Jump to content

நானும் உயிருடன் இருக்கிறேன்


Recommended Posts

நானும் உயிருடன் இருக்கிறேன்.

கொழும்பிலிருந்து  பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த  வொறி ஈறப்பெரியகுளம் என்ற இடத்தில் மறிக்கப்பட்டது. அதில் லொறிச் சாரதியும் உதவிளாளர்கள் இருவரும் இருந்தார்கள்.

 

லொறி உதவியாளர் “அண்ணை சிங்களக் காடையங்கள் சுற்றிவர நிற்கிறாங்க…. என்ன பிரச்சினையோ  தெரியாது” என்றான்.

 

“நம்மடை ஆட்களைத்தான் மறிச்சு வைத்துக்கொண்டிருக்கிறாங்க…”  என்றார் மற்றவர்.

 

சாரதி அங்கும் இங்கும் பார்த்தபடி லொறியை ஒரு ஓராமாக  நிற்பாட்டினார்.

 

லொறியைச் சுற்றிச் சிங்களவர்கள் கூட்டம்.

 

ஒருவன் வந்து சிங்களத்தில் “இறங்குக்கடா” எனத் தகாத வார்த்தையுடன் பேசினான்.  

 

மற்றவன், இறங்கும்போது காலால் உதைத்தபடி “அங்கால போய் குப்பறப் படுங்கடா ’’என்றான்.

 

லொறிச் சாரதிக்கும் மற்ற இருவருக்கும் தங்களை ஏதோ செய்யப்போறாங்க என்ற பயம் ஏற்பட்டது.

 

லொறிச் சாரதி தான் செலுத்தி வந்த லொறியைப் பார்த்தார். அதிலிருந்த பொருட்களைப்  பலர் இறக்கிக்கொண்டிருந்தார்கள்.  என்ன செய்ய முடியும் என்று சிந்தித்தபடி கொலைக் களத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஆட்டின் நிலையில் சென்றார்.

 

லொறி உதவியாளர்கள் இருவரும் முகம்வெழுறி  பேயறைந்தவன் நிலை என்பார்களே, அந்த நிலையில் நடந்தார்கள்.

 

நடக்கும்போது  மூவருக்கும் உருட்டுக்கட்டையால் அடி நடந்தபடி இருக்கிறது.

 

“ஐயோ… அம்மா…” என்று குழறியபடி  விழுந்தும் எழும்பியும் நடந்தார்கள்.  

 

சிறிது தூரம்   செல்ல றோட்டுக்கரையில்  இரத்த வெள்ளத்தில் பலர் வளர்த்தப்பட்டுக் கிடந்தார்கள்.

 

“அதிலபோய்ப் படுங்கடா” என்று ஒருவன் அதட்டினான். சாரதிக்கும் உதவியளாளர்களுக்கும் சிங்களம் தெரிந்தபடியால் அதன்படி நடந்தார்கள்

 

அடியும் உதையும் ஒரு பக்கம். சகிக்க முடியாத வார்த்தைப் பிரயோகம் ஒரு பக்கம். என்ன செய்ய முடியும். மூவரும்  குப்பறக் கிடக்கும் தமிழருக்கிடையிலே போய் படுத்தார்கள்.

 

கூட்டிக்கொண்டுவந்தவர்கள் லொறியடிக்குச் திரும்பிச்  சென்று விட்டார்கள்.

 

சில நிமிடங்களில் வேறு மூவர் துவக்குடன் வந்தார்கள்.   படபட வென, கிடந்தவர்களைச் சுட்டுத் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

 

எங்கும் மரண அமைதி.

 

சாரதி கண்ணை மெல்லத் திறந்து பார்த்தார்.

 

படுத்துக்கிடக்கும் தமிழரைத் தவிர வேறு எவரையும்  காணவில்லை. என்றாலும் தலை நிமிர்த்தப் பயம். கண்ணை மூடீக்கொண்டு இறந்தவர்போலவே பாசாங்குபண்ணி மீண்டும் படுத்துவிட்டார்.

 

படுத்துக்கிடக்கும்போது பக்கத்தில் பிரதம்போல் கிடந்தவரின் கை அவரை நுள்ளியது.

 

கடவுளே பக்கத்தில் கிடப்பவர்  உயிருடன் இருக்கிறார்போல் இருக்கிறது, என எண்ணி தானும் உயிருடன் இருப்பதை நினைவுபடுத்தி அவரை நுள்ளினார்.

 

“போயிற்றாங்க போல இருக்கு…”

 

“ஒரு ஆரவாரத்தையும் காணவில்லை… அப்படித்தான் தெரியுது”

 

இருவரும் தலையை நிமிர்த்தினார்கள்.

 

பலர் இறந்து கிடந்தார்கள். ஒரு சிலர் முனுகியபடி அiரைகுறை உயிருடன் கிடந்தார்கள்.  
எரிக்கப்பட்ட நிலையில் பல லொறிகள் கிடந்தன.
தெய்வச் செயலால் அரைகுறையாக எரிந்த லொறிகளும் சில நின்றன.

 

“என்ன செய்வம்…”

 

“கடவுள் புண்ணியமாகத் தப்பியிட்டம் … எனியாரு வாறாங்களோ தெரியாது… ஓடுவம்”

 

இருவரும் எழும்பினார்கள்.

 

அரைகுறையாக எரிந்த லொறி ஒன்றுக்குள் உயிருடன் கிடந்த சிலரைத் தூக்கிப்போட்டுக்கொண்டு யாழ்ப்பாணம் ஓடிச் சென்றுவிட்டார்கள்.

உண்மைச் சம்பவம்.
இதனைக் கூறியவர் நோர்வேயில் இருக்கிறார்.

செண்பகன்
23.07.2014
   
 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பகிர்வுக்கு நன்றி செண்பகன். 83 இல் இருந்து 90 வரைக்கும் வவுனியா - கொழும்பு மற்றும் மட்டக்கிளப்பு -கொழும்பு வீதிகளில் இவ்வாறு கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கையே ஆயிரத்தினைத் தாண்டும். அநேகமானோர் சிங்கள குண்டர்களாலும், பொதுமக்களாலும் கொல்லப்பட்டவர்கள். என் அப்பாவும் இப்படியான ஒரு சம்பவம் ஒன்றில் இருந்து மயிரிழையில் தப்பியவர்.

 

அன்றும் இன்றும் இப்படி கொலை செய்த ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் எந்தவித தண்டனையும் இன்றி சமூகத்தில் ஒரு தந்தையாகவோ, தாத்தாவாகவோ, அரசியல்வாதியகவோ அல்லது ரவுடிகளாகவோ வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

இந்த மாதிரியான மிருகங்களுடன்தான் நல்லிணக்கம் என்பது கொடுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கொடுமையான சம்பவங்கள். நினைக்கவே மனம் பதறுகின்றது.
 
இதற்கும் ஒருசிலர் காரணம் வைத்திருப்பார்கள்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.