Jump to content

வெளியாக இருக்கும் எம்மவர் படைப்புகள்..


Recommended Posts

vinod1s.jpgபிறந்துவிட்டது புத்தாண்டு... புதுப்பொலிவுடன் வருகிறது சென்னை புத்தகக் காட்சி..! எந்தப் பதிப்பாளர், என்ன புத்தகம், யார் எழுத்தாளர், புத்தகத்தின் 'ஹைலைட்' என்ன என்பது பற்றி பிரபல பதிப்பகங்களில் அடித்த ஒரு ரவுண்ட் அப் இது...

புரட்சி, சிவப்புச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை வெளியிடுவதில் அதிக சிரத்தையுடன் செயல்படும் 'விடியல்' பதிப்பகம் சுமார் 27 புத்தகங்களை வெளியிட இருக்கிறது. அதில் வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பியின் 'இந்திய வரலாறு', பிடல் கேஸ்ட்ரோ தன் கைப்பட எழுதிய சுயசரிதை ஆகியவை முக்கியமானதாம்!

''இந்தியாவின் புகழ்பெற்ற வராலாற்றாசிரியர்களில் டி.டி.கோசாம்பியும் ஒருவர். இந்திய வரலாறு பற்றி இதற்கு முன் புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இந்தப் புத்தகம் அவற்றில் இருந்து மாறுபடுகிறது. ஆசிய உற்பத்தி முறை அன்றைய காலத்தில் எவ்வாறு இருந்தது என்பது பற்றி கோசாம்பி விவரித்திருக்கிறார். இதை

vinod3.jpg

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்தவர் சிங்கராயர். அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் புத்தகம் வெளிவருகிறது.

அடுத்து பிடல் காஸ்ட்ரோவின் சுயசரிதம் 'என் வாழ்க்கை' என்ற தலைப்பில் வெளிவர இருக்கிறது. அதை தமிழில் மொழியாக்கம் செய்தவர் நா.தர்மராஜன். 'நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில்' இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் அவர்.

மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டிய புத்தகம், விடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த கேப்டன் மலரவன் (லியோ) என்று அழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயணக்குறிப்புகளைக் கொண்ட 'போர் உலார்' எனும் நூல். 1992ல் கேப்டன் மலரவன் பலாலி சிங்களப் படைத்தளத்தின் கிழக்குப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்குப் பின்பு அவரது உடைப் பையிலிருந்து எடுக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி 1993-ல் 'போர் உலா' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம் என்பதை விடுதலைப்புலிகள் எப்படி உள்வாங்கப்பட்டது என்பதை நமக்குக் காட்டுவதாக அமைந்திருக்கிறது இது!'' என்கிறார் 'விடியல்' சிவா.

குழந்தைகள் இலக்கியம், எளிய தமிழில் அறிவியல் புத்தகங்கள் வெளியிடுவது ஆகியவற்றில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் பாரதி பதிப்பகம் இந்த வருடமும் அறிவுப் பசிக்குக் குறை வைக்கவில்லை. அது பற்றி 'பாரதி புத்தகாலயம்' நாகராஜனிடம் கேட்டபோது, ''அல்பேனிய எழுத்தாளர் கிகோ புளூசி எழுதிய 'பெனி எனும் சிறுவன்' என்கிற நாவல் குழந்தைகளின் மன உலகத்தைப் பற்றிப் பேசுகிறது.

vinod4.jpg

பெனி எனும் சிறுவனை முன்வைத்து குழந்தைகளின் ஆளுமை எப்படி எல்லாம் வடிவமைக்கப்படுகிறது என்பது பற்றி சொல்கிறார் நூலாசிரியர். பெற்றோரிடம் இருந்து திணிக்கப்படும் கருத்துக்கள், கட்டுப்பாடுகள் குழந்தைகளிடத்தில் உருவாக்கும் பாதிப்புகள், குழந்தைகள் எதையும் அச்சமற்று அணுகுவது எப்படி, பிறருடன் தோழமை கொள்வது எப்படி என்பன போன்ற பல விஷயங்களை உரையாடுகிறது இந்தப் புத்தகம்.

