Jump to content

நீ அறிவாளியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீ அறிவாளியா?

வா. மணிகண்டன்

சென்ற வாரத்தில் ஓசூரில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. தேனிக்காரர். என்னைவிட இருமடங்கு வயதாவது இருக்கும். ஓசூரில் ஒரு நிறுவனம் நடத்துகிறார். ஆரம்பத்தில் எந்தப் பின்னணியும் இல்லை. பம்பாயிலும், பெங்களூரிலும் சில பட்டறைகளில் வேலை பார்த்திருக்கிறார். தொழில் பழகிய பிறகு பத்தாயிரம் ரூபாயில் தனது நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்பொழுது அது சாம்ராஜ்யம். ஜப்பானிலும் சிங்கப்பூரிலும் நியுஸிலாந்திலும் இருக்கும் நிறுவனங்களோடெல்லாம் டை-அப். பறந்து கொண்டிருக்கிறார். பல கோடி ரூபாய் புரள்கிறது. இத்தகைய மனிதர்களை எதிர்பாராமல் சந்திக்கும் போது என்ன பேசுவது என்ற குழப்பம் வந்துவிடும். எல்லோரும் தங்களின் தொழில் பற்றி பேசுவதில் விருப்பம் காட்டமாட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு மரக்கடைக்காரரைச் சந்தித்த போது தெரியாத்தனமாக ‘உங்க பிஸினஸ் பரவாயில்லீங்களா?’ என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன் ‘என்னங்க பெரிய பிஸினஸு? நாலு கோலும் குச்சியும் வித்து வாயும் வயிறும் வளர்க்கிறேன்..அத விடுங்க தம்பி’என்று பல்ப் கொடுத்துவிட்டார். அவருக்கு தலை முழுவதும் நரை. இந்தப் பொடியனிடம் எதைப் பேசுவது என்று நினைத்திருக்கக் கூடும். கொங்கு மண்டலம் முழுவதும் அவர் மரம் சப்ளை செய்கிறார் என்று தெரியும். கோடிக்கணக்கான ரூபாய்கள். கேட்டால் நாலு கோலும் குச்சியும் என்கிறார். இப்படிச் சொன்னவரிடம் வேறு என்ன பேசுவது? அடங்கிக் கொண்டேன்.

இந்தத் தேனிக்காரரிடமும் பல்ப் வாங்கத் தயாரில்லை. எனக்குத் தெரிந்த விவகாரங்களாகப் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டு புத்தகங்கள் என்று ஆரம்பித்தவுடன் ‘அதெல்லாம் நமக்கு பழக்கமேயில்லீங்க’ என்றார். சினிமா என்றவுடன் ‘சினிமா பார்த்து இருபத்தேழு வருஷம் ஆச்சுங்க’ என்றார். அவ்வளவுதான். பெரிய சிக்கலாகிவிட்டது. புத்தகம்தான் உலகம் என்று நம்பிக் கொண்டிருந்தால் இதுதான் பிரச்சினை. வாசிக்கிறவன் தான் அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருந்தால் நாம்தான் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். இந்த மனிதருக்கு புத்தகமும் எழுத்தும் ஒரு பொருட்டே இல்லை. அவரை முட்டாள் என்று சொல்ல முடியுமா என்ன? பல நூறு குடும்பங்களுக்கு வாழ்வளிக்கிறார்.

‘அவர் மட்டும் புத்தகங்கள் வாசிக்கிறவராக இருந்திருந்தால் அவரது வெற்றி பன்மடங்காக இருந்திருக்கும்’ என்று யாராவது முஷ்டியை மடக்க வேண்டாம். காலங்காலமாக புத்தகங்களோடு மாரடித்து நாசமாகப் போனவர்களின் பெரும்பட்டியலைத் தயாரிக்க முடியும். உண்மையில் புத்தகம், சினிமா, இணையம் ஆகியவற்றையெல்லாம் தாண்டி மிகப்பெரிய உலகம் இருக்கிறது. எழுத்து, ஃபேஸ்புக், வலைப்பதிவு, ட்விட்டர் என்று திரிபவர்கள்தான் தம்மை பெரிய அறிவாளியாகவும் மற்றவர்களை ஒன்றுமே தெரியாத பொக்கைகளாகவும் நினைத்துக் கொள்கிறோம்.

ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு மோட்டலில் பேருந்து நின்றது. இறங்கியிருந்தேன். அங்கு ஒரு லாரி பழுதடைந்து நிற்கிறது. அது பஞ்சாப் வண்டி. இரண்டு மூன்று லாரி டிரைவர்கள் என்னனென்னவோ செய்து பார்த்தார்கள். வேலைக்கு ஆகவேயில்லை. சில நிமிடங்களில் இன்னொரு லாரியிலிருந்து ஒரு ஓட்டுநர் இறங்கினார். அறுபது வயதைத் தொட்டிருந்தார். லுங்கியோடு இறங்கியவர் லாரியின் பேட்டரியில் கை வைத்து என்னென்னவோ செய்தார். ஐந்து நிமிடங்களுக்குள் வண்டி கிளம்பிவிட்டது. அவர் எதுவுமே காட்டிக் கொள்ளாமல் தனது வண்டியை எடுத்துச் சென்றார். நள்ளிரவில் இது நடந்தது. அதன் பிறகு எனக்குத் தூக்கமே வரவில்லை. அத்தகையை பெரிய ராட்சத இரும்பு வண்டியின் சூட்சுமங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார் அந்த எளிய மனிதர். நான் எம்.டெக் படித்திருக்கிறேன். பேரு பெத்த பேரு தாக நீலு லேது. கிரைண்டர் பழுதடைந்தால் பட்டர்பிளை ஷோரூமுக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டியதாக இருக்கிறது.

ஊரில் கோவணம் கட்டிக் கொண்டு வெள்ளாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் சிலரிடம் பேசிப்பார்க்கலாம். செம்பூத்து பறக்கும் விதத்தை வைத்தே மழை வரும் என்று கணித்துவிடுவார்கள். அவர்களிடம் இல்லாத அறிவா நம்மிடம் இருக்கிறது?

இந்த எழுத்தை வாசிக்க ‘நீ அறிவாளியாக இருக்க வேண்டும்’ என்கிற ரீதியில் இன்று ஒருவரி கண்ணில்பட்டது. இத்தகைய வரிகள் உண்மையிலேயே disturb செய்கின்றன. சங்கடமாகவும் இருக்கிறது. தஸ்தாயோவ்ஸ்கியை வாசிக்கவில்லை என்றால் அவன் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. மாக்ஸிம் கார்க்கியை புரிந்து கொள்ளாதவன் மடையன் என்று அர்த்தம் இல்லை. இதையெல்லாம் வாசிக்கத் தெரிந்தவன் தான் அறிவாளி என்று ஸ்டேட்மெண்ட் விடுவதை எப்படி புரிந்து கொள்வது? இது ஒருவிதமான மிரட்டல். இதை புரிந்து கொண்டால்தான் நீ அறிவுஜீவி என்பது ஒருவிதமான ப்ளாக்மெயில்.

புத்தகங்களும் எழுத்தும் சிந்தையைக் கிளறுவதாக இருந்தால் போதும் (Thought provoking). அடிப்படையில் அதுதான் எழுத்தின் சித்தாந்தம் இல்லையா? அதில் மொழி விளையாட்டுக்களும், சிக்கலான வாக்கிய அமைப்புகளும், புதிய வார்த்தைகளையும் அள்ளிவிடுவது எழுத்தாளனுக்கான உரிமை. அவனது திறமை. இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் திருகித் திருகி எழுதிவிட்டு இதுதான் செறிவான எழுத்து; இதை வாசிக்கிறவன் தனி உலகத்தினன் என்றெல்லாம் சொல்வது வெளியில் இருந்து பார்க்கும் எளிய வாசகனிடம் ‘இதைப் படிக்கத் தெரியலைன்னா ஓடிப் போடா முட்டாப்பயலே’ என்பது போல இருக்கிறது. அவன் கொஞ்சம் விவரமானவனாக இருந்தால் தப்பித்துக் கொள்வான். ஏமாந்த சோனகிரியாக இருந்தால் ‘எதுக்கு வம்பு? படிக்கிறோமோ இல்லையோ அந்த மனுஷனின் எழுத்தை படிக்கிறேன் என்று சொல்லி வைப்போம்’ என்று பம்மத் தொடங்கிவிடுவான்.

