Jump to content

நாங்கள் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களுக்கு கெடுதலையே செய்து கொண்டிருக்கிறோம்.


Recommended Posts

நாங்கள் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களுக்கு கெடுதலையே செய்து கொண்டிருக்கிறோம்.
 

cho-5.jpgதமிழ் அரசியல் வார இதழான துக்ளக்கின் ஆசிரியரான சோ ராமசாமி,அவர்கள் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் வாய்ந்த அரசியல் ஆய்வாளராவார். ஷோபா வாரியாருக்கு அவர் வழங்கியுள்ள இந்த பிரத்தியேக  நேர்காணலில்  அவர் ஸ்ரீலங்காத்  தமிழர்கள் விடயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் வெளியேறியது, மற்றும் அடுத்து வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான அவரது எண்ணங்கள் என்பனவற்றை வெளிப்படுத்துகிறார்.

திராவிட முன்னேற்ற கழகம்(திமுக) ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து(யு.பி.ஏ) வெளியேறப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தபோது, அவர்கள் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றுவதாகத்தான் பலரும் எண்ணினார்கள். ஆனால் இறுதியாக அவர்கள் தங்கள் ஆதரவை விலக்கி விட்டார்கள். இந்தமுறை அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறுவார்கள் என நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

இந்த முடிவையிட்டு கருணாநிதி மகிழ்ச்சி அடைகிறார் என்பதில் எனக்கு இன்னமும் நிச்சயம் இல்லை,ஏனெனில் தேர்தல்களைப் பொறுத்தமட்டில், ஒரு சத விகிதம் அல்லது ஒன்றரை சத விகிதம் வாக்குகளைப் பெறக்கூடிய சிறிய கட்சிகளைக்கூட அவர் தன்னுடன் சேர்த்துக் கொள்வார். தற்போதைய சூழ்நிலையில் – அதாவது திமுக வுக்கு எதிரான வழக்குகள் போன்றவற்றில் – இன்னமும் அவருக்கு உதவி செய்யக்கூடிய ஒரு கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் திமுகவுக்கு உதவி செய்கிறதோ இல்லையோ, ஏனைய கட்சிகள் அதை செய்யப்போவதில்லை.

மற்றும் அவரால் பாரதிய ஜனதா கட்சியிடம் போகமுடியாது, ஏனெனில் அவரது முந்தைய நிலைப்பாடு மற்றும் முஸ்லிம் வாக்குகளை கவர்ந்திழுக்கும் அவரது நம்பிக்கை என்பன அதற்கு தடையாக உள்ளன. அவர் அதை கொண்டிருக்கிறாரோ இல்லையோ என்பது வேறு விடயம்.

எனவே சிலகாலங்களுக்குப் பின்னர் அவரை சமாதானப்படுத்துவதற்காக ,அவரை முகஸ்துதி செய்யும்படியாக, ஸ்ரீலங்கா பற்றிய சில விடயங்களை கூறி அவரை வசப்படுத்த சில சூத்திரங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளலாம். எல்லாவற்றையும் விட தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களது வாக்குகளை கவரும் சக்தி தனக்குத்தான் உள்ளதாக அவர் தன்னைப்பற்றி வெளிப்படுத்தி வருகிறார்.

இப்போது அவர் பீற்றிக் கொள்ளும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோவுக்கு சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கௌரவமான சவ அடக்கம் செய்யப்பட்டது. அதன் சமாதியில் இருந்து அதை அவர் தோண்டி எடுத்ததுடன், டெசோவின் எலும்புக்கூடு இப்போது ஊடகங்களில் நாட்டியமாடி வருகிறது. மக்கள் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஸ்ரீலங்கா பற்றி அவர் வெளிக்காட்டும் தோரணைகளால் யாருமே ஈர்க்கப்படுவதில்லை. அவர் அதிகாரத்தில் இருந்தபோது அந்த மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும் அவர் எதுவுமே செய்யவில்லை. நான் அதை யுத்தம் என்று சொல்ல மாட்டேன், அது கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஒரு இராணுவ நடவடிக்கை. இப்போது அவர் அதைப்பற்றிய ஒரு பிரேதப் பரிசோதனை அறிக்கையை கோருகிறார்.

