Jump to content

சந்நிதியில் பிச்சை எடுக்க வைத்த சிங்களம்; புரிந்து நடக்கவேண்டிய நிலையில் தமிழினம்!


Recommended Posts

தாயக விடுதலைப் போரின் தாக்கத்தில் இருந்து மீளாத தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டு அவர்களை கையறு நிலைக்குத் தள்ளும் செயற்பாட்டில் அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுகின்றமை தொடர்பிலான தெளிவினை தமிழ் மக்கள் பெற்றிருக்க வேண்டிய புறச்சூழல் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. வடக்கின் வசந்தம், ஆசியாவின் அதிசயம் என சர்வதேச மட்டத்தில் போலிப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்ற அரசாங்கம் தாயகத்தில் இருக்கின்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்யவில்லை என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற செல்லச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழா நிகழ்வில் நடைபெற்ற அவலத்தினைக் குறிப்பிடலாம்.

வரலாற்றில் என்றும் இல்லாதவாறு பலநூற்றுக்கண்கான பிச்சைக்காரர்கள் திருவிழாவில் திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் கையேந்தியிருந்ததாக தெரியவருகின்றது. இளவயதில் கைகளில் குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்களே அதிகம் பிச்சையெடுத்ததாகவும் வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையிலானவர்கள் குறித்த ஆலயத்தில் பிச்சை எடுத்ததை தாம் காணவில்லை என்றும் யாழ்ப்பாணத்தில் முதியவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை அவ்வாறு பிச்சை எடுத்தவர்களில் கண்களை இழந்தவர்கள், கை, கால்களை இழந்தவர்கள் என போரின் வடுக்களைச் சுமந்திருந்தவர்களே பெருமளவில் நின்றிருந்ததாக தெரியவந்திருக்கின்றது. குறிப்பாக மட்டக்களப்பில் இருந்து கணவன் மனைவி இருவர் பிச்சை எடுப்பதற்காக வந்திருந்ததாகவும் அவர்களில் கணவன் போரில் தனது இரண்டு கண்களை இழந்திருந்ததாகவும் தமக்கு வேறு வழியில்லாமல் பிச்சை எடுக்க வந்ததாகவும் அந்த இளம் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்திருக்கின்றார்.

போருக்கு பின்னான அபிவிருத்தி மக்களின் வாழ்வியல் மேம்பாடு என்பது பழைய கட்டங்களுக்கு புதிய வர்ணம் தீட்டுவதோ, பாதைகளுக்கு கார்பற் இடுவதோ அல்ல என்பதை அரசாங்கம் மறந்து செயற்படுகின்றதோ அல்லது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக எண்ணிச் செயற்படுகின்றதோ என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை. தமிழினத்தின் மீதான இனச் சுத்திகரிப்புப் போரின் போது விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விதவைகள் தமது பிள்ளைகளின் ஒரு நேர உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவோ, கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உதவி செய்யவோ முடிந்த அளவிற்கு வாழ்க்கையோடு போராடவேண்டிய இக்கட்டான நிலை தாயகத்தில் காணப்படுகின்றது. கணவனை இழந்த பெண்களை சமூகம் ஒரு புறம் ஒதுக்கிக்கொள்ள வறுமை மற்றொரு புறம் அவர்களை விரக்தியின் எல்லைவரை தள்ளிச் செல்கின்றது. மக்களை மீட்டெத்திருக்கிறோம், மீள்குடியேற்றம் செய்துவிட்டோம் என்று அடிக்கடி அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை மேம்படுத்த முடியுமா? இதுவரையில் எந்த விதமான ஆரோக்கியமான செயற்றிட்டத்தை முன்வைத்திருக்கிறார்கள்? என்பதை அரச தரப்பினர் வெளிப்படுத்த முடியுமா? போர் மூலம் அழிக்கப்பட்டவைகளின் எஞ்சியவையை போரின் பின்னர் படைகளின் மூலமும் இரும்பு வியாபாரிகள் மூலமும் முற்றுமுழுதாகச் சுரண்டி எடுத்து ஏப்பமிட்டிருக்கின்றது அரசு.

