Jump to content

உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களுள் ஒருவராக இளையராஜா தேர்வு!

 

ilayaraja-1.jpg

 

லகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் (Music Composers) ஒருவராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே.

டேஸ்ட்ஆப் இந்தியா என்ற பிரபல இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த 25 கம்போஸர்கள் பட்டியல் இது.

 

25. ஆலன் சில்வெஸ்ட்ரி (ஃபாரஸ்ட் கம்ப், பேக் டு த ஃப்யூச்சர், தி அவெஞ்சர்ஸ் படங்களின் இசையமைப்பாளர்)

24. வாஞ்சலிஸ் (ப்ளேட் ரன்னர், சேரியட்ஸ் ஆப் பையர் போன்ற பிரிட்டிஷ் படங்களின் இசையமைப்பாளர்)

23. ஜேம்ஸ் நியூட்டன் – ஹோவர்ட் (எட்டு முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தி ப்யூஜிடிவ், மை பெஸ்ட் ப்ரண்ட்ஸ் வெட்டிங், வெர்டிகல் லிமிட், தி சிக்ஸ்த் சென்ஸ் போன்றவை இவர் இசையில் வந்தவை)

22. பிலிப் க்ளாஸ் (இவர் இசையமைத்த மிஷிமா : எ லைப் இன் போர் சேப்டர்ஸ் இன்றும் சிறந்த இசையாகப் போற்றப்படுகிறது. க்வாட்ஸி பட வரிசைகளுக்கு இசையமைத்தவர்)

21.டேனி எல்ப்மேன் (பிரபல ஹாலிவுட் இயக்குநர் டிம் பர்ட்டனுடன் இணைந்து பல வெற்றிப் படங்கள் தந்தவர். குறிப்பாக பேட்மேன் வரிசைப் படங்கள்)

20.தாமஸ் நியூமேன் (ரோட் டு பெர்டிஷன், பைன்டிங் நெமோ போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர். இவர் தந்தை ஆல்ப்ரெட் நியூமேன், சகோதரர் டேவிட் நியூமேன், உறவினர் ராண்டி நியூமேன் அனைவருமே புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள்)

19.ஹோவர்ட் ஷோர் (லார்ட் ஆப் தி ரிங்க்ஸின் மூன்று பாகங்களுக்கும் இசை தந்தவர். மூன்று ஆஸ்கர்கள் பெற்றவர்)

18.எல்மர் பெர்ன்ஸ்டீன் (தி மேக்னிபிஷியன்ட் செவன், டென் கமான்ட்மெண்ட்ஸ், தி கிரேட் எஸ்கேப் போன்ற படங்கள் இவர் இசையமைத்தவைதான்)

17.டிமிட்ரி டியோம்கின் (ரெட் ரிவர், ஹை நூன், மிஸ்டர் ஸ்மித் கோஸ் டு வாஷிங்டன் போன்ற படங்களின் இசையமைப்பாளர்)

16.ஜார்ஜஸ் டெலெரெ (தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சீஸர் விருது பெற்ற முதல் இசையமைப்பாளர். ஜீன் லாக் கோடர்ட்டின் கண்டெம்ப் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.)

15.ஜேம்ஸ் ஹார்னர் (இவரது டைட்டானிக் பட இசையை யார்தான் மறக்க முடியும். பிரேவ் ஹார்ட்டும் இவர் படம்தான்)

14.ஜோ ஹிசைசி (பிரபல இயக்குநர் தகாஷி கிடனோவின் பெரும்பாலான படங்களுக்கு இசை இவர்தான். வேல்லி ஆப் தி விண்ட் படத்தின் இசையமைப்பாளர்)

13.ஹான்ஸ் ஜிம்மர் (க்ளாடியேட்டர், பைரேட்ஸ் ஆப் தி கர்ரீபியன் போன்ற மெகா படங்களின் இசையமைப்பாளர் ஜிம்மர். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்குக்குப் பிடித்த இசையமைப்பாளர். )

12.ஜான் பேர்ரி (பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜான் பேர்ரி. அவுட் ஆப் ஆப்ரிக்கா படத்துக்காக ஆஸ்கர் பெற்றவர்)

11.மௌரிஸ் ஜார் (லாரன்ஸ் ஆப் அரேபியா, கோஸ்ட், விட்னஸ் போன்ற படங்களுக்கு மறக்க முடியாத இசை தந்தவர்)

10.ஜெர்ரி கோல்ட்ஸ்மித் (ஏலியன்ஸ், ப்ளானட் ஆப் தி ஏப்ஸ், டோட்டல் ரீகால் போன்ற மெகா ஹிட் படங்களின் இசையமைப்பாளர்.)

 

9.இளையராஜா (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 970 படங்கள், 4500க்கும் மேற்பட்ட பாடல்கள், 28 தனி இசை ஆல்பங்கள், ஏராளமான சர்வதேச மேடை நிகழ்ச்சிகள் நடத்தியவர்… ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயித்த இசைக்குச் சொந்தக்காரர்.. பின்னணி இசையால் படத்தைப் பேச வைத்தவர். Music Composer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்த இசையமைப்பாளர்!)

 

8.ஆலன் மென்கின் (6 ஆண்டுகளில் 8 ஆஸ்கர்களை வாங்கியவர். டிஸ்னி நிறுவனப் படங்களில் பணியாற்றியவர். தி லயன் கிங் இவர் இசையமைத்த படம்தான்)

7.மைக்கேல் ரெக்ரான்ட் (க்ளின்ட் ஈஸ்ட்வுட், ராபர்ட் ஆல்ட்மேன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களுடன் பணிபுந்தவர். தி தாமஸ் க்ரோனின் அஃபையர்ஸ் படத்தின் இசையமைப்பாளர்.)

