Jump to content

அனைவரும் எதிர்பார்த்துள்ள ”பனி விழும் மலர்வனம்” தமிழ் திரைப்படம்: - 28ம் திகதி வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளிவருகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் எதிர்பார்த்துள்ள ”பனி விழும் மலர்வனம்” தமிழ் திரைப்படம்: - 28ம் திகதி வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளிவருகிறது photo.png video.png 

[Wednesday, 2014-02-26 21:29:29]
panivilum-malarvanam-200-seithy.jpg

உலகத்தமிழர்கள் தயாரிப்பில் உருவாகி பெரும் பொருட்செலவுடனும், நவீன தொழில்நுட்ப யுத்திகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கப்பட்டுள்ள ”பனிவிழும் மலர்வனம்” திரைப்படம் தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இத்திரைப்படம் எதிர் வருகின்ற 28ம் திகதி வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளிவரவிருக்கிறது.

  

எமது படைப்பு வெற்றி பெறுமிடத்து எத்தனையோ எமது கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கபோகும் நிறுவனமாக CTN PRODUCTION திகழும் என்பதில் திண்ணம். பனி விழும் மலர்வனம் தமிழ் திரைப்படத்தினை பற்றியும் அதில் எம்மவர் பங்களிப்பு பற்றியும் சில தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் ஒரு உண்மையான புலியும் அனிமேசன் செய்யப்பட புலியும் இணைந்து மிரட்டப்போகும் அதிரடி காட்சிகள் உள்ளடங்கிய, இயற்கை அன்னையின் தேவையினையும் இயற்கையின் சமநிலைக்கு புலிகளின் அவசியத்தையும் ஒரு தகவலாக மட்டும் சொல்லாமல் சுவாரசியமான காட்சிகளாகவும் காட்டியுள்ளதோடு மட்டுமன்றி படம் பார்த்த ரசிகன் திரையரங்கை விட்டு வெளியேறிய பின்னரும் அது பற்றி சிந்திக்க வைக்க கூடியவாறு சமயோசிதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நிஜப்புலி சம்பந்தப்பட்ட காட்சிகள் "hangover", 'burning bright", ''we bought a zoo " போன்ற திரைப்படங்களில் நடித்த புலியினை நமது திரைப்படத்திற்காக பிரத்தியேகமாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தனியார் விலங்குகள் சரணாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது . அத்தோடு புலி சம்பந்தப்பட்ட பல காட்சிகள் சென்னையில் உள்ள 'மயக்கமென்ன ' ராமானுஜம் ' போன்ற படங்களில் அனிமேசனில் சிறப்பாக செயல்பட்ட தமிழர் நிறுவனமான Raymax நிறுவனத்தினால் அனிமேசன் செய்யப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய ஒரு பிரமாண்டமான படைப்பானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பிரமிப்பின் உச்சத்திற்கு இழுத்துச்செல்லும் என்பதில் மாற்றமில்லை.

இப்படத்தின் தயாரிப்பாளர்களாக கனடாவினை சேர்ந்த மாருதி நந்தன், ரவி இந்திரன் மற்றும் S.K. அரவிந்த் ஆகியோரும் தயாரிப்பு மேற்பார்வையினை ரவி இந்திரன் அவர்களும் தயாரிப்பு நிர்வாகத்தினை S.K. அரவிந்த் அவர்களும் மேற்கொண்டு இருக்கின்றார்கள். மேலும் அனிமேசன் புலியினை Raymax நிறுவனத்தின் இயக்குனர்களான A.K செல்வதாசன் , A.K கமலதாசன் ஆகியோர் திறம்பட செயலாற்றியுள்ளனர். இவர்களின் அனிமேசன் ஆக்கங்கள் சர்வதேச அளவில் பேசப்படும் என்பது உறுதி.

மேற்குறிப்பிட்டவர்கள் தவிர மேலும் பல எம்மவர் இணைந்து இரண்டு வருடங்கள் தொடர்ந்து உழைத்து இத்திரைப்படத்தினை வெளிக்கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக அரசின் தணிக்கைக்குழுவினதும் வரிவிலக்கு குழுவினதும் பாராட்டுக்களை இந்த திரைப்படமானது ஒரு சேர பெற்றிருப்பது பாராட்டுக்கு உரியது.

உங்கள் உளப்பூர்வமான ஆதரவினை வழங்கி எம்மவர்களின் பெருமுயற்சிக்கு ஊக்கமளிக்க வேண்டுகின்றோம்..

 

panivilum-malarvanam-280213-seithycom%20

 

 

panivilum-malarvanam-280213-seithycom%20

 

 

panivilum-malarvanam-280213-seithycom%20

 

 

panivilum-malarvanam-280213-seithycom%20

 

 

panivilum-malarvanam-280213-seithycom%20

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104501&category=TamilNews&language=tamil

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.