Jump to content

ஏடன் தோட்டமும் ஏழாம் வகுப்பு பிள்ளையளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏடன் தோட்டமும் ஏழாம் வகுப்பு பிள்ளையளும்

ப்ரதீப் குணரட்ணம்

AP604059767338-e1400483409255.jpg

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews

மாலை நேரமொன்றில் ஏழாம் வகுப்பு பிள்ளையளுக்கு E.C.Brewer எழுதிய Little things என்ற ஆங்கில கவிதையை விபரித்துக்கொண்டு இருந்தன். சிறுகச்சிறுக சேர்க்கப்படும் நேசமே பேரன்பை உருவாக்கும் என்பதை சொல்லிச்செல்லும் கவிதையது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு முடியும்.

“Little deeds of kindness

Little words of love

Make our earth an eaden

Like the heaven above”

என்று அமையும் வரிகளை கடக்கும்போது ஒரு பெடியன் அண்ணை, ஏடன் தோட்டம் எண்டா என்ன? எண்டு கேட்டான். (இருந்த மாணவர்கள் அனைவரும் இந்து சமூகத்தைச் சார்ந்தவர்கள்) கிறிஸ்தவ படி கடவுளின் மூத்த சிருஷ்டிப்புகள் பற்றியும் ஆதாம் – ஏவாள் பற்றியும், ஏடன் தோட்டம் பற்றியும் குறிப்பிட்டு, இறுதியாக இதெல்லாம் பைபிள்ள இருக்கு பிள்ளையள் எண்டு சொன்னன்.

பைபிள் என்றவுடன் பிள்ளையளின்ர முகம் சட்டெண்டு வாடிப்போனது. எனக்கு புரியவில்லை

என்ன நடந்தது பிள்ளையள்?

“எனக்கு கிறிஸ்ரியன்ஸ் பைபிள் எல்லாம் பிடிக்காது அண்ணா”

?????

“எனக்கும்தான் சேர் அந்த புத்தகங்களை பாக்கேக்க ஒரு மாதிரி இருக்கும்”

ஏன் பிள்ளையள் எல்லாம் மதம்தான், சொல்லுறது எல்லாம் ஒண்டதான் எண்டு தொடங்கி 30 நிமிசத்துக்கு மத நல்லிணக்கத்தை தலைப்பாகக் கொண்ட அட்வைஸ் (பிள்ளையளின்ர மொழில) கிளாஸ் எடுத்தன். பிள்ளையள் ஒவ்வொண்டும் தம் நிலை மாறவில்லை. குறிப்பிட்ட ஒரு மதத்தின் வேர் அந்த பிள்ளையளின்ர மனசில ஆழத்துக்கு புரையோடி இருக்கிறத என்னால புரிஞ்சு கொள்ள முடிஞ்சுது. கோவணம் கட்டிக்கொண்டு வயல்ல வேலை செய்த என் முப்பாட்டன் ஒருவன், முதல் முதல் வெள்ளைகாரன் ஒருவனை பார்த்த தோரணையில் என்னை பார்த்தபடி என் பிள்ளையள். நல்லவேளை கிளாஸ் முடிஞ்சுது. வேகமா வெளிய வந்திட்டன்.

மேற்படி நிகழ்வு வெறுமனே அந்த ஏழாம் வகுப்பு பிள்ளையளின்ர பிழையானதும் குறுகியதுமான மனப்பாங்கு பற்றிய பிரச்சினை அல்ல. ஒட்டு மொத்த தேசங்களின் தேசிய மற்றும் சர்வதேச சமூகப் பிரழ்வொன்றின் பிரச்சினையாகும்.

அண்மையில் இலங்கையின் அழுத்கமவில் தொடங்கி நாடுமுழுவதும் நடைபெற்ற மத வன்முறைகளுக்கும், ஆங்காங்கே அரச மரங்களின் நிழல்களில் வந்து அமரும் இளவரசர் சித்தார்த்தரின் செயல்களுக்கும் மேற்படி ஏழாம் வகுப்பு பிள்ளையளின் நிலைக்கும் நிரம்பவே தொடர்புண்டு.

