Jump to content

கைகளால் உணவருந்துவதற்கான, நல்ல காரணங்கள்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

21-1408599855-1food.jpg

 

கைகளால் உணவருந்துவதற்கான, நல்ல காரணங்கள்!!!

 

ஏன் கைகளால் உண்ணுவதை  விரும்புகிறார்கள் என என்றாவது எண்ணியுள்ளீர்களா? அதற்கு காரணம் வெறும் கைகளால் உணவுகளை உண்ணும் போது உணவின் சுவை கூடுதலாக இருக்கும். குழந்தைகளையும் கைகளாலேயே உண்ணுவதற்கு பழக்கப்படுத்துகின்றனர். இதனால் உணவருந்தும் மேஜையில் சிந்தி சிதறமால் உண்ணுவார்கள் அல்லவா?

 
கைகளால் உண்ணும் போது, அவை உணவின் அமைப்பை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் நமக்கு அளிக்கும். ஸ்பூன் மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி உண்ணும் போது இந்த அமைப்பை நம்மால் உணர முடிவதில்லை. பல இந்தியர்களுக்கு தங்கள் உள்ளங்கையால் உருளைக்கிழங்கை அல்லது இட்லியை சாம்பார் மற்றும் சட்னியுடன் பிசைந்து சாப்பிட மிகவும் விரும்புவார்கள்.

 

வெறும் கைகளால் உணவருந்தினால் மட்டுமே இந்த ஆசைகள் நிறைவேறும். இந்த பேரின்ப உணர்வை அனுபவிக்க வேண்டுமானால், முதலில் வெறும் கைகளால் உண்ண ஏன் இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்ற காரணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

 

கைகளால் உண்ணும் போது உணவின் ருசி அதிகரிக்கிறது.

கைகளால் உண்ணும் போது உணவின் ருசி அதிகரிக்கிறது. அடுத்த முறை உங்கள் முன்னால் ஒரு தட்டில் சாப்பாடுடன் ஸ்பூன் மற்றும் ஃபோர்க் ஆகியவைகள் வைக்கப்பட்டால், அவைகளை தவிர்த்து உங்கள் அழகான விரல்களால் உணவை அள்ளி சாப்பிட்டு பாருங்கள். பல வகை உணவுகளுக்கு பெயர் போனவர்கள் இந்தியர்கள். இந்திய உணவுகளின் வளமையை உணருவதற்கு கைகளால் அவைகளை உண்ணுவதே சிறந்த வழியாகும்.

 

வசதியாக உணர்வீர்கள்.

சாப்ஸ்டிக்ஸ் மற்றும் ஸ்பூன் போன்றவைகளை கொண்டு உண்ணுவதை விட கைகளால் உணவருந்தினால் தான் வசதியாக இருக்கும். இதனை ஒத்துக்கொள்வீர்கள் தானே? வசதியாக இருப்பதால் தான் இந்தியர்கள் கைகளால் உணவருந்துவதற்கு விரும்புகின்றனர். இதனால் அவர்கள் உணவை ரசித்து உண்ணவும் முடிகிறது.

 

கடைசி பருக்கை உணவை கூட வழித்து உண்ணுவீர்கள்.

உங்கள் உணவை நீங்கள் விரும்பினால் அதன் கடைசி பொட்டை கூட விடாமல் வசித்து சாப்பிடுவீர்கள். கைகளால் சாப்பிட்டாலே இது சாத்தியம். இப்படி சுவைமிக்க உணவை உண்ணும் போது, தட்டை சுற்றி விரலல்களால் துடைத்து எடுத்து கடைசி போட்டு உணவை கூட மிச்சம் வைக்கமாட்டீர்கள். கைகளை கொண்டு உணவருந்துவதால் கிடைக்கும் மற்றொரு பயன் இது.

 

நேர்மறையான ஆற்றல் திறனை உணவு அளிக்கிறது.

உணவில் பல வித வெளிப்புற ஆற்றல் திறன்கள் அடங்கியுள்ளது - நேர்மறை, எதிர்மறை, வலிகள், உணர்ச்சிகள், எண்ணங்கள் போன்ற பல. காய்கறி அல்லது மசாலா பொருட்கள் விற்பவர்கள், சமையல்காரர்கள், உணவாக பணியாளர்கள் என பல பேர்களின் கைகளுக்கு செல்கையில், அனைத்து வெளிப்புற ஆற்றல் திறன்களை சுத்தப்படுத்த இந்த கைகள் உதவுகிறது என நம்பப்படுகிறது. இதனால் மனித ஆத்மாவை இது பாதிக்காது.

 

பாக்டீரியாவின், சுவையை அறிந்து கொள்ள....

