Jump to content

அம்மாவையும் மனைவியையும் ஒப்பிடும் பல ஆண்கள்


Recommended Posts

"அம்மாவையும் மனைவியையும் ஒப்பிடும் பல ஆண்கள்" என்று தலைப்பை மாற்றியுள்ளேன். இதுவும் பிழை என்றால் வேறு தலைப்பை கூறுங்கள். மாற்றுகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதில ஜீவாவின் கருத்து தான் என்ட கருத்தும்... தற்போது ஊரிலும் சரி,இங்கேயும் சரி சாப்பாட்டுக்காக கணவன் மனைவியை எதிர் பார்த்துக் காத்திருப்பதில்லை...பிள்ளைகளை பாடசாலையால் கூட்டி வந்து ரீயூசனுக்கு கூட்டிப் போகின்ற வேலைகளை பெரும்பாலும் மனைவி செய்ய சமையலை கணவர் செய்கிறார்...இங்கு அநேகமாக பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் அப்படி மனைவி வேலைக்குப் போகாத வீட்டிலும் கூட சில நேரத்தில் கணவர் தான் சமைக்கிறார்[அன்று தான் நல்ல சாப்பாடு சாப்பிடுவாங்களோ :D ]...உடுப்பு விடயத்தில் கூட அநேக ஆண்கள் தங்கள் மனைவிமார் வடிவாக வெளிக்கிட்டு போறதையே விரும்புவார்கள்.அதைப் போடாதே,இதைப் போடாதே என்று தடுக்கின்ற ஆண்கள் குறைவு...ஆண் பிள்ளைகள் மீதே சின்னனில் இருந்து அம்மாமார் பாசம் வைத்திருப்பினம் அதே ஆண்கள் வளர்ந்த பின்னர் அம்மா மாதிரி தன் மீது அன்பு செலுத்தக் கூடிய பெண்ணையே எதிர் பார்ப்பினம் ஏன் என்டால் ஆண்களுக்கு எப்பவும் சுயமாய் நிற்கத் தெரியாது :lol::rolleyes:

Link to comment
Share on other sites

இதில ஜீவாவின் கருத்து தான் என்ட கருத்தும்... தற்போது ஊரிலும் சரி,இங்கேயும் சரி சாப்பாட்டுக்காக கணவன் மனைவியை எதிர் பார்த்துக் காத்திருப்பதில்லை...பிள்ளைகளை பாடசாலையால் கூட்டி வந்து ரீயூசனுக்கு கூட்டிப் போகின்ற வேலைகளை பெரும்பாலும் மனைவி செய்ய சமையலை கணவர் செய்கிறார்...இங்கு அநேகமாக பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் அப்படி மனைவி வேலைக்குப் போகாத வீட்டிலும் கூட சில நேரத்தில் கணவர் தான் சமைக்கிறார்[அன்று தான் நல்ல சாப்பாடு சாப்பிடுவாங்களோ :D ]...உடுப்பு விடயத்தில் கூட அநேக ஆண்கள் தங்கள் மனைவிமார் வடிவாக வெளிக்கிட்டு போறதையே விரும்புவார்கள்.அதைப் போடாதே,இதைப் போடாதே என்று தடுக்கின்ற ஆண்கள் குறைவு...ஆண் பிள்ளைகள் மீதே சின்னனில் இருந்து அம்மாமார் பாசம் வைத்திருப்பினம் அதே ஆண்கள் வளர்ந்த பின்னர் அம்மா மாதிரி தன் மீது அன்பு செலுத்தக் கூடிய பெண்ணையே எதிர் பார்ப்பினம் ஏன் என்டால் ஆண்களுக்கு எப்பவும் சுயமாய் நிற்கத் தெரியாது :lol::rolleyes:

:lol: :lol: ஆண்களுக்கு ஆதரவா கதைச்சுப்போட்டு கடைசியில் கவிழ்த்துப்போட்டியளே. :icon_idea:

சாப்பாடு, உடை என்பது வெறும் உதாரணம் தான். வேறு பல அலுவல்களிலும் அம்மாவை ஒப்பிட்டு கதைப்பார்கள். (எல்லாரும் அல்ல.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணை சொன்னதுபோல எனது அம்மாவைப் போலத்தான்

எனக்கும் மனைவியும் கிடைத்திருக்கின்றா.