இன்று இலங்கை தேசம் தென்னாசியாவிலேயே இலவச கல்வி மூலம் அதிகளவு படிப்பறிவு கொண்ட மக்களை உருவாக்கியுள்ளதாக ஒரு பக்கம் மார்தட்டுகிறது. குறிப்பாக இலங்கையில் வழங்கப்படும் ஆரம்பக்கல்வியின் தரம் மிக விதந்து உரைக்கப்படுகிறது. ஆனால், மேற்படி ஏழாம் வகுப்பு பிள்ளையளின் இனம் மற்றும் மதம் தொடர்பான குறுகிய எண்ணத்தையும் ஆரம்ப கல்வி முறைமையே சிருஷ்டிப்பதை எத்தனை பேர் உள்ளுணர்ந்துள்ளோம்.

முதலாம் ஆம் வகுப்பு தொடக்கம் ஒவ்வொரு பிள்ளைக்கும் சமயக்கல்வி என்பது அந்தப் பிள்ளை எந்தச் சமயத்தை சேர்ந்ததோ, அந்த சமயத்தினை பற்றிய கல்வியை மட்டுமே அரச பாடவிதானம் சொல்லிக் கொடுக்கிறது. இதனால், ஏனைய சமயங்கள் பற்றிய எண்ணப்பாடுகளின்பால் எந்த பிள்ளையும் செல்வதில்லை. தன் தாயை போல் சமயத்தையும் ஒருமைச்சாதனமாகவே பார்க்கத்தொடங்குகிறது பிள்ளை. இதனால், அதனை அறியாமலே பிள்ளையை குறித்த ஒரு மதம் பிடித்து அல்லது பீடித்துக்கொள்கிறது.

இவ்வாறு ஆரம்ப தரங்களில் குறித்த மத நெறியுடன் இருக்கும் பிள்ளைக்கு உயர்தரங்களில் அதுவும், தமிழ் பாடத்தில் மட்டும் சுந்தரர் தேவாரமும், சீறாப்புராணம், தேம்பாவணியும் ஒருசேர சொல்லி கொடுத்து என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது. எல்லாம் மதமும் ஒன்றைத்தான் சொல்கின்றன, ஒரே விடயத்தை நோக்கி வெவ்வேறு வழிகளில் அனுப்புகின்றன என்பதை எடுத்துச்சொன்னாலும் அவற்றை வெறும் பாடமாகவே அந்த பிள்ளை பார்க்கும். அடிப்படையில் தன் மதமே அறுதியானது என்ற எண்ணமே புதைந்து கிடக்கும்.

இவ்வாறு இருக்கையில் அழுத்கம போன்ற மத உணர்வு தூண்டல்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் அடியில் புதைந்து கிடந்த மதவாதம் எனும் பெருமிருகம் வெளிப்படும். மதம் என்ற பெயரில் அநீதிகளும் காழ்ப்புணர்வுகளும் சமூகத்தின் இருப்பையும் தொடர்ச்சியையும் சீர்குலைக்கும்.

இந்த குறுகிய நிலைமைக்கு பிள்ளையளை கொண்டு செல்லும் பாடவிதானங்கள் திட்டமிடப்பட்டவையல்ல என்பது சிலரின் கருத்து. ஆனால், இவை திட்டமிட்டே தொடங்கப்பட்டவை என்பதே நிதர்சனம். ஆறுமுக நாவலரும் இராமநாதன்களும், அநாகரிக தர்மபாலக்களும், சுமங்கல தேரர்களும், சித்திலெப்பேகளும், கிறிஸ்தவ மிஷனரிகளும் மதச்சண்டைக்கு ஆட்களை உருவாக்க தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்தான் முறைசார் கல்வி இலங்கையில் நிலையான இடத்தைப் பெற்றது. அதன் பொருட்டு உருவாக்கப்பட்ட சமயம் சார்ந்த பாடசாலைகளின் பரிமாண வளர்ச்சியே இந்த நிலைமை. இன்று இலங்கையில் பெரும்பாலான பாடசாலைகள் மதம் சார்ந்தே அடையாளம் பேணுவதை யாரும் மறுக்க முடியாது.

எனின், ஏழாம் வகுப்பு பிள்ளை தன்னை அறியாமலே குறித்த ஒரு மதத்தில் நம்பிக்கையும் பிற மதங்களில் காழ்ப்புணர்வும் கொண்டு இருப்பது ஒன்றும் ஆச்சரியத்துகுரியது இல்லையே.

பின்குறிப்பு – கடைசி வரை என்னால் E.C.Brewer இன் அன்பால் நிறைந்த சுவர்க்கத்தை என்ர பிள்ளையளுக்கு காட்ட முடியாமலே போய்விட்டது என்பது என் அண்மைக்கால தோல்விகளில் ஒன்று.

“Make our earth an eaden

Like the heaven above”

http://maatram.org/?p=1761

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.