Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் + பாசிபருப்பு சாம்பார்

ponal.jpg

பச்சரிசி - 400 கிராம்

பாசிபருப்பு- 100 கிராம்

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம்- 1 ஸ்பூன்

முந்திரிபருப்பு- 10

நெய் அல்லது டால்டா - 25 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய் முறை

அடுப்பில் சாதம் வடிப்பது போல ஒரு பானையில் 1 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.. கொதிவந்தவுடன் அதில் அரிசையும் பருப்பையும் நன்றாக கலந்து போடவும்.. சாதம் பாதி வெந்திருக்கையில் மிளகை ஒன்றிரண்டாக உடைத்து போடவும் சீரகத்தினை சுத்தம் செய்து அப்படியே போடவும் நன்கு வெந்தவுடன் உப்பு போட்டு நன்றாக கிளறவும்... சாதம் நன்றாக குழைந்து பக்குவதிற்கு வந்தவுடன் சிறிது நெய்யில் அல்லது டால்டாவில் முந்திரியை வருத்து போடவும்... மீண்டும் அடிப்பிடிக்காமல் கிளறவும் .. நன்றாக பக்குவத்திற்கு வந்த உடன் இறக்கவும்..

குக்கரில் செய்பவர்களுக்கு: அதே செய்முறை... 4 விசில் வந்த வுடன் இறக்கவும்.. கடைசியில் நெய்யில் மிளகு சீரகம் முந்திரி ஆகியவற்றை வறுத்து சேர்க்கவும்... நன்றாக கிளறி பிறகு சிறிது நேரம் மூடிவைத்து பிறகு பரிமாறவும்..

பின்குறிப்பு : பொன்னி அரிசியில் செய்தால் சுவை டாப்பு டக்கர்..

+

பாசிபருப்பு சாம்பார்

பாசிபருப்பு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

பூண்டு - 3 பல்

சாம்பார் பொடி - 1 ஸ்பூன்

புளி- சிறிதளவு

உப்பு தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணைய் - 2ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

உளுந்து - 1/2 ஸ்பூன்

கறுவேப்பிள்ளை- சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

செய்யும் முறை:

பாசிபயறு அல்லது தட்டை பயறு எண்ணைய் விடாமல் லேசாக வறுத்து 2 டம்பளர் தண்ணீர்விட்டு வேகவிடவும்.. புளி உப்பை ஊற வைக்கவும்..வெங்காயம்... தக்காளியை நறுக்கிகொள்ளவும். பயிறு பாதி வெந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை போடவும்.. பயிறு நன்றாக வெந்த பின்பு புளி. உப்பு கரைத்து ஊற்றி சாம்பார் பொடியை போட்டு பூண்டு பல்லை தோல் உரிக்காமல் நன்றாக நசுக்கி போடவும். நன்கு கொதி வந்த வுடன் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு சீரகம். உளுந்து கருவேப்பிலை கொட்டி தாளித்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை கிள்ளி போட்டு இறக்கவும்..கம கம பாசிபருப்பு சாம்பார் ரெடி.

இதை பூரிக்கும் தொட்டுகொள்ள சுவையாக இருக்கும்..

நன்றி: ராஜஸ்வரி பதிப்பகம் சிவகாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரி + உருளை கிழங்கு குருமா

Poori+masala+2.jpg

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப்

மைதா மாவு -சிறிதளவு

சீரக பொடி - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடலை எண்ணெய் - ஒரு ஸ்பூன்

கடலை எண்ணெய் - 1/2 லிட்டர்.. (பொரிப்பதற்கு.)

வெதுவெதுப்பான நீர் - மாவு பிசைவதற்கு.

செய்முறை:

கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாக கலந்து சீரக பொடி,உப்பு சேர்த்து கலக்கவும். நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும். பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய் படுமாறு தடவவும்.ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக்கவும். எண்ணையை வாணலில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.

மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளம் போன்று வட்டவடிவு வருமாறு...தேய்க்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள வட்ட வடிவான மாவு உருண்டைகளை.. போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும். ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் ஓரத்திலிருந்து மறுபக்கம் திருப்பவும்..இரு பக்கங்களும் சிவந்ததும் அதை எடுக்கவும்... சுவையான பூரி தயார்.இப்படி ஒவ்வென்றாக ...தேவையான அளவிற்கு சுட்டு வைத்து கொள்ளவும்..பூ‌‌ரி ந‌ன்றாக உ‌ப்‌பி வர வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், பூ‌ரி மா‌வி‌ல் வறு‌த்த ரவையை சே‌ர்‌த்தா‌ல் போது‌ம்.

+

உருளை கிழங்கு குருமா..

தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு - 1

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய்- 8

தக்காளி - 2

பூண்டு - 1

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சோம்பு- 1 ஸ்பூன்

கருவேப்பிலை- கொஞ்சம்

எண்ணை - சிறிதளவு

செய்யும் முறை:

முதலில் உருளை கிழங்கை வேகவைத்து உரித்து வைத்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பூண்டு உரித்தது ஆகியவற்றை பச்சை மிளகாய் நைசாக நறுக்கிவைத்து கொள்ளவும் ..வாணலில் சிறிது எண்ணையை விட்டு காய்ந்தாவுடன் கடுகு உளூந்து சோம்பு கருவேப்பிலை போட்டு தாளித்து சிவந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி பூண்டு மஞ்சள் தூள் இவற்றை போட்டு வதக்கவும் .. நன்றாக வதங்கியவுடன் .. உரித்த உருளையை கையால் பிசைந்தவாறே வாணலில் போடவும். பிறகு சிறிது நீர் விட்டு கொதிக்கவிடவும் ... அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.. பததிற்கு வந்த வுடன் இறக்கவும்..

சுவையான பூரி + உருளை கிழங்கு குருமா தயார்..

நன்றி: ராஜஸ்வரி பதிப்பகம் சிவகாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளுந்து வடை

urudalvada-400x300.jpg

தேவையான பொருட்கள்

தோலுரித்த உளுந்து - 200கிராம்

பச்சரிசி - கைப்பிடி

வெங்காயம்- 1

பச்சமிளகாய்- காரம் தேவைபடும் அளவிற்கு

கருவேப்பிலை கொத்தமல்லி- சிறிதளவு

செய்யும் முறை:

உளுந்தையும் பச்சரிசையும் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்த பின்பு உளுந்தையும் அரிசியையும் போட்டு அத்துடன் உப்பு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக நைசாக அரைக்க வேண்டும் பிறகு கொத்த மல்லி,கருவேப்பிலை.. வெங்காயம் மூன்றையும் பொடிப்பொடியாக நறுக்கி மாவில் பிசைந்து கொள்ளவும்..வாணலில் எண்ணை ஊற்றி காயந்தவுடன் வடைகளை தட்டி போடவும் செந்நிறமாக மாறியவுடன் எடுத்து சாப்பிடவும்...

பின் குறிப்பு ... நடுவில் ஒட்டை போட்டால் ஒட்டவடை.. இல்லாவிட்டால் சாதா வடை... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை உணவு தந்த புரட்சிகரமான தமிழ் தேசியனுக்கு நன்றிகள்

இந்த பூரி + உருளை கிழங்கு இருக்கிறதே. எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இதெல்லாம் காலைஉணவாக உண்பது இல்லை. காலையில் எப்போதும் பான்தான். சமைக்க பஞ்சி எண்டாலும் பசிக்கு பான் தான் கை கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சேமியா உப்புமா + தேங்காய் பொட்டுகடலை சட்னி...

DSC01153.JPG

தேவையான பொருள்கள்:

சேமியா – 200 கிராம் (1 பாக்கெட்)

வெங்காயம் – 1

தக்காளி – 2

குடமிளகாய் – 1

பச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது)

பச்சை மிளகாய் – 4

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

எண்ணை – 1 டேபிள்ஸ்பூன்

பனீர் – 150 கிராம்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க -

எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

* பாக்கெட்டில் சொல்லியிருக்கும்படி சேமியாவை வேகவிடவும் அல்லது ஒரு லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணை, சிறிது உப்பு சேர்த்து, பின் சேமியாவையும் சேர்த்து வேகவிடவும்.

