Jump to content

நெடுஞ்சாலை (Highway)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுஞ்சாலை (Highway)

பயணங்கள் எப்போதும் சுவாரசியத்தைத் தரக்கூடியவை. பயணத்தில் இலக்குகள் அல்ல, பயணத்தைத் தொடங்குவதே எல்லாவற்றையும் விட முக்கியமானதென புத்தரிலிருந்து லா-சூ வரை பலர் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றனர். அதுவும் பயணங்கள் -எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் வாய்க்கும்போதும்- அவை இன்னும் அழகாகிவிடுகின்றன. இவ்வாறான பயணங்களில் மனம் எதையும் எதிர்பார்க்காதிருப்பதால், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தும், மறக்க முடியாதவையாக ஆகிவிடுகின்றன.

இவ்வாறு எதிர்பாராது நிகழும் பயணம் ஒன்றைத்தான் 'ஹவே' எங்களுக்குக் காட்சிப்படுத்துகின்றது. கழுத்தை நெரிக்கும் திருமணச் சடங்குகளாலும், உறவுகளாலும் திணறும் ஓர் இளம பெண், திருமணத்திற்கு முதல் நாளிரவு, தன்னை ஆசுவாசப்படுத்த தன் நண்பரோடு காரில் புறப்படுகின்றார். அந்தச் சிறு பயணம் எப்படி -தற்செயலான பல்வேறு நிகழ்வுகளால்- நெடும் பயணமாக மாறுகின்றதென்பதே இத் திரைப்படம்.

hi.jpg

பயணிப்பது என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை. பயணிப்பவர்கள் எல்லோரும், புதிய தேடல்களுக்காய்த்தான் தம் பயணங்களைத் தொடங்குகின்றார்கள் என்பதுமில்லை. மேலும் ஊரடங்குச் சட்டங்களும், கொலைகளும் நிகழ்ந்த போர் நிகழ்ந்த தேசத்தில் வாழ்ந்து பழகிய என்னைப் போன்றவர்களுக்கு, ஒரு நாளின் இரவில் பயமின்றித் திரிவது என்பதே எத்தகைய வீரதீரப் 'பயணம்' என்பதை அறிவோம். பிற்காலத்தில் அடையாள அட்டைகளை உடலின் ஓர் அங்கமாய் திணிக்கப்பட்ட நம்மைப் போன்றவர்களுக்கு நினைத்த இடத்திற்கு விரும்பிய நேரத்தில் பயணிப்பதென்பது பெருங்கனவாகவே ஒருகாலத்தில் இருந்துமிருக்கின்றது.

ஆண்களுக்கே இப்படியென்றால், பெண்கள் பயணிப்பது பற்றிச் சொல்லவே தேவையில்லை. போர்ச் சூழலில் இருந்த பெண்களுக்கு மட்டுமில்லை, சனநாயக நாடுகள் எனக் கூறப்படுகின்ற நாடுகளில் வாழ்கின்ற பெண்களுக்கும் பயணிப்பதென்பதே பெரும் சவாலான விடயம். ஒருநாளின் இரவில் கூட நிம்மதியாக நடமாட முடியாததையல்லவா நேற்றைய உமாமகேஸ்வரியிலிருந்து இன்னும் பலர் நமக்கு மிகுந்த துயரத்துடன் சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

'ஹவே'யில் மிகுந்த வசதிகளுடன் வளர்ந்த வீரா, அதற்கு எதிர்முனையில் வாழ்பவர்களுடன் சந்தர்ப்பவசத்தால் பயணிக்கின்றார். ஒரு கடத்தல் எப்படி நெகிழ்வான சம்பவங்களால் மறக்கமுடியாத பயணமாக மாறுகின்றது என்பதையும், துவித முனைகளில் இருந்தவர்கள் எவ்வாறு மற்றவர்களைப் புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் -அதீத சென்டிமென்டல்கள்- இல்லாது 'ஹவே' நமக்குள் பதிவு செய்துவிட்டுச்செல்கின்றது.