இயல்பான ஃப்ளோரா என்ற சில பாக்டீரியாக்களை நம் உள்ளங்கைகளில் காணலாம். இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்காது. இருப்பினும் சுற்றுச் சூழலில் உள்ள பல பாக்டீரியாக்களிடம் இருந்து இது நம்மை காக்கிறது. கைகளால் உண்ணும் போது கைகளில் உள்ள ஃப்ளோரா பாக்டீரியாக்களையும் நாம் விழுங்குகிறோம். இது நம் உடல் நலத்திற்கும் வாய், தொண்டை, குடல் போன்ற பல உடல் பாகங்களுக்கும் மிகவும் நல்லதாகும்.

 

மசாலா வாசனை.

கேட்க விந்தையாக இருந்தாலும் இது தான் உண்மை. கைகளால் உண்ணும் போது, எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் உங்கள் கைகளில் மசாலா வாசனை நீடித்து நிற்கவே செய்யும். கைகளால் உணவை உண்ணுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

அந்தக் காலங்களில் குளிர் நாடுகளில் சுடுநீர் கிடைப்பது அரிது. அதனால் மேட்டக்குடி வெள்ளை இனத்தவர்கள் கரண்டிகளைப் பயன்படுத்தினார்கள். குளிர் நீரில் கை கழுவ முடியாதுதானே..

காலப்போக்கில் அதை ஒரு சமூக ஏற்றமாகக் கருதி சாதாரண மக்களும் பாவிக்கத் தொடங்கினார்கள்..! இன்று நாமும் பாவிக்கிறோம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையால் உண்ணும் பொது கிடைக்கும் இன்பம் தனிதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக மக்கள் அனைவரும் உதடு, நாக்கு, பற்கள் மொத்தத்தில் வாயைத்தான் பயன்படுத்துவார்கள்.  எந்த மேட்டுக்குடியினரும் இதற்கு  விதிவிலக்கில்லை.  இதென்ன புதிதாகக் கைகளைப் பயன்படுத்துவது பற்றிப் பேசுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா நாட்களில் மீந்ததை அடுத்தநாள் ஒரு அத்தையோ , சித்தியோ பெரிய பாத்திரத்தில் போட்டுக் குழைத்துத் தர சுற்றி இருந்து இலைகளில் ஒவ்வொரு கவளமாய் வாங்கி சைட் டிஸ்சாய் ஊறுகாய் , வெங்காயம் , மிளகாய் , அப்பளம் என்டு தொட்டுச் சாப்பிட எவ்வளவு ருசியாய் இருக்கும்...! :)

Link to comment
Share on other sites

அந்தக் காலங்களில் குளிர் நாடுகளில் சுடுநீர் கிடைப்பது அரிது. அதனால் மேட்டக்குடி வெள்ளை இனத்தவர்கள் கரண்டிகளைப் பயன்படுத்தினார்கள். குளிர் நீரில் கை கழுவ முடியாதுதானே..

 

 

இதே காரணத்திற்காகத்தான்  Toilet tissue வும் வந்தது.   :rolleyes:

Link to comment
Share on other sites

நான் அலுவலகத்தில் தவிர மிச்ச அனைத்து இடங்களிலும் கைகளால் தான் சாப்பிடுவது. இட்டலி, தோசை கொண்டு போகும் நாட்களில் அலுவலகத்திலும் கையால தான் சாப்பிடுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அலுவலகத்தில் தவிர மிச்ச அனைத்து இடங்களிலும் கைகளால் தான் சாப்பிடுவது. இட்டலி, தோசை கொண்டு போகும் நாட்களில் அலுவலகத்திலும் கையால தான் சாப்பிடுவது.

 

இட்லி, தோசை.... எல்லாம் அலுவலகத்துக்கு கொண்டு போய்... சாப்பிடுவீர்களா?

அதை பின்னேரம் வந்து, ஆறுதலாய் சாப்பிட்டால்.... என்னவாம்? :D 

நாங்கள் பாண் தான்.... கொண்டு போவோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக்கு மா கையால் குழைப்பதும் தனி ருசியைத்தரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரன்டியால் சாப்பிடுவதால் ஒரு பொிய நன்மை உண்டு.எதுக்கும்யோசிக்கமால் காகம் துரத்தலாம்.  :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரன்டியால் சாப்பிடுவதால் ஒரு பொிய நன்மை உண்டு.எதுக்கும்யோசிக்கமால் காகம் துரத்தலாம். :lol::icon_idea:

ஊரை காட்டிக்குடுத்திட்டியே சஜீவா (உங்களையும் என்னையும் ஒரு கடல்தான் பிரிக்குது.)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரன்டியால் சாப்பிடுவதால் ஒரு பொிய நன்மை உண்டு.எதுக்கும்யோசிக்கமால் காகம் துரத்தலாம்.  :lol::icon_idea:

நாங்களும் இப்படித் தான்!  :D

 

monkeyfishing.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பம், சொதி, சம்பலுடன் கையில் சாப்பிடும் போது  அதன் சுவையே தனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரை காட்டிக்குடுத்திட்டியே சஜீவா (உங்களையும் என்னையும் ஒரு கடல்தான் பிரிக்குது.)

 

எனக்கும் தான்...

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.