Jump to content

வணக்கம்.....


Recommended Posts

எப்பிடி ஆக்கங்களை ஆரம்பிப்பது என்று யாரும் விளக்கம் தரமுடியுமா ?


எனது சிறு நினைவு குறிப்பை இணைக்க முடியுமா

 

யாழ் இந்துவின் பெருந்தன்மை

கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த காலங்கள் 1990 நடந்த சம்பவம் ஒன்று நினைவில். இந்தியன் இராணுவ கால கட்டத்தின் பின் கிரிகெட் 19 வயது அணி சிரமத்தின் மத்தியில் மீளமைக்கப்பட்டது. பல வீரர்கள் குடாவை விட்டு பிரிந்தோ பறந்தோ சென்ற காலங்கள். தயாளன் அண்ணை அவரகள் சிரமப்பட்டு ஒரு அணியை ஒழுங்கு செயதார். அணிக்கான உபகரணங்கள் தேடி எடுக்கப்பட்டன. பல மிகவும் பாவனைக்கு உபயோகமற்றதாக இருந்தது. அத்துடன் பல காணமல் களவு போய்விடது. இன்றுவரை நினைத்ததுண்டு அந்த கனமான துடுப்பாட்ட உபகரணங்கள் எந்த வகையில் அவர்களுக்கு உபயோகபட்டிருக்கும் ?

இருந்த உபகரணங்களை வைத்து பயிற்சி ஆரம்பமாகியது, உடல் பயிற்சி, கள தடுப்பு முதலில் ஆரம்பமாகியது. 7 – 9 வீரர்கள் மட்டுமே ஆரம்பத்தில் வந்திருந்தார்கள் எனவே மாணவர் மத்தியில் மீண்டும் விளம்பரம் செய்ய பட 19 வயதிலும் குறைந்த மாணவர் சிலர் ஒன்று சேர அணி ஓரளவு நிறைவாகியது. போர் நிறுத்த காலத்தில் லொத்தர் அடித்த மாதிரி ஸ்ரீ லங்கா அரசு பல புதிய உபகரணங்களளை அனுப்பிவைத்தது. ஒரு மாதிரி ST அண்ணை பாய் தரையை ஒழுங்கு அமைத்து கொடுத்தார். அணி பாடசாலை முடிவடைந்ததும் பயிற்சியை ஆரம்பிக்கும் இது மணி 6 வரை தொடரும். மாணவர் சிலர் பிரத்தியோக வகுப்புகளை கட் செய்து பயிற்சிகளை தொடந்தனர்.

உப அதிபர்கள் சோமசுந்தரம் , மகேந்திரன் ஆகியோர் அணியை மீளமைப்பதில் மிக்க கவனம் எடுத்துக் கொண்டார்கள் . நாங்களும் பந்து அவர் வீட்டுக்குள் போனால் மதில் பாய்ந்து செல்வதில் மிக்க ஆர்வம் காட்டியது வேறு கதை. ஒருவாறாக பிரபல வீரர்கள் (சுல்தான், வரதன், நரேன், ஜெயராஜ், கோபி ) ஒன்று  சேர அணி நல்ல வகையில் உருவாக தொடங்கியது. பயிற்சி முடிவில் தரும் நடா அண்ணையின் போண்டா , தேநீர் மட்டுமே என்னை அணியில் நிலைக்க வைத்தது.

பயிற்சி  சில வாரங்கள் பகிடியும் பம்பலுமாக சென்று கொண்டிருந்தது நானும் எனது கறுப்பு பாடசாலை சப்பாத்தில் இருந்து ஒரு பழைய விளையாட்டு சப்பாத்து ஒன்றை இரவல் வாங்கி இருந்தேன். அதை பலமுறை நய்லோன் நூல் வைத்து தைதத்தில் அதன் உருவமே மாறி இருந்தது. பதினைந்து வயது கூட முடியாத எனக்கு  கிரிக்கெட்ல் ஆர்வம் அதிகம் இருந்தாலும் இந்த ஜாம்பவான்களுடன் 19 வயதிற்கு உட்பட பிரிவில் விளையாட திறமை இருக்கவில்லை. என்னவே பத்தோடு பதினொன்றாக நானும் ஒட்டிகொண்டேன். பந்து பொறுக்குவதில் ஆரம்பித்து ஒரு சுழல் பந்து வீச்சுக்கான பிரிவில் சிறு இடம் இருப்பதை அறிந்து அதற்கான முயற்சிகளை ஆரம்பித்து ஓரளவு தேயற்சியும் அடைந்தேன். அணியில் இடம் பிடிக்க ஏற்கனவே பல முக்கிய புள்ளிகளின் பரீட்ச்சயம் பெரிதும் உதவியது. வாழ்க்கையில் கூட கதவுகள் திறபத்திற்கு அறிமுகம் அவசியம் பிறகு முன்னேற உங்கள் திறமை அவசியம்.

