Jump to content

"பாவம்" .... தயவு செய்து செய்யாதீர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று உங்களது பதிலுக்கு விழுந்திருக்கும் பச்சைகள் சொல்கின்றன. அதை நான் பார்க்கவில்லை.

இருந்தாலும் யார் குத்தியாவது அரிசியாகணும் என்பதுதான் இன்றைய தாயகமக்களைப்பொறுத்தவரை என் நிலை.

எனவே பொதுத்தொண்டிலுள்ள ஒருவரது ஒருசில வார்த்தைகளையோ வரிகளையோ எடுத்துக்கொண்டு எல்லாமே பிழை என்பது எம்மைத்தான் முடமாக்கும். :(:(:(:(

விசுகு அண்ணா நானும் இங்கு தனிமனித தாக்குதல் இடம்பெறும்போது நின்றேன். சர்ச்சைகள் வேண்டாம் என்று விலகியே இருக்கிறேன். இருப்பினும் மீண்டும் மீண்டும் மற்றவர்கள்மேல் சாந்தி மேற்கொள்ளும் தனிமனிதத் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் இப்படியான திரிகள் உருவாகும் நிலையை தடுக்க முடியாது. எனக்கு மனதில் பட்டதை இங்கு பதிவிடுகிறேன் அவ்வளவே. இங்கு இதுபற்றிய வாதத்திற்கோ விவாதத்திற்கோ நான் வரவில்லை. இங்கு இடம்பெறும் கருத்துப்பதிவுகளில் சிக்குண்டு என்னைக் கீழ்த்தரமான நிலைக்குக் கொண்டுசெல்ல விரும்பவில்லை. நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

சகாரா,

நான் விவாதிக்க வரவில்லை. தனிமனித தாக்குதலை நெல்லையனும் நீலமேகமும் நான் அரசியல் பகுதியில் கருத்தே எழுதாமல் பச்சையிட்டதற்கு ஓடியோடி கே.பி கோத்தா முடிச்சப்போட்டு தேவையில்லாமல் கதையெழுதியதை நீங்கள் கவனிக்கவில்லையா ?

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்ற ஊகங்கள் மூலம் தொடர்ந்து தொல்லை தருவோருக்கு எத்தனை தரம்தான் பொறுமை காப்பீர்கள் ?

கீழ்த்தரமாக எத்தனை கருத்துக்கள் நெல்லையன் எழுதினார் நேற்று மட்டுமில்லை ஏற்கனவே பல தரம். ஒரு கைதிக்கு நான் உதவி கோரியதிலிருந்து தொடர்கிற தேவையற்ற தாக்குதல்கள் குற்றச்சாட்டுகள் யாரின் கண்ணுக்கும் தெரியவில்லையே ஏன் ?

இங்கு ஜீவா பற்றி ஜீவாவின் உதவி பற்றி கேள்வி கேட்பவருக்கே ஜீவாவுக்கு அந்த விடயம் பற்றி நான் சொல்லித்தான் தெரியும். இப்போது அமைதியாக வாழும் அந்தக் குடும்பத்தின் தலைவனை எப்படியிருக்கிறார் நாங்கள் தான் உள்ளை தள்ளினமோ என்ற எள்ளல் மூலம் திருப்பியும் அந்த மனிதரை உள்ளை தள்ளும் வேலைக்கே இங்கு ஒருவர் முன்னிற்கிறார்.

ஒவ்வொருவரும் செய்யும் உதவிகளை நாங்கள் சரியாகவே கொண்டு சென்றுள்ளோம். உதவிக்கு உரியவர்களின் சகல விபரங்களும் உதவுவோருக்கு கொடுக்கிறோம். இதை உதவுவோர் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் நான் தான் இராமன் மற்றவர்கள் எல்லாம் ...... என்று வீம்புக்கு நிற்பது மட்டுமில்லாமல் தனக்கு சம்பந்தமில்லாத கேட்டேன் கேள்வி கேட்பேன் என்ற விளங்காத்தனத்திற்கு என்ன செய்ய. நானும் இதற்கு மெளனம் தான் காத்திருந்தேன். எல்லை தாண்டியபடியால் தான் காட்டமாக எழுதினேன்.

ஒருவருடைய கருத்துக்கு கருத்து வைக்கலாம் ஆனால் கருத்தேயில்லாமல் ஒரு பச்சைப்புள்ளிக்கே தேவையற்ற அரசியலாளர்களை என்னுடன் முடிச்சிடுகிற நீதியாளர்களுக்காக இங்கு பலர் கண்ணீர் விடுகிறார்கள். எனது எழுத்துகளுக்கு எப்படிக் கருத்தெழுதினாலும் நான் அதனை கண்டு கொள்வதில்லை. எனக்கு உள்ள கருத்துரிமை அவர்களுக்கும் உண்டென்பதை எப்போதும் ஞாபகம் கொள்கிறேன்.

இதை புரிந்து கொள்வீர்களோ தெரியாது. ஆனால் உண்மைகளை புரிவீர்கள் என நம்புகிறேன்.

ஜீவா உதவிய உதவி அது எப்படி போனது என்பதெல்லாம் ஜீவாவுக்கு தெரிவிக்கப்பட்டு அதற்கான ஆதாரங்களும் ஜீவாவுக்கு கொடுக்கப்பட்டது. அதுபோல நெல்லையனுக்கும் சகலமும் வளங்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி முரண்டுபிடித்து தேவையற்றவர்களையெல்லாம் என்னுடன் முடிச்சுப்போடுகிற நல்லவர்......வேண்டாம்.

இத்தோடு நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையன் அண்ணா,

ஏனோ என் பெயரும் இங்கு வந்ததால் எழுதுகிறேன். நான் குடுத்த பணத்துக்கு சாந்தி அக்கா உதவி பெற்றவரின் படமும்,அவர் எழுதியதாக ஒரு கடிதமும் மெயிலில் அனுப்பி இருந்தா. தற்போது என்னிடம் அவை எல்லாம் இல்லை அண்ணா. நான் அழித்து விட்டேன். ஏனென்றால் எனக்கு அவை தேவை இல்லை. நான் யாரிடமும் கணக்கு கேட்கவும் இல்லை கணக்கறிக்கை பார்ப்பதும் இல்லை அண்ணா. அங்கு கஸ்டப்படும் உறவுகளுக்கு என்னால் முடிந்த சிறு உதவியேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தவிர என்னிடம் வேறு எந்த நோக்கமும் இல்லை. ஒரு சிறு உதவி ஏனும் செய்தேன், ஒரு குடும்பத்தையாவது வாழவைக்க வேண்டும் என்ற ஆசை தானே தவிர நான் கணக்கு கேட்கவும் இல்லை, இதை பற்றி விவாதிக்கவும் தயாரில்லை.

தயவு செய்து யாராக இருந்தாலும் என்னோடு தொடர்புபடுத்தி பேசவும் வேண்டாம்,என்னை தொந்தரவு செய்யவும் வேண்டாம்.

நன்றி.

(என்னுடைய கருத்து யார் மனதையும் காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நானும் இங்கு தனிமனித தாக்குதல் இடம்பெறும்போது நின்றேன்

. சர்ச்சைகள் வேண்டாம் என்று விலகியே இருக்கிறேன்.

இருப்பினும் மீண்டும் மீண்டும் மற்றவர்கள்மேல் சாந்தி மேற்கொள்ளும் தனிமனிதத் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் இப்படியான திரிகள் உருவாகும் நிலையை தடுக்க முடியாது.

சாட்சியத்துக்கு நன்றியக்கா

உங்களது சாட்சியம் பெறுமதியானது என்பதை அறிவேன். அத்துடன் இதற்கும் விழுந்திருக்கும் பச்சைகள் மேலே ரதியின் கருத்துக்கு வலுச்சேர்க்கின்றன.