அம்மா என்பவர் தான் எமக்கு எல்லாம்.

அவரைப்போல ஒரு மனைவியைப் பெற்றுக் கொள்வதற்கு

எல்லோரும் தவம் செய்திருக்க வேண்டும்.

அதேபோல என் அம்மாவைப் போல எனக்குப் பிள்ளைகளும்

கிடைத்திருக்கின்றார்கள்.

அதிலே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ இப்படி அல்லவா காலம் மாறிட்டு வருகிறது..தமணா,அசின்,பாவனா போன்ற பெண்களைத் தான் ஆண்களுக்கு பிடிக்கும்..விரல் விட்டு எண்ணக் கூடிய ஆண்களே அம்மா போல் துணை வேண்டும் என்று எதிர் பார்ப்பது..அதுவும் சரி வராட்டிக்கு ரட்டா காட்டிட்டு போவது தான்.

Link to comment
Share on other sites

விசுகு அண்ணை சொன்னதுபோல எனது அம்மாவைப் போலத்தான்

எனக்கும் மனைவியும் கிடைத்திருக்கின்றா.

அம்மா என்பவர் தான் எமக்கு எல்லாம்.

அவரைப்போல ஒரு மனைவியைப் பெற்றுக் கொள்வதற்கு

எல்லோரும் தவம் செய்திருக்க வேண்டும்.

அதேபோல என் அம்மாவைப் போல எனக்குப் பிள்ளைகளும்

கிடைத்திருக்கின்றார்கள்.

அதிலே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

உங்களுக்கு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. நன்றி வருகைக்கும் கருத்திற்கும். :)

Link to comment
Share on other sites

இப்போ இப்படி அல்லவா காலம் மாறிட்டு வருகிறது..தமணா,அசின்,பாவனா போன்ற பெண்களைத் தான் ஆண்களுக்கு பிடிக்கும்..விரல் விட்டு எண்ணக் கூடிய ஆண்களே அம்மா போல் துணை வேண்டும் என்று எதிர் பார்ப்பது..அதுவும் சரி வராட்டிக்கு ரட்டா காட்டிட்டு போவது தான்.

:lol: :lol: :lol:

நடிகைகள் போன்ற பெண்களை ரசிப்பார்கள், காதலிப்பார்கள், கடைசியில் நடிகை மாதிரி நீ நடக்கிறாய் எனக்கு பிடிக்கேல்லை என்று சொல்லியே பிரிவார்கள். இது அவர்களின் தந்திரம். ஆனால் திருமணம் என்று வரும் போது அம்மா போல் பெண் வேண்டுமென்று கேட்பார்கள். அப்ப தான் தன்னை எதிர்த்து கதைக்க மாட்டா என்று :lol: . (தற்போதைய இளவட்டங்களில் பலரை சொல்லுறன். ஏனையவர்களை அல்ல)

உங்கள் கருத்துகள் பல இப்பொழுது நகைச்சுவையுடன் கூடிய கருத்துகளாக உள்ளது. :D தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவம் உடலுக்கு ஆகாது என்று வைத்தியர் சொல்லிட்டார்..அது தான் காமடில இறங்கீட்டன் துளசி. :lol: 

Link to comment
Share on other sites

[size=3]பல இளைஞர்களுக்கு திருமணத்தின் போது இருக்கும் எண்ணம், என் அம்மாவை போல எனக்கு மனைவி வேண்டும். கிட்ட தட்ட பல ஆண்களின் சிந்தனை இது தான் ஆனால் இதில் எவ்வளவு பெரிய விஷயங்கள் இருக்கு தெரியுமா? கிட்டதட்ட ஆணாதிக்கத்தின் ஆரம்பம் இது எனலாம்.[/size]

[size=3]முதலில் தன் அம்மாவை நம் சமூகத்தில் உள்ள ஆண்களுக்கு ஏன் பிடிக்கிறது? பெரும்பாலான குடும்பத்தில் அப்பா எப்போதும் கொஞ்சம் விறைப்பான ஆளாகவே இருப்பார், அவரிடம் நேரடியாய் பேச முடியாது, ஆனால் அம்மா அப்படி இல்லை. கொஞ்சம் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு ஏதாவது கேட்டா போதும் உடனே கிடைத்து விடும். சில சமயம் கேட்டாலே போதும். ஸோ, தன் பேச்சை கேக்கணும். இது தான் அம்மா போல மனைவியை கேட்கும் முதல் காரணம். ஆனா இன்றைய காலகட்டத்தில் இது முறையா? முறையா என்பதை விட மிகப் பெரிய முட்டாள்தனம் இது.[/size]