தயாளன் அண்ணையின் வழிநடத்தல் ரொம்பவித்தியாசம்தான். பிற பயிறுவிப்பாளர்கள் ரொம்பவே படுத்துவார்கள். அதிலும் பழய மாணவர் வந்து உதவி பயிறுவிப்பாளர்கள் ஆக இருந்தால் கதை கந்தல் நம்மை பிரட்டி ஓட உருள வைப்பார்கள். தயாளன் அண்ணை எங்களை பல வழிகளில் எம்மை தயார் படுத்தினார். போட்டிகள் தொடங்க சில வாரங்கள் இருக்கையிகல் ஜொலி ஸ்டார்ஸ் விளயாட்டு கழகம் நடத்தும் சுற்றுபோட்டியும் தொடங்க இருந்தது. Shabra நிதி நிறுவனம் உதயன் பத்திரிகை ஆதரவுடன் பல இந்து கல்லூரி மாணவர்கள் இடம் பெற்ற ஒரு அணி. இவர்கள் நாம் விளையாடுவதை அறிந்து ஒரு பயிற்சி போட்டி ஒன்றை ஒழுங்கு செய்தார்கள்.

நேரம் நாள் எல்லாம் குறித்து இந்து கல்லூரி மைதானத்தில் ஒரு சனிகிழமை போட்டி. தயாளன் அண்ணை எல்லோரையும் கண்டிப்பாக வரச்சொல்லி ஆர்டர் போட்டுவிட்டார். நாமும் PK பாலசிங்கதின் விஞ்ஞான வகுப்பை கட் செய்து வடிவேலு மாதிரி கட்டதுரை போல லோங்க்ஸ் ஒன்றை மாட்டிகொண்டு கல்லூரி மைதானத்தை நோக்கி சென்றேன்.

நேராக எமது மாற்றல் அறைக்கு சென்று உடைகளை மாறியபின் வெளியில் வந்து அழகான அந்த மைதானத்தை பார்கிறேன். மிக சிறிய மைதானம் ஒருபக்கம் மதிலாலும் மறுபக்கம் தகரதினாலும் அடைக்கப்பட்டு இருந்தது. ஆறு வயதில் இருந்து என்னோடு உறவாடிய அந்த மைதானம் எல்லோராலும் வளவு என்று பழிக்க பட்டாலும் இந்துவின் மைந்தர்களுக்கு அது ஒரு கோவில் என்றே சொல்ல வேண்டும். துவிச்சக்ர வண்டியை மதிலில் சாய்த்து விட்டு நடு உச்சி வெயிலில் மேட்ச் பார்ப்பது ஒரு தனி சுகம். மதிய போசன இடைவேளையில் துவிச்சக்ர வண்டியை வலித்து வீடு சென்று உணவருந்தி மீண்டும் ஓடி வருவது...எல்லாம் ஒரு கனா போல இப்போ

 

எமது மாற்றல் அறையில் இருந்து வலபக்கம் திரும்பி பார்கிறேன் SHABRA அணியினர் உடல் பயிற்சி செய்த படி மைதானத்தில் உலாவிய வண்ணம் இருந்தனர். அவரகளது உருவம் அந்த வயதில் என்னை பிரமிக்க வைத்தது. சரி நான் தான் விளையாட போவதில்லையே சும்மா ஓரமா இருந்து மேட்ச் பார்த்து பின் மதிய போசன இடைவேளையில் நல்ல கட்டு கட்டுவம் என்ற நினைப்பில் நான் . நினைப்பில் மண் போட தயாளன் அண்ணை  வந்து சொன்னார் சில பொடியள் பிரத்தியோக வகுப்புகள் காரணமாக வர முடியலை அதனால நீ இறங்கி விளையாடு.

