Jump to content

ராகுல் திராவிட் ஆலோசனை மறக்க முடியாதது: முரளி விஜய் சிறப்புப் பேட்டி


Recommended Posts

ராகுல் திராவிட் ஆலோசனை மறக்க முடியாதது: முரளி விஜய் சிறப்புப் பேட்டி

 

இங்கிலாந்தின் பிட்ச் மற்றும் தட்பவெப்ப நிலைகளில் தொடக்க வீரர் என்ற கடினமான பணியைத் திருப்தியளிக்கும் விதமாகச் செய்த முரளி விஜய் ஆஸ்திரேலியா தொடரில் இந்த இளம் இந்திய அணி எழுச்சிபெறும் என்று நம்பிக்கை கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 402 ரன்களை 40.20 என்ற சராசரியில் எடுத்த முரளி விஜய் 'தி இந்து' (ஆங்கிலம்) இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் தமிழ் வடிவம் வருமாறு:

 

டெஸ்ட் தொடரை சிறப்பாகத் தொடங்கி விட்டு பிறகு சவால் அளிக்காமல் தோல்வியடைந்தது உங்களை எப்படி ஏமாற்றமடையச் செய்தது? குறிப்பாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் 4 மணி நேர ஆட்டத்திலேயே இந்திய அணியின் கையை விட்டுச் சென்றதே?

 

இது ஒரு இளம் அணி, சில வீரர்களே இதற்கு முன்பாக இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் பெற்றிருந்தனர். எங்களுக்கு இது கற்றுக்கொள்ளும் அனுபவம். இந்த அணியிடத்தில் நிறைய திறமைகள் உள்ளன. இங்கிலாந்தில் சூழ்நிலைமைகள் கடினம் என்பதால் சிரமம் கூடுதலாக இருந்தது, ஆஸ்திரேலியாவில் நாங்கள் எழுச்சி பெறுவோம்.

 

உங்கள் சொந்த பேட்டிங் பார்வையிலிருந்து.... லார்ட்ஸ் டெஸ்ட்டில் கடினமான முதல்நாள் பிட்சில் நீங்கள் எடுத்த 95 ரன்கள், இதற்கு முன்னதாக நாட்டிங்கமில் நடந்த முதல் டெஸ்ட்டில் எடுத்த சதம்...

 

லார்ட்ஸ் பிட்சில் பந்துகள் எகிறின, ஸ்விங் ஆயின. தரமான இங்கிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள யாராவது ஒருவர் உறுதியுடன் நின்று ஆட வேண்டியிருந்தது. நாட்டிங்கமில் அடித்த சதம் இந்திய அணி தொடரை சிறப்பாகத் தொடங்க உதவியது.

 

இங்கிலாந்து பிட்ச்களுக்காக நீங்கள் உத்தி ரீதியாக என்னன்ன மாற்றங்களை செய்து கொண்டீர்கள்? மட்டையை மேலேயிருந்து கீழே கொண்டு வரும்போது சரியாக இருந்தது மற்றும் உங்கள் ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்பதில் உங்களிடம் தெளிவு இருந்தது பற்றி?

 

நேரான ஷாட்களை மிட் ஆன் அல்லது மிட் ஆஃப் என்ற "V"-யில் ஆடுவது பிறகு அந்த V-பகுதியை மெல்ல களத்தின் மற்ற பகுதிகளுக்கும் விரிவு படுத்துவதுதான் எனது முதல் திட்டம். இங்கிலாந்து தொடருக்கு முன்பாக ஐஐடி கெம்ப்ளாஸ்ட் மைதானத்தில் எனது பயிற்சியாளர் ஜெயக்குமாருடன் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டேன். இங்கிலாந்தில் எனது ஷாட்களில் ‘கட்’ ஷாட்டை ஆடக்கூடாது என்று முடிவெடுத்தேன், காரணம் அங்கு அது பயனளிக்காது.நான் எனது மனதையும் நன்றாகத் தயார் படுத்திக் கொண்டேன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பாரத் அருண், பரத் ரெட்டி, ஆகியோர் எனது ஆட்டத்தின் வளர்ச்சியில் ஆற்றிய பங்கையும் நான் மறக்க முடியாது.

 

இங்கிலாந்தில் உங்கள் பேட்டிங்கில் சிறப்பான விஷயம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை நான் ஆடாமல் விட்டது. ஒரு தொடக்க வீரருக்கு எந்தப் பந்தை ஆடுவது, எந்தப் பந்தை ஆடாமல் விடுவது என்பதைத் தீர்மானிப்பதுதான் கலை.

 

இப்படி ஆடவேண்டும் என்பதற்கு உங்கள் மீது செல்வாக்கு செலுத்தியவர்கள் யாராவது உண்டா?

இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய நமக்கு முந்தைய தொடரை வீடியோவில் பார்த்தேன். குமார் சங்கக்காரா ஆஃப் ஸ்டம்ப் பந்துகள் பலவற்றை ஆடாமல் விட்டு பிறகு மெதுவாக இங்கிலாந்து பந்து வீச்சின் மீது ஆதிக்கம் செலுத்தினார். இங்கிலாந்தில் பொறுமை அவசியம் என்பதைக் கற்றுக் கொண்டேன்.

 

இங்கிலாந்து தொடருக்கு முன்னால் மறக்க முடியாத ஆலோசனை எதுவும் இருந்ததா?

