Jump to content

சைக்கிளில் சென்று மீன் வியாபாரம் செய்யும் பெண்மணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிலாபம் திண்ணனூரான்

 

இவ் உலகத்தில் அதிகமாக வேதனைக்கும் சோதனைக்கும் உள்ளாகுபவர்கள் பெண்கள் தான். அவ்வேதனையையும் சோதனையையும் முறியடித்து வாழ்பவர்களையே சமுதாயம் புதுமை பெண் என்கின்றது. அவ்வாறான ஒரு புதுமைப் பெண்ணே கொழும்பு மட்டக்குளியில் வசிக்கும் டி. பரீதா. 

 

நான்கு பெண் பிள்ளைகளினதும் ஒரு ஆண் பிள்ளையினதும் தாயான பரீதா,  கொழும்பின் வடபகுதியில் பல  பிரதேசங்களில் சைக்கிளில் அலைந்து மீன் வியாபாரம் செய்கிறார். 

99DSC05208.jpg

44 வயதான பரீதா, கடந்த ஆறு வருடங்களாக துணிவுடன் மீன் வர்த்தகம் செய்து வருகிறார். தனது இந்த உழைப்பின் மூலமாகவே தனது ஐந்து குழந்தைகளையும் அவர் கல்வி கற்க வைக்கின்றார். 
'எனது பிள்ளைகள் வருங்காலத்தில் கல்வி கற்று பெரும் உத்தியோகங்களை பெற்று வளமாக வாழவேண்டும். என்னைப் போன்று வெயிலிலும் மழையிலும் திரிந்து கஷ்டப்படக் கூடாது என்கிறார் பரீதா. 

 

அவரின் தமிழ் பேச்சு நடை கேட்க  இனிமையாக இருக்கும். கணீரென்ற குரலில் இலக்கிய நயத்துடன் மிகத் தெளிவாக சொற்களை தொகுத்து அழகாக தமிழில் உரையாடுகின்றார். இவர் கல்வி கற்றது மோதரவிலுள்ள ஒரு பாடசாலையில்.  க.பொ.தராதரம் சாதாரணம் வரையே கல்வி கற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

99DSC05209.jpg

'பலரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீன் வியாபாரத்தில் இறங்கினேன். இதற்கு முன்னர் எவ்வித வியாபாரமும் செய்து எனக்குப் பழக்கமிருக்கவில்லை. வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல பணம் தேவை. திடீரென தோன்றிய எண்ணத்தின் படி மீன் வியாபாரத்தில் இறங்கினேன். 

 

முன்னர் புறக்கோட்டைக்குச் சென்று, மீன் சந்தையில் மீன்களை வாங்கி, செய்து சைக்கிளில் கொண்டு சென்றேன். அவற்றை பல வீதிகளில் வீடு வீடாக சென்று மீன் விற்க ஆரம்பித்தேன். சிறிது காலத்தில் எனக்கென வாடிக்கையாளர்களை தேடிக் கொண்டேன். 

 

எனது வாழ்க்கையாளர்களின் மனம் அறிந்து, அவர்களின் தேவையை உணர்ந்து மீன் விற்பனையை தொடர்ந்தேன். அதில் வெற்றியும் கண்டேன். எந்தவொரு வர்த்தகமும் தலை நிமிர நாம் எமது வாடிக்கையாளர்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளரின் மனம் நோகும்படி வார்த்தைகளை வெளியிட்டுவிட்டால், மீண்டும் அவர் என்னிடம் மீன் வாங்க வரமாட்டார். எனது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவதற்கான தரமான மீன்களையே நான் வாங்கி விற்பேன். இந்த ஆறு வருடங்களும் எனது குடும்பத்தையும் இத்தொழிலே வாழ வைக்கிறது' என்கிறார் பரீதா. 

