Jump to content

ஐ.நா சாட்சியங்களை அச்சுறுத்தவா செல்வதீபன் மீது தாக்குதல்!? சாட்சியம் இணைப்பு!


Recommended Posts

ஐ.நா சாட்சியங்களை அச்சுறுத்தவா செல்வதீபன் மீது தாக்குதல்!? சாட்சியம் இணைப்பு!

 

 

selvatheepan1-300x184.jpgஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த ஊடகவியலாளர் ஒருவர் கொலை முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகாயம் அடைந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘தினக்குரல்’ மற்றும் ‘வலம்புரி’ பத்திரிகைகளின் கரவெட்டிப் பகுதிச் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன் கடந்த இரவு வழிமறித்துத் தாக்கப்பட்டுள்ளார். நெல்லியடிப் பகுதியிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் அவர் சென்றுகொண்டிருந்தபோது புறாப்பொறுக்கி சந்தியில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அருகிலே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரோடு உரையாடலை ஏற்படுத்தி அவர்தான் செல்வதீபன் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளாகி விழுந்த பின் அவர் எழுந்து அருகிலிருந்த பற்றைக்குள் ஓட முயன்றபொழுது மீண்டும் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்டுள்ளார். அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கடைசி பஸ் வண்டியின் சாரதி வீதியோரத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்திருப்பதைக் கண்டு பஸ்ஸை நிறுத்திய போது தாக்கியவர்கள் தப்பியோடியுள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை செய்ய முயன்றுள்ளனர்.

எனினும், காயமடைந்தவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவேண்டும் எனப் பொதுமக்கள் கூறி அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு சாட்சியங்களைப் பதிவு செய்த பொழுது, காணாமல் போன தனது சகோதரர் தொடர்பாக இவரும் அங்கும் சாட்சியம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாகவே சந்தேகத்திற்குரிய நபர்களால் தான் பின்தொடரப்படுவதாக தனது பத்திரிகை அலுவலகங்களில் அவர் தெரிவித்திருக்கிறார். அத்தோடு, நெல்லியடி பொலிஸ் நிலையத்திலிருக்கும் தனக்குத் தெரிந்த பொலிஸார் சிலரிடம் இது தொடர்பாக அவர் கூறியிருந்திருக்கிறார்.

கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் செல்வதீபன், தானும் தனது சகோதரனும் கடத்தப்பட்டமை குறித்து சாட்சியமளித்திருந்தார். அவர் அளித்த சாட்சிய வாக்குமூலம் வருமாறு:-

சிறிலங்கா படையினரால் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டுக் காணாமற்போன தனது சகோதரனான சிவஞானம் பார்த்தீபனை மீட்டுத் தந்து தனது குடும்பத்தினதும் தாயினதும் கண்ணீரைப் போக்குமாறு காணாமற்போனோர் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவிடம் யாழ்ப்பாண ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே தானும் சிறிலங்கா புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கின்ற செல்வதீபன் அப்போது கருணா குழுவிற்கு தலைமை தாங்கிய இனியபாரதி என்பவரினால் தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பின்னர் பெரும்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டே இனியபாரதி தன்னை விடுவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

வெல்வாயப் பகுதியில் வங்கி ஒன்றில் பணப்பரிமாற்றம் செய்துவிட்டு புத்தள பாதையினூடாக பயணம் செய்த வேளை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட தனது சகோதரன் சிவஞானம் பார்த்தீபன் இன்றுவரை எங்கு உள்ளார் என தெரியாது தமது குடும்பம் தேடியலைவதாக அவர் தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டம் வெள்ளவாய பகுதியில் வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய தனது சகோதரன் கடந்த 2008ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21 திகதி காணாமற்போனார் என்றும் அவர் நன்றாக சிங்களம் பேசக்கூடியவர். பலவருடங்களாக சிங்கள மக்களுடன் அதிகமாக பழகி வாழ்ந்தவர். ஆனாலும் தமிழ் இளைஞர் என்ற காரணத்துக்காக இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை காணாமல் போயுள்ளார் என அவர் தெரிவித்தார்.

அதேபோன்று தன்னையும் வெல்வாயப் பகுதியில் வைத்து 2007 ம் ஆண்டு வெள்ளைவானில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுத முனையில் கடத்திச் சென்று விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணாவின் ஆயுதக் குழுவிடம் ஒப்படைத்தனர் என தெரிவித்தார்.

அப்போது அக் குழுவிற்கு தலைமை தாங்கிய இனியபாரதி 79நாட்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாகவும் பின்னர் பல இலட்சம் ரூபா பணத்தினை தனது உறவினர்களிடம் பெற்ற பின் பொலநறுவை தொடருந்து நிலையத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தான் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே தனது சகோதரன் 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தமிழ் இளைஞர் என்ற ஒரே காரணத்திற்காகவே எத்தனை அப்பாவிகள் பல வருடங்களாக விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகள் அனுபவித்து வருகின்றனர். பலர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். காலத்திற்கு காலம் விசாரணை என்ற பெயரில் வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்துவரும் எங்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் அவர் சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

http://tamilleader.com/?p=31468

Link to comment
Share on other sites

இப்படியான விடையங்களை இனி செய்தியாக எடுக்காமல் உடன் அறிவிக்க வேண்டியவர்களுக்கு அறிவித்து ஆவன செய்யுங்கள். அல்லது மோசமாக இன்னும் தொடரும்... இலங்கையை பயங்கரவாத நாடாக அறிவிக்க இப்படியான செயல்கள் உதாரணமாக அமையும். உங்கள் நாட்டின் அரசுக்களூடன், எதிர்கட்சிகளுடன் சிறந்த உறவுகளை பேணுவதன் மூலம் இலங்கையை வழிக்கு கொண்டுவரலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.