Jump to content

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 6 இருந்து 11 வரை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு! உண்மையிலேயே கதை வாசிக்க நல்லாய்ப் போகுது! ஆனால்... யானைப் பசி பசித்த வாய்க்கு சோளப்பொரி போல கொஞ்சமா இருக்குது. கொஞ்சம் அதிகமா எழுதுங்கோவன். ஆசையா இருக்கு........!

( நான் இன்னும் ரெண்டு பவுணைத் தொடரல...... என்ற குற்றவுணர்வு எனக்குள்ள இருக்கு... வெகுவிரைவில் தொடரணும்! :( )

நீங்கள் தொடருங்கள்!

பாராட்டுக்கள்! :)

நன்றி

< நாம் பெற்றோராக இருந்து பிள்ளைகளுக்கு என்ன செய்யவேண்டும் என அவர்களிடம் கேட்க்காமலே எல்லாவற்றையும் செய்து கொடுத்தோம் பிள்ளைகளின் சந்தோஷத்துக்கு

ஆனால் இந்த பிள்ளைகளுக்கு பெற்றோருக்கு என்ன செய்ய வேணும் என்று தெரியவில்லை

ஏன் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லையோ !? >

இதுதான் தாயகத்திற்கும் , புலம் பெயர்ந்தோருக்கும் உள்ள பிரதான முரண் . இதன் பிரதான குற்றவாளிகள் இங்குள்ளவர்களே!!!!! வெளிச்சூழலில் வாழ்ந்தாலும் , தமது கஸ்ரநஸ்ரங்களை மனம்விட்டு கதைக்காததின் விளைவே , " வித்தை செய்கின்றவர்கள்" என்ற எண்ணப்பாட்டைத் தோற்றுவித்துள்ளது .

தமிழரசு உங்கள் கதையில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றன . தொடர்ந்து முன்னேறுங்கள் :):):) .

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தமிழ் குடும்பமும் வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகள் நடை முறைகள்.

கதையை சற்று கோர்வையாக சொன்னால் இன்னும் அழகு . மேலும் தொடர்க

நன்றி ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

இனி தொடர்ந்து வாசிப்பேன்.

Link to comment
Share on other sites

"ஜோசனை" யோசனை என்று வரவேண்டும். இது பல இடங்களில் வருகிறது தமிழரசு.

மற்றபடி கதை நன்றாக போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளீர்கள். தொடருங்கள்.

நன்றாக உள்ளது. ஒரு சில இடங்களில் வெடுக் வெடுக் என்று வசனங்கள்/சம்பவங்கள் முடிகின்றன. மற்றபடி நல்ல கதை.

நன்றி .....

இனியாவின் தவிப்பு சிறுகதையா இல்லை இசையும் கதையுமா என்று நினைக்கத் தோன்றுகிறது..ஒவ்வொரு பாகத்திலும் இணைக்கும் பாடல்கள் மற்றும் படங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது.அவ்வப்போது வந்து ஒவ்வொரு பாகத்தையும் படித்து செல்வேன்.அனேகமாக எழுதுபவர்களுக்கு சொல்லும் விசயத்தை உங்களுக்கும் சொல்கிறேன் எழுத்துப் பிழைகளை கவனத்தில் கொள்ளவும்.

நன்றி .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 11)

picture-015.jpg

கதிரவன் ..... கதிரவன் யாரும் இல்லையோ வீட்டில் ...?

யார் .......வாத்தியாரோ வாங்கோ இதில இருங்கோ அப்பாவை கூப்பிடுகின்றேன், அப்பா ...... அப்பா இங்கே வாங்கோ வாத்தியார் வந்திருக்கின்றார்.

ஆ .... வாங்கோ .... எப்படி இருக்கின்றீர்கள் ?

என்ன ..... எதோ இருக்கிறம், அதுசரி .... கதிரவன் ராத்திரி நடந்த விஷயம் என்ன என்று தெரியுமோ ?

(ஆச்சரியமாக ) என்ன நடந்தது ?

நேற்றைய தினம் 37 பேரை வெளியில் விட்டவங்களாமே ! அதில் ஒருவர் இந்த இடத்தை சேர்ந்தவராம் நானும் அவரை ராத்திரி பார்த்தனான் ..... (என்று சொல்லிக்கொண்டு இருக்கையில் )

வாத்தியார் நீங்கள் பார்த்தனியளோ அவர் எப்படி இருந்தவர் ? அவரின் பெயர் என்ன எனச்சொன்னவர் ?

அந்த பெடியனைப்பார்த்தால் நல்ல வெள்ளை நிறம் நல்ல உயரம் நல்ல அழகான தோற்றம்

அது சரி கதிரவன் உங்களுக்கு தெரிந்தாக்கள் யாரும் உள்ளுக்குள் இருக்கினமோ ?