99DSC05211.jpg

தொடர்ந்து எமக்கு அவர் தனது வியாபாரம் பற்றி விளக்குகையில், எனக்கான வாடிக்கையாளர்களாக நான் சேமித்து வைத்திருப்பது குடும்பத் தலைவிகளேயாவர். இக்குடும்பத் தலைவிகளுக்கு ஒரு குடும்ப பெண்ணின் கஷ்ட நஷ்டங்கள் நன்கு தெரியும். ஒவ்வொரு குடும்பப் பெண்களும் நல்ல அனுபவசாலிகள் இவர்கள் எனக்கு உதவும் வகையிலேயே மீன்களை என்னிடமிருந்து வாங்குகின்றனர். இதனால் நானும் மீன்களை அதிகளவில் இலாபம் வைத்து  விற்பதில்லை. 

 

தினமும் காலை 4 மணிக்கு நித்திரை விட்டெழும்பி எமது பிள்ளைகளுக்கு காலை உணவையும் பகல் உணவையும் தயாரித்து வைத்ததன் பின்னர் பேலியாகொடை மீன் சந்தைக்கு மீன் கொள்முதல் செய்வதற்காக பயணமாவேன். இச்சந்தையின் மொத்த வியாபாரிகளிடம் தினமும் எட்டு கிலோ முதல் பத்து கிலோ வரையில் கொள்முதல் செய்வேன். சில விசேட வைபவங்களையொட்டிய தினத்தில் மீன் கொள்முதல் எடை அதிகரிக்கவும் செய்யும். காலை 9 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை மீன் விற்பனையில் ஈடுபடுவேன்.  மட்டக்குளி, மோதர, சமிட்புர, கிம்புலா என பிரதேங்களிலேயே நான் மீன் விற்பனையை ஆறு வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றேன். இப்பகுதிகளிலேயே எனக்கான வாடிக்கையாளர்கள் வசிக்கின்றனர். 

 

99DSC05212.jpg
வெள்ளிக்கிழமை மற்றும் நோன்பு காலத்தில் நான்  மீன் வியாபாரத்தை மேற்கொள்வதில்லை. நான் நான்கு தடவைகள் சவூதி, ஜோர்தான், குவைத் நாடுகளுக்கு பணிப் பெண்ணாக தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தேன். இம்மூன்று நாடுகளிலும் முறையாக சம்பளம் வழங்காமையினால் ஒரே மாதத்தில் மீண்டும் நாடு திரும்பிவிட்டேன்' என்கிறார் பரீதா. 

இத்தொழிலின் பிரச்சினை இல்லையா எனக்கேட்டோம; எவ்வித பிரச்சினையும் இல்லை. எமது வியாபார  நடவடிக்கைகள் அனைத்தும் மாலை இரண்டு மணியுடன் முடிவடைந்துவிடும். அதன் பின்னர் நானும் ஏனைய பெண்களைப் போன்று குடும்பப் பெண்ணாக முற்றிலும் மாறிவிடுவேன். ஆண்கள் தான் அனைத்து தொழில்களையும் புரிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இன்று உடைக்கப்பட்டுவிட்டது. பெண்களுக்கு எவ்வளவோ சுயதொழில்கள் உள்ளன. முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்' என்றார் பரீதா, நம்பிக்கையுடன். 

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=99&display=0#sthash.d9PP5HYI.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

இதற்கு முன்னர் எவ்வித வியாபாரமும் செய்து எனக்குப் பழக்கமிருக்கவில்லை. வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல பணம் தேவை. திடீரென தோன்றிய எண்ணத்தின் படி மீன் வியாபாரத்தில் இறங்கினேன். 

------

தினமும் காலை 4 மணிக்கு நித்திரை விட்டெழும்பி எமது பிள்ளைகளுக்கு காலை உணவையும் பகல் உணவையும் தயாரித்து வைத்ததன் பின்னர் பேலியாகொடை மீன் சந்தைக்கு மீன் கொள்முதல் செய்வதற்காக பயணமாவேன்.

