Jump to content

ஜெனீவாவில் பலவீனமடையும் இலங்கை அரசாங்கத்தின் கை


Recommended Posts

ஜெனீவாவில் பலவீனமடையும் இலங்கை அரசாங்கத்தின் கை

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் சூடான கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் விரைவில் விவாதத்துக்கு வரப்போகிறது. வாக்கெடுப்பும் நடக்கப் போகிறது.

இந்த வாக்கெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்ற கேள்விக்கான பதில் இறுதி வரை பலத்த எதிர்பார்ப்புக்குரியதொன்றாகவே இருக்கப் போகிறது.

இந்த எதிர்பார்ப்பு இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் தான் உருவாகியுள்ளது. காரணம் இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவுக்குப் போயுள்ளது. அதைவிட, இதன் தாக்கம் பிற நாடுகளிலும் எதிரொலிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.

இலங்கை அரசு இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க எந்தளவுக்கு முயற்சிக்கிறதோ அமெரிக்காகவும் அதேயளவுக்கு தீர்மானத்தை வெற்றிபெற வைக்க முனைகிறது.

பாகிஸ்தான்இ கியூபா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவுடன் தீர்மானத்தை எப்படியாவது தோற்கடித்து விடவேண்டும் அல்லது அதனை பலவீனப்படுத்தியாவது விடவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

ஆனால் தீர்மானத்தை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதை அரசதரப்பின் கருத்துகளில் இருந்து உணரமுடிகிறது. என்றாலும், அரசாங்கம் தனக்குக் கிடைத்துள்ள எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. கிட்டத்தட்ட மேற்குலகிற்கு எதிரான ஒரு போரை நடத்தும் தோரணையில் அரசாங்கம் செயற்படுகிறது.

இது கருத்து ரீதியான மோதலுக்கும் அப்பால் குரோதமான போக்கையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது. பிரதி வெளிவகார அமைச்சர் நியோமல் பெரேரா பங்கேற்ற- அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உருவபொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இது அரசாங்கம் எந்தளவுக்கு இராஜதந்திர ரீதியாக குழப்பமடைந்துள்ளது என்பதற்கு சாட்சியாகும்.

ஈரான், சிரியா, வடகொரியா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் இது போன்று நடந்திருந்தால் ஆச்சரியமில்லை. ஆனால் இலங்கையில் நடந்திருப்பது ஆச்சரியமான விடயம்தான். இதுபோன்ற நிகழ்வுகள் மேற்சொன்ன நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்த்து விடக் கூடிய நிலையை உருவாக்கி விடக்கூடும்.

ஜெனீவா களத்தில் நடக்கும் இராஜதந்திரப் போரை, கோலியாத்தும் சிறுவன் தாவீதும் மோதும் போர்க்களம் என்று கொழும்பு ஊடகங்கள் ஒப்பிடுகின்றன. அது உண்மை தான்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளை இலங்கை அரசு முரண்பட்டு மோதிக்கொள்கிறது. சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொடுக்கும் துணிவு தான் இந்தளவுக்கு இலங்கை நின்று பிடிப்பதற்குக் காரணம்.

புவிசார் அரசியல் சூழலை நன்றாக கவனித்து இலங்கை அதற்குள் புகுந்து விளையாட முனைந்தது. அதாவது சீனாவையும் ரஷ்யாவையும் இந்தியாவையும் மிகத்தந்திரமாகக் கையாள்வதன் மூலம் தனக்கெதிரான சர்வதேச நிகழ்ச்சி நிரல்களை உடைத்து விடலாம் என்று அரசாங்கம் நம்பியது. ஆனால் அந்த நம்பிக்கையில் இடி விழுந்தது போல இந்தியாவின் முடிவு அமைந்து விட்டது.

ஜெனீவா தீர்மான விடயத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா நழுவல் போக்கில் தான் இருந்தது. எதையும் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்தே வந்தது.

ஒரு கட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவும் பிரதமர் மன்மோகன்சிங்கும் இந்திய நாடாளுமன்றத்தில் கூறிய கருத்து மிகவும் விந்தையாகவே இருந்தது. அமெரிக்காவின் தீர்மான வரைபு எல்லா நாடுகளுக்கு வழங்கப்பட்டு பல நாட்களுக்குப் பின்னர் இவர்கள் தீர்மான வரைபை இந்தியா படிக்கவில்லை என்று கூறியது வேடிக்கை.

இந்தியா இந்த விடயத்தில் எந்தளவுக்கு நழுவ முடியும் என்றே பார்த்தது. ஆனால் மாநிலக் கட்சிகளின் கையில் மத்திய அரசின் குடுமி இப்போது வலுவாகச் சிக்கியுள்ளதால் வேறு வழியிருக்கவில்லை. அதிலும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களே மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது தான் மிகப்பெரிய சோகம்.

அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் தமது நம்பகத்தை காத்துக் கொள்ளாது போனால் தமிழ்நாட்டில் தமது இருப்பு பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் தோன்றத் தொடங்கி விட்டது.

எப்படியோ மன்மோகன்சிங் அரசு அழுத்தங்களுக்கு நின்று பிடிக்க முடியாமல் தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவிக்க இலங்கை அரசுக்கு அது இடியான செய்தியாகவே அமைந்தது. அதைவிட ஆபிரிக்க நாடுகளும் கூட எதிர்பார்த்தளவுக்கு கைகொடுக்கத் தயாராக இல்லை.

குறிப்பாக இந்தமாதத் தொடக்கத்தில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பயணம் மேற்கொண்ட நைஜீரியா, கமரூன் போன்ற நாடுகளே தீர்மானத்துக்கு ஆதரவாக நிற்கின்றன. இவையெல்லாம் ஜெனிவாவில் இலங்கையின் நிலையைப் பலவீனப்படுத்தியுள்ளது.

இதனால் வாக்கெடுப்பு முடிவு பெரும்பாலும் இலங்கைக்குச் சாதகமாக வருவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. முடிவு எப்படி அமைந்தாலும், அரசாங்கம் கவலைப்படாது என்று அமைச்சரவையில் ஜனாதிபதி கூறியதாக அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.

தீர்மானம் தமக்குச் சாதமாக அமையாது என்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டு விட்டதையே இது வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதையடுத்து பல தொடர் விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அது உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியரங்கிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால இனமோதல்கள் வெடிக்கும் என்ற தொனியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து வெளியிட்டிருந்தார். அந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துகள் விரும்பத்தகாத விளைவுகளைத் தான் தரும்.

இன்னொரு இனமோதலுக்கு நாடு தயாராக இல்லை என்றாலும், அதனைத் தூண்டும் வகையில் அரசிலுள்ளவர்களே கருத்துகளை வெளியிடுவதை சர்வதேசம் உன்னிப்பாகவே கவனிக்கும். இதுபோன்ற எச்சரிக்கைகள் மக்களிடையே பீதியை ஏற்றுபடுத்தவே செய்கின்றன.

அதேவேளை இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பிடித்து உள்ளே போட வேண்டும் என்ற குரல்களும் எழுகின்றன. இவையெல்லாம் கோபத்தை தமிழர்கள் மீது தீர்ப்பதற்கான இன்னொரு முயற்சியாகவே தெரிகிறது.

ஜெனிவா தீர்மான விடயத்தில் தமிழர்கள் மீது கோபத்தைத் தீர்ப்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதுமில்லை. ஏனென்றால் இந்தத் தீர்மானம் தமிழர்களால் கொண்டு வரப்பட்டதும் இல்லை. இது தமிழர்களுக்கு முற்றிலும் சாதகமானதும் இல்லை.

ஆனாலும் இந்த விவகாரத்தை தமிழருக்கு எதிராக திருப்பி விடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது நல்லிணக்க முயற்சிகள எந்தக் கட்டத்தில் உள்ளன என்பதற்குப் போதிய ஆதாரமாகியுள்ளது.

அதேவேளை, ஜெனிவா தீர்மானம் இலங்கைக்குப் பாதகமாக அமைந்தால் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையும் வெளிநாடுகளுடனான உறவுகளும் கடும் நெருக்கடிக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளன.

தீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட உள்ளூர் அரசியல், இராஜதந்திர மட்டங்களிலும் மாற்றங்கள் வர வாய்ப்புகள் உள்ளன. எது நடந்தாலும், அரசாங்கம் அடுத்த ஆண்டுக்குள் நல்லிணக்கம் தொடர்பான உறுதியான நகர்வுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

ஏனென்றால் தீர்மான வரைபின்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை குறித்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

அந்த அறிக்கை பாதகமாக அமைந்து விட்டால், அடுத்து இன்னும் பல பாதகமான தீர்மானங்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே ஜெனீவா களத்தில் இலங்கை அரசு வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி அசட்டையாக இருக்க முடியாது.

இலங்கை வெற்றிபெற்றால் இன்னும் வலுவான பொறியொன்றை வைக்க மேற்குலகம் முனையும். தோல்வியடைந்தால், அடுத்த கட்டம் குறித்த தீர்மானிக்க நாள் குறிக்கும்.

எது எப்படியிருந்தாலும், நல்லிணக்க முயற்சிகள், பொறுப்புக்கூறுல், அரசியல்தீர்வு என்பன இனிமேல் இலங்கைத் தீவின் எல்லைகளுக்குள் மட்டும் முடங்கிப் போகும் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

http://www.tamilmirr...1-19-22-03.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.