வாசிப்பதும் எழுதுவதும் ஒரு கலைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக செருக்கும் திமிருமாக இருக்க வேண்டியதில்லை. படைப்பாளனுக்குத் திமிர் அவசியம் என்றும் படைப்பவனின் கர்வம் பெருமையுடைத்து என்றெல்லாம் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஒரு மண்ணும் இல்லை. தறி ஓட்டுபவனும், வயல் உழுபவனும் எந்தவிதத்திலும் கேவலமானவன் இல்லை. காலங்காலமாக சேற்றுக்குள் உழலும் அவனுக்குத்தான் எந்தப் பயிர் எந்தப் பருவத்தில் விளையும் என்று தெரியும். அவனது துறையில் அவன் கொண்டிருக்கும் அறிவில் ஐந்து சதவீதம் கூட நம்மிடம் இல்லை என்பதுதானே உண்மை?

இதையெல்லாம் ‘அவர் எழுதியதற்கு எதிர்வினை’ என்று எந்த எழுத்தாளரோடும் இதை இணைத்துப் பார்க்க வேண்டியதில்லை. ‘அவர் சொல்லவந்ததன் அர்த்தமே வேறு’ என்று யாராவது வியாக்கியானம் வேறு கொடுப்பார்கள். எதற்கு வம்பு? எழுத்தும் வாசிப்பும்தான் அறிவின் இலக்கணம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எல்லோருக்குமான பதில்தான் இது. இங்கு நிறையப் பேர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்- மண்டை நிறைய கனத்தோடு. இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் வாசிப்பதும் எழுதுவதும் எந்தவிதத்திலும் பிறவற்றைவிட சிறப்பு வாய்ந்ததில்லை. அப்படி யாராவது நம்பிக் கொண்டிருந்தால் பொடனியிலேயே புறங்கையால் தட்டலாம். ஆனது ஆகட்டும்.

அவனவன் துறையில் அவனவன் கில்லி. அவன் வாசிக்காவிட்டாலும் கூட கில்லிதான்.

http://www.nisaptham.com/2014/09/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 . எழுத்து, ஃபேஸ்புக், வலைப்பதிவு, ட்விட்டர் என்று திரிபவர்கள்தான் தம்மை பெரிய அறிவாளியாகவும் மற்றவர்களை ஒன்றுமே தெரியாத பொக்கைகளாகவும் நினைத்துக் கொள்கிறோம்.

 

நிதர்சனமான உண்மை நன்றி இனைப்பிற்க்கு கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ அறிவாளியா?

வா. மணிகண்டன்

சென்ற வாரத்தில் ஓசூரில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. தேனிக்காரர். என்னைவிட இருமடங்கு வயதாவது இருக்கும். ஓசூரில் ஒரு நிறுவனம் நடத்துகிறார். ஆரம்பத்தில் எந்தப் பின்னணியும் இல்லை. பம்பாயிலும், பெங்களூரிலும் சில பட்டறைகளில் வேலை பார்த்திருக்கிறார். தொழில் பழகிய பிறகு பத்தாயிரம் ரூபாயில் தனது நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்பொழுது அது சாம்ராஜ்யம். ஜப்பானிலும் சிங்கப்பூரிலும் நியுஸிலாந்திலும் இருக்கும் நிறுவனங்களோடெல்லாம் டை-அப். பறந்து கொண்டிருக்கிறார். பல கோடி ரூபாய் புரள்கிறது. இத்தகைய மனிதர்களை எதிர்பாராமல் சந்திக்கும் போது என்ன பேசுவது என்ற குழப்பம் வந்துவிடும். எல்லோரும் தங்களின் தொழில் பற்றி பேசுவதில் விருப்பம் காட்டமாட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு மரக்கடைக்காரரைச் சந்தித்த போது தெரியாத்தனமாக ‘உங்க பிஸினஸ் பரவாயில்லீங்களா?’ என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன் ‘என்னங்க பெரிய பிஸினஸு? நாலு கோலும் குச்சியும் வித்து வாயும் வயிறும் வளர்க்கிறேன்..அத விடுங்க தம்பி’என்று பல்ப் கொடுத்துவிட்டார். அவருக்கு தலை முழுவதும் நரை. இந்தப் பொடியனிடம் எதைப் பேசுவது என்று நினைத்திருக்கக் கூடும். கொங்கு மண்டலம் முழுவதும் அவர் மரம் சப்ளை செய்கிறார் என்று தெரியும். கோடிக்கணக்கான ரூபாய்கள். கேட்டால் நாலு கோலும் குச்சியும் என்கிறார். இப்படிச் சொன்னவரிடம் வேறு என்ன பேசுவது? அடங்கிக் கொண்டேன்.