-----

 

பரீதாவை நினைக்க.... பாவமாகவும், பெருமையாகவும் இருக்கின்றது.

இவரின் கணவரை பற்றிய குறிப்புகளை.... செய்தியில் காணவில்லை.

அல்லது... பரீதா உழைத்துக் கொண்டு வர, வீட்டில் இருந்து சாப்பிடுகின்றாரா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது துணிச்சலுக்கும் தன்னம்பிக்கைக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

பெண்களின் திறமைகள் மிகவும் பாராட்டுக்குரியவை.  பொறுப்பு என வந்துவிட்டால் தயங்கமாட்டார்கள்.  அந்தவகையில் இவருக்கும் ஏதாவது நெருக்கடி வந்திருக்கலாம்.  வேறு வழியின்றித் தொடங்கியது இப்போது இவருக்குப் பெருமையைத் தந்திருக்கிறது.  இவர் மேலும் வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளை சோதனைகள் தான் சாதனைக்கான ஏறு படிகள். வாழ்க சகோதரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீதாவை விடவும் மிகவும் சிறந்த மீன் வியாபாரம் செய்யும் பெண்களை, சின்னக்கடையிலிருந்து பாசையூர் வரையும் கண்டிருக்கின்றேன்!

 

ஒரு நாள் ஒரு மீன் 'நாறிப்போச்சுப் போல கிடக்கு' எண்டு சொன்னதுக்கு.... நான் வாங்கின பேச்சு இருக்கிறதே...அப்பப்பா.. இப்ப நினைச்சாலும்...வயித்துக்குள்ள பட்டாம் பூச்சிகள் பறக்கிற மாதிரிக் கிடக்கு!

 

அவளது வாயில் ' தமிழ்' பட்ட பாடு...!

 

அண்டைக்குத் தான் எனக்குத் தெரியும்... தமிழ் மொழி எவ்வளவுக்கு வளைந்து கொடுக்கக் கூடியது எண்டு...! :lol:

 

சுயமுயற்சியால் தொழில் செய்து வாழும் 'பரீதா' ஒரு முன்னுதாரணம்! வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீதாவை விடவும் மிகவும் சிறந்த மீன் வியாபாரம் செய்யும் பெண்களை, சின்னக்கடையிலிருந்து பாசையூர் வரையும் கண்டிருக்கின்றேன்!

 

ஒரு நாள் ஒரு மீன் 'நாறிப்போச்சுப் போல கிடக்கு' எண்டு சொன்னதுக்கு.... நான் வாங்கின பேச்சு இருக்கிறதே...அப்பப்பா.. இப்ப நினைச்சாலும்...வயித்துக்குள்ள பட்டாம் பூச்சிகள் பறக்கிற மாதிரிக் கிடக்கு!

 

அவளது வாயில் ' தமிழ்' பட்ட பாடு...!

 

அண்டைக்குத் தான் எனக்குத் தெரியும்... தமிழ் மொழி எவ்வளவுக்கு வளைந்து கொடுக்கக் கூடியது எண்டு...! :lol:

 

சுயமுயற்சியால் தொழில் செய்து வாழும் 'பரீதா' ஒரு முன்னுதாரணம்! வாழ்த்துக்கள்..!

 

தூய தமிழின் பெரும் பகுதியை...... நானும்,  அந்தப் பெண்களிடம் தான் கற்றேன்.

அவற்றை.... கேட்கும்  போது.... காதுக்குள் ஈயத்தை காய்ச்சி, பாச்சி விடுமால் போல் இருக்கும். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மண்ணாங்கட்டி.
 
எங்கடை பருத்தித்துறை,நாகர்கோவில்,தாளையடி,ஆழியவளை பொம்புளையள் கடகம் முழுக்க மீனை நிரப்பிக்கொண்டு ஊரூராய் கால்நடையாய் நடந்து போய் மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றினதெல்லாம் ஊடகங்களுக்கு தெரியாதோ? இல்லை கோமாவோ????
 