 

பயம்மாக இருந்தாலும் கண்ணில காட்டி கொள்ளாமல் அதுக்கு என்ன என்று சொல்லி போட்டு திரும்பி பாகிரன் சும்மா மலை மாதிரி SHABRA அணி நிக்குது. இவர்கள் எல்லாம் நான் முன்பு  மேட்ச் பார்க்கேக்க சும்மா விசுக்கி விசுக்கி அடிச்ச ஆக்கள். முருகவேள் , வித்தி, ஜெயந்தன் , இளங்கோ, விஜயகுமார், வீரா ..மற்றும் சென்ற்றலிட்ஸ், KCC என்று பல பேர்கள். ஓகே நம்மட பொடியளும் சின்ன சைஸ் என்டாலும் விடாமல் அடிப்பாங்கள் என்ற நம்பிகையில நான். சுல்தான் பந்து போட்டு சமாளிப்பான் எண்டு தெரியும். சுல்தான் பந்து போடேக ரோம்ப அருகில் கள தடுப்பு செய்யிற நான், தரை பாயில் பந்து விழுந்து வரும் போது சும்மா சீறி கொண்டு வரும். பெரிய தேனீ போற சத்தம் ஒண்டு வரும் பக்கத்தில நிக்கிற என்னக்கே வயித்த கலக்கும். வெளிநாடுகளில் உள்ள  மண் தரையில அவ்விளவு வேகமோ சத்தமோ இல்லை. வரதன், நரேன் நல்லா பந்து  போடுவங்கள் சரி மட்சை வெளியில நிண்டு பாகிறதுகு உள்ள நிண்டு பார்ப்பம் எண்டு ஜோசிதுகொண்டு நிக்கேக்க ஜெயராஜ் டோஸ் போட்டு சைகை மூலம் துடுப்பு என்று காட்ட நான் சந்தோசமா மணல் கும்பல் நோக்கி நடை போட்டேன்.

 

 

மதியம் 11.30 யாழ் இந்து 19 வயது அணி 150 / 9 கடைசி துடுபாட நான் சரி போறது தான் போறம் ஸ்டைல் ஆக போவம் எண்டு எல்லை மண்ணை தொட்டு கும்பிட்டு மூலையில தெரிஞ்ச வயிரவரை நினைத்து கொண்டு உள்ளே போனேன். வயித்தில வண்ணத்தி பூச்சிகள் பறக்க முதல் 3 பந்துகள் ஒரு மாதிரி மறிச்சு போட்டன். ஒவ்வொரு பந்து மட்டையில படவும் கை தான் ரொம்ப அதறியது. பின்னால் இருந்த வித்தி அண்ணை சொல்லி கேக்குது முந்தி தான் கடைசி விக்கெட் சும்மா விசுகுவாங்கள் இப்ப நல்ல ஒட்டி விளையடுராங்கள் என்று. நமகுதானே தெரியும் நம்ம கஷ்டம்.

 

ஒருவாறாக யாழ் இந்து 160 ஓட்டங்களுக்கு ஆட்டமிளந்தது Shabra துடுப்பாட தொடங்கியது நானும் அரசமர நிழல் பார்த்து ஒதுங்கி கள தடுப்பில் ஈடுபட்டேன். போட்டி அமைதியாக சென்று கொண்டிருக்க தீடீரென்று யாரோ என் பெயர் சொல்லி கூப்பிட திடுகிட்டு திரும்பி பார்த்தேன். நம்மளை பந்து போட சொல்லி அன்பாக கேட்க ஒரு கணம் பதறி போனேன். சரி யார் தான் என்னை எதிர் கொள்ள போகிறார்கள் என்று பார்த்தல் அது வீரா (மனிப்பாய்) தாடியும் துடுப்புமாக ஒரு வைரவர் நிற்கும் போல இருந்தது. முதல் பந்து மெதுவாக விழுந்து திரும்ப சடார் என்று ஒரு சத்தம் அடிச்ச அடியில் பந்து மதிலில பட்டு திரும்பி எனக்கு  கிட்ட வந்து நின்றது. மயான அமைதி கோபி அண்ணை ஓடி வந்து சில அறிவுரை பகிர்ந்து சென்றார். இப்படி அடுத்த பந்துகளும் எல்லை கோடுகளுக்கு மேலலையும் கீழ்ழாலயும் போக அந்த ஓவர் முடிவுக்கு வந்தது. இனி மேல் பந்து போட கேட்டாலும் பந்து போடுவதில்லை என்ற முடிவுடன் நான் அரசமர நிழல் பார்த்து ஒதுங்கினேன். பிறகு பொடியள் நல்லா பந்து போட்டு SHABRA வை 190 குள் அவுட் ஆக்கி போட்டாங்கள். அப்படா என்று ஹொஸ்டல் பக்கம் நடையை கட்டினேன். அங்க தானே நல்ல மதிய சாப்பாடு பாயசத்தோட. இனி நம்ம பொடியள் மேட்ச்சை சமநிலை ஆக்கி போடூவாங்கள் என்ற நம்பிக்கையில் நான் அந்த சைவ சாப்பாடை நல்ல கட்டு கட்டினேன். வாழை இலையில் பாயாசத்தை விட்டு குடிப்பதை சிலர் விநோதமாக பார்த்த வண்ணம் கடந்து சென்றனர். நமக்கு அதுவா முக்கியம் பாயசம் தானே முக்கியம்.