சாந்தியக்கா அமைதியாக இருங்கள். உங்கள் கடமையைச்செய்யுங்கள். தேவையற்ற விவாதங்களிலும் கதைகளிலும் நேரத்தை செலவிடவேண்டாம். இதை ஏற்கனவே நான் உங்களுக்கு சொல்லியுள்ளேன்.

யாரையும் மனம் நோகச்செய்ய விரும்பவில்லை. அது எனது இனத்துக்கே கேடுகளைத்தரும்.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

சிறு விளக்கம் ...

... அந்த கைதிக்கு உதவி கோரியதில் ... இங்கு உண்மையில் முதலில் நெடுக்கருடந்தான் சாந்தி பிரட்சனை தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார் ..... அது சாந்தியின் தேவையற்ற தமிழ் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களால்!!!! ... அப்போது நான் உடபட பலர் சாந்தியிடம் (இதற்கு முன்னமே நேசக்கரத்துக்கு ஒருதடவை வெள்ள நிவாரணத்துக்கு பணமும் நான் அனுப்பி, ஓர் குடும்பத்தையும் பொறுப்பெடுத்திருந்தேன் ... அது நான் இறக்கும் வரை தொடர்வதாக உறுதி ... உண்மையில் இவர்கள் மீது அப்போ கோபமாயின் அதை செய்திருப்பேனா???) பலர் வேண்டினோம்(மோகன் அதன் இணைப்பை இங்கு தந்தால் எல்லோரும் அறிவர்) மீண்டும் ... நீங்கள் ஓர் உதவி அமைப்பை சார்ந்தவர், இந்த அரசியல் உணர்ச்சியடிப்படியிலானது, உதை நிறுத்துங்கள் என்பதற்கு மேல் சாந்தியின் வாத பிழைகளை சுட்டிக்காட்டியும் அவரின் விடாப்பிடி, அவர் எங்கிருக்கிறார் என்பது, தெளிவாகியது (இங்கு பலர், நான் உட்பட மே18உடன் ததேயை பேசாத பேச்சா? என திரும்பக்கேட்கலாம், ஆனால் எவரும் சிங்களத்தை நியாயப்படுத்த முற்படவில்லை), அவரின் முரட்டு பிடியை தொடர்ந்து எம் உறுதியான கருத்துக்களை வைக்க வேண்டி இருந்தது ... அப்போதும் வார்த்தைகள் தவறவில்லை!!

மாறாக ... சாந்தியின் தாக்குதல்கள் ... தமிழ்த்தேசிய பாராளுமன்ற உறுப்பினர், இங்குள்ள ஊடகமொன்றின் ஊடகவியலாளர் என தொடர்ந்தது .... அதுவும் அவர்களின் உரையாடல்களை எடுத்து, பிளாக்மெயில் செய்யுமளவிற்கு ... கேவலம்!!! ... இதனை யாழ்களமும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது ... வேதனை!!!

Link to comment
Share on other sites

சிறு விளக்கம் ...

... அந்த கைதிக்கு உதவி கோரியதில் ... இங்கு உண்மையில் முதலில் நெடுக்கருடந்தான் சாந்தி பிரட்சனை தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார் ..... அது சாந்தியின் தேவையற்ற தமிழ் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களால்!!!! ... அப்போது நான் உடபட பலர் சாந்தியிடம் (இதற்கு முன்னமே நேசக்கரத்துக்கு ஒருதடவை வெள்ள நிவாரணத்துக்கு பணமும் நான் அனுப்பி, ஓர் குடும்பத்தையும் பொறுப்பெடுத்திருந்தேன் ... அது நான் இறக்கும் வரை தொடர்வதாக உறுதி ... உண்மையில் இவர்கள் மீது அப்போ கோபமாயின் அதை செய்திருப்பேனா???) பலர் வேண்டினோம்(மோகன் அதன் இணைப்பை இங்கு தந்தால் எல்லோரும் அறிவர்) மீண்டும் ... நீங்கள் ஓர் உதவி அமைப்பை சார்ந்தவர், இந்த அரசியல் உணர்ச்சியடிப்படியிலானது, உதை நிறுத்துங்கள் என்பதற்கு மேல் சாந்தியின் வாத பிழைகளை சுட்டிக்காட்டியும் அவரின் விடாப்பிடி, அவர் எங்கிருக்கிறார் என்பது, தெளிவாகியது (இங்கு பலர், நான் உட்பட மே18உடன் ததேயை பேசாத பேச்சா? என திரும்பக்கேட்கலாம், ஆனால் எவரும் சிங்களத்தை நியாயப்படுத்த முற்படவில்லை), அவரின் முரட்டு பிடியை தொடர்ந்து எம் உறுதியான கருத்துக்களை வைக்க வேண்டி இருந்தது ... அப்போதும் வார்த்தைகள் தவறவில்லை!!

மாறாக ... சாந்தியின் தாக்குதல்கள் ... தமிழ்த்தேசிய பாராளுமன்ற உறுப்பினர், இங்குள்ள ஊடகமொன்றின் ஊடகவியலாளர் என தொடர்ந்தது .... அதுவும் அவர்களின் உரையாடல்களை எடுத்து, பிளாக்மெயில் செய்யுமளவிற்கு ... கேவலம்!!! ... இதனை யாழ்களமும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது ... வேதனை!!!

சிறு விளக்கம் ...

மாறாக ... சாந்தியின் தாக்குதல்கள் ... தமிழ்த்தேசிய பாராளுமன்ற உறுப்பினர், இங்குள்ள ஊடகமொன்றின் ஊடகவியலாளர் என தொடர்ந்தது .... அதுவும் அவர்களின் உரையாடல்களை எடுத்து, பிளாக்மெயில் செய்யுமளவிற்கு ... கேவலம்!!! ... இதனை யாழ்களமும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது ... வேதனை!!!

... எங்கேயாவது மனிதாபிமான செயற்பாட்டுக்கான அமைப்பு வைத்திருப்பவர்கள் ... அவ்வமைப்புக்கு உதவுபவர்கள்? கருத்து முரன்பாடு கொண்டவர்கள்? இன் உரையாடல்களை பதிவு செய்து மிரட்டியதை யாரும் குறிப்பிடுங்கள் பார்க்கலாம்????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று உங்களது பதிலுக்கு விழுந்திருக்கும் பச்சைகள் சொல்கின்றன. அதை நான் பார்க்கவில்லை.

இருந்தாலும் யார் குத்தியாவது அரிசியாகணும் என்பதுதான் இன்றைய தாயகமக்களைப்பொறுத்தவரை என் நிலை.

எனவே பொதுத்தொண்டிலுள்ள ஒருவரது ஒருசில வார்த்தைகளையோ வரிகளையோ எடுத்துக்கொண்டு எல்லாமே பிழை என்பது எம்மைத்தான் முடமாக்கும். :(:(:(:(

விசுகு அண்ணா நீங்கள் வயதில் பெரியவர் ஒருவருக்கு ஆதரவாக கருத்து எழுதும் போது வடிவாக என்ன நடந்தது என விசாரித்து விட்டு வந்து எழுதினால் நன்றாக இருக்கும்... சாந்தி அக்கா நேசக்கரத்தை நடத்துவதால் அவர் என்ன சொன்னாலும்,செய்தாலும் யாழில் இருக்கும் மற்றவர்கள் பார்த்து விட்டு சும்மா இருக்க வேண்டுமா?...இதே நிலைமை நாளை உங்களுக்கும் வரும் அண்ணா...போராட்டத்தை கொச்சைப்படுத்தல்,தனி மனித தாக்குதல் என்று சாந்தி அக்காவின் பாதை தற்போது வித்தியாசமானது.

