரிய‌க் கூடிய‌ ஒரு அனுகூல‌மும் இல்லை!). இத‌னால், முத‌ல் கால‌டியில‌ கிட‌க்கிற‌ கொள்ளிக் க‌ட்டையை எடுத்து எறிஞ்சு போட்டு, ஒளியாண்டு தூர‌த்தில‌ வ‌ர‌க்கூடிய‌ த‌டைக‌ளை யோசிக்க‌லாம். என்னுடைய‌ counter proposal, எப்ப‌டி சித‌றிக் கிட‌க்கிற‌ த‌மிழ் அமைப்புக‌ளை ஒண்டாக்க‌லாம் என்று ஒரு ப‌ட்டிய‌ல் த‌யாரிக்க‌ முடியுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் என்ற போர்வையில் கட்சிகள்.. குழுக்கள் என்று மக்களைப் பிளவுபடுத்துவதே உலகில் இன்று நடந்து வருகிறது. இதன் மூலமாக ஆதிக்க சக்திகள் தங்களைப் பலப்படுத்திக் கொள்கின்றன.

 

ஒரு காலத்தில் ஈராக்கோடு ஒட்டி இருந்த அமெரிக்கா தான் பின்னர் அதற்கு வினையாக மாறியது.

 

அதேபோல்.. லிபியாவில் கடாபியை விழுத்த நாட்டுக்கு வெளியில் அவருக்கு எதிரான குழுக்களில் பிரதானமான ஒன்றை அதாவது தங்கள் சொல்வழி கேட்கக் கூடிய ஒன்றை மேற்குலகம் ஆதரித்து இன்று ஆட்சியிலும் இருத்தியுள்ளது.

 

அதே போல் ஆப்கானிஸ்தானில்..! சிரியாவிலும் அதற்கான முயற்சி நடக்கிறது.

 

அதேபோல் பாகிஸ்தானைப் பலவீனப்படுத்த பங்களாதேசை உருவாக்கியது இந்தியா.

 

காலமாற்றமும்.. சிங்களத்தின் இராஜதந்திர உறவுகளும்.. பூகோள அரசியல் நிலைப்பாடுகளும்... பொருண்மியமும்.. மாறும் போது எங்களை பிரிக்க முயல்பவர்கள்.. ஒன்று சேர்க்கவும் முயல்வார்கள். மறுதலையும் உண்மை. அவர்களுக்கு முன் நாம் பலமுள்ளவர்களாக நின்றால்.. தான் இது சாத்தியம். அவர்கள் எம்மை ஆதரிக்க முயல்வார்கள்.

 

பலமாக நிற்க எமக்கு ஒரு உறுதியான கொள்கை அவசியம். அதற்கு நியாயம் அவசியம். நாம் நியாயத்தின் அடிப்படையில் மேற்படி கோரிக்கையை வைத்து நிற்கின்ற போது.. உலகம்.. தனக்கு தேவையான நேரத்தில் எம்மை அரவணைக்க என்றாவது அணைக்க முயலும். ஆனால் எதுவுமே இல்லாமல் இருந்தால்.. எதிரிக்குத்தான் கூடுதல் அனுகூலம்.

 

எல்லோரையும்.. ஒன்று சேர்க்கிறது என்றது எங்களில் மட்டுமல்ல.. எல்லா மனிதரிலும் கொஞ்சம் கடினமான செயலே. இயன்றவரை ஒன்றாக உள்ளவர்களை அப்படியே தக்க வைப்பதும்.. ஒன்று சேர்க்க தொடர்ந்து முயல்வதும் தான் நன்று. மாறுபட்ட.. மக்களுக்கு உபயோகமற்ற நிலைப்பாட்டில் நிற்பவர்களை ஒன்று சேர்த்து.. பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்வதிலும் அவர்களை தூர வைப்பது நன்று.

 

இப்படியான விடயங்கள்.. முன்னரும் சிலாகிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போது இன்றைய சூழலுக்குள் இதனை எப்படி பார்ப்பது.. பயன்படுத்த வாய்ப்புள்ளதா.. என்று ஆராய்வது தவறில்லைத் தானே. என்றோ ஒரு நாளைக்கு இது நடந்து தானே ஆகப்போகிறது..!

 

முன்னரும் ஜோடான் மற்றும் சில நாடுகளின் ஆதரவோடு புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யப் போகின்றனர் என்று சந்திரிக்கா அம்மையார் ஜெயசிக்குறு காலத்தில்.. ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருந்தார். அப்போது கரிகாலன் போன்றவர்கள் தென்னாபிரிக்காவில் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

 

அன்றிருந்த சூழல் வேறு. இன்றுள்ள சூழல் வேறு. அன்று தமிழகம் மெளனம் காத்தது. இன்று அது உணர்வு கொண்டு எழுந்து நிற்கிறது. அன்று அண்டைவிட்டு எங்கோ போக வேண்டி இருந்தது எமக்கு ஆதரவு தேடி. இன்று அண்டை அயலே எமக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இந்த நிலைகள் சாதாரணமானவையல்ல..! இவை அரிய சந்தர்ப்பங்கள். நாளை எதிரிகள் இதனை என்னென்ன திட்டங்கள் தீட்டி சீரழிக்கப் போகிறார்களோ தெரியாது. அதற்குள் நாம்.. வழமையாக உள்ள பெட்டிக்கு வெளியில் சென்றும் சிலவற்றை சிந்திப்பது சிலாகிப்பது அவசியம்..! அந்த வகையில் தான் இந்தப் பகிர்வு.

 

எனக்கென்னவோ.. நாம் எமக்குள் உள்ள சிறு பிளவுகளை பெரிசாகக் காட்டி.. அரிய சந்தர்ப்பங்களை தவறவிடுறமோ என்று தோன்றுகிறது. தேசிய தலைவர் எல்லோரும் ஒன்றானால் தான் போராடுவன் என்றிருந்திருந்தால் ஒரு de facto நிலையில் கூட தமிழீழத்தை நாம் உலகிற்கு அடையாளப்படுத்தி இருக்க முடியாது.

 

நாம் இல்லாததைக் கேட்கவில்லை. இருந்ததிற்கான நிரந்தர இருப்பையும் அங்கீகாரத்தையுமே உலகிடம் கோரி நிற்கிறோம். இதற்கு எல்லா தமிழரும் வரிசை கட்டி வரவேண்டும் என்றில்லை. பெரும்பான்மை ஆதரவு இருந்தால் போதும். அது இருக்கிறது.  :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.