இல்லை ....... எல்லாரும் எங்கட ஆட்கள்தானே

அதுக்கிடையில் அந்த பெடியனை அவங்கள் வெளியில விடுகின்றமாதிரி விட்டு விட்டு சுட்டு போட்டாங்களாம்

(ஏக்கத்துடன் ) என்ன சுட்டு போட்டாங்களாமோ!?

ஓம் ... கதிரவன் இவங்கள் என்னும் கொல்லுறதை நிப்பாட்டல்லை .....

சரி .... கதிரவன் நான் புறப்படப்போகின்றேன் வீட்டில் மனைவி தனியாக இருக்கின்றார்

ஓம் ... ஓம் போட்டுவாங்கோ வாத்தியார்

பிள்ளை .... அம்மாவை கூப்பிடு ...... அப்படியே என்னக்கும் என்னமோ செய்கின்றது கொஞ்ச சுடுதண்ணி எடுதுவாம்மா

அம்மா ... அம்மா, அப்பா உங்களை கூப்பிடுகின்றார் இஞ்ச வாங்கோ நான் அப்பாவுக்கு தண்ணி எடுத்திட்டு வாறன் ......

என்னங்கோ அவசரமாக கூப்பிடுகின்றீர்கள் ? என்ன ஒருமாதிரி இருக்கிறியள் ஏதாவது பிரச்சனையோ ?

அது ....... முன்னுக்கு ரோட்டில யாரையோ சுட்டுப்போட்டாங்களாம்

ஐயோ ..... கடவிளே யாராம் ? (அங்கும் இங்குமாக பதட்டத்துடன் திரிகின்றாள்)

யார் என்று தெரியவில்லையாம் ஆனா ......

(அந்த நேரத்தில் போனடித்தது....)

ஹலோ ........ ஹலோ, இனியா ..... நான் புகழின் பெரிய அக்கா கதைக்கிறன்.... புகழ் வந்து விட்டாரோ ?ஏன் என்னும் எங்களுக்கு போனெடுத்து சொல்லவில்லை ...... இரண்டு நாட்கள் கழிந்து விட்டது எங்களுக்கு ஒரே பதட்டமாக இருக்கின்றது புகழ் வெளிக்கிடும் போது குழப்பமாகவே இருந்தார் ஏன் என்று கேட்டபோது பதில் சரியாக இல்லை ......

அங்கு எங்கள் வீட்டுக்கு போனடிச்சால் லையின் போகுதில்லை எனக்கு ஒரே ரென்சனாக இருக்கு ....

நாங்களும் இங்கு ஒரே குழப்பத்தில்தான் இருக்கின்றோம், நாங்களும் அவர்களின் போனுக்காக பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்

ஏன் எங்களுக்கு இப்படியொரு கொடுமை, எல்லாம் சன்சலமாக இருக்கவேண்டுமா ?? என்னதான் நடக்குது ? எல்லாவற்றுக்கும் எப்போது விடைகிடைக்கும் ?

இனியா பெரிசாக யோசிக்காதேங்கோ ..... நான் எனக்கு தெரிந்தவர்கள் கொழும்பில் இருக்கின்றார்கள் அவர்களை கொண்டு விசாரித்து பார்க்கின்றேன் ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்கின்றேன் நீங்களும் ஏதாவது அவர்களைப்பற்றி தெரிந்தால் உடனடியாக தெரிவியுங்கோ ......

(என பதட்டத்துடன் சொன்னவாறே போணை வைத்தாள்)

அம்மா ..... வாங்கோ .... வெளியில் யாரிடமாவது விசாரித்து விட்டு அப்படியே புகழின் வீட்டுக்கும் சென்று விசாரித்து வருவோம்

நல்லதுதான் நானும் அப்படித்தான் நினைச்சனனான் கொஞ்சம் பொறு பிள்ளை உடனே வாறன்......

( இருவரும் வீதியில் சென்று கொண்டு இருக்கும் போது )

IMG_1409.jpg

பிள்ளையாரே விநாயகா வினை தீர்ப்பவனே எல்லாம் நல்லதாக நடக்கவேண்டும் ஒரு கெடுதலும் வரக்கூடாது

(இருவரும் கும்பிட்டு விட்டு செல்லும் போது .....)கடவுளே உனக்கும் இந்த நிலைமையா ? ஒரு அரசமரம் இருந்ததினால் உன்னிடத்தில் புத்த விகாரையா ?