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா நீங்கள் வயதில் பெரியவர் ஒருவருக்கு ஆதரவாக கருத்து எழுதும் போது வடிவாக என்ன நடந்தது என விசாரித்து விட்டு வந்து எழுதினால் நன்றாக இருக்கும்... சாந்தி அக்கா நேசக்கரத்தை நடத்துவதால் அவர் என்ன சொன்னாலும்,செய்தாலும் யாழில் இருக்கும் மற்றவர்கள் பார்த்து விட்டு சும்மா இருக்க வேண்டுமா?...இதே நிலைமை நாளை உங்களுக்கும் வரும் அண்ணா...போராட்டத்தை கொச்சைப்படுத்தல்,தனி மனித தாக்குதல் என்று சாந்தி அக்காவின் பாதை தற்போது வித்தியாசமானது.

ரதி! மிகச்சரியான கருத்துக்கள்..இதைத்தான் நானும் கேட்டன்... பதிலாக ஏதொவெல்லாம் கதைக்கிறார்கள்...அவர்கள் மக்களுக்கு உதவுகிறார்கள் என்பதற்காக எதையும் கேள்விகேட்பது நல்லதல்ல போன்று போகும் விசுகு அண்ணாவின் கருத்துடன் என்னால் உடன் பட முடியாதுள்ளது..விசுகு அண்ணா நான் கருத்துக்களத்தில் மிகவும் மதிக்கிற ஒருவர்...அவர் எந்தக்கோணத்தில் இதைப்பார்க்கிறார் என்பது புரியவில்லை...குருக்கள் ஏதோ செய்தால் தப்பில்லையாம்..அப்படி என்ற கருத்து நிலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று...

Link to comment
Share on other sites

ரதி நீலமேகம் எனது கருத்துக்களை விமர்சியுங்கள் அதற்கு உங்களுக்கு உரிமையிருக்கிறது. ஆதாரமற்ற கோத்தா கே.பி குற்றச்சாட்டை வைப்பதற்காகவே நான் எதிர்க்கருத்திட நேர்ந்தது. நீங்கள் நேசிக்கிற தாயகத்தை உங்களுக்கு நிகராக நேசிக்கிறேன். தனிமனித தாக்குதலை ஆரம்பித்தவர்களில் நீலமேகம் நீங்களும் அடக்கம். ரதி தனிமனித தாக்குதலை ஆரம்பித்தவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா ?

நேசக்கரம் ஒரு அமைப்பு அதன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதை அனுமதிக்க முடியாது. இந்த உதவிகளைக் கொண்டு சேர்ப்பதில் இருக்கிற சிரமம் தொல்லைகளைத் தாண்டி இயங்க எவ்வளவோ இடையூறுகளை தாண்டித்தான் போகிறோம். என்னைப்பழிவாங்குகிறேன் என்று நினைத்து எத்தனையோ பேருக்கான உதவிகளை தடுத்து நிறுத்துவதுதான் உங்கள் தேசியப்பற்றானால் அதைச் செய்யுங்கள்.

ஆனால் நானும் ஒரு தனிமனிசி எனக்கான கருத்துரிமையை இங்பு பலர் மறுக்கிறீர்கள்.

ரதி நான் செய்வதெல்லாம் சரி நான் எழுதுவதெல்லாம் சரியனெ்ற வாதத்துக்கு வரவில்லை. சககருத்தாளரின் கருத்துக்கு கருத்தை வையுங்கள். அதுதான் ஆரோக்கியமான கருத்தாடல். அவர் சொன்னார் அப்படியாம் இப்பயடியாம் என்ற பொய்களை வைத்தல் புனைதல் கருத்தல்ல.

இது எனது கருத்து மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா உங்களுக்கும்,நெல்லையனுக்கும் என்ன பிரச்சனையோ எனக்குத் தெரியாது ஆனால் "மீண்டும் தொடங்கும் வன்முறைக் காலாச்சாரம் காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ்" என்னும் தலைப்பில் முதலில் நெல்லையனை இழுத்து எழுதியது நீங்கள் தானே அக்கா...தனிப்பட்ட ரீதியில் உங்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை இருக்கலாம் அதைக் கருத்துக் களத்தில் தேவையில்லாமல் பகிரங்கமாய் எழுதியது தப்பு...ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவருக்கு பொறுமை அவசியம் அக்கா...உங்கள் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளோ,எழுதும் எழுத்துக்களோ சமூகத்தை பாதிக்கக் கூடிய விதத்திலோ[குளப்பும் விதத்திலோ ] இருக்கக் கூடாது என நான் நினைக்கிறேன்.

நீங்கள் நெல்லையனைத் தாக்கி எழுதப் போகத் தானே அவர் நேசக்கரத்தை தாக்கி எழுத ஆரம்பித்தார்...இதனால் யாருக்கு அதிக நட்டம் நேசக்கரத்திற்குத் தான்...நெல்லையனோ அல்லது யாழில் எழுதும் மற்றவரோ உங்களைப் பற்றி எழுதினால் நீங்கள் அவர்களது கருத்து தொடர்பாக உங்கள் எதிர் வாதத்தை வையுங்கள்...நன்றி வணக்கம் அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் மனம்விட்டு கதையுங்கள்! விவாதியுங்கள்...விதண்டாவாதம் செய்யாதீர்கள்..சிந்தியுங்கள் அங்குதான் ஈழத்தமிழனின் ஒற்றுமையும் பலமும் ஒருங்கேறும்!

சிங்களவன் எமக்கு செய்ததை...செய்வதை எப்போதும் மனதில் நிறுத்துங்கள்.....நிறுத்தி பாருங்கள்......எமக்குள் கருத்துவேறுபாடுகளே தோன்ற சாத்தியமே வராது.

Link to comment
Share on other sites

எல்லோரும் மனம்விட்டு கதையுங்கள்! விவாதியுங்கள்...விதண்டாவாதம் செய்யாதீர்கள்..சிந்தியுங்கள் அங்குதான் ஈழத்தமிழனின் ஒற்றுமையும் பலமும் ஒருங்கேறும்!

சிங்களவன் எமக்கு செய்ததை...செய்வதை எப்போதும் மனதில் நிறுத்துங்கள்.....நிறுத்தி பாருங்கள்......எமக்குள் கருத்துவேறுபாடுகளே தோன்ற சாத்தியமே வராது.

மிக மிக உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அப்படி என்னதான் நடந்தது :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் வயதில் பெரியவர் ஒருவருக்கு ஆதரவாக கருத்து எழுதும் போது வடிவாக என்ன நடந்தது என விசாரித்து விட்டு வந்து எழுதினால் நன்றாக இருக்கும்... சாந்தி அக்கா நேசக்கரத்தை நடத்துவதால் அவர் என்ன சொன்னாலும்,செய்தாலும் யாழில் இருக்கும் மற்றவர்கள் பார்த்து விட்டு சும்மா இருக்க வேண்டுமா?.. .இதே நிலைமை நாளை உங்களுக்கும் வரும் அண்ணா...போராட்டத்தை கொச்சைப்படுத்தல்,தனி மனித தாக்குதல் என்று சாந்தி அக்காவின் பாதை தற்போது வித்தியாசமானது.

ரதி! மிகச்சரியான கருத்துக்கள்..இதைத்தான் நானும் கேட்டன்... பதிலாக ஏதொவெல்லாம் கதைக்கிறார்கள்...அவர்கள் மக்களுக்கு உதவுகிறார்கள் என்பதற்காக எதையும் கேள்விகேட்பது நல்லதல்ல போன்று போகும் விசுகு அண்ணாவின் கருத்துடன் என்னால் உடன் பட முடியாதுள்ளது..விசுகு அண்ணா நான் கருத்துக்களத்தில் மிகவும் மதிக்கிற ஒருவர்...அவர் எந்தக்கோணத்தில் இதைப்பார்க்கிறார் என்பது புரியவில்லை...குருக்கள் ஏதோ செய்தால் தப்பில்லையாம்..அப்படி என்ற கருத்து நிலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று...