இந்தத் தேனிக்காரரிடமும் பல்ப் வாங்கத் தயாரில்லை. எனக்குத் தெரிந்த விவகாரங்களாகப் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டு புத்தகங்கள் என்று ஆரம்பித்தவுடன் ‘அதெல்லாம் நமக்கு பழக்கமேயில்லீங்க’ என்றார். சினிமா என்றவுடன் ‘சினிமா பார்த்து இருபத்தேழு வருஷம் ஆச்சுங்க’ என்றார். அவ்வளவுதான். பெரிய சிக்கலாகிவிட்டது. புத்தகம்தான் உலகம் என்று நம்பிக் கொண்டிருந்தால் இதுதான் பிரச்சினை. வாசிக்கிறவன் தான் அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருந்தால் நாம்தான் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். இந்த மனிதருக்கு புத்தகமும் எழுத்தும் ஒரு பொருட்டே இல்லை. அவரை முட்டாள் என்று சொல்ல முடியுமா என்ன? பல நூறு குடும்பங்களுக்கு வாழ்வளிக்கிறார்.

‘அவர் மட்டும் புத்தகங்கள் வாசிக்கிறவராக இருந்திருந்தால் அவரது வெற்றி பன்மடங்காக இருந்திருக்கும்’ என்று யாராவது முஷ்டியை மடக்க வேண்டாம். காலங்காலமாக புத்தகங்களோடு மாரடித்து நாசமாகப் போனவர்களின் பெரும்பட்டியலைத் தயாரிக்க முடியும். உண்மையில் புத்தகம், சினிமா, இணையம் ஆகியவற்றையெல்லாம் தாண்டி மிகப்பெரிய உலகம் இருக்கிறது. எழுத்து, ஃபேஸ்புக், வலைப்பதிவு, ட்விட்டர் என்று திரிபவர்கள்தான் தம்மை பெரிய அறிவாளியாகவும் மற்றவர்களை ஒன்றுமே தெரியாத பொக்கைகளாகவும் நினைத்துக் கொள்கிறோம்.

ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு மோட்டலில் பேருந்து நின்றது. இறங்கியிருந்தேன். அங்கு ஒரு லாரி பழுதடைந்து நிற்கிறது. அது பஞ்சாப் வண்டி. இரண்டு மூன்று லாரி டிரைவர்கள் என்னனென்னவோ செய்து பார்த்தார்கள். வேலைக்கு ஆகவேயில்லை. சில நிமிடங்களில் இன்னொரு லாரியிலிருந்து ஒரு ஓட்டுநர் இறங்கினார். அறுபது வயதைத் தொட்டிருந்தார். லுங்கியோடு இறங்கியவர் லாரியின் பேட்டரியில் கை வைத்து என்னென்னவோ செய்தார். ஐந்து நிமிடங்களுக்குள் வண்டி கிளம்பிவிட்டது. அவர் எதுவுமே காட்டிக் கொள்ளாமல் தனது வண்டியை எடுத்துச் சென்றார். நள்ளிரவில் இது நடந்தது. அதன் பிறகு எனக்குத் தூக்கமே வரவில்லை. அத்தகையை பெரிய ராட்சத இரும்பு வண்டியின் சூட்சுமங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார் அந்த எளிய மனிதர். நான் எம்.டெக் படித்திருக்கிறேன். பேரு பெத்த பேரு தாக நீலு லேது. கிரைண்டர் பழுதடைந்தால் பட்டர்பிளை ஷோரூமுக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டியதாக இருக்கிறது.

ஊரில் கோவணம் கட்டிக் கொண்டு வெள்ளாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் சிலரிடம் பேசிப்பார்க்கலாம். செம்பூத்து பறக்கும் விதத்தை வைத்தே மழை வரும் என்று கணித்துவிடுவார்கள். அவர்களிடம் இல்லாத அறிவா நம்மிடம் இருக்கிறது?

இந்த எழுத்தை வாசிக்க ‘நீ அறிவாளியாக இருக்க வேண்டும்’ என்கிற ரீதியில் இன்று ஒருவரி கண்ணில்பட்டது. இத்தகைய வரிகள் உண்மையிலேயே disturb செய்கின்றன. சங்கடமாகவும் இருக்கிறது. தஸ்தாயோவ்ஸ்கியை வாசிக்கவில்லை என்றால் அவன் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. மாக்ஸிம் கார்க்கியை புரிந்து கொள்ளாதவன் மடையன் என்று அர்த்தம் இல்லை. இதையெல்லாம் வாசிக்கத் தெரிந்தவன் தான் அறிவாளி என்று ஸ்டேட்மெண்ட் விடுவதை எப்படி புரிந்து கொள்வது? இது ஒருவிதமான மிரட்டல். இதை புரிந்து கொண்டால்தான் நீ அறிவுஜீவி என்பது ஒருவிதமான ப்ளாக்மெயில்.

