Jump to content

நல்லின ஆடு வளர்ப்புத் திட்டம்: 'தகர்' என்ற பெயரில் ஊக்குவிப்பு! கால்நடை அமைச்சினால்


Recommended Posts

goat%20321.jpg

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு 'தகர்' என்ற பெயரில் நல்லின ஆடு வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2014) அளவெட்டி மகாஜனசபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
 
இதன்போது அளவெட்டிப் பகுதியில் வசிக்கும் - கணவர்களை இழந்த - 32 பெண்களுக்கு சணல் என்று அழைக்கப்படும் சாணன் இன ஆடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான இந்த ஆடுகளை சுவிற்சர்லாந்தில் வசிக்கும்; ப. விஜயகுமார் என்பவரும், இலங்கையின் முதலாவது கிராமசபைத் தலைவியும் நெடுந்தீவு வாசியுமான அமரர் நாகேந்திரர் செல்லம்மா ஞபாகார்த்தமாக அவரது உறவினர்களும் கொள்வனவு செய்து வடக்கு மாகாண கால்நடை அபிவிருத்திக்குப் பொறுப்பான அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
 
திட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பொ.ஐங்கரநேசன், பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடு ‘தகர்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளது. அதனைத் திட்டத்தின் பெயராகவும், ‘தகர் வளர் துயர் தகர்’ என்பதைத் திட்டத்தின் மகுட வாசகமாகவும் கொணட இந்த ஆடு வளர்ப்புத் திட்டம் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்பாடு அடையச் செய்வதோடு நல்லின ஆடுகளை விருத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. இந்தத் திட்டம் வடமாகாணம் முழுவதும் விஸ்தரிக்கப்படவுள்ளதால் திட்டத்தை முன்னெடுப்பதற்குப் புகலிட நாடுகளில் வசிக்கும் எமது ஈழதேசத்து உறவுகள் இங்குள்ள அவர்களது உறவுகளுக்கு ஊடாக உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
 
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், ஆடுகள் சண்டையிடும் போது பின்வாங்குவது திருப்பித் தாக்குதவதற்கு வேகம் பெறுவதற்காகவே - என்றார். இதனையே திருவள்ளுவர் தனது திருக்குறளில் 'காலம் அறிதல்' என்ற அதிகாரத்தில் ‘ஊக்கம் உடையான் ஒடுக்கம், பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அந்தப் பொருதகர் போன்றே நாம் இப்போது பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் எதிர்காலத்தில் நிச்சயமாக நன்மை அடைவோம். அந்தவகையில் தகர் என்று பொருத்தமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட எமது பெண்களின்; வாழ்வாதாரமும் முன்னேற்றம் அடையும் என்று அவர் தெரிவித்தார்.
 
இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் த. சித்தார்த்தன், பா. கஜதீபன், திருமதி அனந்தி எழிலன், விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்கள் திருமதி வக்சலா அமிர்தலிங்கம், செல்வி கிறிஸ்ரன் புஸ்பலேகா மரியதாஸ், வலிவடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆடுகளைக் கொள்வனவு செய்து உதவிய செய்த ப. விஜயகுமாரின் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியின்போது வடமாகாண முதலமைச்சரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
goat%20322.jpg
 
goat%20325.jpg
 
goat%20326.jpg
 
goat%20323.jpg
 
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணசபை வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

புலம் பெயர் மக்களின் கண்களில் இவை படணும்

வடமாகாணசபையுடன் சேர்ந்து இயங்கணும்

வடமாகாணசபை வெற்றிநடை போட வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.