* நன்கு வெந்ததும் வடிதட்டில் வடித்து, பின் ஒரு கப் குளிர்ந்த நீர் சேர்த்து வடிய விடவேண்டும்.(*)

* வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, உடைத்த முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.

* அதனுடன் நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து, வதக்கவும்.

* நன்றாக வதங்கியதும், பொடியாக அரிந்த தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும். உதிர்த்த பனீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

* மேலே வேகவைத்தை சேமியாவைச் சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கலக்கும்வரை ஓரிரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* எந்த ப்ராண்டாக இருந்தாலும் சேமியாவைத் தனியாக வேகவைத்து குளிர்ந்த நீரில் அலசி, பின் உபயோகித்தாலே சேமியா ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். நேரிடையாக வாணலியில் சேர்த்து வேகவைத்தால் உதிரியான உப்புமா கிடைக்காமல் களி கிண்டியதுபோல் ஆகலாம். இது மிக முக்கியம்.

http://koottanchoru.wordpress.com/2010/04/05/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

+

தேங்காய் சட்னி...

thenga+satni.jpg

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் - அரை கப்

பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்

பச்சைமிளகாய் - 3

இஞ்சி - 1இன்ச் துண்டு

கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை

-சிறிது

உப்பு

தாளிக்க

தேங்காயெண்ணெய் -1ஸ்பூன்

கடுகு -1/2ஸ்பூன்

உளுந்துப் பருப்பு - 1/2ஸ்பூன்

கறிவேப்பிலை - 4இலைகள்

செய்முறை

தேங்காய் முதல் உப்பு வரையுள்ள பொருட்களை கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும்.

எண்ணெய் காய வைத்து தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்துக் கொட்டவும்.

சுவையான தேங்காய் சட்னி தயார்..இது இட்லி,தோசை,சுடுசாதம் இவற்றுக்கு நன்றாக இருக்கும்.

http://mahikitchen.blogspot.com/2010/03/1_07.html

Link to comment
Share on other sites

காலை உணவுகளைப் பார்க்க ஆசையாகத் தான் இருக்கு... :D ஆனால் யார் செய்து தருவீங்கள்? :D காலையில் நேரத்துக்கு எழும்பினால் 3 கோப்பியோட வீட்டிலிருந்து வெளியேறிவிடுவேன், பிந்தி எழும்பினால் ஒண்டும் இல்லாமல் தான் போறது... :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் குட்டி நானும் அப்படித்தான் இருந்தேன்... இப்ப தோசை மாவு பாக்கட் வாங்கி தோசை போட ஆரம்பித்துவிட்டேன்...அங்கு தோசை மாவு பாக்கட் கிடைக்குது அல்லவா? அப்படியாயின் தோசை மாவு மற்றும் நான் சொன்ன காம்பினேசனில் எதாவது ஒரு சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்கள் தோழர்.. சுவையோ சுவை.. :lol:

Link to comment
Share on other sites

காலை உணவை சாப்பிடாமல் விட்டே பல வருடங்களாகி விட்டது... விடுமுறை நாட்களில் நேரம் இருக்கும் போது மதிய உணவை செய்து சாப்பிடுவேன். உங்கள் முறையில் சட்னி கட்டாயம் செய்து பார்க்கத் தான் இருக்கு... :lol: நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

புரட்சி, உங்கள் காலை உணவு செய்முறைகள் நன்றாக உள்ளன.

ஆனால், இங்கு அதிகமானோர் காலை உணவுக்கு நேரம் செலவளிப்பதில்லை.

இந்த உணவுகளை சாப்பிட்டு போனால்... வேலை இடத்தில் நித்திரை தான் வரும்.

இவைகள் தான்...... இங்கு காலை உணவுக்கு ஏற்றது.

250px-Wurst_Brot.jpgwurst.jpgcornflakes400.jpgLow-Fat-Corn-Flakes.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

புரட்சி, உங்கள் காலை உணவு செய்முறைகள் நன்றாக உள்ளன.

ஆனால், இங்கு அதிகமானோர் காலை உணவுக்கு நேரம் செலவளிப்பதில்லை.

இந்த உணவுகளை சாப்பிட்டு போனால்... வேலை இடத்தில் நித்திரை தான் வரும்.