ஸ்ரீலங்காவில் யுத்தம் 2009 ல் முடிவடைந்துவிட்டது. தமிழ் நாட்டில் இந்த விடயம் ஏன் திடீரென உயிர் பெற்று எழுந்தது?

எங்கெல்லாம் தமிழர்கள் வாழுகிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களின் பாதுகாவலன் எப்பொழுதும் தான்தான் என கருணாநிதி நினைத்து வந்தார். இப்போது அந்த மேடை அவரிடமிருந்து ஜெ.ஜெயலலிதாவினால் திருடப்பட்டு விட்டது, அவர் இப்பொழுது தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்போது ஜெயலலிதாதான் தேவையான அனைத்துப் போராட்டங்களையும் நடத்துகிறார், தமிழர்களை பொறுத்தவரை, அவர் ஒரு இரும்புப் பெண்மணியாகவே காட்சியளிக்கிறார். கருணாநிதிக்கு இப்போது ஜெயலலிதாவுடன் போட்டி போட்டு தனது பெருமையை திரும்ப பெறவேண்டியுள்ளது.

தமிழ் நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கு மின் தட்டுப்பாடு தண்ணீர் தட்டுப்பாடு போன்ற ஏராளமான வேறு சொந்தப் பிரச்சினைகள் உள்ளபோது, ஸ்ரீலங்காவில் நடப்பதை பற்றி அவர்கள் உண்மையிலேயே கவலைப்படுவார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

இதைத்தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன் ஸ்ரீலங்காத் தமிழர்கள் பிரச்சினை தமிழ்நாட்டில் ஒரு தேர்தல் பிரச்சினையாக இருந்ததே இல்லை. இந்த விடயத்துக்காக அவர்கள் ஒருபோதும் வாக்களித்ததில்லை.

அங்கு நிலவும் பிரச்சினைகளுக்காக இங்குள்ள மக்கள் அதிகம் வருத்தப் படுபவர்களாக இருந்தால், பின்னர் வைகோ ஏன் வெறும் 2 சதவிகித வாக்குகளை மட்டும் பெற்றார்? இந்த விடயத்தை பற்றிப் பேசும் வேறு சில சிறிய கட்சிகளால் சொந்தமாக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாமல் போனது ஏன்? உண்மையில் தமிழர்கள் அவர்களைப்பற்றி அக்கறை கொண்டுள்ளார்கள். ஸ்ரீலங்காத் தமிழர்கள், கௌரவம், கண்ணியம், சமாதானம் மற்றும் சிங்களவர்களைப்போல சம உரிமையுடன் வாழவேண்டும் என்று இங்குள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள்.

வரையறுக்கப்பட்ட  சில சிறிய குழுக்கள்தான்  இந்த இரைச்சலை ஏற்படுத்துகின்றன, மற்றும்   ஊடகங்கள் அதை  பரபரப்பான செய்திகளாக பரிமாறுகின்றன. இங்கு ஒரு பெரிய எழுச்சி உள்ளதாகக் காட்டப்படுகிறது. மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

எத்தனை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்? ஒரு கல்லூரியில் 3,000 மாணவர்கள் இருந்தால் அவர்களில் 150 பேர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். மற்றவர்கள் வீட்டுக்குப் போய் விடுமுறையை அனுபவிக்கிறார்கள். முழு மாணவர் சமுதாயமே இதைப்பற்றி கவலைப்படுகிறது என்று இல்லை.

இளம் தொழில் நிபுணர்களும் மாணவர்களுடன் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றனவே…… எத்தனைபேர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? வெகு சிலர் மட்டுமே அதைச் செய்கிறார்கள்.

எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் பேச்சாளர் வேலாயுதம் தயாநிதி ஒரு நேர்காணலில் தமிழ் நாட்டில் உள்ள அரசியற் கட்சிகள் தங்கள் அரசியல் இலாபத்துக்காக ஸ்ரீலங்கா தமிழர்களின் பெயரைப்  பயன்படுத்துவதாக  ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் எண்ணுவதாகச் சொல்லியுள்ளாரே. நீங்களும் அப்படி எண்ணுகிறீர்களா?