படம் போட்டு சேக்கஸ் காட்டுறாங்கள்.
Link to comment
Share on other sites

தூய தமிழின் பெரும் பகுதியை...... நானும்,  அந்தப் பெண்களிடம் தான் கற்றேன்.

அவற்றை.... கேட்கும்  போது.... காதுக்குள் ஈயத்தை காய்ச்சி, பாச்சி விடுமால் போல் இருக்கும். :D  :icon_idea:

 

இதைவிட மோசம் என்னவென்றால் நாங்கள் பள்ளிக்கூடம் போகும் மினிபஸ்சில்தான் அவர்களும் சந்தைகளில் விற்பதற்கு கூடைகளில் மீன் வாங்கிக் கொண்டு போவார்கள்.   :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட மோசம் என்னவென்றால் நாங்கள் பள்ளிக்கூடம் போகும் மினிபஸ்சில்தான் அவர்களும் சந்தைகளில் விற்பதற்கு கூடைகளில் மீன் வாங்கிக் கொண்டு போவார்கள்.   :icon_idea:  :icon_idea:  :icon_idea:

 

இதில் ஒரு பிழையுமில்லையே :rolleyes:

 

நீங்கள் படிக்க பஸ்சில் போனீர்கள், அவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்கு பயணம் செய்தார்கள்.

 

இவர் மேலும் வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அம்மா,

கொழும்பில் இந்த SLUM AREAல் பிறந்து வளர்ந்த படியால் எனக்கு நன்கு தெரியும் இந்த வாழ்க்கையை பற்றி. கடும் போதைவஸ்து பாவனையும், வன்முறையும், வறுமையும் நிறைந்த இந்த இடத்தில் நீங்கள் பிள்ளைகளின் எதிகாலத்தை நினைத்து

உழைப்பது பாரட்டத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மண்ணாங்கட்டி.
 
எங்கடை பருத்தித்துறை,நாகர்கோவில்,தாளையடி,ஆழியவளை பொம்புளையள் கடகம் முழுக்க மீனை நிரப்பிக்கொண்டு ஊரூராய் கால்நடையாய் நடந்து போய் மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றினதெல்லாம் ஊடகங்களுக்கு தெரியாதோ? இல்லை கோமாவோ????
 
படம் போட்டு சேக்கஸ் காட்டுறாங்கள்.

 

 

Link to comment
Share on other sites

இதில் ஒரு பிழையுமில்லையே :rolleyes:

 

நீங்கள் படிக்க பஸ்சில் போனீர்கள், அவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்கு பயணம் செய்தார்கள்.

 

இவர் மேலும் வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்

 

அதில் பிழை என்று சொல்லவில்லை உடையார்.  நாங்கள் வகுப்பிற்குச் செல்லும்போது நல்ல வாசத்தோடு செல்வோம்.   :)   அதைவிட அவர்களின் கைகளில், மீன்களைப் பார்த்து வாங்கும்போது ஏற்பட்ட அழுக்குகள் இருக்கும்.  அவையெல்லாம் எமது சீருடைகளிலும் சிலநேரங்களில் ஒட்டிவிடும்.  அதனைத்தான் குறிப்பிட்டேன்.   பெரிய பஸ் என்றால் பரவாயில்லை.  மினி பஸ்சுக்குள் ஆட்களையும் ஏற்றிக் கூடைகளையும் ஏற்றினால் எப்படியிருக்கும்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மண்ணாங்கட்டி.
 
எங்கடை பருத்தித்துறை,நாகர்கோவில்,தாளையடி,ஆழியவளை பொம்புளையள் கடகம் முழுக்க மீனை நிரப்பிக்கொண்டு ஊரூராய் கால்நடையாய் நடந்து போய் மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றினதெல்லாம் ஊடகங்களுக்கு தெரியாதோ? இல்லை கோமாவோ????
 
