Jump to content

"விறலி விடு தூது" பெண்களுக்கான திரைத் தயாரிப்பு நிறுவனம்! - விரும்பியர்கள் தொடர்பு கொள்ள முடியும்


Recommended Posts

நண்பர்களே,

பெண் இயக்குநர்கள் சிலர் இணைந்து, 'விறலி விடு தூது' என்னும் திரைத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மூலக்கதை ஆசிரியர், திரைக்கதையாசிரியர், திரை இயக்குநர், திரைத்தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப்படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடருக்கான தரமான கதைகளைக் ...கொடுப்பதிலும், திரைக்கதை எழுதுவதில் ஆர்வமுள்ள இளைய கலைஞர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதிலும், நவீன சினிமாவைக் கதைகள் வழியாக மாற்றுவதிலும் இந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபடும்.

இன்றைய சினிமாவில் இருக்கும் கதைப்பற்றாக்குறையைப் போக்குவதிலும், அதற்கான திரைக்கதை எழுதும் கலைஞர்களைக் கண்டறியவும் இந்நிறுவனம் பாடுபடும்.

ஒரு வரிக்கதை உள்ளவர்கள், திரைக்கதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள், திரைக்கதை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.

viralividuthoodhu@gmail.com

(பி.கு: 'விறலி' என்றால் கலைகளை வளர்ப்பவள் என்பது பொருள்)
 
 
நன்றி : குட்டி ரேவதி
Link to comment
Share on other sites

அன்புக்குரிய குட்டி ரேவதி, ஆண் மைய இந்தியச் சினிமா சூழலில் உங்கள் முயற்சி வெற்றி பெறவேண்டுமென வாழ்த்துகிறேன். எந்த விதத்தில் நான் உங்கள் முயற்சிக்கு உதவலாம்? தோழமையுடன் visjayapalan@gmail.com

Link to comment
Share on other sites

ஆண்களை பால் அடிப்படையில் தவிர்த்தல் பாகுபாடு காட்டுதல் (Discrimination) இல்லையா? :D

Link to comment
Share on other sites

கமலஹாசன் ஒரு பேட்டியில் கூறியதுபோல, தமிழ் சினிமாவுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பானது மிக மிக அரிது. இவை இரண்டும் நெருங்கி வரும்போதே பல தரமான படைப்புகள் தமிழ் சினிமாவில் உருவாக வாய்ப்புண்டு.

 

ஆகவே, தரமான படைப்புகள் தோன்ற ஆண், பெண் வேறுபாடுகள் அநாவசியமானவை.

சில்லறையே முக்கிய மூலப்பொருள் அது இலக்கியங்கள் பக்கம் பார்வையைப் பதிக்கும்வரை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாணன் என்பதற்கு எதிர்ப்பால் சொல் விறலி என்று சின்ன வயதில் கஷ்டப்பட்டுப் படித்தது ஞாபகம்.

Link to comment
Share on other sites

சண்டைகோழி படத்தில் ஒரு வசனம் வரும் மீரா ஜாஸ்மினை பார்த்து அவர் அண்ணன் சொல்லுவதாக "குட்டி ரேவதியுடன் சேர்ந்து நீ கெட்டு போக போகின்றாய் "என்று .

அந்த படத்தில் வசனம் ராமகிருஸ்ணன் .குட்டி ரேவதியின் கவிதைகள் பல பச்சையாக இருக்கும் .அப்ப  படமும் அந்தமாதிரி இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குட்டி ரேவதி. இன்றைய காலத்தில் ஆண் சார்பு எழுத்துக்கள் ஆண்களின் ஆதிக்கம் என்பனவே எல்லா இடத்திலும் அகன்று வியாபித்திருக்கிறது. உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய முழுமையான ஆதரவும் உண்டு. பெண்களுக்கான முத்திரை பதிக்கும் இலக்கியம் சார்ந்தும் திரை சார்ந்தும் சாதனைகள் தோற்றுவிக்கும் தளமாக அமையட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.