ஆம். ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு அது மிக நன்றாகத் தெரியும். புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புகூட ஸ்ரீலங்கா ஜனாதிபதியை யுத்தக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென்றோ, மற்றும் இனப் படுகொலை என்கிற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்றோ பெரிதாக சத்தம் எதுவும் எழுப்பவில்லை. ஆனால் தமிழ் நாட்டிலுள்ள சில சிறு குழுக்கள் அதைச் செய்கின்றன. சிலவேளை வெளிநாட்டிலுள்ள சில இயக்கங்கள் அவர்களுக்கு நிதி அளித்திருக்கலாம், எனக்கு அது பற்றித் தெரியாது.

கொழும்புத் தமிழர்கள்,, இந்திய வம்சாவளித் தமிழர்கள் பற்றி என்ன சொல்வது? தோட்டப் பகுதி தமிழர்கள் பற்றி என்ன சொல்வது? அவர்களும் தமிழர்கள் தானே, இங்கேயுள்ள எங்களைப் போன்ற தமிழர்கள்தான் அவர்களும். அவர்கள் கொழும்பிலோ, தோட்டப் பகுதிகளிலோ அல்லது கிழக்கிலோ ஆர்ப்பாட்டம் எதனையும் நடத்தவில்லை.

இப்போது அவர்களுக்கு வேண்டியதெல்லாம் புனர்வாழ்வு. தோட்டப்பகுதி தமிழர்களையோ அல்லது கொழும்புத் தமிழர்களையோ அல்லது கிழக்குத் தமிழர்களையோ விட்டு விடுங்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்ந்த தமிழர்கள்தான் புனர்வாழ்வு மற்றும் இந்தியாவில் நாங்கள் கொண்டுள்ளதை போன்ற ஒரு வகை சுயாட்சியை விரும்புகிறார்கள்.

இங்கு மேற்கொள்ளப்படும்  கூச்சல்கள், ஸ்ரீலங்கா தமிழர்களுக்கும் மற்றும்; சிங்களவர்களுக்கும் அங்கு பிரச்சினையை ஏற்படுத்துமா?

நிச்சயமாக, அது சிங்களவர்களுக்கும் மற்றும் தமிழ் பொதுமக்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தும். இது எந்த வழியிலும் அவர்களுக்கு உதவப் போவதில்லை. உண்மையில் நான் சொல்வது என்னவென்றால் தமிழர்களின் வெற்றி வீரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் எல்.ரீ.ரீ.ஈயின் முழு அழிவுக்கும் காரணகர்த்தாக்கள், ஏனெனில் இந்தியா தலையிட்டு ஸ்ரீலங்கா நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் என்று இவர்கள்தான் எல்.ரீ.ரீ.ஈ யினை நம்ப வைத்தார்கள்.

ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஒரு பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக விரும்புகிறது. அப்சல் குரு தூக்கிலிடப்படுவதற்கு எதிராக பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியபோது,  அது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை மற்றும் பாகிஸ்தான் அதில் தலையிடுவதற்கு உரிமையில்லை என்று இந்தியா அதைக் கண்டித்தது, மற்றொரு நாட்டுக்கு எதிராக இந்தியா அதனை செய்ய முடியுமா?

ஆம், பாகிஸ்தான் செய்ததை இந்தியா ஆட்சேபித்து அது உங்கள் வேலை இல்லை என்று சொன்னது. அதே வழியில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக இந்தியப் பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதும் இந்தியாவின் வேலை இல்லை. அது ஒரு தீய நடைமுறைக்கு வழி வகுக்கும், அது காஷ்மீர் விடயத்தில் எங்களைப் பாதிக்கும்.  காஷ்மீர் விடயத்தில் தங்களுக்கு எதிரான புகார்களுக்கு இந்தியா பொறுப்புக்கூற வேண்டும் என்ற வகையான ஒரு கோரிக்கையை பாகிஸ்தான் எழுப்பலாம், அது உண்மையோ இல்லையோ அது வேறு விடயம், ஆனால் கூச்சல் போடுவதற்கு அதில் அடித்தளம் உள்ளது,மற்றும் பாகிஸ்தான் நிச்சயம் கூச்சல் போடும்.