அடுத்து, இரா.நடராசன் எழுதிய 'நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டுமா?' என்கிற நூல். இது அறிவியலின் வரலாற்றை எளிய முறையில் கதை போல் எளிமையாக எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு கண்டுபிடிப்புகளின் போதும் அதற்காக விஞ்ஞானிகள் செய்த தியாகத்தையும், மதம் மற்றும் ஆட்சியாளர்களின் எதிர்ப்பையும் பற்றி சுவாரஸ்யமான மொழிநடையில் சொல்கிறார் ஆசிரியர்!''.

சமகால அரசியல், சமூக நிகழ்வுகளை கனமான உள்ளடக்கத்துடன் புத்தகங்களாகக் கொண்டு வரும் கருப்புப் பிரதிகள் இந்த வருடமும் அப்படியான புத்தகங்களைக் கொண்டு வர இருக்கிறார்கள். 'கருப்புப் பிரதிகள்' நீலகண்டனிடம் கேட்டபோது,

'' 'vinod6.jpg

ஜாதியற்றவளின் குரல்' என்ற தலைப்பில் சுமார் 320 பக்கங்களில் ஒரு கட்டுரைத் தொகுப்பு வெளியிடுகிறோம். பத்திரிகையாளர் ஜெயராணி கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இதில் அடங்கி இருக்கின்றன. தலித் பிரச்னைகள், மனித உரிமை, பெண்கள் பிரச்னைகள் பற்றியெல்லாம் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிற தொகுப்பாக இது இருக்கிறது.

அடுத்ததாக, ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்று தற்போது கனடாவில் வசிக்கும் நெலிஞ்சிமுத்தன் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து 'பிறண்டை ஆறு' என்ற தலைப்பில் கொண்டு வர இருக்கிறோம். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் பற்றி இதுவரை இலக்கிய ரீதியாக எந்தப் பதிவும் இல்லை. முதன் முதலாக அந்த நிகழ்வு பற்றி 'இல்ஹம்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது. பிறகு, ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணங்கள், அதன் பின் இருக்கும் அரசியல், ஐரோப்பிய வங்கிகள் போர்க் கருவி செய்யும் நிறுவனங்களில் செய்திருக்கும் முதலீடு இவை பற்றியெல்லாம் மிக விரிவாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார், நார்வே நாட்டில் வசிக்கும் கலையரசன். புத்தகத்தின் தலைப்பு 'காசு ஒரு பிசாசு!'."

தனித்த அடையாளத்துடன் வருவது 'அடையாளம்' பதிப்பகத்தின் பாணி. 'அடையாளம்' சாதிக்கிடம் இந்த வருடம் கொண்டு வர இருக்கிற புத்தகங்கள் பற்றிக் கேட்டதும், ''சீரியஸ் டைப் மட்டுமல்லாது கொஞ்சம் ஜனரஞ்சகமான வாசகர்களுக்காக இந்த வருடம் சில புத்தகங்களைக் கொண்டு வர இருக்கிறோம். ஆங்கிலத்தில் 'மை லைஃப் - எ ஹிஜ்ராஸ் ஸ்டோரி' என்கிற தலைப்பில் தன்

vinot5.jpg

கதையை விவரித்த திருநங்கை ரேவதியின் அந்தப் புத்தகம் தமிழில் 'வெள்ளை மொழி' என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பாக வர இருக்கிறது. இதில் ஒரு சுவாரஸ்யம் முதலில் அந்தப் புத்தகம் ரேவதியால் தமிழில்தான் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் அதை வ.கீதா மொழிபெயர்த்திருந்தார். பிறகு கன்னடத்திலும் வெளியானது. வெவ்வேறு ஹிஜ்ரா குழுக்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம், சமூகம் தன்னைப் பார்க்கும் விதம் போன்றவை பற்றி அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

அடுத்து, மனநல மருத்துவ சிகிச்சை அளிப்பதில் உலகிலேயே முன்னணி நிறுவனமான லண்டன் 'ராயல் காலேஜ் ஆஃப் சைக்கியாட்ரிஸ்ட்' கல்லூரி ஆங்கிலத்தில் 'லிவிங் வித் ஸ்ட்ரேஞ்சர்' என்கிற தலைப்பில் மனநல பாதிப்பு உள்ள ஒருவருடன் நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதை 'உங்களுடன் ஒரு அந்நியன்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறோம். அடுத்து, குட்டி ரேவதியின் 'யானுமிட்ட தீ' எனும் கவிதைத் தொகுப்பும், தமிழவன் எழுதி 'இரட்டைச் சொற்கள்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் கொண்டு வருகிறோம்'' என்றார்.