புத்தகங்களும் எழுத்தும் சிந்தையைக் கிளறுவதாக இருந்தால் போதும் (Thought provoking). அடிப்படையில் அதுதான் எழுத்தின் சித்தாந்தம் இல்லையா? அதில் மொழி விளையாட்டுக்களும், சிக்கலான வாக்கிய அமைப்புகளும், புதிய வார்த்தைகளையும் அள்ளிவிடுவது எழுத்தாளனுக்கான உரிமை. அவனது திறமை. இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் திருகித் திருகி எழுதிவிட்டு இதுதான் செறிவான எழுத்து; இதை வாசிக்கிறவன் தனி உலகத்தினன் என்றெல்லாம் சொல்வது வெளியில் இருந்து பார்க்கும் எளிய வாசகனிடம் ‘இதைப் படிக்கத் தெரியலைன்னா ஓடிப் போடா முட்டாப்பயலே’ என்பது போல இருக்கிறது. அவன் கொஞ்சம் விவரமானவனாக இருந்தால் தப்பித்துக் கொள்வான். ஏமாந்த சோனகிரியாக இருந்தால் ‘எதுக்கு வம்பு? படிக்கிறோமோ இல்லையோ அந்த மனுஷனின் எழுத்தை படிக்கிறேன் என்று சொல்லி வைப்போம்’ என்று பம்மத் தொடங்கிவிடுவான்.

வாசிப்பதும் எழுதுவதும் ஒரு கலைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக செருக்கும் திமிருமாக இருக்க வேண்டியதில்லை. படைப்பாளனுக்குத் திமிர் அவசியம் என்றும் படைப்பவனின் கர்வம் பெருமையுடைத்து என்றெல்லாம் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஒரு மண்ணும் இல்லை. தறி ஓட்டுபவனும், வயல் உழுபவனும் எந்தவிதத்திலும் கேவலமானவன் இல்லை. காலங்காலமாக சேற்றுக்குள் உழலும் அவனுக்குத்தான் எந்தப் பயிர் எந்தப் பருவத்தில் விளையும் என்று தெரியும். அவனது துறையில் அவன் கொண்டிருக்கும் அறிவில் ஐந்து சதவீதம் கூட நம்மிடம் இல்லை என்பதுதானே உண்மை?

இதையெல்லாம் ‘அவர் எழுதியதற்கு எதிர்வினை’ என்று எந்த எழுத்தாளரோடும் இதை இணைத்துப் பார்க்க வேண்டியதில்லை. ‘அவர் சொல்லவந்ததன் அர்த்தமே வேறு’ என்று யாராவது வியாக்கியானம் வேறு கொடுப்பார்கள். எதற்கு வம்பு? எழுத்தும் வாசிப்பும்தான் அறிவின் இலக்கணம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எல்லோருக்குமான பதில்தான் இது. இங்கு நிறையப் பேர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்- மண்டை நிறைய கனத்தோடு. இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் வாசிப்பதும் எழுதுவதும் எந்தவிதத்திலும் பிறவற்றைவிட சிறப்பு வாய்ந்ததில்லை. அப்படி யாராவது நம்பிக் கொண்டிருந்தால் பொடனியிலேயே புறங்கையால் தட்டலாம். ஆனது ஆகட்டும்.

அவனவன் துறையில் அவனவன் கில்லி. அவன் வாசிக்காவிட்டாலும் கூட கில்லிதான்.

 

 

எனக்கும் இவ்வாறு சிலரைத்தெரியும்

உழைப்பால் உயர்ந்தவர்கள் மட்டுமல்ல

மற்றவர்களுக்கு உதவும் முடிந்ததை செய்யும் குணத்தாலும்

எல்லோரோடும் அன்பாக

எல்லோரது பிரச்சினைகளையும் தீர்ப்பவர்களாக.....

இருப்போரைக்கண்டிருக்கின்றேன்

பழகியிருக்கின்றேன்

 

அதிசய  பிறவிகளாகத்தெரிவார்கள் எனக்கு..

கல்வி படிப்பு பத்திரங்கள் எதுவற்று

இவ்வாறு இருக்கும் நபர்களை  சந்தித்ததை இட்டு பெருமைப்படுவதுண்டு

நானும் இவ்வாறு வாழணும் என்ற ஆசையை  என்னுள் விதைப்பவர்கள்

அவர்களது   குணத்துக்கு

வருவது  அவ்வளவு எழிதல்ல என்பதை எனது ஒவ்வொரு நடவடிக்கைகளும் எனக்கு சுட்டி நிற்கும்..