நன்றிகள் தங்களது கருத்துக்கும் என் மீதான மதிப்புக்கும்

நானும் பல விடயங்களில் முரண்பட்டிருக்கின்றேன் சாந்தியக்காவோடு....

(பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் ஏற்பட்ட சச்சரவுக்கு அவருக்கு காட்டமாக அந்தநேரமே நான் எழுதியிருந்தேன். அதற்கு காரணம் அவரது பணி எம் மக்களைச்சென்றடைவதற்கு எந்த தடையும் வரக்கூடாது என்பதுதான்.)

இங்கும் பல திரிகளில்முரண்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றேன்.

ஆனாலும் அவரை நான் மதிக்க காரணம்

1. பத்து பேருக்கு கஞ்சி ஊத்தும் அவரது பணியில்குறுக்கிட்டு பானையை தட்டிவிடும் வேலையை செய்ய விரும்பாமை

2. போராட்டத்தின் உச்ச காலங்களில் அவர் எம்மோடு இருந்து செய்தவற்றை நான் அறிவேன். அது எம் எல்லோரின் பங்களிப்புக்கு எந்தவிதத்திலும் குறைவானதல்ல. (தனது சொந்த வீட்டின் முத்தத்தில் ஈழத்தில் இனப்படுகொலை நடக்கிறது என எழுதிவைத்த ஒருவர் அவராகத்தான் இருக்கமுடியும்.)

எனவே தயவுசெய்து பேசித்தீர்ப்போம் எமது சிக்கல்களை.

மேலும் மேலும் பிரிவுகளும் சச்சரவுகளும் தாயக மக்களை மேலும் மேலும் துன்பப்படுத்தும். சிங்களத்தின் காலடி நோக்கி ஓடவைக்கும்.

Link to comment
Share on other sites

நெல்லையன் கடைசிவிளக்கத்தோடு உங்களுடனான கருத்தாடலிலிருந்து விலகுகிறேன்.

தமிழ்த்தேசியம் பற்றி மே முடிவோடு நீங்கள் போட்டுத்தாக்கின தாக்கு அதாவது தலைவர் முதல் பலரை மற்றும் நெடியவன் றெஜி என ஒருவரையும் நீங்கள் விட்டுவைக்கவில்லை. மட்டுறுத்திகள் கலைச்சுக்கலைச்சு கத்தி போட்ட கருத்துக்களை நான் சேமிக்கவில்லை. அதையெல்லாம் இந்தக்களம் மறந்து போய்விட்டது. தமிழ்த்தேசியம் என்ற பெயரை இப்போது கெட்டியாய் பிடிப்பது போல உங்கள் கருத்துகளை எழுதியவுடன் பழையவை எல்லாம் மறக்கப்பட்டுவிட்டது.

உங்கள் சொந்தக்கருத்தென்று எழுதியதை விட அவர் சொன்னார் அப்படி நடந்திச்சாம் இப்படி நடந்திச்சாம் என்ற உங்கள் 3ம்நபரின் கேள்விக்கதைகளை வைத்தே கருத்து எழுதினீர்கள். உங்கள் எழுத்து மட்டும் சரி அதற்கு கருத்து எழுதக்கூடாது. அது உங்கள் சட்டம்.

அண்மையில் உமையுடன் றெஜி பற்றி தீபம் தொலைக்காட்சி பற்றி முரண்பட்டீர்கள். உமையின் கருத்துடன் எனக்கு உடன்பாடு இருந்ததால் உமைக்கு பச்சையிட்டேன். அதற்கு அடித்துவிழுந்து வந்து நீங்களும் நெருப்பு நீலமேகமும் என்ன எழுதியிருந்தீர்கள் ? அது மட்டுமல்ல எனக்கு சம்பந்தமில்லாத அரசியலாயளர்களுடன் தொடர்படுத்தியிருந்தீர்கள். ஒரு தரமில்லை பலமுறை. (தேசிதத்தை நேசிக்கும் பண்ணு இதுவோ தெரியாது)

கைதி சதீஸ் விடயம் பற்றி எழுதியபோது நெடுக்குவும் நானும் விவாதித்தோம் ஆனால் நெடுக்கு நீங்கள் எனக்குத் தந்த பட்டத்தை ஓரிடத்திலும் தரவில்லை. தனது கருத்தைத் தான் கடுமையாக எழுதியிருந்தார். அதற்குள் வந்த நீங்கள் சதீஸ் இலங்கையரசின் கூலியென்று கருத்து எழுதினீங்கள். சதீஸ் அவனது குடும்பம் நாட்டுக்காக வாழ்ந்ததைத்தவிர வேறெந்தக் குற்றமும் செய்யவில்லை. அதற்கு அவனுக்கு நீங்கள் வழங்கிய பட்டம் அந்தத்திரியில் சில உள்ளது பல மட்டுறுத்தினர்களால் வெட்டப்பட்டது பாருங்கோ.

சதீஸ் ஒரு உதாரணம் அவன்போல இன்னும் பலலநூறுபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அதற்காக பேயைக்கூட வணங்கவும் நான் தயாராகத்தானிருக்கிறேன். தினமும் வருகிற கடிதங்கள் கண்ணீர்க்கதைகள் என்னால் தேசியம்பேசி நடிக்க முடியவில்லை. யதார்த்தை உணர்ந்து அந்த மக்களும் மண்ணும் காக்கப்படுவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதில் அக்கறைப்படுகிறேன்.

எனது எழுத்துகள் பற்றி:

எனது எழுத்துக்களில் எல்லாவற்றையும் எழுதுகிறேன் சரி பிழை யாவையும் விமர்சனங்களோடு. ஒரு எழுத்தாளர் தனது எழுத்துக்களில் இதைத்தான் எழுத வேண்டுமென்ற சட்டத்தையோ அல்லது ஒரு கருத்தாளரின் கருத்தை இப்படித்தான் எழுது என்று சட்டமிட யாருக்கும் உரிமையில்லை. எனது எழுத்து மீது எப்படியான விமர்சனத்தையும் வையுங்கள். அதில் எனக்கு வேறு கருத்தில்லை. பொது மேடையில் ஒரு எழுத்தை ஒப்படைக்கிற போது எல்லா விமர்சனங்களும் வரும் வரவேண்டும் அதுதான் சரியான கருத்துமேடை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில்:-

மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் மக்களுக்கு செய்த அநீதிகளை எழுதியிருக்கிறேன். அதில் ஒன்றும் குற்றமில்லை. வேணுமானால் உரியபாராளுமன்ற உறுப்பினர்களை பொதுமேடைக்கு அழையுங்கள் நான் நேரடிவிவாதத்துக்க வருகிறேன்.