காங்கிரஸ், திமுகவை திருப்திப் படுத்துவதற்காக  ஸ்ரீலங்காவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதைப்பற்றி எதிர்க் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியதே…..

காங்கிரஸ் அதை உண்மையிலேயே விரும்பியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவருவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் மற்றவர்களுடன் கலந்தாலோசிப்பதை பற்றி அவர்கள் பேசினார்கள்.

ஸ்ரீலங்கா எதிர்நோக்கிய பிரச்சினைகள் யாவும் ,இந்திரா காந்தியின் ஆட்சியின்போது, எல்.ரீ.ரீ.ஈக்கும் மற்றும் ஏனைய தமிழ் போராளிக் குழுக்களுக்கும் இந்தியா பயிற்சி அளித்ததினாலேயே மோசமடைந்தது. அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஆயுதங்களும் மற்றும் நிதியுதவியும் இந்தியாவால் வழங்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக ராஜிவ் காந்தி விடயங்களை வித்தியாசமாகவும் மற்றும் புத்திசாலித்தனமாகவும் பார்த்தார், அதன் காரணமாக ஸ்ரீலங்காவுடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொண்டார். எல்.ரீ.ரீ.ஈயும் மற்றும் யாழ்ப்பாணத் தமிழர்களும் ஒத்துழைப்பு நல்கியிருந்தால்,  இப்போது அவர்கள் நிலமை மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

அந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒருவகையான சுயாட்சி முறை இருந்தது ஒரு கூட்டாட்சி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியும் இருந்தது, சிங்களவர்களுக்கு சமமாக தமிழர்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதற்கான ஒரு முயற்சியும் அதில் இருந்தது. அவை அனைத்தும் வி.பிரபாகரனால் அழிக்கப்பட்டன, மற்றும் இங்குள்ள மக்களும் அவருக்கு ஆதரவு வழங்கினார்கள்.

அங்குள்ள தமிழர்கள் விடயத்தில் நாங்கள் கெடுதலையே செய்துள்ளோம். இப்போதும் கெடுதல் செய்வதை தொடர்ந்து வருகிறோம்.

ஐநா தீர்மானத்தின்போது இந்தியா ஸ்ரீலங்காவுக்கு எதிராக வாக்களித்தது, சீனாவை ஸ்ரீலங்காவுக்கு நெருக்கமாக கொண்டுவந்துள்ளாகக் கூறப்படுகிறதே. இந்தப் பிரதேசத்தில் எந்த வகையான தாக்கத்தை அது ஏற்படுத்தும்?

இப்போது சீனா தங்கள் ஒப்பந்தங்களை ஸ்ரீலங்காவில் விரைவாகச் செயற்படுத்த ஆரம்பிக்கும். அவர்கள் அதிக பணத்தை அங்கு செலவிட தயாராக உள்ளார்கள்,ஏனெனில் அவர்கள் தங்கள் செல்வாக்கின் வீச்சை பரவலாக்க விரும்புகிறார்கள்.

அப்படியான ஒரு நிலைக்கு இந்தியா பொறுப்பில்லையா?

மத்திய அரசாங்கத்தை பொறுத்தவரை,தமிழ்நாட்டில் இருந்து எழும் கடுமையான குரல்களோடு ஒத்துப் போகவேண்டும் என்கிற தார்மீக கடப்பாடு அதற்கு இல்லை,ஏனெனில் அது ஒரு சிறு பகுதியினரின் குரல்கள். அது இங்குள்ள முழு தமிழ் மக்களினதும் கருத்து அல்ல.

கூட்டணி அரசியல்தான் இந்த நிலமைக்கு பொறுப்பா?