[size=3]நம் அப்பாக்களை கொஞ்சம் உன்னித்து பாருங்கள், மனைவியிடம் ம்,சரி,என்ன,ஆமா என்று தான் பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளை மட்டும் பேசுவார்கள், ஆனால் மற்ற பெண்களிடம் அதிகமாக பேசுவார்கள். அதாவது மற்றவர்கள் முன்னிலையில் நான் என் மனைவி சொல்லை கேட்பவன் அல்ல. என் சொந்த சிந்தனையை பயன்படுத்துவன் என்று காட்டிக் கொள்ள. அப்படியான பெண்களை தான் இந்த சமூகத்தின் ஆண்கள் இன்றும் விரும்புகிறார்கள். [/size]

[size=3]இதே, தான் கேட்ட எதையும் வாங்கித் தராத ஒரு அம்மா, எப்போதும் முறைக்கும் ஒரு அம்மா போன்ற மனைவியை ஆண்கள் எதிர்பார்ப்பார்களா? இல்லையே. [/size]

[size=3]முதலில் அம்மாவையும், மனைவியையும் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அம்மா என்பவர் ஒரு மகனை/மகளை பொறுத்த வரை வெறும் மனுஷி அல்ல. அடுத்தவர் வாழ்க்கைக்கு வெளிச்சம் தர தன்னை உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தி போல, ஒருவனால் எப்போதும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே வாழ்ந்து விட முடியாது, தன்னை உயர்த்திக் கொள்ள, உணர்ந்து கொள்ள அதை விட மேலான ஒரு வெளிச்சம் தேவைப்படுகிறது. அது ஒரு டார்ச் லைட் ஆகவோ அல்லது சூரியன் ஆகவோ கூடவோ இருக்கலாம். அந்த இரண்டாவது தான் மனைவி. இரண்டு பேரும் வேறு வேறு தலைமுறையில் இருக்கிறவர்கள். உங்கள் அப்பாவுக்கும் உங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குமோ, அதே அளவு அம்மாவுக்கும் மனைவிக்கும் இருக்கும் அல்லவா?[/size]

[size=3]young-couple-in-pink-love-heart-cartoon.jpg[/size]

[size=3]தன் மனைவி தன் அம்மாவை போல இல்லை என்பவர்கள் சொல்லும் பல காரணங்களில் ஒன்று சமையல். அதெப்படிங்க மகனாக உங்களுக்கு பிடிக்கும் சமையல், உங்கள் அப்பாவுக்கு ஒரு கணவராக எப்படி பிடிக்கிறது? உங்கள் அம்மா, உங்கள் அப்பாவின் அம்மாவைப் போலத்தான் சமைக்கிறாரா? உங்க அப்பாவுக்கு கிடைச்சது போல ஒரு அனுசரனையான பொண்டாட்டி வேணும் ஆனா உங்களால் அனுசரித்து போக முடியாது. இதெப்படி நியாயம் ஆகும். உங்கள் மனைவி செய்யும் சமையல் உங்கள் குழந்தைக்கு பெரும்பாலும் பிடிக்கும் தானே? அப்போ தப்பு யார் மேல.

உங்க அப்பா இன்னும் அவங்க அம்மா சாப்பாட்டைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தால் உங்களுக்கே சாப்பாடு ஒழுங்கா வராது பாத்துக்கோங்க.

