Jump to content

இரண்டாவது அமெரிக்க பத்திரிக்கையாளரையும் கொன்றது "இஸ்லாமிய அரசு" அமைப்பு


Athavan CH

Recommended Posts

140902175748_sotloff_304x304_reuters.jpg

அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சட்லாப்

ஐஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு தான் கடத்தி பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சட்லாபின் தலையை வெட்டிக்கொல்லும் காட்சியை காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

அந்த காணொளியில் சட்லாப் நீளமான முழு உடலுக்குமான ஆடை அணிந்த நிலையில் முட்டிக்கால் போட்டு இருப்பது போலவும், அவருக்கு அருகில் இஸ்லாமிய அரசு அமைப்பைச் சேர்ந்தவர் கத்தியுடன் இருப்பது போலவும் காட்டப்படுகிறது.

 

முகமூடியணிந்த நபர் ஒருவர் தாம் பிடித்துவைத்திருக்கும் மற்றும் ஒரு பணயக்கைதி குறித்து எச்சரிக்கை விடுப்பதோடு இஸ்லாமிய அரசுக்கு எதிராக கூட்டணி அமைத்திருக்கும் நாடுகளின் அரசுகள் தங்களின் கூட்டணியை முடிவுக்கு கொண்டுவரும்படியும் கூறுகிறார்.

 

ஊடகவியலாளர் சட்லாப் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிரியாவில் கடத்தப்பட்டார். அவரைப்போலவே பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜேம்ஸ் பாலியை கடந்த மாதம் தான் இஸ்லாமிய அரசு அமைப்பு தலையை வெட்டிக் கொன்றிருந்தது. கடந்த மாதம் ஜேம்ஸ் பாலி கொல்லப்படுவதைக் காட்டும் காணொளியில் சட்லாப்பும் காட்டப்பட்டிருந்தார்.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த குறிப்பிட்ட காணொளியின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

இந்த கொலையானது மிகவும் அருவருக்கத்தக்க, வக்கிரமான செயல் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கடுமையாக கண்டித்திருக்கிறார்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/09/140902_iskillessecondusjourno.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளரின் தலையை துண்டித்து வீடியோ வெளியிட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.

 

பெய்ருட்: கடந்த ஆண்டு சிரியாவில் காணாமல் போன அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சாட்லாஃபை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

 

ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் ஃபோலியை தலையை துண்டித்து கொலை செய்து அந்த வீடியோவை கடந்த 19ம் தேதி வெளியிட்டனர். அந்த வீடியோவில் அடுத்ததாக மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரான ஸ்டீவன் சாட்லாஃபை கொலை செய்யப் போவதாக தீவிரவாதிகள் தெரிவித்திருந்தனர்.

 

03-isis-beheads-us-journalist-steven-sot

 

இந்நிலையில் அவர் ஸ்டீவனின் தலையை துண்டித்து கொன்று அந்த வீடியோவை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவின் விவரம் வருமாறு,

 

வீடியோவில் ஸ்டீவன் ஆரஞ்சு நிற உடை அணிந்து மண்டியிட்டு கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உள்ளார். ஸ்டீவன் வீடியோவில் கூறுகையில், ஒபாமா, உங்களின் வெளியுறவுக் கொள்கை மூலம் ஈராக் விஷயத்தில் தலையிடுவது அமெரிக்க மக்களின் உயிரை காக்க வேண்டும். ஆனால் உங்கள் தலையீட்டுக்கு நான் ஏன் என் உயிரை பறிகொடுக்க வேண்டும்? நான் அமெரிக்க குடிமகன் இல்லையா? என்று கேட்டுள்ளார்.

 

03-isis-beheads-us-journalist-steven-sot

 

ஸ்டீவன் அருகில் நின்ற தீவிரவாதி இங்கிலாந்து நாட்டவர் போன்று பேசியுள்ளார். அவர் கூறுகையில், நான் வந்துவிட்டேன் ஒபாமா. உங்களின் கொடூரமான வெளியுறவுக் கொள்கை, தொடர்ந்து தாக்குதல் நடத்துவது, எச்சரிக்கையையும் தாண்டி தாக்குவது ஆகியவற்றால் தான் நான் திரும்பி வந்தேன் என்று கூறிவிட்டு ஸ்டீவனின் தலையை துண்டித்துவிட்டார்.

 

31 வயதான ஸ்டீவன் கடந்த 2013ம் ஆண்டு சிரியாவில் காணாமல் போனார். தீவிரவாதிகள் எச்சரித்தும் அமெரிக்கா ஈராக்கில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்களை பாதுகாக்க 350 ராணுவ வீரர்களை பாக்தாதுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

 

-தற்ஸ் தமிழ்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான கொலைகளுக்கு மேற்குலக அரசுகளின் தவறான கொள்கைகளும் காரணமாகும். அவர்களும் அதனை திருத்திக் கொள்வதாக இல்லை. முஸ்லீம் மத அடிப்படைவாத வெறியர்களும் தங்களை திருத்திக் கொள்வதாக இல்லை..! பாவம்.. அப்பாவி மக்களின் பிள்ளைகள்..!

Link to comment
Share on other sites

இக்கொலைகளை இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கண்டிக்க வேண்டும். வெறுமன பேரீச்சை மரங்களை நட்டு வைத்தால் பத்தாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கொலைகளை இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கண்டிக்க வேண்டும். வெறுமன பேரீச்சை மரங்களை நட்டு வைத்தால் பத்தாது.

 

 

அவர்கள் உள்ளூர மகிழ்ந்திருப்பார்கள்.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இஸ்லாமிய அடிப்படைவாதப் பேய்கள் நிச்சயம் அழிக்கப்பட வேண்டும். இதை எவர் செய்தாலும் நிச்சயம் ஆதரிக்க வேண்டும். அமெரிக்கா அதைச் செய்கிறதென்றால் நிச்சயம் அது நல்ல விடயம்தான். மனிதர்களை மிருகங்களை விடவும் கேவலமான முறையில் கொன்றுதள்ளும் இந்தப் பேய்களை அமெரிக்கா அழிப்பது வரவேற்கப்படவேண்டிய விடயம்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.