நான் அப்படி நினைக்கவில்லை. மத்திய அரசு எப்போதுமே அப்படித்தான் நடந்து வருகிறது. ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தமிழ் நாட்டிலுள்ள சிறிய கட்சிகளிடம் எங்கே, மற்றும் எப்போது அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வதற்குரிய தார்மீகத் துணிவு அதற்கு குறைவாக உள்ளது. இந்தக் கட்சிகள் யாவும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டால் தோற்கடிக்கப் பட்டுவிடும்,அநேகமாக கட்டுப்பணத்தையே இழந்துவிடும். மத்திய அரசு அவர்கள் முன்னால் எழுந்து நிற்க முடியும்.

cho.jpgஇந்தியாவுக்கு இப்போது அதன் அயலவர்களுடன் ஒரு நல்ல உறவு இல்லை, மற்றும் அதன் அயல் வட்டத்தில் ஒரு ஒற்றை நட்பு நாடு கூட இல்லை. நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏதாவது தவறு உள்ளதா?

பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் என்பன இந்தியாவுடன் நட்பாக இல்லாமலிருப்பது இந்தியாவின் தவறு என்று நான் நினைக்கவில்லை. ஸ்ரீலங்காவை பொறுத்தமட்டில் இந்தியா தவறிழைத்துள்ளது. இந்தியா ஸ்ரீலங்காவுக்கு இன்னும் அதிக உதவிகளைச் செய்திருக்க வேண்டும்.

இப்போது யு.பி.ஏ அரசாங்கத்திலிருந்து திமுக வெளியேறிவிட்டது, உடனடியாக பொதுத்தேர்தல் வரும் என்று நீங்கள் கணிப்பிடுகிறீர்களா?

எண்ணிக்கைளை பொறுத்தமட்டில் அரசாங்கம் எப்படியாவது சமாளித்துவிடும் என்றுதான் நான் எண்ணுகிறேன். உடனடியாக ஒரு தேர்தல் வராது.

அடுத்த மக்களவை தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

நான் நினைக்கிறேன், காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரண்டுமே விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை கவர்ந்திழுக்க முயற்சிக்கும். அவர் காங்கிரசின் பக்கம் கூட போகலாம், அப்படி நடந்தால், இங்கு மும்முனை போட்டி ஏற்படும், அது ஜெயலலிதாவுக்கு உதவியாக இருக்கும். அங்கு ஒரு காங்கிரஸ் முன்னணி,ஒரு திமுக முன்னணி,மற்றும் ஒரு அஇஅதிமுக முன்னணி என்பன இருந்தால், அதில் அஇஅதிமுக வெற்றி பெறும்.அல்லது சில முகஸ்துதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு திமுக காங்கிரசின் பின்னால் செல்லவும் கூடும்.

ராகுல் காந்தி தனக்கு இந்த ஓட்டங்களில் ஆர்வமில்லை என்று சொல்லுகிற போதும் 2014ல் நடக்கவிருக்கும் போட்டி மோடிக்கும் மற்றும் ராகுலுக்கும் எதிரானதாகத்தான் இருக்கும் என்று முழு ஊடகங்களுமே பேசுகின்றனவே. அது நடக்கும் என உங்களுக்கு தோன்றுகிறதா?

தான் ஓட்டத்தில் இல்லை என்று ராகுல் காந்தி சொன்னாலும் அவர் அதில் தீவிரமாக இருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். அவருடைய வார்த்தைகளை வெறும் முகஸ்துதி என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். அவர் ஒரு பலமற்ற அரசாங்கத்துக்கு தலமையேற்க விரும்பாமலிருக்கலாம். அவர் ஒரு உறுதியான காங்கிரஸ் அரசைத்தான் விரும்புகிறார், அது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். அதனால்தான் நான் ஓட்டத்தில் இல்லை என்று அவர் கூறி வருகிறார். எனினும் காங்கிரசுக்கு அது மிகவும் கடினமான ஒன்றாகத்தான் இருக்கப்போகிறது.

அப்போ அது மோடிக்கு எதிராக காங்கிரசிலிருந்து யாராவது ஒருவர் என்றிருக்குமா?

பா.ஜ.க மோடியை முன்னிறுத்தினால் அதற்கு நல்லது. அப்போது பிரச்சினை அவரைப் பற்றியதாகவே இருக்கும், மற்றும் அவர் அதில் வெற்றியும் பெறுவார்.

