Jump to content

ஆடியில் ஆடிப்போன ராஜபக்ச


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆடியில் ஆடிப்போன ராஜபக்ச

போர் ஆரம்பித்த காலத்திலிருந்து ஆட்சிக்கு வந்தோர் இனப்பிரச்சனை ஒன்றை வைத்தே காலத்தை ஓட்டுவதில் செலவழித்திருக்கிறார்கள்.

இனப்பிரச்சனை தீர்ப்பதற்கான சமாதான நிலைமைகள் மாறி, உலக நாடுகளின் பொருளாதார உதவிகள் பெற்று, போரை மேலும், மேலும் வலுப்பெறச் செய்யும் பெரும் நோக்கமாகவே அமைந்திருக்கின்றது.

இப்படியே பல சகாப்தங்களாக ஆட்சிப்பீடம் ஏறும் ஒவ்வொரு அரசாங்களும் போரை காரணங்காட்டியும், தமிழர்களை பயங்கரவாதிகள் என்றும் எடுத்துக் காட்டுவதில் மும்முரமாய் செயற்படுகின்றனர். அனைத்து தரப்பினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

அந்தவகையில் ஆட்சிக்கு வந்த பெளத்த சிங்கள பேரினவாதி மகிந்த ராஜபக்சாவின் முன்னேடுக்கும் செயற்பாடுகளும் அமைந்திருந்ததோடு அவை சற்று அதிகமாகவே காணப்படுகின்றது.

மேற்குலக நாடுகளுக்கும் இவை எல்லாம் தெரிந்திருந்தும் கண்ணை மூடிக்கொண்டு மெளனமாக இருக்கின்றார்கள். இதை பயன் படுத்திக் கொண்டுதான் ராஜபக்சாவும் தனது காய் நகர்த்தலை சாதுரியமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

தமிழர்களின் விடுதலைக்காகவும், தமிழின எதிர்கால சந்ததிகளுக்காகவும் போராடும் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தொழித்து விட்டு, அதன் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதல் என்பதே மகிந்தாவின் சிந்தனையாகவும் குறிக்கோளாகவும் இருக்கின்றது

பொருளாதார நெருக்கடியில் ஆயுதக் கொள்வனவு, பாதுகாப்புச் செலவீனங்களுக்கான அதிகளவான நிதி ஒதுக்கீடு, இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு என்று இப்படியே நீண்டு கொண்டே போகின்றது.

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியை தழுவிக்கொண்டிருக்கின்ற நிலைமை நாட்டின் பெரும் விலையேற்றத்தை சந்திக்க வேண்டிய நிலைமை ஒருபுறம்.

நாட்டின் பெருந்தொகைப்பணம் போருக்காக செலவிடுப்படுவதால் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டு போகும் விலையேற்றங்களுக்கு காரணகர்த்தாவாக மகிந்தா செயற்படுகின்றார். விலையேற்றத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்களிலும் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கிழக்கின் உதயம் என்ற பெயரில் வெற்றியை கொண்டாடி விட்டு கிழக்கில் தேர்தலை முன்னேடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையில் வாக்குரிமையற்ற சமூகத்தினருக்கு வாக்குரிமை வழங்கி அங்கு குடியமர்த்தும் பணியில் இறங்கியிருக்கும் அரசாங்கத்தின் நயவஞ்சகத்தன்மை.

குடும்பி மலை என்ற சூனிய பிரதேசத்தைக் கைபற்றி, புலிகளை கொன்று விட்டதாகவும், ஆயுதங்களை கைபற்றி விட்டதாக புளுடா விடும் இவர்கள், இந்த பிரதேசத்தைக தக்க வைத்துக் கொள்வதற்கான மேலதிக இராணுவப் படைகளுக்கான விண்ணப்பங்களை கோறுகிறார்கள் .

மேலும் இந்த நிலையில் வடக்கு நோக்கிய படைநகர்வினை மேற்கொள்ளவும் மேலதிகமான படைப்பலமும் அத்தியாவசிய தேவையாக இருக்கின்றது. படைப்பலம் என்பது நினைத்தமாத்திரத்தில் கிடைக்கக்கூடியதும் அல்ல.

இந்தத் தேவைகளுக்கு மத்தியிலும் இவரது ஆட்டம் ஆடிமாதக் காற்றாய் அலைமோதுகின்றது.

அத்தோடு அளவுக்கு அதிகமான அமைச்சர்கள், அபிவிருத்தித் திட்டங்கள் இவற்றையெல்லாம் செயற்படுத்த தேவையான பணம் இன்றியும் ஆடிப்போய் தள்ளாடுகின்றது இந்த அரசாங்கம்.

ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர ஆகியோர்களினால் நடத்தப்படும் பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்கள் தொகையினைக்கண்டு தடுமாறும் மகிந்த தற்போது அவர்களுடன் சந்திரிகா அம்மையாரும் இணைந்து கொள்வது, மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே ஆடியில் ஆடிப்போயிருக்கும் ராஜபக்ச, அம்மையாரின் உடன் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிக்கும் நிலையிலும் உள்ளார். உள்ளத்தால் ஆட்டம் கண்டதன் விளைவு பட்டுத் தெளிக்கின்றது.