அடுத்து என் மனைவி என் அம்மா போல பாந்தமாக சேலை கட்டி தான் எப்போதும் இருக்க வேண்டும். அதாவது இவர்கள் மாடர்ன் உலகத்தை வரவேற்பார்கள்,பெண்கள் சுதந்திரத்தை அங்கீகாரம் செய்வார்கள். எப்படி என்றால், தன் அலுவலகத்தில், தான் பார்க்கும் பெண்கள் மாடர்ன் உடை உடுத்தினால். ஆனால் தன் மனைவி அப்படி இருக்கக் கூடாது. அப்படி எல்லோரும் நினைத்து இருந்தால் பாண்ட்,ஷர்ட் போட்ட ஒரு பெண்ணை கூட நீங்கள் தெருவில் பார்க்க முடியாது, அப்படிபட்ட மாடர்ன் பெண்களுக்கும் குடும்பம் இருக்கிறது. நீங்கள் எல்லாம் வெளியே சொல்லாதீர்கள் நான் மாடர்ன் பார்ட்டி என்று, இன்னும் 60களை தாண்டாத அசடுகள் நீங்கள்.

இன்றைய பெண்கள் யாராவது தங்கள் அப்பாவை போல கணவரை கேட்கிறார்களா? பெரும்பாலும் இல்லை. ஏன் அப்பா என்பவர் தன்னிடம் பாசமாக இருக்கிறார் என்பதை தாண்டி, தன் அம்மாவை அவர் சக மனுஷியாக நடத்தவில்லை என்பது ஒரு முக்கிய காரணம். ஆனால் அப்படி கேட்கும் பெண்கள் தான் பெரும்பாலான ஆண்களுக்கு வேண்டும்.

சமீபத்தில் முகப்புத்தகத்தில் ஒரு செய்தி படித்தேன், (இதுக்கு நிறைய லைக் வேற, நான் கொடுத்தேனா என்று தெரியல)

“கோவம் வந்தால் சமைத்து விட்டு சாப்பிடாமல் படுப்பவர் அம்மா, சமைக்காமல் படுப்பவள் மனைவி”

இது என்னய்யா கொடுமை, உங்க அம்மா உங்களுக்கு மட்டுமா சமைக்கிறார், தன் கணவனுக்கும் தானே? ஒரு குழந்தை பிறந்த பின் உங்கள் மனைவியும் இதையே தான் செய்வார். சரி அப்படியே கோவம் வந்தால் யாரால்? பெரும்பாலும் கணவனால், அப்படி வந்தால் கோவத்தைக் காட்டுவதில் என்ன தவறு? ஒரு ஆண் கோவத்தைக் காட்டலாம் ஆனால் பெண் காட்டக் கூடாதா?

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஆண்களே , உங்கள் அம்மா என்பவர் ஒரு ஆணுக்கு மனைவி, உங்கள் மனைவி என்பவர் ஒரு மகனு(ளு)க்கு தாய்(வருங்காலத்தில் கூட இருக்கலாம்).[/size]

- Prabu Krishna -

பி.கு:- இதனை வாசிக்கும் போது நெடுக்ஸ் அண்ணாவின் நினைவு வந்தது. :D

அவர் ஒரு திரியில் கூறியிருந்தார், "தாயின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளுற ஆண்.. ஏன் மனைவியின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளுறான் இல்லை. அதற்கு காரணம்.. அவன் தாயை நம்பும் அளவிற்கு மனைவி மீது நம்பிக்கை வைக்கிற அளவுக்கு அவள் அவனோட நடந்துகொள்ளேல்ல.. அவனைப் புரிஞ்சு கொள்ள முயலல்ல என்று தானே" என்று. இங்கு மனைவியில் தவறா கணவனில் தவறா என்ற கேள்விக்கு விடை இங்கு உண்டு. :D

தெரிந்த ஒன்றுடன் மற்றயதை ஒப்பிடுவது தான் மனித இயல்பு. அநேகமான ஆண்களுக்கு தெரிந்த, நன்கு பழகிய பெண் அம்மா தான். இதனால தான் அம்மா மாதிரி பெண் வேணும் எனக் கேட்கிறார்கள். இதை ஆணாதிக்கம் எனக் கூறுவது நொன்சென்ஸ். எனக்கு அம்மா மாதிரி பெண் வேணும் என நான் நினைத்தது இல்லை ஆனால் வந்தவள் சரியா அம்மா மாதிரியே இருக்கிறாள். எழுதியவர் போன நூற்றாண்டில இப்பவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெண் பட்டிகாடாக, பின்தங்கிய நிலையில் இருக்க வேண்டும் என்று ஆண்கள் நினைப்பதில்லை. அதோட ஒரு பெண் தன்னை உருக்கோணும், சமைக்கோணும், பிள்ளை வளர்க்கொனும் எண்டு இப்ப ஆம்பிளையள் எதிர்பார்க்கிறது வலு குறைவு. இருவரும் அலுவலகம் போவதால், இருவருக்கும் துறை சார்ந்த படிப்புகள் கருத்தரங்குகள் இருப்பதால் வீட்டு வேலையிலே பாதி பாதி செய்கிறார்கள். நாங்கள் இப்பவும் மனிசிமாற புட்டவிக்க வச்சுக் கொண்டிருந்தால் உலகம் எங்களை விட்டிட்டு எங்கயோ ஓடிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அம்மா போல் மனைவி வேண்டும் - ஆண்களின் குரூரம்[/size]