கலை, இலக்கியம், சுயசரிதம் என கலந்துகட்டி வெளியிடும் சந்தியா பதிப்பகம் இந்த முறை சில முக்கியமான கள ஆய்வுகளைப் புத்தகமாகக் கொண்டு வர இருக்கிறார்கள். ''வட இந்தியாவின் பாட்டியாலா ராஜ்ஜியத்தில் வாழ்ந்தவர் திவான் ஜர்மானி தாஸ். அந்த ராஜ்ஜியத்தில் வாழ்ந்த மன்னர்கள், அவர்களின் கலாசாரம், ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியப் பெண்களுடன் அவர்களுக்கு இருந்த உறவு ஆகியவை பற்றி இருபது வருடங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் 'மகாராஜா' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருந்தார்.

அதை தமிழில் அதே தலைப்பில் மொழிபெயர்த்து கொண்டு வருகிறோம்.

'இயற்பியலின் தாவோ', 'யுவான் சுவான் பயணக் குறிப்புகள்' போன்ற புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்த பொன்.சின்னத்தம்பி முருகேசன் தான் இதையும் மொழிபெயர்த்திருக்கிறார்.

அடுத்ததாக, உசிலம்பட்டியில் வாழ்ந்து வருகிற பிரமலைக் கள்ளர் எனும் சமூக மக்களைப் பற்றி பல ஆண்டுகளாகக் கள ஆய்வு செய்து அதை 'பிறமலைக் கள்ளர் - வாழ்வும், வரலாறும்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார் இர.சுந்தர வந்தியத் தேவன். வழக்கறிஞராக இருக்கும் அவரும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான். நிச்சயம் இது ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கும்.

'சில இறகுகள், சில பறவைகள்' என்ற தலைப்பில் வண்ணதாசன் மற்றவர்களுக்கு எழுதிய சமீபத்திய கடிதங்கள் ஒரு தொகுப்பாகவும், 'மணல் உள்ள ஆறு' எனும் தலைப்பில் அவர் எழுதிய கவிதைத் தொகுப்பையும் கொண்டு வருகிறோம். நான்காவதாக, ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் என்பவரின் சுயசரிதை 'நினைவலைகள்' என்ற தலைப்பில் வெளிவருகிறது. வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகம் மேற்கொண்ட போது, திருச்சியில் இருந்த இவர் வீட்டில் இருந்துதான் அந்தப் பயணம் துவங்கப்பட்டது. தமிழில் வந்த முக்கியமான சுயசரிதங்களில் ஒன்று என க.நா.சு. இதைச் சொல்வார்!'' ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் 'சந்தியா பதிப்பகம்' சௌந்தரராஜன்.

தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட 'உயிர்மைப் பதிப்பகம்' இந்த வருடமும் கலக்க இருக்கிறது. என்ன புத்தகம்... என்ன விசேஷம் என்று 'உயிர்மை' மனுஷ்யபுத்திரனிடம் கேட்ட போது, ''வா.மு.கோமுவின் இரண்டு நாவல்கள் வர இருக்கின்றன. அதில் ஒன்று 'மங்கலத்து தேவதைகள்'. கிராமப்புறங்களில் உள்ள ஆண் பெண் உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இதுவரை யாரும் சொல்லாத வகையில் இதை எழுதி இருக்கிறார். அடுத்து, ஆர்.அபிலாஷ் எழுதிய 'கால்கள்' எனும் நாவல். இது நடக்கமுடியாத ஒரு பெண்ணின் வாழ்க்கைத் துயரத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்த துறையில் இதுவரை எந்த நூலும் தமிழில் எழுதப்படவில்லை. அந்த அடிப்படையில் இது சிறப்பு வாய்ந்தது.