படம் போட்டு சேக்கஸ் காட்டுறாங்கள்.

 

அதைவிட கொடுமை சில நேரங்களில் மினிபஸ் அவர்களை ஏத்துவதில்லை தலையில் 20லிருந்து 30 கிலே வரையான மீன் கூடையை வைத்துக்கொண்டு அச்சுவேலி சந்தையை நோக்கி ஓடும் ஓட்டம் இருக்கே..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தின்னவேலி சந்தையில் ஒருவர் மீன் விக்கிறவர்.  உதட்டுக்குச் சாயம்பூசி , பெண்கள் போன்று நடையுடை பாவணையுடன் இருப்பார். ஒரு ஆஸ்டின் 8 காரில் உதவியாளருடன் வருவார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி

 

இவர் போன்ற  தன்னம்பிக்கையுள்ள

உழைத்து  சாப்பிட  விரும்பும்  தாயக  உறவுகளை  

அதிலும் பெண்களை நாம் கவனத்தில் கொண்டு

மேலும் மேலும் முன்னேற  உதவ  வேண்டும்


 

மண்ணாங்கட்டி.
 
எங்கடை பருத்தித்துறை,நாகர்கோவில்,தாளையடி,ஆழியவளை பொம்புளையள் கடகம் முழுக்க மீனை நிரப்பிக்கொண்டு ஊரூராய் கால்நடையாய் நடந்து போய் மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றினதெல்லாம் ஊடகங்களுக்கு தெரியாதோ? இல்லை கோமாவோ????
 
படம் போட்டு சேக்கஸ் காட்டுறாங்கள்.

 

 

 