இவைகள் தான்...... இங்கு காலை உணவுக்கு ஏற்றது.

250px-Wurst_Brot.jpgwurst.jpgcornflakes400.jpgLow-Fat-Corn-Flakes.jpg

நன்றி தோழர் தமிழ்சிறி அட்லீஸ்ட் வார விடுமுறை நாளான ஞாயிறு அன்றாவது வயிறாற காலை உணவு உண்ண வேண்டும் என தோழர் தமிழ்சிறிக்கு அன்புகட்டளை விடுக்கிறேன்.... :D:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர் ஸ்பெசல் மசால் தோசை..

India-Cafe-Masala-Dosai.jpg

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 2 கப்,

பச்சரிசி - 2 கப்,

உளுத்தம்பருப்பு - முக்கால் கப்,

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,

ஜவ்வரிசி - ஒரு டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய், நெய், உருளைக்கிழங்கு மசாலா - தேவையான அளவு..

செய்முறை:

அரிசி வகை, பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நைஸாக அரைத்து, உப்பு போட்டுக் கரைத்து, 10 மணி நேரம்

புளிக்கவைக்கவும். மாவு பொங்கிவரும் பட்சத்தில் தோசை வார்க்கலாம். தோசைக்கல்லில் நடுவில் மாவை ஊற்றி, அடி தட்டையாக இருக்கும் கரண்டியில் நிதானமாக வட்டமாக தேய்த்துக் கொண்டே வந்தால் தோசை பார்க்க அழகாக இருக்கும்.பின்பு அதன் மீது ஒரு தேக்கரண்டி காரத்தை தடவி நடுவில் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து இரண்டு புறமும் மடித்து, சாம்பாருடன் மேலும் சட்னியை வைத்து சூடாக பரிமாறவும்.

இந்த தோசைக்கு திருப்பிப் போடவேண்டிய அவசியமில்லை. நெய்யும் எண்ணெயும் கலந்து வைத்துக்கொண்டு தோசை வார்க்க வேண்டும். ஹோட்டல் தோசை போன்று அருமையாக இருக்கும்.

காரம்...செய்வதற்கு..

தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய் -காரம் தேவைப்படுக் அளவிற்கு..

பூண்டு - 1 முழுது உரித்தது..

வெங்காயம் - 1 உரித்தது...

செய்முறை:

வெங்காயம் ... உரித்த பூண்டு.. காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணையில் லேசாக வதக்கி வெங்காயம் பொன்னிறமானதும்... அதை அப்படியே மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி.. சட்னி போல அரைத்து கொள்ளவேண்டும்...

உருளைக்கிழங்கு மசாலா

உருளை கால் கிலோ ( வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்)

தாளிக்க

எண்ணை - ஒரு மேசைகரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரைதேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி

கடலை பருப்பு - அரை தேக்கரண்டி

முந்திரி - 4 ( பொடியாக அரிந்தது

கருவேப்பிலை - 15 இலைகள் இரண்டாக கிள்ளியது

பூண்டு - ஒரு பல் (பொடியாக அரிந்தது))

வெங்காயம் - முன்று

தக்காளி - ஒன்று

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி (5 கிராம்)

பச்ச மிளகாய் - ஒன்று

உப்பு -தேவைக்கு

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

கொத்துமல்லி தழை - சிறிது

நெய் + எண்ணை - தேவைக்கு

செய்முறை

தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் , தக்காளி, பச்சமிளகாய், சேர்த்து நன்கு கிளறி மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது ஒரு சேர கிளறி ஐந்து நிமிடம் மசிய விட்டு , வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள உருளையை சேர்த்து நன்கு கிளறி ஒரு கை பிடி அளவு தண்ணீர் தெளித்து, மீண்டும் சிம்மில் வைத்து , கடைசியாக கொத்து மல்லி தழை தூவி இறக்கவும்.

