Jump to content

முஸ்லிம் தலைவர்கள் தமது சமூகத்திற்காக பேசாவிட்டால்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் பொதுபலசேனாவினால் மேற்கொள்ளப்படும் அராஜகங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களின் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான டிலான் பெரோரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் காலத்தின் தராசில் மிகவும் வளுவுள்ளதாக காணப்படுகின்றது. முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் குரல் கொடுத்தால் அல்லது அறிக்கைவிட்டால் அவர்களை இனவாதிகளாக காண்பித்து அதிலிருந்து தேவையற்ற விடயங்களை தொட்டுக் கொண்டும்,தொங்கிப் பிடித்துக் கொண்டும் பேசும் நபர்கள் ஏராளம்.
 
இந்த நிலையில் இலங்கையில் அண்மையக் காலமாக பொதுபலசேனா அமைப்பினரின் அத்துமீறிய அட்டகாசங்களும்,அறுவெறுப்பான பேச்சுக்களும் முஸ்லிம்களை மட்டுமல்லாது பௌத்தர்களையும் தலை குனியச் செய்துள்ளது.
 
முஸ்லிம் தலைவர்கள் தமது சமூகத்திற்காக பேசாவிட்டால் அவர்கள் தொடர்பில் விமர்சனஙகள் அப்பப்பா …..எத்தனை வகையில் வாங்கிக்கட்டுகின்றார்கள் என்பதை இன்றை இணையத்தளங்களில் குறிப்பாக பேஸ் புக்களில் வலம் வரும் வார்த்தைகளும் நாக்கூசுபனவாகவே இருக்கின்றது.தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு மத்தியில் சமூகம் சார்ந்த சிந்தணை வர வேண்டும் என்பது தான் இன்றைய தலைப்பாகும்.
 
இவ்வாறான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் தடுமாறும் தலைமைகளுக்கு உதவும் வகையில் இனவாதிகளின் முகத்திரையினை கிழித்தெறியும் வகையிலும்,பெரும்பான்மை சமூகத்தினரின் கோபப் பார்வையில் இருந்து முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் கிராமங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தற்போது எமக்கு கிடைத்துள்ள இரு ஆயுதங்களாக அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரை அடையாளப்படுத்த முடியும்.
 
அமைச்சர் வாசு அவர்களை பொருத்த மட்டில் ஜனநாயகத்திற்கும் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு தொடர்பில் நேர்மையாக செயற்படக் கூடியவர் அதே போல் அமைச்சர் டிலான் பெரேரா அவர்களும் முஸ்லிம்கள் தொடர்பில் தெளிவை கொண்டவர்.இவர்கள் இலங்கையில் தற்போது பொதுபலசேனா என்ற பேரினவாத அமைப்பினர் மேற்கொண்டுவரும் அநியாயங்களுக்கு எதிராக திறந்த மனதுடன் கருத்துக்கலாள் மோதத் தணிந்துவிட்டனர்.
 
பொதுபலசேனாவின் ஞஞானசாரர் இலங்யைில் பௌத்த சாசனத்திற்கு அவப்பெயரை எற்படுத்துவதாகவும்,அதே போல் இலங்கையில் மற்றுமொரு இன ரீதியான யுத்தத்தை மேற்கொள்ள அடித்தளம் இடுவதாகவும் இவர்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி கூறிவருகின்றனர்.இது பல் தரப்பினரிடத்திலம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,இதன் பின்னணி தொடர்பிலும் ஆராய துாண்டியுள்ளது.ஒரு சமூகம் வாழும் பிரதேசத்துக்குள் பலவந்தமாக சென்று அம்மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து அவர்களை அவமதித்து விட்டு வரும் செயற்பாடு என்பது ஜனநாயகத்தை பின்பற்றும் நாடொன்றின் குணாதிசயமாக இருக்க முடியாது.இதனை அங்கீகரிக்கும் போது இது தொடராக நடை பெறுவதற்கான அடித்தளத்தினை இட்டுவிடும் என்பதும் திண்ணமாகும்.
 