உண்மை  தான் அண்ணா

ஆனால்  இன்று எமது இனம்  உள்ளநிலையில்

சோடை போய்விடாது

எமது இனத்தின் அடையாளத்தை  காக்கும் இவர்களின் முன் மாதிரியை  வரவேற்கவேண்டிய  காலம் இது...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IPL 2024 கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா நைட்ரைடஸ் Published By: VISHNU 26 MAY, 2024 | 10:46 PM   இந்தியன் பிறீமியர் லீக் 2024 இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமானது. கிண்ணத்தை தன்வசப்படுத்து நோக்கில் இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதியதில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து, 18.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது. 114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Venkatesh Iyer ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 39 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தனர். https://www.virakesari.lk/article/184561
    • துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!
    • விள‌ம்ப‌ர‌ நிறுவ‌னங்க‌ள் கோவிக்க‌ போகினம் ஹா ஹா😁...........................................  
    • மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணம் மேம்படுத்தப்படும் - ஜனாதிபதி  Published By: VISHNU   26 MAY, 2024 | 07:08 PM 2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை இன்று (26) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது  வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நெதர்லாந்துத் தூதுவர் பொனி ஹோபேக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: இந்த மருத்துவப் பிரிவை இன்று திறந்து வைக்கும் போது இதன் பின்னணியைக் குறிப்பிட வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் தடைப்பட்ட சேவைகளை மீளமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அப்போதைய அரசாங்கம் ஆரம்பித்தது. முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தப் பிரிவுகள் அனைத்தின் முன்னேற்றத்துக்கு, இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கிணங்க, வடமாகாணத்தில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய மருத்துவப் பிரிவுகளை நிறுவுவதற்கு பிரதமர் என்ற ரீதியில் நெதர்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். அப்போது வடமாகாண சபையில் இருந்த சுகாதார அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். யுத்தத்திற்கு முன்னர், கொழும்புக்கு அடுத்தபடியாக சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. மேல்மாகாணம் அபிவிருத்தியடைந்த நிலையில் தென் மாகாணமும் மத்திய மாகாணமும் அபிவிருத்தியடைந்தன. வடக்கு மாகாணத்தை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். அதனால்தான் இந்த மருத்துவமனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு  மேம்படுத்தப்படுகிறது. அத்துடன், 2017ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும், அதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் நான் பிரதமராக இருந்து பணத்தை ஒதுக்கினேன். இன்று இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இந்தப் பணிகள் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்று பணித்தேன். இப்போது வடக்கு மாகாணத்தில் நவீன மருத்துவமனைகள் உள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்தோம். மேலும் மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப்படும் அதே வேளை வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதுடன் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்று வழங்கப்படும். ராகம வைத்தியசாலைக்குப் பிறகு இந்த நவீன இயந்திரங்களைக் கொண்ட ஒரே வைத்தியசாலை மாங்குளம் வைத்தியசாலை என்பது குறிப்பிடத் தக்கது. யுத்தம் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராகம வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு ராகம வைத்தியசாலை போன்ற நவீன வைத்தியசாலையை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 04 வைத்தியசாலை பிரிவுகளில் உள்ள உபகரணங்கள் இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் இல்லை. இந்த சாதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை முகாமைத்துவமும் முயற்சி எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தின் சிறப்பான நிலை காரணமாக கியூபா சுகாதார சேவைகளில் முன்னணியில் உள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும். அதற்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தில் இருந்தும் நிதி ஒதுக்கீடு பெறலாம். இந்தச் செயற்பாடுகள் அனைத்தினூடாகவும் நாட்டில் நம்பிக்கையான சுகாதார சேவையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்பதையும் கூற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்: நெதர்லாந்து அரசாங்கத்தின்  நிதி உதவியுடன் நான்காயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் இப்பிரதேச மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான வசதிகளை வழங்கி சேவையாற்றிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாடு பல சவால்களை எதிர்நோக்கியிருந்த வேளையில் ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்து அந்த சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக நாட்டைக் பொறுப்பேற்றார். இந்த நாடு அப்போது இருந்த நிலையை மக்கள் மறக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அந்த நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஜனாதிபதி தன்னை அர்ப்பணித்தார். அதன் பலனை இந்நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தில் செலவிடும் மூன்றாவது நாள் இன்று. இந்த மூன்று நாட்களாக வடமாகாணத்திற்கு விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று அவரால் திறந்து வைக்கப்படும் இந்த மருத்துவ மறுவாழ்வு சிகிச்சை மற்றும் மனநல மேம்பாட்டு மையம் ‘டிரைவ்’ திட்டத்தின் கீழ் திறக்கப்படும் மூன்றாவது மருத்துவமனையாகும். வடமாகாண சுகாதார சேவையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்பது உறுதி. ஜனாதிபதியின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கம் காரணமாக இந்த திட்டம் யதார்த்தமாகிறது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த போது வடமாகாணத்திற்கு இத்திட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். இன்று மாங்குளம் வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் அதன் மூலம் அவர் சுகாதாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறை மாத்திரமின்றி  அனைத்து துறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ். நோகராதலிங்கம்: இந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இன்று இந்த மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனைய மருத்துவமனைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், இப்பகுதி மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலதான்: இந்தப் பிரிவு  இந்த வன்னி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமமாகும். இதற்காக முயற்சித்த அனைவருக்கும், குறிப்பாக எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வட மாகாணத்துக்கே  ஒரு பெரும் வளமாக இதனைப் பெற்றிருக்கின்றோம். இந்த வளம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வைத்தியசாலை மிகச் சிறப்பாக நடைபெற அவசியமான அனைத்து வளங்களையும் நீங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோபேக் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/184556
    • வெள்ளிக் கிழ‌மை ராஜ‌ஸ்தான் கூட‌ ந‌ட‌ந்த‌ விளையாட்டு போல் அவுஸ் க‌ப்ட‌ன் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து அதிக‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடியாம‌ போய் விட்ட‌து   போர‌ போக்கை பார்த்தால் விளையாட்டு 12ஓவ‌ருக்கை முடிந்து விடும் போல் இருக்கு.....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.