Jump to content

தீக்குளித்த தமிழ் இளைஞர் தற்போதைக்கு நாடு கடத்தப்படமாட்டாராம்! – அவுஸ்ரேலியா கூறுகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தீக்குளித்த தமிழ் இளைஞர் தற்போதைக்கு நாடு கடத்தப்படமாட்டாராம்! – அவுஸ்ரேலியா கூறுகிறது. 
[Tuesday, 2014-04-15 09:07:31]
jana-150414-150.jpg
அவுஸ்ரேலியாவில் அண்மையில் தீக்குளித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தற்போதைக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. புகலிடம் மறுக்கப்பட்ட காரணத்தினால் குறித்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டார். படுகாயமடைந்த குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
தீக்குளித்த இலங்கையரின் உடல் தேறி வருவதாகவும், நீண்ட காலம் சிகிச்சை பெற்றுக்கொள்ள நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.20 வயது மதிக்கத்தக்க ஜனார்த்தன் என்ற குறித்த இளைஞரின் உடலின் 70 வீதமான பகுதி தீக்காயங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள நேரிடும் என குறிப்பிடப்படுகிறது. குறித்த இளைஞருக்கு பெரும்பாலும் புகலிடம் வழங்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.http://seithy.com/breifNews.php?newsID=107558&category=TamilNews&language=tamil
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.