7k5.jpg

:wub::D :D

--------------------------------------------------------------------------------------------

Link to comment
Share on other sites

தோழரே தோசை பதிவுக்கு நன்றி, அது என்ன வாழை இலையா? அல்லது பீங்கானா ( சாப்பாட்டுத் தட்டா)? அல்லது வாழை இலை மாதிரி இருக்கும் பீங்கானா (தட்டா)? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழரே தோசை பதிவுக்கு நன்றி, அது என்ன வாழை இலையா? அல்லது பீங்கானா ( சாப்பாட்டுத் தட்டா)? அல்லது வாழை இலை மாதிரி இருக்கும் பீங்கானா (தட்டா)? :wub:

வாழை இலை எல்லாம் பிளாஸ்டிக் ரூபத்திலே எப்பவோ வந்துவிட்டது தோழர் குட்டி இங்கு.. :D

Link to comment
Share on other sites

வாழை இலை எல்லாம் பிளாஸ்டிக் ரூபத்திலே எப்பவோ வந்துவிட்டது தோழர் குட்டி இங்கு.. :D

ஓ... அது பிளாஸ்டிக்கா வாழை இலை மாதிரி இருந்துது அது தான் கேட்டனான்... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... அது பிளாஸ்டிக்கா வாழை இலை மாதிரி இருந்துது அது தான் கேட்டனான்... :wub:

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளியோதரை (புளியஞ்சாதம்)

recipe-rice-puliyogare.jpg

எண்ணைய் போடாமல் வெறும் சட்டியில் வறுத்துப் பொடி செய்ய

கடலைப் பருப்பு-1/2 கப்

கொத்தமல்லி விதை(தனியா)-1/2 கப்

மிளகு-1 தேக்கரண்டி

சீரகம்-1 டீஸ்பூன்

இவையெல்லாவற்றையும் தனித்தனியாக ஒரு சூடான சட்டியில் வறுத்துப் பொடி செய்யவும்.

1/4 கப் எண்ணெயில் வறுத்துப் பொடிக்க

எள்-2 தேக்கண்டி

காய்ந்த மிளகாய்-10

பெருங்காயம்-1 டீஸ்பூன்

வெந்தயம்-1/2 ஸ்பூன்

மேற்கண்ட சாமன்களை தனித்தனியாக எண்ணெயில் வறுத்து சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

புளி ஒரு ஆரஞ்சு பழ அளவு (50 கிராம்) அல்லது கூயஅஉடிn 6 டீஸ்பூன் எடுத்து சிறிது தண்ணீரில் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

வேர்க்கடலை-2 கப்

கறிவேப்பிலை-1 கப்

எண்ணெயில் வறுத்து தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நல்லெண்ணெய்-2 கப்

கடுகு-2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய்-10(கிள்ளியது)

மஞ்சள் பொடி-1 ஸ்பூன்

எண்ணெய் சுட வைத்து, கடுகு தாளித்து மஞ்சள் பொடி, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, புளியைக் கரைத்து, பொடித்து வைத்த பொடிகளையும் சேர்த்துக் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து இறக்கி வைத்தால் புளிக்காய்ச்சல் ரெடி.

புளியோதரை தயாரிக்க:

தயார் செய்த சாதத்தைத் தட்டில் கொட்டி பரப்பி, உப்பு, மஞ்சள் பொடி தூவி, நல்லெண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்துக் கலந்து ஆற வைக்கவும். இப்போது வேர்க்கடலை, கறிவேப்பிலை இவற்றையும் புளிக்காய்ச்சல் சிறிதையும் கலந்து ஒரு அகலக் கரண்டியால் கலக்கவும். புளிக்காய்ச்சலைக் கொஞ்சம் கொஞ்சமாக தேவையான அளவு கலந்து செய்து பிறகு உப்போ காரமோ சேர்த்துக் கொள்ளலாம். பொடிகளும் மொத்தமாகக் கலக்க வேண்டுமென்பதில்லை. கொஞ்சம் பாட்டிலில் போட்டு வேண்டும் போது தயார் செய்து கொள்ளலாம்.

பிக்னிக் எல்லாவற்றிற்கும் மிகவும் உகந்தது. தொட்டுக் கொள்ள பொறித்த அப்பளம், வடாம் இவற்றுடன் அவியலுடனோ, கூட்டுடனோ சேர்த்துச் சாப்பிடலாம்.

http://tamil.webdunia.com/miscellaneous/cookery/indian/0706/06/1070606024_1.htm

:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.