(சற்று தூரம் சென்றதும் )

இனியா அங்கு பார் ......தெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட துயிலும் இல்லத்தை கூட உந்த கொடியவங்கள் என்ன செய்திருக்கின்றாங்கள் என்று பாரன்,

காதில் இந்த வரிகள் ஒலித்தது ........

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய

சந்தனப் பேழைகளே! - இங்கு

கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?

குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்

உறவினர் வந்துள்ளோம் - அன்று

செங்களம் மீதிலே உங்களோடாடிய

தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்.

(கண்களை துடைத்தவாறு)

இந்த நினைவுகளும் மண் மேலுள்ள பற்றும்தானே நாங்கள் இங்கு இருப்பதற்கான காரணமாக அமைந்தது ....

அம்மா .... ஏன் வெளிநாடுகளில் இருப்பவர்கள் மட்டும் சந்தோஷமாகவோ இருக்கினம் சில வேளையில் ஒரு சிலர் சந்தோஷமாக இருந்தாலும் மண் மீது பற்றுக்கொண்ட தமிழன் யாரும் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள் ஏன்னென்றால் அது எப்படியோ அந்நிய மண் அந்நியமொழி அதை எப்படி அவர்கள் ஏற்பார்கள் ?

ம் ..... அது சரி எனக்கு சரியான களைப்பாக இருக்குது ஒரு இழனி வாங்கித்தாம்மா .....

இதில இருங்கோ வாங்கி வாறன்,

elanir1.jpg

அண்ணா ஒரு இழனி வெடடித்தாங்கோ ......

இந்தாங்கோ அம்மா ...... குடியுங்கோ .....

(இனியாவின் கைத்தொலை பேசி அடிக்கின்றது ......)

ஹலோ .....ஹலோ,

நான் புகழின் பெரிய அக்கா கதைக்கின்றேன் .... ஒரு சின்ன பிரச்சனை ......

என்ன ... பிரச்சனையோ? (ஏக்கத்துடன்) என்ன மச்சாள் என்ன நடந்தது ......?

அது ..... அது (தயக்கத்துடன்௦) புகழையும் உங்கட அண்ணா தினாவையும் கடத்தி வைத்து இருக்கிறாங்களாம் ......

கடத்தி வைத்திருக்கிராங்க்களோ .......? ஐயோ ...... ஐயோ ....கடவிளே!

இனியாவின் தவிப்பு தொடரும் ..........

Link to comment
Share on other sites

"அம்மா .... ஏன் வெளிநாடுகளில் இருப்பவர்கள் மட்டும் சந்தோஷமாகவோ இருக்கினம் சில வேளையில் ஒரு சிலர் சந்தோஷமாக இருந்தாலும் மண் மீது பற்றுக்கொண்ட தமிழன் யாரும் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள் ஏன்னென்றால் அது எப்படியோ அந்நிய மண் அந்நியமொழி அதை எப்படி அவர்கள் ஏற்பார்கள் ?"

உண்மையான கூற்று. ஆனாலும் வாழ்கின்றோமே. நம்மினத்திற்கு இது ஒரு தண்டனை தான்.

இனியாவின் தவிப்பு எம்மையும் தொற்றிக்கொண்டு விட்டது. தொடருங்கள் .... பாராட்டுக்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி ..காட்சியும் கானமும் போல இருக்கிறது. நேரில் பார்ப்பது போல .ஓர் வகை எதிர்பாப்புடன் இடையில் நிறுத்துகிறீர்கள் .. காத்திருக்கிறோம். மீண்டும் படிக்க

Link to comment
Share on other sites

முன்வைத்த காலைப் பின்வைக்காதீர்கள் தமிழரசு !!!!! தொடருங்கள் தவிப்பை :):):) .

Link to comment
Share on other sites

தமிழரசு! உங்கள் கதையை மேன்மேலும் மெருகேற்றி வருகின்றீர்கள்!

பாராட்டுக்கள்! :)

எழுத்துப் பிழைகளைத் தவிர்த்து மீண்டும் மீண்டும் ஒரே காட்சிக்குள் கதையின் போக்கினைக் கொண்டுவராமல் வித்தியாசமாக புரட்சிகரமாக கதை நகர்வினைக் கொண்டுசெல்லுங்கள் தமிழரசு! அது இன்னும் வரவேற்பைப் பெறும். ஆனால் தங்களின் நகர்விலும் ஒரு சுவாரசியம் தெரிகின்றது!

எம் மாவீரக் குழந்தைகளின் தொட்டில்களையும் சீராட்டிய தங்களின் வரிகளுக்கு என் மனதார்ந்த நன்றிகள்!

தொடருங்கள் !

தொடர்ந்து வாசித்து வருகின்றேன்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

இனி தொடர்ந்து வாசிப்பேன்.

நன்றி விசுகு

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.