இந்தப் பயணம் இறுக்கமான மனதுடைய ஒருவரை மனம் நிறைந்து சிரிக்க வைக்கிறது. உள்ளே அடக்கி வைத்து துயரை வெளியே பகிரச் செய்கிறது. இறுதியில் எல்லாவற்றையும் மறந்து காதல் கொள்ளக் கூட வைக்கிறது. உயர்தரவர்க்கத்தில் இருப்பவர்களில் கூட மனம் நெகிழக்கூடியவர்களும், நேசிக்கக்கூடியவர்களும் இருக்கின்றார்கள் என்பதை அவருக்கு -ஒரு பெண்ணின் அருகாமை- உணர்த்தியும் விடுகிறது.

இதே பயணம், இதுவரை பிறர் முன்னால் பணிவாக நடக்கவும், மென்மையாகக் கதைக்கவும் பழகிய இன்னொருவரை, எது குறித்தும் அச்சப்படாது பேச வைக்கிறது. குடும்பத்திற்குள் நடந்த ஒரு விடயத்தை -அந்நியர்கள் என்ற உணர்வேயில்லாது- அவர்கள் முன்னிலையில்- அது குறித்துப் பகிரவும் வைக்கிறது.

பயணங்களின் புதிய சூழல் நம்மை வேறொரு மனிதராக மாற்றிவிடுகின்றது. அவ்வணணமே நாம் இதுவரை பேசாத விடயங்களையெல்லாம் நீரூற்றுக்கள் போல தன்னியல்பில் பொங்கச் செய்தும்விடுகின்றன. அவ்வாறான பாத்திரங்களாய் இத்திரைப்படத்தில் வீராவும், மஹாவீரும் இருக்கின்றார்கள்.

images.jpg

இந்தியாவின் நிலப்பரப்பை - அதீத வர்ணக்கலப்புகளின்றி- இவ்வளவு இயல்பாய் வேறெந்த இந்திப்படங்களிலாவது காட்சிப்படுத்தியிருப்பார்களோ என்றளவிற்கு ஒளிப்பதிவு இருக்கின்றது. இயல்பென்பது அதன் இயற்கையை, வறுமையை, புழுதியெழும் வீதிகளை காட்சிப்படுத்துவதிலிருந்து, அந்தந்த நிலப்பரப்பு மக்களை எந்த சினிமா ஜிகினாத்தனமுமில்லாது- காட்டுவதுவரை... எனக் குறிப்பிட விழைகிறேன். ரஹ்மான் தான் இசைதான் என்றாலும், அநேக இடங்களில் 'மெளனத்தின் இடைவெளி' விடப்பட்டிருப்பதும், இயற்கையோடு பின்னணி இசை வருவதும் பிடித்தமாயிருக்கிறது. ரஹ்மானின் இசையில் வரும் தாலாட்டுப் பாடடு ஒருபக்கம் மனதை நெகிழ வைக்கிறதென்றால், இன்னொரு ஹிப்-ஹாப் பாடலிற்கு வீராவும், அவர் ஆடுவதைப் பார்த்து இன்னொருவரும் போடும் ஆட்டம் நம்மை உற்சாகத்தின் விளிம்பிற்கு அழைத்துச் சொல்பவை.

வளவளவெனக் கதைப்பதிலிருந்து, முரட்டுத்தனமாய் இருப்பவரையே பேசி பேசி ஓட விரட்டுவதிலிருந்து, இறுதியில் தன் குடும்பத்தினர்/உறவினர் முன் இதுவரை மனதில் ஒளித்து வைத்த் உண்மைகளைப் போட்டு உடைப்பதிலிருந்து அற்புதமான நடிகையாக வீராவாக நடித்த அலியா பட் பரிணாமிக்கிறார்.

துயரமான நினைவாய் இப்படத்தின் முடிவு பார்ப்பவரிடையே தங்கிவிடக்கூடாது என்பதற்காய், இறுதியில் வரும் சிறு காட்சியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் நம்பிக்கைகளிலிருந்து முகிழ்வதும்தானே வாழ்க்கை.

மேலும், ஒரு பயணம் ஒரு புதிய அத்தியாயத்தை ஒரு பெண்ணின் வாழ்வில் தொடக்கி வைத்திருக்கிறது என்பதற்காகவும், எவரின் துணையுமின்றி தனித்து எதையும் அப்பெண்ணால் செய்ய முடியுமென்பதற்காகவும் -அந்த முடிவையும்- நாம் வரவேற்போம்.

('ஹவே'யின் இசையிலேயே தன்னைத் தொலைத்த பிரசாந்தியிற்கு...)

http://djthamilan.blogspot.co.uk/2014/03/highway.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.