6.டோரு டகேமிட்சு (ஜப்பானின் முக்கிய இசையமைப்பாளர். பிரபல இயக்குநர்கள் ஹிரோஷி தெஷிகாரா, நகிஷா ஒஷிமா போன்றவர்களின் படங்களுக்கு இசை தந்தவர்)

5.நினோ ரோட்டா (தி காட்பாதர் படங்களுக்கு இசை தந்தவர்)

4.பெர்னார்ட் ஹர்மான் (சைக்கோ, வெர்டிகோ உள்ளிட்ட ஹிட்ச்காக் படங்களின் இசையமைப்பாளர்)

3.ஜான் வில்லியம்ஸ் (சூப்பர் மேன், ஸ்டார் வார்ஸ், ஈடி, ஜூராஸிக் பார்க் படங்களின் இசையமைப்பாளர்)

2.மேக்ஸ் ஸ்டெய்னர் (காஸாப்ளாங்கா, கான் வித் த விண்ட் படங்களின் இசையமைப்பாளர்)

1.என்னியோ மொர்ரிக்கோன் (கில் பில், இங்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படங்களுக்கு இசையமைத்தவர்)

 

"என்வழி" இணையத்திலிருந்து....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.ஆர் ரகுமான் எத்தனையாம் இடத்தில்.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைவிட சந்தோசம் எமக்கு என்ன வேண்டும்..

 

எங்கள் இசைஞானிக்கு எப்பவோ கிடைத்திருக்கவேண்டியது, இப்பவாவது இப்படியோரு கெளரவம்.... 

Link to comment
Share on other sites

இது இந்தியர்களால் (ஏதேனும் ஒரு சிறு அனாமத்து குழுவாகவும் இருக்கலாம்) விடப்பட்டது....ரஹ்மானையே காணவில்லை.....சிண்டு முடிவதர்காகவும் இருக்கலாம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் ஜனாதிபதி சிலோனுக்கு போனது பெரியண்ணனுக்கு துண்டற பிடிக்கேல்லை எண்டது தெரியுது.🤣 ஈரான்.சீனா,ரஷ்யா எண்டதொரு மிக்ஸர் வெஸ்ரேன் குஞ்சுகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுவதை ரசிக்கலாம்😂
    • 1. சட்டம் மாற முன்பு வெளிநாட்டு பிரசைகளாக இந்த ஆதனத்தை வாங்கி இருக்கலாம். அல்லது… 2. முதலில் இலங்கை பிரசையாக இருந்த போது ஆதனத்தை அவர்கள் பெயரில் வாங்கி விட்டு பின்னர் வெளிநாட்டு பிரஜா உரிமை எடுத்திருக்கலாம். அல்லது  3. நான் சொன்ன 3ம் முறையில் பெற்றாருக்கு பின் சொத்து பெயர் மாறி இருக்கலாம். அல்லது 4. இரெட்டடை குடியுரிமை இருக்கலாம். அநேகமாக 99 வருட லீஸ் ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆதனங்களை நான் மேலே சொன்ன லீசிங் அடிப்படையில் அல்லது, கம்பெனி சொத்தாக வைத்திருக்க கூடும். அல்லது சட்டம் மாற முன்பு அவர்கள் வாங்கிய ஆதனமாக இருக்கலாம். இப்போதும் Board of Investment ஊடாக பெருந்தொகை பணத்தை முதலிடும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதனத்தை freehold ஆக வாங்கும் சலுகை உள்ளது என நினைக்கிறேன். நான் மேலே சொன்னது தனி நபர்கள் residential properties, land வாங்கும் நிலை பற்றியது.
    • நான் ஆட்சிக்கு வந்தால்  ஒரு கூப்பனுக்கு ஒரு கொத்து அரிசி தருவன் எண்டு சொல்லுற  தேர்தல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து வந்த உங்களுக்குமா  இன்ஞும் அரசியல் தந்திரங்கள் புரியவில்லை?  ஐயோ பாவங்கள்....🤣 வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை . வெள்ளைக்காரன் சொல்வதையே செய்வான். செய்வதையே சொல்வான் என நம்பும் கூட்டம் இன்னும் யாழ்களத்தில் இருப்பது விநோதத்திலும் விநோதம்.😁
    • இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம் பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988 – 89 ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரி வித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட தொடர்புபட்ட 2008 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சசாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணாகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023இல் இலங்கையில் அரசாங்கத்தின் அதிகாரிகள் சார்பில் எவரும் காணாமல் போகச் செய்யப்பட்டதாக அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அக்டோபர் இறுதிவரை எவரும் காணாமல்போகச்செய்யப்பட்டதாக தனக்கு அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என காணாமல் போனோர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் தடுப்பில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றன பல சம்பவங்கள் ஒரேமாதிரியானவையாக காணப்பட்டன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக்காக சந்தேகநபர்களை பொலிஸார் கொண்டு சென்ற வேளையே பல கொலைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விசாரணையின் போது சந்தேக நபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.ilakku.org/காணாமல்-ஆக்கப்பட்டோா்-வி/?amp ஆடு நனையுதென்று ஓநாய் ஒன்று அழுகிறது.
    • கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர். குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/people-blinded-by-substandard-medicine-sue-kehelia-1714075637
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.