Jump to content

ஹன்சிகாவுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை.. நான் தனி ஆள்!- சிம்பு அதிரடி அறிவிப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

26-1393414766-simbu-hansika3434-600-jpg.

 

சென்னை: நடிகை ஹன்சிகாவுடன் எனக்கு எந்த உறவுமில்லை. அவருடனான காதல் முறிந்துவிட்டது. இனி நான் தனி ஆள்... இதற்காக வருத்தப்படவில்லை, என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்தனர்.
 

அம்மா எதிர்ப்பு ஆனால் இந்த காதலை ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி ஏற்கவில்லை. தன் மகளின் கேரியர் பாதிக்கும் என்று பதறிய அவர், இப்போதைக்கு இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று பேட்டி அளித்து வந்தார். ஆனால் சிம்புவின் தந்தை ராஜேந்தர் மகனின் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார்.

 

பாண்டிராஜ் வடிவில்.. இந்த நேரம் பார்த்து இயக்குநர் பாண்டிராஜ் தன் புதுப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அவர் முன்னாள் காதலி நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார். இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது.
 
நயன்தாரா வேண்டாம்.. எக்காரணத்தைக் கொண்டும் நயன்தாராவுடன் சிம்பு இணையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஹன்சிகா. ஆனால் அவரைக் கண்டு கொள்ளாத சிம்பு, ஹன்சிகா என் காதலி, நயன்தாரா என் தோழி என்றெல்லாம் கூறி வந்தார்.
 
நான் சிங்கிள் இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று, தனக்கு யாருடனும் உறவில்லை என்று அறிவித்த ஹன்சிகா, தான் இனி தனி ஆள் என்று ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டார்.
 

சிம்புவின் அறிவிப்பு இது சிம்புவைக் கடுப்பேற்றிவிட்டது. ஹன்சிகா அறிவிப்பு வெளியிட்ட இரண்டு வாரங்களுக்குள் தானே முன்வந்து, ஹன்சிகாவுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.. உறவும் இல்லை என அறிவித்துவிட்டார்.

 

ஒட்டுமில்லை உறவுமில்லை இன்று தனது பிஆர்ஓ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ள சிம்பு, "இனி ஹன்சிகாவுடன் எனக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை. இந்த உறவால் போதும் போதும் எனும் அளவுக்கு பட்டுவிட்டேன். மிகத் தீவிரமாக யோசித்த பிறகே நான் இனி தனி ஆள் என்ற என் நிலையை அறிவிக்கிறேன். இனி ஹன்சிகாவுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதெல்லாம் கடந்த கால கதைகள்.

 

வருத்தமில்லை ஹன்சிகாவுடன் உறவு முறிந்துவிட்டதற்காக நான் வருத்தப்படவில்லை. இந்த முடிவை நான் எடுத்ததற்கான காரணங்களை விவாதிக்கும் மனநிலையில் நான் இல்லை. என் நண்பர்கள், என்னுடன் பணிபுரிபவர்கள், ரசிகர்களுக்கு என் நிலையை விளக்கவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். இனி நான் என் கேரியரில் மட்டுமே கவனம் செலுத்துவேன். சந்தோஷமாக, மகிழ்ச்சியாக உள்ளேன்," என்று அறிவித்துள்ளார்.
 
நன்றி தட்ஸ்தமிழ்.

 

 

 

Link to comment
Share on other sites

ஒன்லி காதல் மட்டும் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.