Jump to content

ஒரு பார்வையில் - ஐக்கியநாடுகள் சபை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்இணைய செய்தி அலசல்

ஒரு பார்வையில் - ஐக்கியநாடுகள் சபை

ஆக்கம் - ஈழவன்

படுகொலைகளும் மனிதவுரிமை மீறல்களும் சாதாரணமாக நடந்துவரும் இலங்கையின் பக்கம் சர்வதேசத்தினதும் மனிதவுரிமை ஆர்வலர்களினதும் பார்வை திரும்பி இருப்பது அண்மைக் காலமாக அதிகரித்தே வருகின்றது. இவ்வளவு காலமும் தமிழர் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நடத்தி வந்தபோதும், அதனை கண்டிக்க எந்த அமைப்போ அல்லது நாடுகளோ மனதார முன்வரவில்லை தம் பிராந்திய நலனுகாகவும் தம் பொருளாதார அரசியல் நிலைப்பாட்டுக்காகவும் படுகொலைகளையும் மனிதவுரிமைகளையும் அடக்கு முறைகளையும் கண்டும் காணாதது போல் இருந்தே வந்தன என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். அடக்கு முறைக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற நாடுகளே, இன்னொரு அடக்கப்படும் இனத்தின் விடுதலைகாய் காத்திரமான பங்களிப்பை வழங்காதது கவலைக்குரியதும் வேதனைக்குரியதுமாகும்.

தற்போது ஐ.நா.வின் பங்களிப்பும் கரிசனையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கி இருப்பது, சிங்கள இனவாதிகளுக்கு கசப்பான செய்தியே. தம் பிரதிநிதியை ஐ.நா. செயலாலராக்க எடுத்த முயற்சியில் இலங்கை அரசு படு தோல்வியைத் தழுவியது. அதுமட்டுமல்ல தம் இனப்படுகொலைகளையும் தமிழினத்தின் மேலான அடக்கு முறையையும் உலகுக்கு மறைக்கும் முயற்சியில் தோல்வியுற்று உள்ளது என்பது மிகப்பொருந்தும். தமிழினத்தை பயங்கரவாதிகளாக சித்தரித்த இலங்கையின் உண்மை முகம் வெளிப்படதொடங்கி இருக்கின்றது. இதற்கு புலிகளின் ராஜதந்திர நகர்வுகளும், புலம் பெயர் மக்களின் முயற்சியும், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் என சொல்லலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறீலங்கா அரச தலைவரின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சரின் செயளாளருமான கோத்தபாய ராஜபக்ஸ ரொயிட்டர்ஸுக்கு வழங்கிய பேட்டியில் ஐ.நாவில் புலிகள் ஊடுறுவி இருக்கின்றார்கள் என பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். இவ் பேட்டியானது ஒரு உயர் ராஜதந்திரி ஒருவரின் பொருப்பற்ற செயலையே காட்டி நிற்கின்றது. ஐ.நா.வை சாடுவது இது முதல் முறை அல்ல. ஒரு முறை லக்ஸ்மன் கதிர்காமர் கூட ஐ.நா. கொசு மருந்தடிக்கும் வேலையை மட்டும் பார்க்கட்டும் என ஏளனம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அது போக அண்மையில் இலங்கையின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரான ஜெயராஞ் பெனான்டோ பிள்ளை ஐ.நா. அதிகாரியான ஜோன் கோல்மஸ் அவர்களை புலிகளிடம் பணம் வாங்கிய ஒரு பயங்கரவாதி என விமர்சித்துள்ளதானது இலங்கை அரசின் ஐ.நா. மீதான காழ்புனர்ச்சியையும் சிறீலங்கா அரசின் இயலாமையையும் தெளிவாக காட்டுகின்றது. தமக்கு ஆதரவாக அறிக்கை விடும் அதிகாரிகள் நல்லவர்கள் மற்றையவர்கள் பயங்கரவாதிகள், பணம் வாங்கிய ஊழல் பேர்வளிகள் என பொருள்படும் விதமாக கருத்தினை தெரிவித்து வருவது குறிப்பிட தக்கது

