Jump to content

கல்வியைவிட ஆளுமைப் பண்பே அவசியம்: மீரா உதயகுமார்


Recommended Posts

1_2026635g.jpg

கணவருடன்

 

2_2026634g.jpg

பள்ளி மாணவர்களுடன் படம்: குட்டி ரேவதி

 

மீரா உதயகுமார், கல்விச் செயற்பாட்டாளர். அமெரிக்காவில் கல்வி பயின்ற இவர் கல்விச் சேவைக்காக வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். நாகர்கோவிலுக்கு அருகில் சாக்கர் (Saccer - South Asian Community Centre For Education And Research) என்னும் பள்ளியை நடத்தி வருகிறார். இவர், அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமாரின் மனைவி.

உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்...

எனக்குச் சொந்த ஊர் நாகர்கோவில்தான். ஆனால் என் பெற்றோரின் வேலையின் பொருட்டு நாங்கள் திருநெல்வேலியில் வசித்தோம். அதனால் என் பள்ளிக் கல்வியையும், இளநிலைக் கல்வியையும் திருநெல்வேலியிலேயே படித்தேன். முதுகலைப் படிப்பைத் திருச்சியில் முடித்தேன்.

.சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனை எப்போது வந்தது?

என்அம்மா சமூக நல அலுவலராகப் பணியாற்றினார். என் அப்பாவும் அறிவொளி இயக்கத்தில் செயற்பாட்டளராக இருந்தார். இவையெல்லாம் எனக்குச் சமூகப் பணிகள் மீது ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமாரை எப்போது சந்தித்தீர்கள்?

1992-ல் சென்னையில் சந்தித்தேன். என் தோழி ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்குக் காரணம். ‘உனக்கு ஒத்த சிந்தனை கொண்ட ஒருவர் இருக்கிறார். அவர் உன் வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருப்பார்’ என அவர் சொன்னதால் அவரைச் சந்தித்தேன். மன விருப்பத்துடன் திருமணம் செய்துகொண்டோம்.

அமெரிக்காவில்தான் சமூகப் பணியில் முதுகலை படித்தீர்களா?

ஆம், ஹவாய் பல்கலைக் கழகத்தில் படித்தேன். அந்த அனுபவம் கல்வி குறித்த புரிதலை முற்றிலும் மாற்றிவிட்டது. அந்தப் படிப்பைப் பொறுத்தவரை வகுப்புகள் அவ்வளவாகக் கிடையாது. அந்தச் சமயத்தில் பகுதிநேரமாக நான் சில வேலைகளைச் செய்தேன். ஒருவகையில் அவை எல்லாம் சமூகப் பணிகள்தாம். ஊனமுற்ற மாணவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வகுப்புகளுக்குச் சென்றேன். அவர்களுக்காகத் தேர்வு எழுதியிருக்கிறேன். இந்த அனுபவத்தின் மூலம் நான் என் படிப்புக்கு வெளியே நிறைய கற்றுக்கொண்டேன்.

கல்வி குறித்து என்னவிதமான புரிதல்கள் அங்கு கிடைத்தன?

மாணவர் - ஆசிரியர் ஆளுமை என்பது அங்கு சரிசமமாக உள்ளது. அங்குள்ள வகுப்புகளைப் பொறுத்தவரை ஆசிரியர் மட்டும் பேசிக்கொண்டிருக்கமாட்டார். மாணவர்களும் சரியான அளவு பேசுவார்கள். கருத்துச் சொல்வார்கள். மாணவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும்; ஏற்றுக்கொள்ளப்படும். இந்த மாதிரியான கல்வி முறையில் மாணவர்களின் ஆளுமைப் பண்பு வெளிப்படும். கல்வியைவிட மாணவர்களுக்கு ஆளுமைதான் மிக முக்கியம்.

இங்குள்ள கல்வி முறையில் எம்மாதிரியான குறைகள் இருப்பதாக உணர்கிறீர்கள்?

பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை மிகச் சிறப்பாக உள்ளன. சமச்சீர் கல்வித் திட்டடத்தை எளிமையாகக் குழந்தைகளுக்காக வடிவமைத்துள்ளனர். ஆனால் அவற்றைப் போதிக்கும் முறையில் கூடுதல் கவனம் வேண்டும். மதிப்பெண்களை நோக்கி மாணவர்களைத் தள்ளக் கூடாது. பாடத் திட்டத்திற்கு அப்பாற்பட்டு மாணவர்களின் திறன்களை (Extra curricular activity) வளர்க்க வேண்டும். அவை மிக முக்கியமானவை.

எந்த மாதிரியான திறன்கள்?

எங்களது பள்ளியில் இசை, ஓவியம், நடனம் இம்மாதிரியான திறன்களுக்காகப் பயிற்சி தருகிறோம். இவை உதாரணங்கள்தான். விளையாட்டு உள்ளிட்ட பல விதமான கலைகள் உள்ளன. இந்தத் திறன்கள்தாம் அவர் களுக்கு ஆளுமைப் பண்பை வளர்க்கும். ஆளுமை இருந்ததால்தான் அவர்களால் தங்கள் வாழ்க்கைப் பாதை குறித்து சுயமாக முடிவெடுக்கும் தகுதியைப் பெற முடியும்.

கல்வி போதிப்பதில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறீர்கள்?

மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்குக் கல்வியைப் போதித்து வருகிறோம். அதனால் இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஊதியம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அதற்கான பொருளாதார பலம் எங்களிடம் இல்லை. என் கணவரின் கூடங்குளம் போராட்டத்தை முன்னிட்டு அரசியல் காரணங்களுக்காக எங்கள் பள்ளி தாக்கப்பட்ட போது அதிலிருந்து மீண்டு வர என் பெற்றோர்தான் உதவினர். குழந்தைகளின் இருக்கைகளும் நூலக அலமாரிகளும் தாக்கப்பட்டபோது நாங்கள் அதிலிருந்து மீள சிரமப்பட்டோம்.

கல்வியைப் போதிப்பதில் ஆசிரியர்கள் என்ன மாதிரியான கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்?

ஆசிரியர் பணி, சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய ஒரு பணி. இது மற்ற வேலைகளைப் போல 10 மணியில் இருந்து 6 மணி வரை பார்க்கும் பணி இல்லை. ஒரு சமூகம் உருவாவதற்கான அடித்தளம் பள்ளியில்தான் உருவாக்கப்படுகிறது. அந்த அர்ப்பணிப்புடன் ஆசிரியர்கள் பணியாற்றினால்தான் சமூகப் புரிதல் உள்ள மாணவர்களை உருவாக்க முடியும்.

சமூகப் புரிதல் உள்ள மாணவர்கள் வரும்போது நாட்டில் அனைத்து விதமான வன்முறைகளும், குற்றங்களும் குறையும். சமூக மாற்றம் என்பது சாத்தியப்படும். நல்ல கல்வி அளிப்பதன் மூலம்தான் சமூகச் சீர்திருத்தம் சாத்தியம்.

 

http://tamil.thehindu.com/society/women/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article6256749.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.