மேன்மை தங்கிய சிறீதரன் அவர்கள் நான் வெளிப்படையாக எழுதுவதற்கு முன்னர் நேசக்கரம் ஒழுங்கு செய்த குழந்தைகள் பலரது உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தவர்களை அணுகி அவற்றைத் தனக்கு ஊடாக வழங்குமாறும் பல உதவிகளைத் தடுத்து நிறுத்திய பெருமைக்கு உரியவர். அவர் பங்கு வகிக்கும் கட்சியில் உள்ள இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரனை முன்வைத்து ஒரு அமைப்பு உதவியை வழங்கியிருந்தது. அந்த உதவி வழங்கலில் நாம் பொறுப்புக் கொடுத்த மாணவர்களும் 62பேர். அதனை சிறீதரன் ஐரோப்பிய சுற்றலாவில் வந்த நேரம் மாற்று இயக்கக்காரன் சுரேஸ் பெயர் வாங்குகிறான் என்னிடம் தாருங்கள் நான் விலாசமில்லாமல் உதவியைக் கொடுக்கிறேன் என்று உரியவர்களைக் குழப்பியடித்தார். குறித்த உதவியை வழங்கியவர்களில் சிலர் சிறீதரன் ஊடாக கொடுப்போம் எனவும் மறுதரப்பு சிறீதரன் வேண்டாமென்ற இழுபறியில் பல பிள்ளைகளது கல்வியுதவி நாசமாக்கப்பட்டது. ஒரே கூட்டமைப்பு அதற்குள்ளிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு நிகழ்வில் கலந்தால் சிறீதரனுக்கு ஏன் அதை பார்த்து மகிழ்ச்சிப்பட முடியாது போனது ? இதுபற்றி நிறையவே எழுதலாம் ஆனால் வேண்டாம்…..

(மேன்மைதங்கிய பாராளுடன்ற உறுப்பினர் சிறீதரன் நான் இலங்கையில் இறங்க முடியாதமாதிரி வழக்கு போட்டு வைத்திருக்கிறதாகவும் இலங்கைக்கு வந்தால் விமான நிலையத்தில் வைத்து என்னைக் கைது செய்யும் உரிமையை வைத்திருக்கிறேன் இயலுமானால் இலங்கைக்கு வா பார்ப்போம் என்று என்னிடம் சபதம் செய்திருக்கிறார்.. ஒரு நாட்டின் விமானநிலையத்தில் கைது செய்யும் உரிமை பெற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் நாங்கள் பயந்து தன் வாழ வேண்டும். இது மட்டுமில்லை சிறீதரன் தனது அடியாட்களை தனது சகோதரனை வைத்து செய்தவற்றையெல்லாம் எழுத முடியவில்லை.) அத அவரது உரிமை. அதையும் விடுவோம். உங்கள் பாலியல் வக்கிரத்துக்கு நிகராகவே சிறீதரனும் நடந்து கொண்டார். அதன்பின்னரேயே நான் பொதுமேடையில் எழுத வேண்டி வந்தது.

சிவசக்தி ஆனந்தனின் தேவையற்ற தலையீட்டால் 20 குடும்பங்களுக்கான உதவி தடையானது. இன்றுவரை அந்தக்குடும்பங்களுக்கான நிரந்தர உதவியை ஒழுங்கு செய்ய முடியாதுள்ளது. அதுவும் ஊனமுற்ற இடுப்பின் கீழ் நெஞ்சின் கீழ் கழுத்தின் கீழ் உணர்வற்ற முன்னாள் போராளிகள் அவர்கள். இந்த 20 குடும்பத்துக்கு ஒரு வழியை உங்களால் எற்படுத்திக் கொடுக்க முடியுமா ?

ஒவ்வொருவருக்கான உதவியை ஒழுங்குபடுத்த உங்கள் போன்ற தேசிய உணர்வுமிக்க கருத்தாளர்களையெல்லாம் தாண்டி எத்தனையோ சிரமங்களுக்கால் ஒழுங்கு செய்து அப்பாடா 20 குடும்பம் இனி உயர்ந்துவிடும் என்று மூச்சுவிட ஒருநாள் சுற்றுலாவில் போய் அத்தனையையும் நாசம் பண்ணினால்….நீங்கள் பொறுத்துக் கொண்டு ஐயா பெரியவரே எங்கள் பாராளுமன்ற உறுப்பினரே என்று ஜால்ராவா போடுவீர்கள் ?

மற்றும் நீங்கள் குறித்த ஊடகவியலாளர் பற்றி இந்த யாழ்களம் நிறையவே அனுபவப்பட்டுள்ளது. அவரை பிளாக்மெயில் பண்ணியதான உங்கள் கண்டுபிடிப்பு. அது உங்களது.

அதே ஊடகவியலாளரை நீங்களே நான் எழுதிய கட்டுரையின் கீழ் ஒரு கருத்தால் மதிப்பிட்டிருந்தீர்கள். நேற்று எனக்கு வைத்த குற்றச்சாட்டு போல அவர்பற்றி வைத்திருந்தீர்கள். அந்த மதிப்புமிக்க ஊடகவியலாளர் நீங்கள் செய்கின்ற கீழ்த்தரமான எழுத்துகளுக்கு மேலாக நேசக்கரம் பற்றி என்னைப்பற்றி மின்னஞ்சல் புரளி நூற்றுக்கணக்கில் அனுப்பியது மட்டுமில்லை நான் பணியாற்றிய வானொலிகளில் இருந்த நண்பர்கள் யாவரையும் முடிச்சிட்டு எழுதிய மடல்கள் பற்றி அறிந்தீர்களா ? எனக்கு முகமே தெரியாதவர்களையெல்லாம் இணைத்து கதைபுனைந்தது தெரியுமா ?

இறுதியாக ஜீவாவின் உதவி பெற்றவரை உள்ளைபோடுவித்தார்களா போட்டார்களா என்றெல்லாம் பெரும் புலனாய்வு செய்தீர்கள். அதுகூட உங்களுக்கு சம்பந்தமில்லாத விடயம். ஆனால் பூனைக்கு மணிகட்ட சங்கிலிக்கயிற்றோடு வந்த பெருமையில் நுளைந்தீர்கள். ஜீவா கடிதம் படம் தொடர்பு எதையும் *ஒண்டும் அனுப்ப வேண்டாம் அக்கா நான் பாக்கமாட்டேன் என்னுடைய உதவி சரியாக கிடைச்சிருக்கென்பதை நம்புகிறேன்* என்று தான் மடலிடுவார். ஆனால் நான் எனது கடமையை சரிவரச்செய்துள்ளேன்.

உங்கள் தேசியப்பற்று உங்களுக்கானது. ஆனால் தேசியத்தின் பெயரால் நீங்கள் தேசியத்தை குத்தகை எடுத்தமாதிரி மணிகட்ட வெளிக்கிடும் உரிமை உங்களுக்கில்லை. தேவையற்று என்னை தேவையற்றவர்களுடன் முடிச்சுப்போடுகிற போது அதற்கான ஆதாரங்களையும் கொண்டு வாருங்கள். கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள் சொல்கிறார்கள் கதைக்கிறார்கள் என்று 3ம்4ம் நபர்களின் கதைகளை ஊகங்களை எங்கள் மேல் சுமத்த வேண்டாம்.

நாம் ஒரு தொண்டு அமைப்பை நடத்துகிறோம் என்பதற்காக எங்கள் வீட்டுக்குள் நுளைந்து அதிகாரம் செலுத்த வேண்டாம். நெல்லையனுடன் தான் நான் கருத்தாடினேன். நெல்லையனின் மனைவியை மகனை மகளை நான் தூற்றவில்லை. பாலியல் வக்கிரத்துடன் எழுதவில்லை. இதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் துப்பல்கூட எங்கள் மேல் விழுந்தால் உங்கள் துப்பலின் தூய்மை அழிந்துவிடும் புனிதம் மிக்க உங்கள் துப்பலை நீங்களே மென்று கொள்ளுங்கள் அல்லது வசதியான இடத்தில் துப்புங்கள்.

இத்தோடு இனி உங்களுடன் எந்தக்கருத்திலும் பதிலிடமாட்டேன். ஆனால் நான் பதிலிடும் கருத்துக்களில் அடிச்சுவிழுந்து வந்து பின்மறை எதிர்மறையாக கே.பி கோத்தா அவர் இவர் கதை சொல்ல வேண்டாம். உங்கள் புனிதத்தை நீங்கள் கவனமாகப் பாதுகாருங்கள் உங்கள் தேசிய உணர்வோடு.