அப்படிப்பட்ட காட்டமான அறிக்கைகளையும், கோமாளித்தனமான கருத்துகளையும் சிறீல‌ங்கா அர‌சிய‌ல்வாதிக‌ள் வெளியீட்டு வ‌ந்தபோதும் ஐக்கியநாடுகள் அதனைக்கேட்டு பொங்கி எழுந்திருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக தம் பக்க சார்பில் காரசாரமாக எந்தவொரு கண்டனத்தையோ, கண்டிப்பையோ காட்டாமல் மெளனம் சாதிக்கின்றனர். அத‌ன் ந‌டைமுறை செயற்பாடுகளில் எந்த‌ மாற்ற‌மும் இல்லாம‌லே ஐ.நா. இய‌ங்குவ‌து வேத‌னைக்குரிய‌து. த‌ன் தூதுவ‌ர் ஒருவ‌ரையே க‌பின‌ட் அமைச்ச‌ர் ஒருவ‌ர் கையூட்டு பெற்ற‌வ‌ர் என‌ விம‌ர்சிக்கும் அதே த‌ருண‌த்தில் ஐ.நாடுகள் எத்த‌கைய‌ ஒத்துழைப்பையும் தாம் வ‌ழ‌ங்க‌ த‌யாராக‌ இருக்கின்றோம் என‌ அறிக்கைக‌ளை விடுத்து கொண்டு, பெய‌ருக்கு ம‌ட்டும் அறிக்கைக‌ளை விடுத்து த‌ன்னைத்தானே சிறுமைப்ப‌டுத்துகின்ற‌து ஐ.நா. என‌ எண்ண‌த் தோன்றுகின்ற‌து. வேறு நாடுக‌ளில் இதே போன்ற‌ ஒரு பிர‌ச்சினை வ‌ந்திருந்தால் இதேபோல‌ அறிக்கைக‌ளை ம‌ட்டும் விடுத்திருக்குமா ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பை.

க‌ட‌ந்த‌வார‌ம் நில‌வ‌ர‌ம் நிக‌ழ்சியில் புலிக‌ளின் ப‌டைத்துறை பேச்சாள‌ர் ராசையா இள‌ந்திரைய‌ன் அவ‌ர்க‌ள் ஜ‌நாவின் செய‌ற்பாடுக‌ளில் இருக்கும் தொய்வுக‌ளை ந‌ன்கு சுட்டி காட்டி இருந்தார்.

ஐ.நா. விசேட‌ தூதுவர் ஐ.நாடுகளுக்குள் ஊடுறு தவறான தகவல்களை வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்ட ஐ.நா. பணியாளர்களின் நிலை, இன்னும் நாட்க‌ள் செல்ல‌ ஐ.நாவே புலிக‌ளின் துணை அமைப்பு என‌ இல‌ங்கை அர‌சாங்க‌ம் அறிக்கை விடும் தூர‌ம் அதிக‌ தூர‌த்தில் இல்லை.

சிறீலங்கா அரசு, ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக் காட்டியுள்ள மனித உரிமை மீறல்களுக்கும் அப்பால், தனது அரச பயங்கரவாதச் செயல்களை நாளாந்தம் நடாத்திக் கொண்டு வருகின்றது. தமிழ் மக்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தியடிக்கின்ற சிங்களச் சிறிலங்கா அரசு, இன்று தமிழ் பேசும் முஸ்லிம் மக்களையும் விரட்டியடிக்கின்றது.

இத்தகைய கொடூரங்களைத் தடுத்து நிறுத்துவதற்கோ, குற்றமிழைப்போரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கோ, நடவடிக்கை எடுப்பதற்கோ யாரும் முன் வராத நிலையில், இலங்கை அரசின் இனவாத அத்துமீறல்கள், அட்டுழியங்கள் தொடர்ந்த வண்ணமே, அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகளின் அமைப்புகளும் நேரடியாகத் தலையிட்டு, பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என சுட்டிக் காட்டுகின்றது மனித உரிமைகள் ஆணைக்குழு.

இந்த மனித ஆணைக்குழுவின் சுட்டிக்காட்டலுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலை சாய்க்குமா அல்லது பேசாமடந்தைகளாக மெளனம் சாதிப்பார்களா?

ஈழவனின் ஆக்கத்தினை அவரது வேண்டுகோளுக்கு இணங்க இங்கே பதித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

ஈழவனின் ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்.

ஐநா எல்லாப் பிரச்சனைகளிலும் நியாயத்துடன் தலையிடுவதில்லை. ஈராக் பிரச்சனையில் அது எப்படி நடந்துகொண்டது என்பது எல்லோரும் அறிந்ததே. ஈராக் போன்ற பெரிய நாட்டுக்கே இந்த நிலமை என்றால், சர்வதேச முக்கியத்துவமில்லாத தமிழீழத்திற்கு ஆதரவாகச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா ?

Link to comment
Share on other sites

ஐ நா மற்றும் சிங்கள தரப்பின் நிலைப்பாடுகளை உங்கள் செய்தி அலசலில் நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள்ஈழ

Link to comment
Share on other sites

ஜ.நா பற்றிய செய்தி அலசல் மூலம் பல முக்கிய விடயங்களை சுட்டி காட்டி இருகிறீர்கள் வாழ்த்துகள் ஈழவன் அண்ணா தொடர்ந்தும் இவ்வாறான அலசல்களை தரவேண்டும்........ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா பார்வையில் உங்கள் அலசல் அழகு.

மேலும் மேலும் இது போன்ற ஆக்கங்களில் உங்கள் திறமை எழுத்துருவாக வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.