Jump to content

புலிகளைப் போலத் தனியரசு நடத்துகிறது பொதுபல சேனா! – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
புலிகளைப் போலத் தனியரசு நடத்துகிறது பொதுபல சேனா! – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம். 
[sunday, 2014-04-13 05:51:07]
Rishad-130414-150.JPG

விடுதலைப் புலிகள் இலங்கைக்குள் சமாந்தரமான அரசு ஒன்றை இங்கு நடத்தியமை போன்று பொதுபல சேனாவும் அரசு ஒன்றை நடத்துகின்றது, புலிகள் போல விரும்பிய இடத்தில், விரும்பிய நேரத்தில் தாக்கிவிட்டு யாராலும் விசாரிக்கப்படாமல் சுதந்திரமாக அதனாலும் செல்ல முடிகின்றது. என்று அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் பகிரங்கமாக வேதனை வெளியிட்டிருக்கின்றார். நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஒரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

  

பொதுபல சேனாவின் அண்மைக் கால நடவடிக்கைகளைக் கண்டித்துத் தாம் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு வேதனை தெரிவித்திருக்கின்றார். பொதுபல சேனா தன்னை சட்டபூர்வமற்ற ஒரு பொலிஸ் என்பது போல அறிவிக்கும் 'தைரியத்தை' வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆனால் அதனை யாராலும் கேள்விக்கு உட்படுத்த முடியவில்லை. பொதுபல சேனா கடந்த இரண்டு வருடங்களாக சிறுபான்மையினரை - குறிப்பாக முஸ்லிம்களை - இலக்குவைத்துச் செயற்பட்டு வருகின்றது. ஆனால் இந்த அழிவுப் போக்கு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தவறிவருவதால் ஊடகங்களின் முன்னாலேயே பகிரங்கமாக அத்தகைய அராஜகங்களில் ஈடுபடும் அளவுக்கு அவர்கள் உத்வேகம் அடைந்திருக்கிறார்கள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமரசம் என்பதை நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளைக் கோருகின்றோம். யுத்தத்தின் முடிவின் பின்னர் சிறுபான்மையினருக்கு - குறிப்பாக முஸ்லிம்களுக்கு - எதிராக நிகழ்த்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும். - இப்படி அவர் மேலும் கோரியுள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=107433&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

ஆனால் நீங்கள் தமிழரை கிழக்கில் கொல்ல வடக்கில் புலிகள் உங்களை பாதுகாப்பாக அனுப்பியது போல் பொது பல சேனா செய்யாது.

இன்னொரு கருப்பு யூலை தான்.

Link to comment
Share on other sites

இவர்  ஏன் புலிகள் என்று எல்லாவற்றுக்கும் வசை பாடுகிறார். அவர் இனம் ,மதம்  சார்ந்த அல்கைய்தா வை  உதாரணம் காட்ட வேண்டியது தானே.  

 

இல்லாட்டி  பலஸ்தீன  பயங்கரவாதம், காஸ்மீர் பயங்கர வாதம் என்று  நிறைய  உதாரணங்கள் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேன பெளத்த சிங்கள பேரினவாதம்.. முஸ்லீம் மதவாத்தை.. ஜிகாத்தை ஒரு வழி பண்ணாமல் விடாது. விடவும் கூடாது. இவர் இப்படியே ஓதிக்கிட்டு திரியட்டும். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேன பெளத்த சிங்கள பேரினவாதம்.. முஸ்லீம் மதவாத்தை.. ஜிகாத்தை ஒரு வழி பண்ணாமல் விடாது. விடவும் கூடாது. இவர் இப்படியே ஓதிக்கிட்டு திரியட்டும். :lol::D

 

 

உண்மைதான்  நெடுக்கு.....

மரத்தில் ஏறியிருந்து

அடியைத்தறிப்பது என்பது இதைத்தான்

 

செய்யட்டும்

செய்யட்டும்

இசுலாமியர்கள்  உலகெங்கும்  இதைத்தான் செய்கிறார்கள்.......

Link to comment
Share on other sites

Rishad-130414-150.JPGஇவரின் அடாத்தான குடியேற்றம் பொதுபலசேனாவுக்கு புண்ணில் புளியை கரைத்தது போலுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.