[size=5]இல்லை இப்படியா[/size]

[size=5]1. வாய் முழுக்க வெத்திலை பாக்கு [/size]

[size=5]2. சாயம் பிடித்த பற்கள்[/size]

[size=5]3. சோல்ற் அண்ட் பெப்பர் கேயர்[/size]

[size=5]4. காதில் பெரிய கடுக்கன்[/size]

[size=5]5. குறுக்குக் கட்டு[/size]

[size=5]6. தலையில் கடகம்[/size]

[size=5]7.செருப்பில்லாத பித்த வெடிப்புக் கால்[/size]

[size=5]8. கையால் பல் விளக்கும் பிகர்[/size]

391333_305871912841776_2039010396_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

இருக்கிறது எல்லாம்.... வேலைக்காகாத... *** ***** எல்லோ இருக்குதுங்க..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

இருக்கிறது எல்லாம்.... வேலைக்காகாத... *** ***** எல்லோ இருக்குதுங்க..! :lol::D

இந்த ஜென்மத்திலை... உங்களுக்கு கலியாணம் இல்லை.

வாழ்க்கை முழுக்க, தனித்தவில் தான்... :D:icon_idea:

Link to comment
Share on other sites

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

இருக்கிறது எல்லாம்.... வேலைக்காகாத... *** ***** எல்லோ இருக்குதுங்க..! :lol::D

நெடுக்கு உங்களுடைய சாதகத்தை ஒருக்கால் அனுப்பி விடுங்கோ. என்னிடம் ஒரு பிள்ளை இருக்கிறா, நீங்கள் சொன்ன எல்லா குணங்களுடனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்களுடைய சாதகத்தை ஒருக்கால் அனுப்பி விடுங்கோ. என்னிடம் ஒரு பிள்ளை இருக்கிறா, நீங்கள் சொன்ன எல்லா குணங்களுடனும்.

நெடுக்கருக்கு, இப்பவே... 45 வயசு ஆயிட்டுது என்பது, எனது கணிப்பு :lol: .

ஒகேயா... யாழ்கவி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்களுடைய சாதகத்தை ஒருக்கால் அனுப்பி விடுங்கோ. என்னிடம் ஒரு பிள்ளை இருக்கிறா, நீங்கள் சொன்ன எல்லா குணங்களுடனும்.

முதல்ல ஆளைக் காட்டுங்க.. அப்ப தான் சாதகம்.. பாதகம் அறிக்கை.. தர முடியும்..! :lol::D

நெடுக்கருக்கு, இப்பவே... 45 வயசு ஆயிட்டுது என்பது, எனது கணிப்பு :lol: .

ஒகேயா... யாழ்கவி. :D

உங்க கணிப்பு மகா மட்டம். சிறி அண்ணா உங்களுக்கும் சாஸ்திரத்திற்கும் வெகு தூரம் போல..! நமக்குத் தான் அது வரேல்லைன்னா.. எதுக்கு அவசியமில்லாததை அடைய விடாமல் முயற்சிப்பான். உடம்பு நோவான்..! :lol::D

Link to comment
Share on other sites

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

மரபணுத் தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆண்களில் பிடித்த விசயமே தங்களிடம் இன்னென்ன தகுதியிருக்குதா எனப் பார்க்காமல் தங்களுக்கு வரும் மனைவிமார் மட்டும் ஓவர் தகுதியாக இருக்க வேண்டும் என்பதை எதிர் பார்ப்பது :lol::D:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கணிப்பு மகா மட்டம். சிறி அண்ணா உங்களுக்கும் சாஸ்திரத்திற்கும் வெகு தூரம் போல..! நமக்குத் தான் அது வரேல்லைன்னா.. எதுக்கு அவசியமில்லாததை அடைய விடாமல் முயற்சிப்பான். உடம்பு நோவான்..! :lol::D

நெடுக்ஸ்... கலியாணம் கட்டுவது, உடம்பு நோகும் வேலையா... :o .