இங்கிலாந்தில் நான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், எனது பேட்டிங்கை நான் எப்படி ஒழுங்கமைக்கிறேன் என்பதும் மிக முக்கியம் என்று ராகுல் திராவிட் எனக்கு கூறிய ஆலோசனை மறக்க முடியாதது.

 

தொடரில் திருப்பு முனை எது என்று கருதுகிறீர்கள்?

 

3வது டெஸ்ட் போட்டியில் பிராட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது அந்தப் பந்து வீச்சு இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையையும் தூக்கி நிறுத்தியது.

 

அந்த சூழ்நிலையில் ஆண்டர்சன், பிராட் ஆகியோரை எதிர்கொள்வது எவ்வளவு கடினமாக இருந்தது?

 

இருவரும் வேறு விதமான வீச்சாளர்கள், ஆண்டர்சன் பந்துகள் வெளியே, மற்றும் உள்ளே சற்றே லேட் ஸ்விங் ஆகும், மேலும் மணிக்கு 80 மைல்கள் வேகம் வீசுவார். தவறான நகர்வு இவர் பந்தைத் தவறாகக் கணித்து தப்புவது கடினம். பிராட் பந்தின் தையலை பிட்சில் அடித்து பந்துகளை எகிற வைக்கக் கூடியவர்.

 

தொடரின் பிற்பகுதியில் உங்கள் ஃபார்ம் சரிவு கண்டது பற்றி...

 

சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியில் மிக நல்ல பந்தில் அவுட் ஆனேன், 2வது இன்னிங்ஸில் ரன் அவுட் ஆனேன்., அதன் பிறகு எனது உத்வேகம் சற்றே குறைந்தது.

பேட்ஸ்மெனின் கால்நகர்த்தலை சந்தேகத்திற்குட் படுத்தும் சூழ்நிலையில் டியூக் பந்துகளை எதிர்கொள்வதும் கூடுதல் சவால் அல்லவா?

டியூக் பந்துகள் அதிக ஓவர்களுக்கு நன்றாக ஸ்விங் ஆகக்கூடியது, மேலும், பிட்ச்களில் ஈரப்பதம் இருப்பதால் மிக நல்ல பந்துகளை அடிக்கடி எதிர்கொள்ள நேரிடும்.

ஸ்டீவன் பிளெமிங், நீங்கள் மற்றும் புஜாரா போன்றவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து சற்று விலகி கவுண்டி கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இல்லை. நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு நவீன கிரிக்கெட் வீரர் அனைத்து வடிவங்களிலும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் டூ பிளேசியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுப்பாட்டம் ஆடி 20 ஓவர் கிரிக்கெட்டில் அடித்து ஆடுவதில்லையா?

 

எப்படியிருந்தாலும் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுவது அனுகூலம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

 

ஆம். ஒரு தொழில்பூர்வ கிரிக்கெட் வீரராக அனைத்துச் சூழ்நிலையிலும் ஆடி அனுபவம் பெறவேண்டும், நிறைய பயணம் செய்ய வேண்டும். அது நம்மை பரிபூர்ண கிரிக்கெட் வீரராக உருமாற்றும். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டை கைவிடுவதாக அது அமையக்கூடாது.

 

உள்நாட்டு கிரிக்கெட்டில் பந்துகள் எகிறும் பிட்ச்கள் தேவை என்பதை நீங்கள் பரிந்துரை செய்வீர்களா?

 

நாங்கள் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் ரஞ்சி கிரிக்கெட் என்பது அணியின் தனிப்பட்ட இடங்களுக்கானது, புள்ளிகள் அட்டவணை ஆட்சி செலுத்தும் வடிவம். மேலும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியான சூழ்நிலை இருக்கும். லாஹ்லியில் உள்ள பிட்சில் ஸ்விங், மற்றும் பவுன்ஸ் இருக்கும். ஆனால் பிற உஷ்ணமான பிரதேசங்களில் ஈரப்பதம் இல்லாததால் வறண்ட பிட்ச்களே கிடைக்கும்.

அணி நிர்வாகத்தில் செய்துள்ள புதிய மாற்றங்கள் பற்றி...

நான் அதைப் பற்றி கருத்து கூற அனுமதி கிடையாது. ஆனால் கேப்டன் தோனி எனக்கும் பிறருக்கும் உதவிகரமாக இருந்தார். எல்லோருக்கும் உதாரணமாக திகழ்ந்தார்.

 

இந்திய அணியின் ஃபீல்டிங், கேட்சிங்...

 

இந்தப் பகுதியிலும் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம். மிக முக்கியமான சிறு சிறு நுணுக்கங்களையும் கற்று வருகிறோம். மேலும் ஸ்லிப் உள்ளிட்ட நெருக்கமான பகுதிகளில் இதற்கு முன்னர் சிறந்த வீரர்கள் நின்று கொண்டிருந்தனர், அவர்களது இடத்தில் இப்போது நாங்கள் இருக்கிறோம் என்பதையும் மறந்து விட வேண்டாம்.

ஒவ்வொரு பிட்சிலும் ஒவ்வொரு விதமாக ஸ்லிப்பில் கேட்ச்கள் வரும். இங்கிலாந்தில் ஸ்லிப் திசையில் வரும் கேட்ச்கள் நம்மை விட்டு விலகிச் செல்லும். அல்லது பந்து முன்னால் விழும்.

தமிழில்: முத்துக்குமார்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6356632.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.