கருத்துச்சுதந்திரம் மற்றவரது கருத்துரிமையை மதித்தல் என சுதந்திரம் நாகரீகம் நிறைந்த இந்த நாடுகளில் இருந்து கொண்டு இன்னொருவரின் கருத்துக்கு தமிழ் ஆண்தன்மையில் பதில் தருவதுதான் உங்கள் பெருமை அல்லது திறமையென்றால் அது உங்களதாவே இருக்கட்டும்.

இறுதியாக :- நான் சாந்தியாகவே உங்களுடன் கருத்தாடினேன். ஆனால் நீங்கள் தேவையில்லாது நேசக்கரத்தை இழுத்தீர்கள். கருத்துக்கு கருத்தின்றி பாலியல் வக்கிரம் மிக்க எழுத்தை எழுதியதும் நீங்கள். என்னாலும் உங்கள் பாலியல் வக்கிரத்துக்கு பதில் எழுதியிருக்க முடியும். ஆனால் அந்தளவுக்கு தரம்தாழ்ந்து போகும் வக்கிரம் என்னிடம் இல்லை.

நன்றி

வணக்கம்.

பிற்குறிப்பு :- காக்காக்கள் ஒருவரும் கருத்தை தூக்கிப்போக வேண்டாம். :lol:

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா உங்களுக்கும்,நெல்லையனுக்கும் என்ன பிரச்சனையோ எனக்குத் தெரியாது ஆனால் "மீண்டும் தொடங்கும் வன்முறைக் காலாச்சாரம் காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ்" என்னும் தலைப்பில் முதலில் நெல்லையனை இழுத்து எழுதியது நீங்கள் தானே அக்கா...

ரதி,

எனக்கு நெல்லையனை யாரென்றும் தெரியாது நான் ஒரு நாளும் பார்த்ததுமில்லை எந்தப்பிரச்சனையுமில்லை. ஆனால் அவர் தானே தேவையற்று எனது கருத்துக்குள் நுளைந்து கோத்தா கேபி கதையெழுதி ஆரம்பித்து வைத்தார். ஒருமுறையல்ல பலமுறை. அதை நீங்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. எந்த இடத்திலும் நான் நெல்லையனையோ அவரது கருத்துகளையோ தாண்டிய விவாதத்திற்குள் செல்லவில்லை. உங்களைச் சங்கடப்படுத்தியமைக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் ரதி.

Link to comment
Share on other sites

இன்று எனக்கு வந்த ஒரு மெயில் ... பெயர்களையும், அமைப்புக்களையும் ... 40 நாள் கோட் நோட்டீசுக்கு அஞ்சி எடுத்து இருக்கிறேன் ... ஏனையவை உங்கள் சுய முடிபிற்கு விட்டு விடுகிறேன் ... நன்றிகள் ...

நெல்லையான் அண்ணாவிற்கு,

அண்ணா, இதை நான் எழுதுகிறேன், இதில் உள்ளவைகள் உங்களுக்கு உதவக்கூடும், தயவுசெய்து எக்காரணம் கொண்டும் என் பெயர், மெயில் முகவரிகளை பகிரங்கப்படுத்தி விடாதீர்கள், உங்களை முழுமையாக நம்பித்தான் இதை எழுதுகிறேன்.

நீங்கள் யாழில் எழுதத்தொடங்கி இருக்கும் "பாவம் செய்யாதீர்கள்" தொடர் பார்த்தேன், நன்றிகள் அண்ணா. உண்மைகள் வெளியே சொல்லப்பட வேண்டும், இங்கு வெளிநாடுகளில் நாம் கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் ஓர் பகுதியை, ஊரில் போரினால் பாதிக்கப்பட்ட சனத்து அனுப்புகிறோம், நான் இங்கிருந்து அனுப்புகிறோம் என்பது, எம்மிடம் மிதமிஞ்சியதை அல்ல, நாம் எம் சில தேவைகளை கட்டுப்படுத்தித்தான். ஆனால் அம்மக்களுக்கு நாம் அனுப்பும் எல்லாம் கிடைப்பதாக தெரியவில்லை. இங்குள்ள முகவர்களும், முகவர்களின் அங்குள்ள எடுபிடிகளும் அதற்கு மேல் இலங்கை அரச இயந்திரமும் பலதை சுரண்டுகிறது. ஆனால் ஏதோ கொஞ்சமாவது போய் சேரட்டும் என்ற ஆதங்கத்தில் தான், பல கதைகள் கேள்விப்பட்ட போதிலும் திரும்பத்திரும்ப கொடுக்கின்றோம்.

அண்ணா, அப்படி கொடுப்பவர்களும் புலிகளின் ஆதரவாளர்கள் தான். அவற்றுக்கு மேல் இப்படி கொடுப்பவர்களில் பலர் இன்றும் சில தேவைகளுக்காக சிலவற்றை செய்து கொண்டிருப்பவர்கள். சில தினங்களுக்கு முன் உங்களுக்கு நடைபெற்றதை நான் யாழில் பார்த்துக் கொண்டிருந்தேன். உவை உங்கு பலருக்கு அதிசயமாக இருந்திருக்கும், ஆனால் நான் மட்டுமல்ல இவர்களை நன்கு தெரிந்த சிலர் இதை பார்த்திருந்தாலும் ஆச்சரியபட்டிருக்க மாட்டார்கள். எனக்கு உந்த ****** அமைப்பையும், ***, **** இருவரையும் நன்றாக தெரியும். இவர்கள் கடந்த காலங்களில் இதையே செய்து வந்தவர்கள் புலிகளின் பெயரில்.

என் சொந்த அனுபவம், என்னோடு மிக நட்பாக பழகி, தொடர்சியான தொலைபேசி உரையாடல்களை *** அடிக்கடி செய்வார். நானும் நம்பி பலவற்றை கதைத்து முடித்தேன். பின் ***யின் நடவடிக்கைகளில் நான் அதிருப்தியுற்ற நேரத்தில், நான் முன்பு ***யுடன் கதைத்த உரையாடல்களின் ஒலிப்பதிவுகளை போட்டு மிரட்டினார். அண்ணா, இதே ***, ***** பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டபோது நான் உட்பட பலர் துடித்தோம், என் பணத்தை இவர்களை வெளியே கொண்டுவர செலவழிக்க கூட தயாராக இருந்தேன், அப்படியான எனக்கே சொல்லமுடியாத மன உழைச்சலை தந்தவர்தான் இந்த ***.

இவர்களினது ****** அமைப்பைப் பற்றி இப்போது வருகிறேன், அண்ணா, இவர்கள் முன்பு புலிகளின் அமைப்பொன்றில் தாம் முக்கிய பொறுப்பாளராக இருப்பதாகவே மே18 இற்கு முன்னம் மட்டும் காட்டி வந்தவர்கள். எவ்வாறு இந்த ****** அமைப்பு, அங்கு எந்தவொரு உதவி வழங்கும் மனிதாபிமான நிறுவனங்கள் கூட செல்ல முடியாத இடத்தே சென்றார்கள் என்று நீங்கள் சிந்தித்தீர்களா? அதுவும் புலிகளின் ஐரோப்பிய முக்கிய ஆதரவாளர்கள் என ஊடகங்கள் மூலம் நன்கு அறியப்பட்ட ***, **** போன்றோரின் அமைப்பு அங்கு பணி செய்ய அனுமதிக்கப்பட்டது?