 

இரண்டாம் இன்னிங்க்ஸ் யாழ் இந்து 160 / 5 நேரமும் இருட்டு பட தொடங்கியது. சரி நல்ல நாள் ஒருமாதிரி வீடு பொய் சேருவம் எண்டு நினைக்கேக்க வித்தி அண்ணையும் தயாளன் அண்ணையும் ஏதோ கதைக்கினம் சரி ஏதோ நடக்க போது எண்டு விளங்கீற்று. பார்த்தா யாழ் இந்து இரண்டாம் இன்னிங்க்ஸ் நிப்பாடி Shabra வுக்கு ஒரு 130 ஓட்டங்கள் ஒரு எட்டு ஓவரில் என்று தீர்மானிக்கபட்டது. இதை எப்படி அடிபாங்கள் அதுவும் சுல்தான் வரதன் நரேன் இருக்கேக்க. எல்லாரும் மைதானதில இறங்கியாச்சு Shabra முருகவேல் ஜெயந்தன் இறங்கி விளையாடினம். முருகவேல் அடிச்சு விளையாட பார்க்க பொடியள் ஒருமாதிரி அவுட் ஆக்கி போட்டாங்கள். அடுத்ததா பார்த்தா வித்தி அண்ணை  வாரார் என்ன இது இவர் நல்லா பின்னுக்கு தானே வாறவர் எண்டு யோசிக்க முதல் பந்துளால் மேலாலும் கீழ்ழாலயும் கதறி கொண்டு போகுது. பொடியள் வலு வேகமாக போட பந்து இன்னும் வேகமா வெளியில் போகுது. நானும் மதில் ஏறி பந்தெடுத்து களைச்சு போனேன். அடியெண்டா  மக்ஸ்வெல் / மில்லேர் கலந்து அடிச்சமாதிரி ஒரு அடி. நாங்கள் எல்லாம் கிலிச்சு போய் ஒராளை மாறி மற்றாள் பார்க்க முதல் மேட்ச் முடிஞ்சு போச்சு. நாளை உதயனில் (shabra நிறுவன பத்திரிகை ) யாழ் இந்து மானம் கப்பல் ஏற போகுது எண்ட நினைபோட வீடு நோக்கி ரொமபவே கடுப்போடு சென்றேன்.

 

மறுநாள் அதிகாலை துவிச்சக்ர வண்டியை வலித்து தட்டாதெரு சந்தியில் வாழைபழ கடையில் உதயன் பத்திரிகையும் வாழைபழமும் வாங்கி கொண்டு  லுமாலாவில் நின்றபடி கடைசி பக்கம் புரட்டிபார்கிறேன். பெரிய தலைப்பில் யாழ் இந்துவின் பெருந்தன்மை .....SHABRA வென்றது. அப்போது அறிந்து கொண்டேன் இந்துவின் மைந்தர்கள் எப்போதும் தங்கள் வெற்றியில் கூட யாழ் இந்துவை முதன்மை படுத்துவர் என்று .....

 

இது நடந்து 23 வருடங்கள் இப்பொது நிலமை வேறாக இருக்கலாம் ....

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாருங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. வாருங்கள்


"அது வீரா (மனிப்பாய்) தாடியும் துடுப்புமாக ஒரு வைரவர் நிற்கும் போல இருந்தது" :lol:  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சியை.... வருக, வருக என்று வரவேற்கின்றோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குஞ்சி வாருங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  இந்துவின் பெருமையுடன் வரும் குஞ்சி அவர்களுக்கு வாத்தியாரின்  வந்தனங்கள் உரித்தாகட்டும் :D

Link to comment
Share on other sites

வணக்கம் தந்த உறவுகளுக்கு பதில் வணக்கம் ..

 

குஞ்சி அழகும் கொடுந்தானை கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல .............................கல்வி அழகே அழகு ......

