Jump to content

அமலாபால் – இயக்குனர் விஜய் திருமணம் ஜூன் 12; இருவருமே இணைந்து அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் விஜய் – நடிகை அமலாபால் இருவருமே தங்களது திருமணம் ஜுன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் விஜய் – அமலா பால் திருமணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும், அச்செய்தியை இருதரப்பினரும் உறுதி செய்யவே இல்லை.

இந்நிலையில் இன்று இயக்குனர் விஜய் – அமலா பால் இருவருமே பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இருவருமே அவர்களது திருமண அழைப்பிதழை பத்திரிகையாளர்களுக்கு கொடுத்துள்ளனர்.

அப்போது இயக்குநர் விஜய் கூறியது, “என்னோட வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர்கள் பத்திரிகையாளர்கள் தான். இப்போது என்னோட வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு வேண்டும். என்னுடைய திருமணம் ஜுன் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் மாலையில் எங்களது வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

எங்களைப் பற்றி பல்வேறு செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. எப்படி இந்த செய்திகள் எல்லாம் வெளிவருகின்றன என்று தெரியவில்லை. என்னுடைய நெருங்கிய தோழியை தான் நான் திருமணம் செய்ய இருக்கிறேன். நாங்கள் நண்பர்களாக இருக்கும் போது, காதலிக்கிறார்கள் என்று செய்தி எல்லாம் வந்தது. எங்களுடைய நட்பு அடுத்த கட்டத்திற்கு சென்றது கடந்த 8 மாதமாக தான். இப்போதைக்கு எனது திருமணம் மற்றும் ‘சைவம்’ படம் இரண்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்” என்றார்.

நடிகை அமலா பால் கூறியது, “திருமணத்திற்கு பிறகு மசாலா படங்களில் நடிக்க மாட்டேன். நல்ல கதைகள் வந்தால் நடிப்பது குறிப்பது அந்த சமயத்தில் முடிவெடுப்பேன். திருமணத்திற்கு பிறகு முழுக்க குடும்பவாழ்க்கையை மட்டுமே கவனிப்பேன்” என்றார்

www.ekuruvi.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 நொந்து நூடில்ஸ் ஆகிப்போன கனடா ரசிகர்களுக்கும் திருமண அழைப்பிதழ் அனுப்பிவிடுங்கோ... :(

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.