மூன்றாவதாக, சுப்ரபாரதி மணியன் எழுதிய 'நீர்த்துளி' எனும் நாவல். திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகள், அங்கு நிலவும் வாழ்க்கை, மக்களின் துயரங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய 'பசித்த பொழுது' கவிதைத் தொகுப்பும் வருகிறது. நவீன நகர வாழ்க்கையின் மனநெருக்கடிகளைப் பேசும் 236 கவிதைகள் அதில் இருக்கின்றன!'' என்றார்.

வழக்கம் போல 'காலச்சுவடு' பதிப்பகம் கிளாஸிக் வரிசை படைப்புகளோடு சில புதிய புத்தகங்களையும் கொண்டு வர இருக்கிறது. அது தொடர்பாக, 'காலச்சுவடு' கண்ணனிடம் கேட்டதற்கு, '' 'தமிழர் உணவு' என்ற புத்தகத்தைக் கொண்டு வர இருக்கிறோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் பற்றி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் பக்தவச்சல பாரதி பல ஆண்டுகளாக 'காலச்சுவடு' இதழில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.

இரண்டாவதாக, டாக்டர் பினாயக் சென் பற்றி ஆங்கிலத்தில் மின்னி வைத் என்ற பத்திரிகையாளர் எழுதிய 'எ டாக்டர் டு டிஃபென்ட்' என்கிற புத்தகத்தை, தமிழில் க.திருநாவுக்கரசு மொழிபெயர்க்க 'நீதி மறுக்கப்பட்ட கதை' என்கிற தலைப்பில் கொண்டு வருகிறோம். அடுத்து, இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் பற்றி 'கூண்டு' என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவர இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் நோக்காளராக இருந்த கார்டன் வைஸ் என்பவரின் எழுத்தில் இது படைக்கப்பட்டிருக்கிறது!'' என்று முடித்தார்.

தன்னம்பிக்கை புத்தகங்கள், ஆங்கில க்ரைம் த்ரில்லர்களை தமிழில் கொண்டு வருவது எனப் பல புதுமைகளைச் செய்யும் கண்ணதாசன் பதிப்பகத்தில் இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு என்ன விசேஷம் என்று கேட்ட போது, '' 'டாக்டர் நோ' என்கிற புத்தகத்தைக் கொண்டு வருகிறோம். ஜேம்ஸ்பாண்ட் படம் பற்றிய புத்தகம் அது. 'டாக்டர் நோ' என்கிற தலைப்பில் 1958-ம் ஆண்டு இயான் ஃபௌமிங் ஒரு டிடெக்டிவ் நாவல் எழுதினார். பிறகு அது 1962-ல் ஷான் கானரி நடித்து வெளிவந்த முதல் ஜேம்ஸ்பாண்ட் படமாக திரையில் விரிந்தது. இந்த வருடத்துடன் அந்தப் படம் வந்து 50 வருடங்கள் ஆகின்றன. அதன் நினைவாக அந்தப் படம் தமிழில் மீண்டும் நாவல் உரு பெற்றிருக்கிறது.

அடுத்து, இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் தன்னுடைய ஆட்களை அனுப்பி இங்கிலாந்தில் இருந்து சர்ச்சிலைக் கடத்திக் கொண்டு வர திட்டம் போடுகிறான். இந்தத் திட்டத்தை கர்னல் ஸ்டைனர் தலைமையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து ஜாக் ஹிக்கின்ஸ் 1975-ல் 'தி ஈகிள் ஹேஸ் லேண்டட்' என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதினார். அதை இப்போது தமிழில் 'கழுகு தரை இறங்கிவிட்டது' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறோம். வாசகர்கள் தவறவிடக் கூடாது!'' என்று சிரிக்கிறார் காந்தி கண்ணதாசன்.

புத்தகங்கள் நல்ல புதையல்கள்... தேடிப் பிடித்து படித்து அனுபவிப்போம் வாருங்கள்!

http://news.vikatan....ex.php?nid=5892

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு ஒரு தடவை போக வேண்டும் என ஆசை அடுத்த வருடமாவது சரி வருமோ என்று பார்ப்பம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு ஒரு தடவை போக வேண்டும் என ஆசை அடுத்த வருடமாவது சரி வருமோ என்று பார்ப்பம்

எனக்கும்தான் ரதியக்கா..ஒருக்கா வெளிக்கிடத்தான் வேணும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.