அண்ணா, உங்கள் முக்கிய குற்றச்சாட்டு, ****** என்ற ***, ****யின் அமைப்பானது **யுடன் தொடர்பு என்பதே. உங்கள் ஊகம் கிட்டத்தட்ட சரிதான். உண்மையில் இது **யிலும் பார்க்க, மகிந்தவின் இன்றைய ஒருங்கிணைப்பாளராக இருக்கும், முன்னால் வன்னி மாவட்ட எம்பி ***ன் ஒருங்கிணைப்பில் தான் இந்த ***** செயற்படுவதாக நான் நினைக்கிறேன்

இந்த முன்னால் வன்னி எம்பி ***, செஞ்சிலுவை சங்கத்தில் வேலை செய்த நேரம் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக, சிறையில் போடப்பட்டு பின் வெளி வந்து எம்பியானது தெரிந்ததே. ஆனால் இந்த சிறை எல்லாம் நாடகமே என புலிகளின் தலைமைக்கு சிலர் எடுத்துக் கூறியும் அவர்கள் அப்போ நம்பவில்லை. இன்று *** எங்கிருக்கிறார் பாருங்கள்?

அண்ணா, முன்பு ****யானவர் **யுடன் கம்போடியாவில் இருந்து செயற்பட்டது பலருக்கு தெரியாமல் இருக்கும், ஆனால் அத்தொடர்பு இன்றுவரை தொடர்வதாக நம்புகிறேன். மே18இற்கு பின்னர் பிரான்சில் **** செய்த குழறுபடிகளின் பின்னணி அந்த **யே! **யின் ஏவலில் தான் இவர் செயற்பட்டதாக பிரான்சில் பல ஆதரவாளருக்கு நன்கு தெரியும்.

அடுத்து, இந்த ***யானவர், அந்த முன்னால் எம்பி *** அவர்களின் உறவினர் என்பது உங்களுக்கு தெரியுமா? என்னைப் பொறுத்தவரை இவர்களின் இன்றைய பல கூத்துக்களின் காரணகர்த்தா அவர்தான். அவரின் ஏவலின் பெயரிலேயே இவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்பி ***** மேல் தேவையற்ற குற்றச்சாட்டொன்றை சுமத்தி, அவருக்கு தேவையற்ற மனவுழைச்சலை கொடுத்தவர்கள். அதன் பின் அவர் உயிருக்கு அங்கு குறி வைக்கப்பட்டதும் எல்லோருக்கும் தெரிந்ததே.

இவற்றை வைத்து கூட்டிக் கழித்துப் பாருங்கள், உங்களுக்கே இந்த ***, ****யினால் இயக்கப்படும் அந்த *****த்தின் பின்னணி புரியும்.

அண்ணா, தயவுசெய்து இத்தொடரை தொடருங்கள். உண்மைகள் வெளிவரட்டும். பிழை செய்தோர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கட்டும். இனியும் பிறரின் தொலைபேசி அழைப்புக்களை களவாக ஒலிப்பதிவு செய்தல்கள் நிறுத்தப்பட வேண்டும். பிறரை மிரட்டுவதுகள் நிறுத்தப்பட வேண்டும்.

அண்ணா, நான் மீண்டும் விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

இப்படிக்கு

***** *******

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசகஇகரத்துக்கு நான் சொல்லும் ஆலோசனை உங்கள் கடைமையை நீங்கள் செய்யுங்கள்.

யூன்மாதம் நானும் எனது மனைவி குழந்தைகளும் இலங்கைபோயிரந்தோம். நேசக்கரத்தில் விளம்பரம் செய்யப்பட்ட பல்கலைக்கழகமாணவர் ஒருவருக்கு ஒருவருடம் உதவினேன். ஊர் போனபோது அம்மாணவனையும் சந்தித்தோம். நேசக்கரத்தின் ஆதரவு இல்லாது இருந்திருந்தால் அவன் தற்கொலை செய்திருப்னே் என கண்கள் கலங்கச் சொன்னான். எனது மனைவி அழுதுவிட்டாள். அப்படி உதவிகள் சரியாக போகின்றதை அறியக்கூடியதாக இருந்தது. சிலஊர்கள் நேசக்கரம் நம்பிக்கை ஒளி ஆகிய நிறுவனங்கள் மட்டுமெ தங்களுக்கு உதவியதாக கூறினார்கள்.

நான் அடிக்கடி கேட்கும் பாடல் ஒன்று -----பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்

போகட்டும் விட்டுவிடு

படைத்தவனிருக்கான்

பார்த்துக்கொள்வான் நீ

பயணத்தை தொடர்ந்து விடு

நீ பயணத்தை தொடர்ந்துவிடு

ஐந்து விரல்களும் ஒன்றாயிருக்கும்

மனிதன் உலகில் கிடைப்பானா?

அத்தனை பேர்க்கும் நல்லவனாக

ஆண்டவன் கூட இருப்பனா?

உலையின் வாயை மூடும் கைகள்

ஊரின் வாயை மூடிடுமா?

நரம்பிலாத நாவால் எதையும்

வரம்பில்லாமல் கூறிடுவார்

இருந்தால் வருவார்

இழந்தால் பிரிவார்

நாளுக்கு நாள்தான் மாறிடுவார்

காய்த்த மரம்தான் கல்லடிபடுமென

கண்கூடாய் நாம் பார்த்ததுண்டு

ஞாபகத்தில் நின்ற வரிகளை எழுதியுள்ளேன்.

நாலுபேருக்கு நல்லதை நினைப்போம். உதவாவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் இருப்போம்.

Link to comment
Share on other sites

இன்று காலை எழுந்து எனது மின்னஞ்சல் பெட்டியை பார்த்தேன் சுமார் பத்திற்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்திருந்தன. பெட்டியை திறந்ததும் கடிதங்கள் கீழே கொட்டியது. கொட்டிய கடிதங்களை பொறுக்கி பார்த்தேன் அவை அமெரிக்கா .ஒஸ்ரேலியாஆபிரிக்கா சீனா என பலநாடுகளிலிருந்தும் வந்திருந்தன அத்தனையையும் பிரித்து படித்தேன் என்ன ஆச்சரியம் அத்தனையும் ஒரே கடிதம் அதனை இங்கு உங்கள் பார்வைக்காகவும் இருகிறேன்.

அன்பின் சாத்திரியண்ணா

நான் எழுதுவது என்னவெனனில் அ ...................... --------------------- ------------------ ------------ ***************** க்------------------------ --------------------------- ............................... ************************** ஞ் **-------------------- ************************ ..................................... ம்;;; *********************** --------------------------------- ................................................... ***************************************** ன் .......------------------------------- ..................................... ************************ ம் ********************************* ..................................... ---------------------------------- ங் *************************************** ....................................... ************************* ட் ........................................... ************************************** .................................. த் **************************** ப் .............................................. ர் ------------------------------------ ஸ் ..................................... ய்--------------------------------------- ................................................... ***************************** ன்;;;

***************************

நன்றி வணக்கம் இப்படிக்கு

************************************

மனித நாகரீகம் கருதி கடிதத்தின் பல வசனங்களை நீக்கி அங்கு கோடுகள் புள்ளிகள் மட்டும் இட்டிருக்கிறேன். கோலம் போட விரும்புபவர்கள் போடலாம்.

கடிதத்தினை அனைவரும் படித்திருப்பீர்கள். கடிதத்தினை இலகுவாகப்படிப்பதற்கு சிறு உதவி நீலத்திலான எழுத்துக்கள் மென்மையானதும் பாசமான வார்த்தைகள் ஆகும் பச்சையிலான எழுத்துக்கள். பச்சை பச்சையான வசனங்கள் ஆகும் சிவப்பிலான எழுத்துக்கள் மோசமானதும் வன்முறையை தூண்டும் வார்த்தைகள் ஆகும்.