இதனுடன் ஜே.வி.பி. தரும் தீராத தலையிடிகள்.

இ.தொ.கா.வின் பதவி விலகல். பதவியில் விலகினாலும் அரசாங்கத்தின் பிடியில் மதில் மேல் பூனை போல் இருக்கின்றார்கள். இங்கேயோ அங்கேயோ என்றுதான் இருக்கின்றார்கள்.முஸ்லிம் காங்கிரஸ் ன் நிலைமையும் அதே போல் தான் இருக்கின்றது.

சிறப்புத்தூதுவராக மூத்த ராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி, ஐ.நா. அதிகாரி சேர். ஜோன் ஹோல்ம்ஸ்

இருவரும் வந்து போனபின்னும் பல நெருக்கடிகளை அழுத்தங்களை அரசாங்கத்துக்கு உண்டு பண்ணி இருக்கின்றார்கள். இருந்தபோதும் விழுந்தும் மீசையில் மண் படாதது போல் ராஜபக்சாவும் சகாக்களும் இருக்கின்றார்கள்.

இத்தனைக்கும் மத்தியில் விடுதலைப்புலிகளின் நீண்ட மெளனம். எந்த நேரத்தில் எங்கே தாக்குதலை நடத்துவார்கள் என்ற பயம் வேறு ராஜபக்சாவை ஆட வைத்திருக்கிறது.

ஆடிக்காற்றில் ஆடியவர் ஆவணியில் என்ன செய்யப் போகின்றார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

ஆடி முடிந்து ஆவணி வந்து கார்த்திகையை நெருங்க தலையைப் பிய்த்துக் கொள்ளப் போகிறார்.

பாராட்டுக்கள் கறுப்பி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு ஆய்வு கறுப்பி வாழ்த்துகள்.. :lol:

Link to comment
Share on other sites

சிறந்ததோரு ஆய்வு வாழ்த்துகள் கறுப்பி அவர்களே. தொடர்ந்து வரட்டும் உங்கள் ஆக்கங்கள். தமிழரின் சுதந்திர தாகத்திற்கு வேட்டு வைப்பதற்கு எத்தனையோ பேர் வந்து ஆடிப் பார்த்து விட்டார்கள். இவரும் பத்தோடு பதினோன்றாக இருக்கட்டும். இனி வரும் காலம் நம் காலமாக கனியும் என எதிர்பார்க்கலாம்.

ஜானா

Link to comment
Share on other sites

"இத்தனைக்கும் மத்தியில் விடுதலைப்புலிகளின் நீண்ட மெளனம். எந்த நேரத்தில் எங்கே தாக்குதலை நடத்துவார்கள் என்ற பயம் வேறு ராஜபக்சாவை ஆட வைத்திருக்கிறது."

இவர்கள் பயந்தே சாக வேண்டும்.எதிர்பாக்காத போது தாக்குதல் அதிர்ச்சியும் கொடுக்க வேண்டும்.மொத்தத்தில் மகிந்து மண்டையை பிய்த்துக்கொண்டு ஓடவேண்டும்.கறுப்பி,உங்கள் ஆய்வு மிக நன்று.மேலும் ஆய்வுகளை தொடருங்கள்.

Link to comment
Share on other sites

கறுப்பி அக்கா நல்லா ஆயு செய்து இருகிறீங்க வாழ்த்துகள்.............. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து விட்டு கருத்துக்களும், வாழ்த்துகளும் கூறிய இணையவன் , புத்தன் , ஈழப்பிரியன் , ஜானா , சுகன் , ஈழவன் , நுனாவிலான் மற்றும் யமுனாவிற்கும் நன்றி .

Link to comment
Share on other sites

பல்வேறு இடங்களில் இருந்து வரும் நெருக்கடிக்களுக்கு மத்தியில் தள்ளாடும் இராஜபக்சவுக்கு உடனடியான தேவை வடபகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் சில பகுதிகளைக் கைப்பற்றி , தென்னிலங்கையில் ஏற்படும் சில அழுத்தங்களைக் குறைப்பதே. ஆனால் வடக்கில் முன்னேறப் போய் புலிகளின் அடியினால் இழப்புக்கள் பல ஏற்பட்டால் இன்னும் தென்னிலங்கையில் நெருக்கடிகள் கூடும். என்ன செய்யப் போகிறார்?.

ஆய்வுக்கு பாராட்டுக்கள் கறுப்பி. நன்றாக இருக்கிறது.

தலையங்கம் என்னை நன்றாகக் கவர்ந்திருக்கிறது. ஆடியில் ஆடிப் போன -

Link to comment
Share on other sites

நல்லதொரு செய்தி ஆய்வு கறுப்பி. பொருளாதாரப் பிரச்சனைகளையும் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள்.

இனி வரும் காலங்களில் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டும்போது (உதாரணமாக பொருளாதாரம்) - அது தொடர்பான செய்திகள் இணையத்தில் வந்திருந்தால் - அவற்றுக்கான தொடுப்புகளையும் (Link) இணைத்துவிடுங்கள். வாசிக்கும்போது புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு , வலைஞன் கருத்துப்பகிர்வுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.