 

நல்ல  பதிவு

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விடயங்கள் ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆக்கத்தை படிக்கும் போது எனக்கு ஒரு நினைவு வந்தது...அண்மையில் கிடைத்த அனுபவம்  கூட ....நான் என் நேரத்தை எப்போதும் வீணாக்க மாட்டேன்...அந்தவகையில் நிறைய ஏதாச்சும் எழுதிக்கொண்டு பொயிண்டாக சொல்வது மாதிரி எடுத்துக் கொண்டே  இருப்பன்..

என்னோடு நன்றாக நடித்துப் பழகிய ஒருவர் என்னைக்  களட்டி விடுவதற்கான உதாரணமாக சொல்வப் பட்டவை. உனக்குத் தானே எழுத தெரியுமாச்சே அதை வைச்சு பிழைச்சுப்போ எள்று முறித்துக் கொண்டு போய் விட்டார்...எழுதிறம் என்றதற்காக நாங்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று சொன்னால் சனம் கல்லால் தான் குத்த வரும்...எல்லாராலும் எல்லாம் செய்ய இயலாது..அதே நேரம் ஓரே எழுதிக் கொண்டும் இருக்க ஏலாது..பறக்கும் தேனீக்கும் ஓய்வு தேவையானதால் தான் ஓய்வு எடுக்கிறது அவ்வாறே மனித மனங்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ இங்ஙையுமா? சில விடயங்களில் அமைதி காப்பதே மேல் யாயினி அப்படி இருந்தைமையால் உண்மையாண நட்புகளை இன்றும் இழக்காமால் இறுமாப்புடனேயே வாழ்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளன் என்றால்?

வா. மணிகண்டன்

வணக்கம்.

தங்களை முகநூல் மூலம் அறிந்து,அப்புறம் உங்களின் இணைய பக்கங்களை படிக்கத் தொடங்கினேன்.வாழ்த்துக்கள்!!

நீ அறிவாளியா? என்கிற கட்டுரையில், “இந்த எழுத்தை வாசிக்க ‘நீ அறிவாளியாக இருக்க வேண்டும்’ என்கிற ரீதியில் இன்று ஒருவரி கண்ணில்பட்டது. இத்தகைய வரிகள் உண்மையிலேயே disturb செய்கின்றன. சங்கடமாகவும் இருக்கிறது. தஸ்தாயோவ்ஸ்கியை வாசிக்கவில்லை என்றால் அவன் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. மாக்ஸிம் கார்க்கியை புரிந்து கொள்ளாதவன் மடையன் என்று அர்த்தம் இல்லை. இதையெல்லாம் வாசிக்கத் தெரிந்தவன் தான் அறிவாளி என்று ஸ்டேட்மெண்ட் விடுவதை எப்படி புரிந்து கொள்வது? இது ஒருவிதமான மிரட்டல். இதை புரிந்து கொண்டால்தான் நீ அறிவுஜீவி என்பது ஒருவிதமான ப்ளாக்மெயில்” என்று எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதியது யார் என்பது உங்களுக்கும் தெரியும் - எனக்கும் தெரியும்.

ஒரு புரிதலுக்காக கேட்கிறேன். நீங்கள் பொறியியல் பட்டதாரி. எனக்கு அது சம்மந்தமாக ஒன்றும் தெரியாது.இருந்தாலும் தெரிந்த மாதிரியே நான் உங்களிடம் பேசுகிறேன். என் பேச்சு சுத்த முட்டாள் தனமாக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் நான் வேறு ஒரு துறையில் ஜாம்பவான். அதற்காக நீங்கள் சகித்துக்கொண்டு தலையாட்டிக்கொண்டிருபீர்களா? இல்லை, “உங்களுக்கெல்லாம் இது தெரியாதுண்ணே, போய் உங்களுக்கு தெரிந்ததை செய்யுங்கண்ணே” என்பீர்களா?

தனக்கு பரிச்சியம் இல்லாத அல்லது பாண்டித்யம் இல்லாத துறையில் ஒருவர் மூக்கை நுழைத்து தடாலடியாக பேசும் போது எரிச்சல் தானே வரும்?