பா.ஜ.க மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால்,இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் அதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று அநேகர் சொல்கிறார்களே?

cho-3.jpgகுஜராத்திலுள்ள முஸ்லிம்கள் மோடியுடன் இருக்கிறார்கள் என்றால், அது இந்தியா முழுவதிலும் நடக்கலாம். அதை ஒரு பக்கமாக ஒதுக்கி விடுங்கள், மோடியின் கீழ் பா.ஜ.க நன்றாக செயலபட முடியும்,ஏனெனில் குஜராத்தில் அவரது செயற்பாடு நன்றாக உள்ளது. நாட்டை வழி நடத்துவதற்கு ஒரு நேர்மையான அரசியல்வாதியை மக்கள் தேடுகிறார்கள், அதற்கு அவர் மிக நன்றாகப் பொருந்துகிறார்.

ஒரு மூன்றாவது அணி ஆட்சிக்கு வரும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

மூன்றாவது அணியில் யார் இருக்கிறார்கள்? முலாயம் சிங் யாதவை தவிர வேறு யார் இருக்கிறார்கள்? மாயவதி நிச்சயம் அவருடன் சேரமாட்டார். மம்மதா பானர்ஜி கம்யுனிஸ்ட்டுகளுடன் சேர மாட்டார். அது கடினமான ஒன்றாகத்தான் இருக்கப் போகிறது. மூன்றாவது அணி என்பது எப்போதுமே முரணான ஒன்றாகத்தான் இருக்கும்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இரண்டும் சேர்ந்து 276 இடங்களை விட அதிகம் கைப்பற்றும். எனவே அத்தகைய ஒரு ஏற்பாடு காங்கிரசின் ஆதரவுடனோ அல்லது பா.ஜ.கவின் ஆதரவுடன்தான் ஏற்பட முடியும். அப்படி இல்லாமல் வேறு ஒரு முன்னணியும் ஏற்படப் போவதில்லை. இல்லாவிட்டால் அரசாங்கமே கிடையாது. பா.ஜ.க அல்லது காங்கிரஸ் அரசாங்கத்தில் பங்குபற்றி அல்லது வெளியிலிருந்து ஆதரவு வழங்கினால், எப்படி அதை மூன்றாவது அணி என்று அழைக்க முடியும்.

http://nadunadapu.com/?p=16108

Link to comment
Share on other sites

சோ, ராம், சு.சாமி - இவர்கள் எதையாவது சொன்னால் தான் இவர்கள் உயிருடன் இருப்பதே தமிழர்களுக்கு தெரியவரும்  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவர் இறந்துவிட்டார் என்று நினைத்தேன்.


 

வருடம் ஒரு பேட்டியாவது கொடுக்கலாம்  இல்லையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோ ராமசாமிக்கு எப்போதும் தனது பார்ப்பனியப் புத்தியைச் சுற்றி அரசியல் ஆய்வைக் கொண்டு செல்லவே தெரியும். இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக அந்நபரது அணுகுமுறைகளில் இதுவே முன்னிற்கும். 

 

ஆடுநனைகிறதென்று ஓநாய் அழுவதைப்போல இலங்கைத் தமிழர்களுக்கு நாம் தீமையைச் செய்து கொண்டிருக்கிறோமென்ற அவரது கூற்றில் சுத்தக் கபடத்தனமருக்கிறது அதனை யாரும் நம்பிவிடக்கூடாது.  சிறீலங்காவிற்கு நாம் செய்தது - அதாவது ஆயுத உதவிகளை அளித்து தமிழினப்படுகொலையை ஊக்குவித்தது போதாது என்ற வஞசகத்தனமான வார்த்தைகளை அவர் மறைமுகமாக உதிர்க்கிறார். 

 

அவரைப்போனறவர்களைத் தமிழீழத்தமிழர்கள் எதற்கும் அழைப்பதுமில்லை வரவேற்பதுமில்லை.  இலங்கையிலுள்ள சிங்களவர்களிலும் அவருக்கு வேண்டியவர்கள் யாருமில்லை. 

 

இனிவரும் காலங்களில் அவரைத் திவசம் போன்ற நிகழ்வுகளுக்கு அழைத்தால் சிலவேளைகளில் அவருக்கும் வெளிநாட்டுகளுக்கு வந்து போக வாய்ப்புகள் ஏற்படலாம்.  யாராவது முடிந்தால் செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.