Jump to content

தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்தப் போவதாக நரேந்திர மோடி உறுதி


Recommended Posts

narendra%20modi_CI.jpg

உலகமெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இலங்கை, மலேசியா, பிஜீ தீவுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் நலன்கள் உறுதி செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பாரதீய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டால் தமிழ் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்திய விவகாரங்களில் தலையீடு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். குறித்த நாடுகளின் தலையீடுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தைரியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர், தமிழக, குஜராத் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105597/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகமெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இலங்கை, மலேசியா, பிஜீ தீவுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் நலன்கள் உறுதி செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பாரதீய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டால் தமிழ் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

-------

தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தைரியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர், தமிழக, குஜராத் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் மக்கள் தொடர்பில்... இந்திய காங்கிரஸ் இப்படியான உறுதி மொழிகளை கூட இது வரை கொடுத்ததில்லை.

நரேந்திர மோடியின் தொகுதியான குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால்... தாக்கப்படுவதால், அவருக்கு அந்த வலி தெரியும்.

இவர் கூறிய வாக்குறுதிக்காவது அடுத்த பிரதமாராக... நரேந்திர மோடி வந்து...

ஸ்ரீலங்கா, பாகிஸ்தானின் வாலை.... ஒட்ட நறுக்க வேண்டும்.

hit-with-club.gif

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.