போர் நடைபெற்ற போது வன்னியில் செயற்பட்ட வங்கிகளில் வைப்பிடப்பட்ட நிதி, அடைவு வைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் அதிகார வர்க்கத்தினால் ஏப்பமிடப்பட்டிருக்கின்றன. வன்னியில் செயற்பட்ட அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் செயற்பட்ட தமிழீழ வைப்பகம், கிராமிய அபிவிருத்தி வங்கி என்பவற்றின் நகைகள் மற்றும் பணங்களும் அரச படைகளாலேயே கையகப்படுத்தப்பட்டிருந்தன. இன்றுவரையில் அவற்றினை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் எந்த முனைப்புக்களையும் அதிகாரத் தரப்பு மேற்கொள்ளவில்லை.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புதற்காக ஆரம்பத்தில் இருந்தே செயற்பட வேண்டிய நிலையே உள்ளது. இதன் ஒரு கட்டம் தான் கையறு நிலையில் இருக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் நிலையினை எதிர்கொண்டிருக்கின்றமையாகும். இதன் அடுத்த கட்டமாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு மோகத்தினை ஏற்படுத்தி அவர்களையும் நடுத்தெருவிற்குக் கொண்டு செல்லும் செயற்பாட்டினையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. குறைந்த செலவில் அவுஸ்திரேலியா பயணம் என்ற பிரமாண்ட கற்பனை அனைத்தையும் இழந்த மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றது. மீண்டும் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு வெளிநாடு தான் சரியான வழி என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதனால் தமது மூதாதையருக்குச் சொந்தமான வீட்டு மனை, காணிகளை அறாவிலைக்கு விற்கின்றனர். சொந்தங்கள் பந்தங்கள் எவருக்கும் சொல்லிக்கொள்ளாமல் நள்ளிரவில் புறப்பட்டு படகில் ஏறும் போதோ, கடலில் வைத்தோ படகில் ஏறு முன்பாகவோ கைது செய்யப்படுகிறார்கள். அவுஸ்திரேலியா செல்ல முற்படுபவர்களிடம் காணிகளை விலை கொடுத்து வாங்கும் நடவடிக்கைகளில் சிங்களவர்களும் ஈடுபட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.

தாயகத்தில் இருந்து மக்களை அவுஸ்திரேலியா அனுப்பும் சதி நடவடிக்கையின் பின்னணியில் மஹிந்தராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவே ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை இந்த இடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது. போர்க்காலத்தில் இருந்த நிலையிமையிலும் பார்க்க திடீரென்று அதிக அளவிலான அவுஸ்திரேலியா நோக்கிய பயணங்கள் இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் முன்னெடுக்கப்படுகின்ற நிலையினை வைத்துப் பார்க்கும் போது இயல்பாகவே இந்த விடயங்கள் தொடர்பில் புரிந்துகொள்ளமுடியும். அதேவேளை அந்த முயற்சிகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து மக்களே கைது செய்யப்படுகின்றனரே தவிர மிகத் திறமை வாய்ந்ததாகச் சொல்லப்படுகின்ற இலங்கைப் புலனாய்வு அமைப்பினால் குறித்த ஆட்கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்த தகவல்களை இதுவரையில் ஏன் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது இலங்கை அரசாங்கம். அப்பாவிகளை மீண்டும் மீண்டும் அவலத்தில் தள்ளுவதன் மூலம் எதனைச் சாதிக்க முற்படுகிறது சிங்களம்?

இலங்கை அரசாங்கம் இவ்வாறான திட்டமிட்ட சதி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் தெளிவான புரிதலினை கொண்டிருக்கவேண்டும். அனைத்தையும் தொலைத்து எஞ்சியவையையும் தொலைத்து சிறைக்கம்பிகளுக்குள் காலங்களைக் கடத்த வேண்டிய நிலையினை எவரும் விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடாது. அரசாங்கமே திட்டமிட்டு ஏற்பாடுகளை மேற்கொண்டு தனது கடற்படை மற்றும் பொலிஸ் மூலமே மக்களை கைது செய்யும் நடவடிக்கையினையும் மேற்கொள்கின்றது. இதனைவிடவும் இலங்கைக் கடற்பரப்பில் இருந்து வெளியேறினாலும் கூட ஆழ்கடல் பயணங்களின் போது சந்திக்கின்ற அவலங்கள் என்பவை அளவிடமுடியாதவை என்பதையும் அப்பாவி மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். எஞ்சியிருக்கும் வாழ்க்கைப் பயணத்தினை எதிர்கொண்டு மீண்டும் எம் இனம் நிமிர்ந்து நிற்பதற்கு முடிந்த அளவிற்கு போராடியே ஆகவேண்டி நிர்பந்தம் எம்மினத்தின் மீது திணக்கப்பட்டிருக்கின்றது. மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருப்பதால் எஞ்சியிருக்கின்ற வாழ்க்கையினையே தொலைக்க முடியுமே தவிர மாற்றீடாக வசந்தம் வந்துவிடப் போவதில்லை.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

http://tamilleader.com/mukiaya/5886-2012-09-01-21-04-57.html

Link to comment
Share on other sites

[size=4] இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது இலங்கை அரசாங்கம். அப்பாவிகளை மீண்டும் மீண்டும் அவலத்தில் தள்ளுவதன் மூலம் எதனைச் சாதிக்க முற்படுகிறது சிங்களம்? [/size]

[size=4]இலங்கை அரசாங்கம் இவ்வாறான திட்டமிட்ட சதி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் தெளிவான புரிதலினை கொண்டிருக்கவேண்டும்.

[/size]

[size=4]விடுதலைப்புலிகளுக்கு பின்னரான தமிழர்களை சிங்களம் வெற்றி கொள்ளப்படவர்களாகவே பார்க்கின்றது. சர்வதேசம் தந்த ஆதரவை அது தமிழின அழிப்பிற்கு தந்த அங்கீகாரமாக இன்றுவரை பார்கின்றது. [/size]

[size=4]தாயகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள பிரச்சாரத்தின் பிடியில் அகப்பட்டு 'ஆகா அங்கு போய் வாருங்கள் பாருங்கள்' என கூச்சலிடுபவர்களும் கூட புரியவேண்டும். [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.