நீங்கள் குறிப்பிடும் அந்த லாரி டிரைவர், உங்களிடம் வந்து, “என்ன செயகாந்தனும்,செயமோகனும் எலுதி கிலிச்சிட்டானுங்க தம்பி....நா(ன்) சின்னப்புள்ளையா இருக்கச்சே பி.டி.சாமியோட கதைய படிப்பேன் பாரு அத அடிச்சிக்க இன்னொருத்தன் பொறந்து வறனும்...”னு பேசினா அவரின் தொழில் திறமையை பாராட்டிய நீங்கள், அவரின் இலக்கிய அறிவையும் பாராட்டுவீர்களா அல்லது “நமக்கெதுக்குங்கண்ணே அதெல்லாம், போய் லாரிய ஓட்டுங்க..” என்பீங்களா?

எம்.எஸ்.ராஜேந்திரன், திருவண்ணாமலை.

அன்புள்ள ராஜேந்திரன்,

வணக்கம்.

எழுத்து என்பதை ஒரு புரிதலுக்கான திறவுகோலாக மட்டும்தான் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு வேண்டுமானாலும் ஆழமான சரக்கும் இருக்கலாம் சாக்குப்பையும் இருக்கலாம். அவையெல்லாம் இரண்டாம்பட்சம். அடிப்படையில் அது ஒரு தகவல் தொடர்புக்கான வழி. அவ்வளவுதான். எழுத்தாளனுக்கு நம்மிடம் சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது. அதை கட்டுரையாகவோ, கவிதையாகவோ, கதையாகவோ அல்லது நாவலாகவோ அவன் தனக்குத் தெரிந்த வழியில் எழுதுகிறான். அதை வாசகனால் புரிந்து கொள்ள முடியலாம் அல்லது இயலாமலும் போகலாம். ஆனால் அதற்காக எழுதுகிறவன் பிஸ்தா என்கிற பில்ட் அப் சமாச்சாரங்களில்தான் சங்கடமாக இருக்கிறது.

இங்கு எல்லோரிடமுமே எழுதுவதற்கான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு கிழவியிடம் பேசினால் அவளிடம் ஆயிரம் கதைகளாவது தேறும். ஒரு குழந்தையிடம் கூட சொல்வதற்கான கதைகள் இருக்கின்றன. யாரிடம்தான் கதைகள் இல்லை? இருக்கிற கதைகளை எழுதுகிறவன் எழுத்தில் கொண்டு வந்துவிடுகிறான் மற்றவர்களால் அதைச் செய்ய முடிவதில்லை. அது மட்டும்தான் வித்தியாசம். அவனால் தனது கதைகளை எழுத்தாக்க முடிகிறது என்கிற அளவில் மரியாதையைக் கொடுக்கலாம்.

ஆனால் இங்கு அப்படியா நடக்கிறது? எழுத்தாளன் என்றால் கண்களுக்குத் தெரியாத இரண்டு கொம்புகள் இருப்பதாகத்தானே கருதிக் கொள்கிறார்கள். இது இன்று நேற்று வந்ததில்லை. பாரம்பரியம். காலங்காலமாக அப்படித்தான் இருக்கிறது.

கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். கம்பனைத் தெரிகிறது, வள்ளுவனைத் தெரிகிறது, பள்ளு இலக்கியத்தை எழுதியவனின் பெயரைக் கூடத் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் இருக்கும் நந்தி சிலையை வடித்தவனின் பெயரைத் தெரிந்து வைத்திருகிறோமா என்ன? என்று. குகை ஓவியங்கள் வேண்டாம்- சமீபத்தில்-முந்நூறு அல்லது நானூறு வருடங்களுக்கு முன்பாக மதுரை மீனாட்சியம்மன் போன்ற கோவில்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை வரைந்தவனின் பெயரைத் தெரிந்து வைத்திருக்கிறோமோ? மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை எழுதிய குமரகுருபரை நமக்குத் தெரியும் ஆனால் அதே பிள்ளைத்தமிழை சிற்பங்கள் ஆக்கியவன் யாரென்று தெரியாது. சிற்பம், ஓவியம் போன்ற பிற கலைகளுக்கு இன்று வரையிலும் அதே நிலைமைதான். எத்தனை தற்கால ஓவியர்களின் பெயர்கள் நமக்குத் தெரியும்? எத்தனை சிற்பிகளின் பெயர்களைத் தெரியும்? சொற்பம்தான்.

ஆனால் கவிஞர்களை லிஸ்ட் எடுங்கள். கதை எழுதுபவர்களை லிஸ்ட் எடுங்கள். பல பக்கங்கள் வேண்டும்.