உங்களுக்கு, யாரோ... தவறான தகவலை தந்திருக்கினம். :D

மரபணுத் தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகலாம். :lol:

தப்பிலி...

நெடுக்ஸ்க்கு, மணப் பெண்ணை (Madame Tussauds) தொழிற்சாலையில்...

ஓடர் பண்ணித்தான் செய்ய வேணும் :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண்களுக்குப் பொறாமை. ஆண்கள் துணிச்சலா இதுதான் வேணும் என்று கேட்கிறது..! ஆண்கள் எப்பவும் துணிச்சலானவங்க தான். சுயமா சிந்திக்கிறவங்க..! ஒரு ஆணுக்குரிய எல்லா தகுதியும் உள்ளவன் தான் இப்படி துணிஞ்சு கேட்கவும் செய்வான்.. என்பது பாவம் சில பெண்களுக்குப் புரிவதில்லை...! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணை சொன்னதுபோல எனது அம்மாவைப் போலத்தான்

எனக்கும் மனைவியும் கிடைத்திருக்கின்றா.

அம்மா என்பவர் தான் எமக்கு எல்லாம்.

அவரைப்போல ஒரு மனைவியைப் பெற்றுக் கொள்வதற்கு

எல்லோரும் தவம் செய்திருக்க வேண்டும்.

அதேபோல என் அம்மாவைப் போல எனக்குப் பிள்ளைகளும்

கிடைத்திருக்கின்றார்கள்.

அதிலே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

உண்மைதான் வாத்தியார்

இது அடுத்த தலைமுறைக்கும் தொடரும் போலுள்ளது

எனது மூத்தமகன் தாயிடம் சொல்லியுள்ளான்

அப்பபாவை நீங்க கவனிப்பது போல தற்போது எவரும் கணவனைக்கவனிப்பதில்லை.

எனக்கும் இப்படித்தான் பொண்ணு வேணும் என்று.

இதில் மேலோட்டமாகப்பார்த்தால் சிலவேளை வேறு அர்த்தம் தரக்கூடும்

ஆனால் அவனை எனக்குத்தெரியும்

அந்த அன்பை மட்டுமே அவன் எதிர்பார்க்கின்றான்.

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

இருக்கிறது எல்லாம்.... வேலைக்காகாத... *** ***** எல்லோ இருக்குதுங்க..! :lol::D

கல்யாணம் செய்யப்பேபாறதில்லை என்று சொன்னால் எங்களுக்குப்புரியாதா ராசா.

ஏன் இவ்வவவவவவவவவவவளவும்..........??? :lol::D :D

Link to comment
Share on other sites

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

இருக்கிறது எல்லாம்.... வேலைக்காகாத... *** ***** எல்லோ இருக்குதுங்க..! :lol::D

அப்பிடியொரு பொண்ணு இருக்குதண்ணா. உங்களை பற்றி சொல்லி கேட்டனான். அந்த பொண்ணுக்கு சகோதரங்கள் போல பாசமும் சூர்யா மாதிரி முகமும், வெள்ளையான தோற்றமும், பொண்ணுங்களை மதிக்கிற ஆணும் (இன்னும் பல) தான் வேணுமாம் என்று சொல்லி உங்களை பிடிக்கேல்லை என்று சொல்லிப்போட்டா. :lol::icon_idea:

எனக்கு ஆண்களில் பிடித்த விசயமே தங்களிடம் இன்னென்ன தகுதியிருக்குதா எனப் பார்க்காமல் தங்களுக்கு வரும் மனைவிமார் மட்டும் ஓவர் தகுதியாக இருக்க வேண்டும் என்பதை எதிர் பார்ப்பது :lol::D:rolleyes:

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

இருக்கிறது எல்லாம்.... வேலைக்காகாத... *** ***** எல்லோ இருக்குதுங்க..! :lol::D

உங்களின் ஆசைக்கு இதைத் தான் நம்மளால செய்யமுடிஞ்சது... :lol::lol:

Link to comment
Share on other sites

மரபணுத் தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகலாம்.