ஞானசார தேரர் என்பவர் மதகுருவா என்று சிங்களவர்கள் கேட்கும் அளவுக்கு மாறியுள்ளதுடன்.அவருடன் பாதுகாப்பிற்காக வெள்ளை  டி சேர்ட் அணிந்து வரும் பெண்கள் யார் என்ற கேள்வியும் எழ  ஆரம்பித்துள்ளது.ஒவ்வொரு குழப்ப நிலையிலும் ஞானசார தேரர் சொல்லும் வார்த்தை (மம ஒன எஹக்கட்ட ஒட்டுவேன் தமா எவித் இன்ன என்று )எனவே இது தொடர்பிலும் கவனம் இருக்க வேண்டும்.
 
குறிப்பாக எந்த சந்தர்ப்பத்திலும் ஞானசோர தேரர் பாவிக்கும் சொற்களில் ஒன்று தான் இது சிங்களவர்களின் நாடு என்று.சிங்களவர்களின் நாடு என்றால் இங்கு வாழும் தமிழ்,முஸ்லிம் மக்கள் கடல் கடந்து வந்தவர்கள் என்ற பதத்தை குறிக்கின்றது.முஸ்லிம்களின பூர்வீகத்திலும்,தமிழர்களின் வாழ்விடத்திலும் சென்று சிங்களவனின் பூமி இது,நீங்கள் இங்கு வாழ தகுதியற்றவர் என்று கூறுகின்றார் என்றால் இவர் தொடர்பில் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ள கருத்து பொருந்துபனவாகவே உள்ளது.
 
ஒரு நாட்டின் சட்டமும்,ஒழுங்கும் பின்பற்றப்பட வேண்டுமெனில் அரசாங்கம் சில களை எடுப்புக்களை செய்ய வேண்டும்.அது சட்ட ரீதியாக இருக்கின்ற பொது தான் ஏனையவர்கள் அதனை செய்வதில் இருந்து விளகியிருப்பார்கள்.மாறாக அதனை அரசாங்கம் செய்யாது வேடிக்கை பார்க்கும் என்றாள் சர்வதேசத்தில் இலங்கை தொடர்பில் பேசப்படும் விடயங்கள் உண்மைப்படத்தப்பட்டுவிடும்.
 
இன்று சர்வதேச நாடுகள் இலங்கையின் மதச் சதந்திரம் தொடர்பில் கவலை கொண்டுள்ளது.அண்மையக் கால சம்பவங்கள் இதற்கு வழி அமைத்துவிட்டது.வளைகுடா நாடுகள் இலங்கைக்கு பல துறைகளுக்கான முதலீடுகளை செய்தவருகின்றது.அதே போல் உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பிலும் சில அமைப்புக்கள் மற்றும் பரோபகாரிகள், நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவிகளை செய்கின்றனர்.இதனை தடுப்பதற்கு பொதுபலசேனாவின் ஞானசார தேரர் யார் ? ஏன் அரசாங்கம் இவரை கடடுப்படுத்த முடியாது,மத குருவின் ஈனச் செயல்களை ஏன் பௌத்த கலாச்சார அமைச்சு தட்டிக் கேட்க முடியாதுள்ளது என்பது இயல்பாக எழும் கேள்விகளாகும். இந்த நிலையில் இலங்கை அரசு குறுகிய காலத்துக்குள் இதனை கடடுப்படுத்த தவறுமெனில் சர்வதேசத்தில் நெருக்குவாரங்களை சந்தி்க்க நேரிடும் என்பது எதிர்வாகும்.வெள்ளம் வரு முன் அனைக்கட்ட வேண்டும்,தவறின் துன்பங்களை அனுபவிப்பது ஒட்டுமொத்த இலங்கை தேசத்து மக்களே !!
 
(இர்ஷாத் றஹ்மத்துல்லா) JM
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.