 

............( மறந்து விட்டது பெரியவர்கள் யாராவது உதவி செய்யவும் )

 

இதில் வரும் குஞ்சி அல்ல ...குண்சி.....என்பதே ...அல்லது குஞ்சி என்றே தொடருங்கள்  ...உங்கள் விருப்பம்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குஞ்சி அழகும் கொடுந்தானை கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல, நெஞ்சத்து
நல்லம்யாம் எனும் நடுவு நிலையான்
கல்வி அழகே அழகு".

எந்த அழகான உடைகளோ சிங்காரித்த தலைமுடியின்   அழகோ அழகல்ல
மஞ்சள் பூசி மினுக்கி வெளிக்கிட்டாலும் நெஞ்சிலை வஞ்சம் இல்லாமல் எல்லாரையும் சமனாப் பாக்கின்றவர்களின்
கல்வி அறிவே மனிதனுக்கு அழகு

 


வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

நாலடியாரின் கல்வி அதிகாரத்தின் முதற் பா வை பொழிப்புரை உடன் தந்த பாரியாரிக்கு நன்றியும் வணக்கமும் ..இதன் மூலம் உலகத்திற்கு ஏதோ சொல்ல வாறிங்க போல உள்ளது.....

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் குஞ்சி! தங்கள் வரவு நல்வரவாகட்டும் !!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் குஞ்சி! தங்கள் வரவு நல்வரவாகட்டும் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

 

யாழ் இந்துவின் பெருந்தன்மை  பிடித்திருக்கு...!!!

Link to comment
Share on other sites

வாங்கோ சந்திக்கு ,

உங்கள் பதிவில் இருக்கும் பலர் எனக்கும் பழக்கம் ,(தயாளன் ,வித்தி,சுல்தான் சற்று யூனியர் )

உதே நேரம் கொக்குவிலில் குணன் ,பாலா ,ரஞ்சிற்,உமாசங்கர் விளையாடிஇருப்பார்கள் என்று நம்புகின்றேன் .

சப்ரா சரவணபவன் பற்றி சொல்ல தேவையில்லை (வித்தியின் மச்சான் ).

சோமசுந்தரம் ,மகேந்திரன் மாஸ்டர்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

இதில் வரும் குஞ்சி அல்ல ...குண்சி.....என்பதே ...அல்லது குஞ்சி என்றே தொடருங்கள்  ...உங்கள் விருப்பம்...

 

"குண்சி" என்று நாம் அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது.... கடைசி எழுத்தை பிழையாக அடித்து விட்டால், வில்லங்கமாய் போய் விடும் என்ற படியால், நாங்க "குஞ்சி" என்றே கூப்பிடுகிறோம். :D

Link to comment
Share on other sites

"குண்சி" என்று நாம் அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது.... கடைசி எழுத்தை பிழையாக அடித்து விட்டால், வில்லங்கமாய் போய் விடும் என்ற படியால், நாங்க "குஞ்சி" என்றே கூப்பிடுகிறோம். :D

 

நன்றி தமிழ் சிறி  உங்கள் அப்ப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு....

 

சரி குஞ்சிதபாதம் , குஞ்சம்மா , குஞ்சப்பு , குஞ்சாச்சி , குஞ்சு போன்றன நல்ல தமிழ் பெயர்கள் அது மாதிரி குஞ்சி யும் ஒன்று என்ன நினைகிறேன்....

Link to comment
Share on other sites

வாங்கோ சந்திக்கு ,

உங்கள் பதிவில் இருக்கும் பலர் எனக்கும் பழக்கம் ,(தயாளன் ,வித்தி,சுல்தான் சற்று யூனியர் )

உதே நேரம் கொக்குவிலில் குணன் ,பாலா ,ரஞ்சிற்,உமாசங்கர் விளையாடிஇருப்பார்கள் என்று நம்புகின்றேன் .

சப்ரா சரவணபவன் பற்றி சொல்ல தேவையில்லை (வித்தியின் மச்சான் ).

சோமசுந்தரம் ,மகேந்திரன் மாஸ்டர்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றி .

 

சோமசுந்தரம் ,மகேந்திரன் மாஸ்டர்களின் பங்களிப்பு அளப்பெரியது அதிலும் விளையாட்டுத்துறையில்...சில குறைகள் பல நிறைகளை விட அதிகமாக பேசபடுவது நாம் ஊர் வழக்கம் தானே .....

 

கொக்குவிலில் குணன் ,பாலா ,ரஞ்சிற்,உமாசங்கர் ..சிலர் நினைவில் உள்ளது ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குஞ்சி வாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.