Jump to content

ஈழத்தமிழர் விவகாரம் - இந்தியாவின் வரலாற்றுத் தவறும்


Recommended Posts

இந்தியாவின் காங்கிரஸ்கட்சி அரசினதும் பார்ப்பணிய வெளியுறவுக் கொள்கைவகுப்பாளர்களின் பழிவாங்கல் பாணியிலான ஈழத்தமிழர் நோக்கிய அணுகுமுறையானது இந்தியாவின் நலன்களை நீண்டகால நோக்கில் பாதிக்கும் என்பது பற்றி பல கல்விமான்கள் கொள்கை வகுப்பாளர்கள் கருத்துக்களை கடந்த காலத்தில் வெளியிட்டிருந்தார்கள். இந்த ஆய்வுகள் இந்தியாவின் பிராந்திய வல்லரசு மற்றும் இந்துசமுத்திரத்தின் ஆதிக்கம் என்பவற்றின் கண்ணோட்டத்தில் சீனாவை பின்னணியாக கொண்டு உலகளாவியரீதியில் பொருளாதாரா அபிவிருத்தி அசுரவோகத்தில் நடந்த பொழுது செய்யப்பட்டவை.

நாடுகளின் மற்றும் பொருளாதார வர்த்தக பிராந்தியாங்களின் பொருளாதார அபிவிருத்தியின் வேகம் என்ன என்று பாரிய எதிர்பார்ப்புகளை தரும் தரவுகள் கொண்ட ஒப்பீட்டு ஆய்வுகள் செய்த காலம் மலையேறிவிட, பொருளாதார நடவடிக்கைகள் என்ன வேகத்தில் சுருங்குகிறது என்பது பற்றி பதட்டமான ஆய்வுகள் செய்யும் காலத்தில் இன்று இருக்கிறோம்.

இன்று உலகமயமாக்கல் பின்னகர்த்தப்படல் (deglobalisation) என்பது அடிக்கடி பேசப்படும் விடையமாக இருக்கிறது. அபிவிருத்தி அடைந்த நாடுகளின் நுகர்விற்கு அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் குறைந்த விலையில் பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்து தம்மை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டிருந்தனர். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் நுகர்வோரின் பொருளாதார பலம், கடன் வசதிகள், நாணயமாற்று வீதத்தின் அனுகூலம், வேலை தேடுவோர் உதவித்தொகை, இலவச வைத்திய சேவை போன்ற சமூக காப்பு வசதிகள் என்பன கடந்த சில பத்துவருடங்களாக உலகமயமாக்கலின் மறு பக்கத்தை அறிந்து கொள்வதை பிற்போட்டிருந்தது.

2008 இன் ஆரம்பம் வரை விரிவாக்கல் நிலையில் இருந்த பல முன்னணி அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதாரம் இன்று கட்டுப்பாடற்றமுறையில் சுருங்கிவரும் நிலைக்கு மாறிவருகிறது. இசுப்பானியா போன்ற நாடுகளில் வேலையில்லாதோர் தொகை 17 விகிதத்தை இந்த வருட இறுதியிலும் 19.4 விகிதத்தை அடுத்த வருடத்தில் அடையும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. உலகளாவிய ரீதியில் அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என்ற வேறுபாடு இன்றி வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவருவதும் அதனால் மெதுமெதூவக அதிகரித்து வரும் சமூக அழுத்தங்களும் அவற்றின் எதிர்கால பிராந்திய உலக அரசியல் பரிமாணங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

இலங்கைத்தீவில் சிறீலங்கா இனவெறி அரசு நடத்தும் ஈழத்தமிழர் இன அழிப்பிற்கு இந்தியாவின் காங்கிரஸ் அரசும் இந்திய பாதுகாப்பு புலநாய்வு மற்றும் வெளியுறவுத்துறைகள் உடந்தையாக இருப்பது உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிற்கும் ஈழத்தமிழர் தேசியதலமைக்கும் ஏமாற்றத்திற்கும் வேதனைக்கும் உரிய ஒன்றாக உள்ளது. இதுபற்றி தெளிவாக குறிப்பிட்டதரப்புகளால் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டிருக்கி

Link to comment
Share on other sites

இந்திய வெளிநாட்டு கொள்கை, கட்சிகள் சம்பந்தபட்ட விடையம் அல்ல என்பது எனது தாழ்வான அபிப்பிராயமுங்கோ.... :lol:

Link to comment
Share on other sites

இந்திய வெளிநாட்டு கொள்கை, கட்சிகள் சம்பந்தபட்ட விடையம் அல்ல என்பது எனது தாழ்வான அபிப்பிராயமுங்கோ.... :lol:

ஆம்....!! அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்படுமே ஒழிய கொள்கைகளில் அல்ல

Link to comment
Share on other sites

இன்னுமொரு விஷியம்.. 90% தொடக்கம் 98 % 'சதவீதமான' இந்தியர்களுக்கு சிரி லன்காவும் ஒண்டுதான் சோமாலியாவும் ஒண்டுதான்.....

அவர்களுக்கு கணக்கில்லை............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.