Jump to content

மிகை யதார்த்தம் / இணைப்பு நிஜமாக்கம் (Augmented Reality)


Recommended Posts

Augmented Reality இந்த தொழில் நுட்பத்தை தமிழில் மிகை யதார்த்தம் அல்லது இணைப்பு நிஜமாக்கம் என்று அழைக்கலாம். இதைப் பற்றி யாழில் ஒரு பதிவிட வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம், இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது ..

 

நீங்கள் சென்னையில் அண்ணா சாலையில் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கிருந்து நீங்கள் புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திற்கு செல்லவேண்டும் வழிநெடுக விளம்பர பதாதைகள் இருந்தும் வழி தெரியவில்லை. இப்பொழுது "இணைப்பு நிஜமாக்கம்(Augmented Reality)" தொழிநுட்பம் மூலமாக விளம்பர பதாதைகளை(advertisement board) நமது திறன்பேசியில்(Smart phone) பதியப்பட்டுள்ள மென்பொருளை பயன்படுத்தி புகைப்படக்கருவி மூலம் தூழவுவதன்(scanning) வாயிலாக அந்த இடத்தைப் பற்றிய தகவல்களை படமாகவோ, எழுத்துக்களாகவோ கண்டு கொள்ளலாம்.

2.png

இது எப்படி சாத்தியம் ??

 

முதலில் திறன்பேசியில் பதியப்பட்டுள்ள மென்பொருள் விளம்பர பதாதைகளில் உள்ள படிமத்தை பிரதி எடுக்கிறது(image capture). பின்பு அந்தப் பிரதியை வழங்கனுக்கு(Server) அனுப்பி அதைப் பற்றிய தகவல்களைக் கோருகிறது. புத்தக கண்காட்சி நடக்கும் இடத்தின் அச்சரேகை அலகும் தீர்க்கரேகை அலகும் (latitude and longitude coordinates) மற்றும் அதைப்பற்றிய கானொளியும் வழங்கனில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது(முன்னரே பதிந்து வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்). இப்பொழுது தகவல் உங்கள் திறன்பேசியில் வந்தடைந்துவிட்டது. அதற்குப் பின்பு திறன்பேசியில் உள்ள ஜிபிஸ்(Global Positioning System) கருவி மூலம் நீங்கள் இருக்கும் இடத்தின் அச்சரேகை அலகும் தீர்க்கரேகை அலகும் கணிக்கப்படுகிறது. உங்களுடைய  அமர்வு நிலையையும், நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் அமர்வு நிலையையும்((latitude and longitude coordinates) கூகிள் நிலப்பட சேவைக்கு(google Map Service) அனுப்பினால் அது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து நிகழ்ச்சி நடக்கும் இடம் எவ்வளவு தொலைவு, அந்த இடத்தை அடைய என்னென்ன வழிகள் உள்ளன என்பவற்றை தெரிவிக்கும்.

 

 

 

இது ஒரு சாதாரன எடுத்துக்காட்டு தான். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்னும் பல விடயங்கள் செய்யலாம். நீங்கள் ஒரு அங்காடிக்குச் செல்கிறீர்கள். அங்கு ஒரு பொருளைக் காண்கிறீர்கள் அந்த பொருள் எவ்வளவு விலை ?? வாங்கினால் ஏதேனும் இலவசம் உண்டா?? இநதப் பொருளின் ஊட்டச்சத்து அளவு என்ன என்பன போன்றவற்றை உங்களது திறன்பேசியில் உள்ள  புகைப்படக்கருவி மூலம் தூழவுவதன்(scanning) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

 

இதுவும் மேலே சொன்னது போல்தான். ஒவ்வொரு பொருளிலும் ஒரு அடையாள குறியீடு பொருத்தப்பட்டிருக்கும்(like bar code). அந்த அடையாள குறியீடை படிமம் எடுத்து வழங்கனுக்கு(Server) அனுப்பி அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று உங்களது திறன்பேசி திரையில் ஒளிரச் செய்கிறது.

 

ibm-augmented-reality.jpg

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.