Link to comment
Share on other sites

... ம்ம்ம்ம் ஏதோ எழுதப்போட்ட தலைப்பு ...எங்கேயோ ... நல்லது நடந்தால் சரிதான்! ... வந்த இன்னொரு மடல் ... :lol:

... சாந்தி, சாஸ்திரியால் நடத்தப்படும் இவ்வமைப்பானது மனிதாபிமான அமைப்பா???? இல்லை மாபியா அமைப்பா???? ... ஏன் இந்தக்கேள்விகள்??? ... கூகிழில் தேடினால் ...

... "இன்னொருவரின் அனுமதி அற்று அவரின் உரையாடலை ஒலிப்பதிவு செய்வது கிரிமினல் குற்றம்! அதற்கு மேல் அவரின் அனுமதியுடன் ஒலுப்பதிவு செய்ததாயினும், அவரின் அனுமது அற்று வெளியிடுவதும் கிரிமினல் குற்றம்" .... :o

... இங்கு கேள்வி என்னவென்றால் அண்மையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு யாழில் பதியப்பட்ட ஒலிப்பதிவுகள் .. நேசக்கரம் எனும் அமைப்பின் சார்பில் களவாக ஒலிப்பதிவு செய்யப்பட்டவையா???? :blink:

... இதில் நேசக்கரம் சம்பந்தப்படுமாயின், சட்டத்தினால் அதன் செயற்பாடுகள் முடக்கப்படக்கூடிய சூழ்நிலையும் எழலாம்???? :o

மு.கு: "?????" - இது கேள்வி அடையாளம் :lol:

Link to comment
Share on other sites

ரதி,

எனக்கு நெல்லையனை யாரென்றும் தெரியாது

முழுப்பூசனிக்காயை ஒரு பிடி சோற்றினுள் மறைக்கும் முயற்சி!! ... என்னை யாரென்று தெரியாது ??? அப்படியாயின் ... 1) என்னால் உங்களுடன் படதடவை தொலைபேசி மூலம் கதைத்ததை நீங்கள் ஒலிப்பதிவு செய்து வைத்திருப்பது... என்று இங்கு யாழிலேயே கூறியது? 2) முகப்புத்தக இணைப்பு(தற்போது துண்டிக்கப்பட்டிருக்கிறது)? ... எல்லாவாற்றுக்கும் மேல் ஏறக்குறைய ஏழெட்டு வருடங்களுக்கு முன் இங்கு யாழ்களத்தில் உலாவிய ஒருவருக்கு, உம்மோடு வேறு ஒரு விடயத்துக்கு தொடர்பு கொண்டு என் தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி தந்தேன், அதனை அப்படியே ஒப்படைத்தீர்கள்!

கருத்துக்கு கருத்தின்றி பாலியல் வக்கிரம் மிக்க எழுத்தை எழுதியதும் நீங்கள். என்னாலும் உங்கள் பாலியல் வக்கிரத்துக்கு பதில் எழுதியிருக்க முடியும். ஆனால் அந்தளவுக்கு தரம்தாழ்ந்து போகும் வக்கிரம் என்னிடம் இல்லை.

ம்ம்ம்... நான் இரகசியமாக கொழும்பு சென்றதாகவும், பல முக்கிய புள்ளிகளை சந்தித்ததாகவும் எழுதுதியிருந்தீர்கள்! ... நான் இரகசியமாக போனதும், அங்கு பெரும் பெரும் புள்ளிகளை சந்தித்ததும் உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும் என்ற கேள்விக்கு விடைகள் எதுவாக இருக்கலாம் என்பதற்கு நாலு விடைகளை போட்டேன் ... அது உமக்கு வக்கிரகம்! ... ஆனால் எனக்கு நீர் எழுதியது வக்கிரகம்!

நாலுபேருக்கு நல்லதை நினைப்போம். உதவாவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் இருப்போம்.

அண்ணை, நான் உந்த நேசக்கரம் மூலம் ஒரு குடும்பம்(அதுவும் என்னால் உறுதியளிக்கப்பட்டதற்கு மேல் மாதாமாதம் போய்க்கொண்டிருக்கிறது!), அருகிலுள்ள ஆலயம் மூலம் இன்னொரு பிள்ளை, அதற்கு மேல் ஓர் முக்கிய எம் ஊடகம் ஒன்றுக்கு மாதாமாதம் £25. ... உவைகளை கொடுக்க நான் செல்வந்தகனில்லை, மனமிருந்து கொடுக்கிறேன். ஒவ்வொரு சனியும் கூடுதலாக வேலை செய்து சமாளிக்கிறேன்! ... எங்கே உந்த நிர்வாகிகள் கூறட்டும்

... நாங்கள் கணக்கு வழக்கு வைத்திருக்கிறோம் ... காட்டுகிறோம் ... எத்தனை கணக்கு வழக்குகள் காட்ட வேண்டும்??? சொல்லுங்கள் நான் தயார் செய்து தருகிறேன் ... ... சொல்லாதீர்கள்!

யாராவது அங்குள்ள மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமாயின் பல ஆலயங்கள் மிக சிறப்பாக செய்கின்றன. ஆனால் இங்கு யாழில் ஏதோ தாம் தான் செய்கிறோம் என பிரமையை உருவாக்குவதில் ...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே

தலைவர் தான் முன்னிற்காவிட்டாலும் ஒவ்வொரு தமிழனும் முன்னின்று செய்வதற்கு எத்தனையோ பாதைகளை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.

எனவே மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிராமல் எம்மால் செய்யக் கூடிய அத்தனை பாதைகளையும் பயனபடுத்தி எமது மக்களுக்காக உழைப்போம்.

இங்கு ஆளாளுக்கு கல்லெறிவதை விட நாங்கள் வசிக்கும் நாட்டில் பாரளுமன்ற உறுப்பினர் பிரதமர் என்று எத்தனையோ பேர்களுக்கு கடிதங்கள் எழுதி அவர்களின் கவனத்தை ஈர்க்கலாம்.அவர்களுக்கு கடிதம் எழுதுவதற்கு ஆகொதா போன்றவர்களின் உதவியை நாடலாம்.எத்தனையோ விதத்தில் சாதிக்க இருந்தும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

நல்லதைச் செய்யுங்கள் இன்றே செய்யுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி வீண் சச்சரவுகளையும், குற்றச்சாட்டுக்களையும் பதில் குற்றச்சாட்டுக்களையும்தான் காவி வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லையன் நான் போன இடங்களில் நேசக்கரத்தினைப்பற்றி நல்ல அபிப்பிராயத்தைத்தான் கேட்டேன். யாழ் பல்கலைக்கழகம் வடமராட்சியில் சில ஊர்கள் உடுவில் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலபேர் தங்களுக்க படிக்க உதவியும் துவிச்சக்கர வண்டியும் நேசக்கரம் தந்ததென்று சொன்னார்கள். நீங்கள் எழுதம் கருத்துகள் எனக்கு உங்கள் பொய்யான குற்றச்சாட்டுகள் என்றுதான் தெரிகிறது. தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் இந்த நேரம்தான். இதனை விட்டால் வேறு எனக்கு எழுத தெரியவில்லை.

ஊருக்கு போக முதல் நான் நினைச்சதுகள் எல்லாம் அங்கைபோனதற்கப்பிறகு கவலையோடுதான் திரும்பி வந்தேன். எவ்வளவு நல்லா இருந்த குடும்பங்கள் குழந்தையள் இருக்கும் நிலமை சொல்ல முடியாது உள்ளது.

Link to comment
Share on other sites

.... நேசக்கரம் சட்ட வரைபுகளிற்கு ஏற்ப 40 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

34 or 35 days to go ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.