அதுக்கு செலவாகுமே. :lol: காசு வர வேணும் எண்டு தானே லட்சுமி மாதிரி பொண்ணு வேணும் எண்டு கேட்டார். பிறகு எப்படி காசு செலவழிப்பார். அதாலை இதுவும் சரிவராது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியொரு பொண்ணு இருக்குதண்ணா. உங்களை பற்றி சொல்லி கேட்டனான். அந்த பொண்ணுக்கு சகோதரங்கள் போல பாசமும் சூர்யா மாதிரி முகமும், வெள்ளையான தோற்றமும், பொண்ணுங்களை மதிக்கிற ஆணும் (இன்னும் பல) தான் வேணுமாம் என்று சொல்லி உங்களை பிடிக்கேல்லை என்று சொல்லிப்போட்டா. :lol::icon_idea:

:lol: :lol: :lol:

இது பச்சப் பொய். எங்க அம்மாவையே அறியாத ஒரு பெண்.. அவாவப் போல.. ஈகை.. அன்பு.. அரவணைப்புச் செய்யக் கூடியவா என்று சுயமதிப்பிட்டதே மிகத் தவறு. இதில சூரியா கேட்குதாம் சூர்யா.. அதுதான்.. ஜோதிகா கட்டிக்கிட்டா எல்ல. வேணுன்னா.. அவாக்கு சக்களத்தியா போய் கட்டிக்கச் சொல்லுங்க..! :lol::D :D

அதுக்கு செலவாகுமே. காசு வர வேணும் எண்டு தானே லட்சுமி மாதிரி பொண்ணு வேணும் எண்டு கேட்டார். பிறகு எப்படி காசு செலவழிப்பார். அதாலை இதுவும் சரிவராது. :icon_idea:

நகைக்குச்.. சேலைக்கு.. மேக்கப்புக்கு.. என்னால உழைக்க முடியாது. ஒரு மனிசன் உயிர் வாழ தேவையான அத்தியாவசியத்தை தான் வழங்க முடியும். அந்த வகையில் செல்வத்தின் அதிபதி.. இலட்சுமியா வந்திட்டா நமக்கு அந்தத் தொல்லை இல்லையே.. என்று ஒரு பெரிய தியாக மனப்பான்மையோட தான் கேட்டன்..! :lol:

Link to comment
Share on other sites

இது பச்சப் பொய். எங்க அம்மாவையே அறியாத ஒரு பெண்.. அவாவப் போல.. ஈகை.. அன்பு.. அரவணைப்புச் செய்யக் கூடியவா என்று சுயமதிப்பிட்டதே மிகத் தவறு. இதில சூரியா கேட்குதாம் சூர்யா.. அதுதான்.. ஜோதிகா கட்டிக்கிட்டா எல்ல. வேணுன்னா.. அவாக்கு சக்களத்தியா போய் கட்டிக்கச் சொல்லுங்க..! :lol::D :D

தன் கணவனுடன் மிகமிக அன்பு செலுத்த கூடிய பெண் என்றால் அனைத்து தாயும் தன் பிள்ளைகளுடன் அன்பு செலுத்துவது போல் என்று அர்த்தம். உங்கள் அம்மாவை தெரிஞ்சு தான் அவா மாதிரி அன்பு செலுத்த வேணும் எண்டில்லை. :D

சூர்யா வேணும் என்று கேட்கேல்லை. சூர்யா மாதிரி முகம் உள்ளவர் என்று தான் கேட்டவர். அது பிழை என்றால் நீங்களும் ஐவர்யாராய் மாதிரி அழகு என்று கேட்டனீங்கள் தானே? அவவை தான் அபிஷேக் பச்சன் கட்டிக்கிட்டாரெல்லே? :lol: வேணும்னா நீங்களும் போய் ஐஸ்வர்யாரயோட இருக்க வேண்டியது தானே? என்ன ஒண்டு....அவா வேண்டாம் என்று சொல்லிப்போடுவா. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.