ஓவியன், சிற்பி உள்ளிட்ட கலைஞனையெல்லாம் விட எழுத்தாளன் எந்தவிதத்தில் உயர்ந்தவனாக இருக்கிறான்? பிரச்சினை நம் பாடத்திட்டங்களிலும் நம் புரிதலிலும் இருக்கிறது. இன்றைக்கு செய்யுளை படிக்கிறோம். கவிதைகளைப் படிக்கிறோம். ஆனால் சிற்பக்கலையின் அடிப்படையை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறோமா? மாணவர்களை விடுங்கள். நாமாவது தெரிந்து வைத்திருக்கிறோமா? ஓவியம் பற்றிய நம் புரிதல் என்ன? ஒன்றுமில்லை.

இதே பாரம்பரியத்தில் வந்தவன் தானே இன்றைய எழுத்தாளன்? அதனால்தான் கம்பனுக்கும், பாரதிக்கும் கொடுத்த புகழை எனக்கும் கொடுங்கள் என்கிறான். சக காலத்தில் வாழும் ஓவியனையும் சிற்பியைவிடவும் நாம் எந்தவிதத்திலும் உயர்ந்தவனில்லை என்கிற மனநிலையே எழுத்தாளனுக்கு உருவாவதில்லை. அதுதான் சிக்கல். வெளிப்படையாகச் சொன்னால் மற்ற எந்தக் கலையைவிடவும் மிகச் சுலபமானது எழுத்துக்கலை. ஆனால் இங்கு எழுத்தாளர்கள்தான் பிதற்றுகிறார்கள். ‘நான்தான் அறிவாளி’ என்று கூக்குரலிடுகிறார்கள். ‘எங்களை அங்கீகரியுங்கள்’ என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். ஓவியர்களும், சிற்பிகளும் எங்கேயாவது எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எழுத்தாளனைப் போல கதறுவதைப் பார்க்கிறோமா?

இணையம் ஏகப்பட்ட வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். கொஞ்சம் பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் எழுத்தில் முத்திரை பதித்துவிட முடியும். மற்றவர்களை கவனிக்க வைத்துவிடவும் முடியும். நானும் எழுதுகிறேன். நீங்களும் எழுதுங்கள். எழுதிவிட்டு போகலாம். எவ்வளவுதான் திணறினாலும் ஜெயமோகனின் எழுத்தை யாரேனும் அழித்துவிட முடியுமா என்ன? சாருவின் இடத்தை இன்னொருவன் பிடித்துவிட முடியுமா என்ன? சுஜாதா எப்பொழுதும் சுஜாதாதான். ஜெயகாந்தன் எப்பொழுதும் ஜெயகாந்தன் தான். பிறகு எதற்கு இவ்வளவு பதற்றம்? ஏன் எந்நேரமும் எழுத்தாளன் பீடத்தின் மீதே இருக்க வேண்டும் என நாமும் எதிர்பார்க்கிறோம்? அவனும் விரும்புகிறான்.

இதையெல்லாம் உடைத்துவிட வேண்டும். இது சரியான தருணம். இந்த மாயை அவசியமே இல்லாதது. எழுத்தாளன் எந்தவிதத்திலும் பீடாதிபதி இல்லை. சாதாரண எளிய மனிதனாக இருக்கும் வரை அவன் ஒரு ஊற்று. எழுத்துக்களால் வாசகனை கட்டிப்போடுகிறான். ஆனால் பீடத்தின் மீதேறி அருள்பாலிக்கத் தொடங்குவதிலிருந்து அவன் அடங்கத் தொடங்குகிறான். பதற்றம் அவனது கைகளைப் பற்றிக் கொள்கிறேது.

உங்களின் கேள்விக்கு என்னிடம் இருக்கும் பதில் இதுதான் - என்னிடம் வந்து ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்கிற ரீதியில் தப்பும் தவறுமாகப் பேசினால் விவரிக்க முயற்சிப்பேன். ஆனால் எதிரில் பேசிக் கொண்டிருப்பவர் கண்களையும் காதுகளையும் மூடியிருந்தால் நான் தலையைக் குனிந்து அடுத்த வேலையைப் பார்ப்பேனே தவிர ஓங்கி அறைந்து ‘உனக்கு அறிவில்லை’ என்று ஆயா மீது சத்தியமாகச் சொல்லமாட்டேன். அதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று தெரியும்.

http://www.nisaptham.com/2014/09/blog-post_73.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.