Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


Recommended Posts

யாழ் இணையம் தொடர்வது மகிழ்ச்சிக்குரியது. புதிய நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகள். திரு.மோகன் அவர்கள்

தொடர்ந்தும் உறுப்பினராக இருப்பது விரும்பத்தக்கது. கசப்புணர்வற்ற தொடர்ச்சி பேணப்படுதல் சிறப்பானது. உயர்ந்த

நாகரிகமான நடைமுறையுமாகும். அது தமிழர்களைப் பலப்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply

யாழ்களம் ... தமிழ்த்தேசியத்துக்கு எதிரான நிலையோ? அல்லது முற்று முழுதாக இலங்கை.இந்திய அரசின் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்துக்கு ஆதரவான நிலையையோ? அல்லது அவர்கள் சார் நா.க.த.அ இற்கு ஆதரவான நிலையையோ? எடுக்காமலும், புலத்தில் கடந்த வருடம் போல் மாவீரர் நாளை இரண்டாக உடைத்து குழப்ப இலங்கை/இந்திய அரசுக்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகாமலும்? ... தொடர்ந்தால் சந்தோசமே!

மற்றும் யாழில் குழுநிலை விவாதங்களுக்கு இடமளியாதீர்கள். ஓரிரு உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு விளக்கமோ/எதிர் கருத்தோ தெரிவிக்கையில் அவர் சார்ந்தவர்கள் வந்து தாக்குதல் தொடுப்பதை நிறுத்த வேண்டும், புதிதொரு தலைப்புகள் தொடங்கி நிலைமையை மோசமாக்குவதை தடுக்க வேண்டும். ... இது எமது போராட்டத்திலும் நடைபெற்றது ... கருணா சார் குழுவை தலைமை அனுமதித்து ... கனவுகள் கலைய காரணமாகியதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்!!!

என்னதான் புது விதிகள் வந்தாலும், அவைகளுக்கான/நடைமுறைப்படுத்துவதற்கான எல்லை எது! உதாரணமாக ஆபாச மாக எழுத கூடாது என்றால் ஆபாசம் என்றதற்கு எது எல்லை? அத்ற்கு மேல் முன்பு பன்னாடை போன்றவைகளே பிழையான சொல் என்று யாழில் தடை செய்யப்பட்டதும் இருக்கின்றது.

கருத்துக்கள் ... கேள்விகள்/சந்தேகங்கள்/அனுமானங்கள்/நிதர்சனங்களை ... அனுமதியுங்கள் ... பொது நிறுவனங்கள்/அமைப்புகளை நோக்கி எழுப்பப்படும் போது! அப்போது தான் தேடலும் இருக்கும், பிழைகளை திருத்த சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் மேல் எம்மால் எது சரி, எது பிழை என்று அனுமானிக்கக்கூடியதாக இருக்கும். ... அதை விடுத்து தயவு செய்து சர்வாதிகார நிலையினை எடுக்காதீர்கள்.

சில ஆலோசனைகள் ... நிதி தொடர்பாக ..

1. விளம்பரங்கள் என்பது நீண்ட கால திட்டமாக இருக்க வேண்டும்! உடனடியாக விளம்பரம் எடுப்பதிலும் சிரமம் இருக்கும், எதை எடுப்பது என்பதிலும் ஒரு சரியான வரைபு தேவை.

எனக்கும் இங்கு என் நண்பரின் ஓர் ரவல்ஸ் நிறுவனம் ஒன்றுள்ளது. கேட்டால் உடன் தருவார் ... என்ன சிறிலங்கன் எயார்லைன்ஸ் அட்வேட்டாக இருக்கும், அது சரி வராது!

2. உறுப்பினர்களிடம் சந்தா அறவிடுவது. குழுக்களை நியமிக்கலாம், இவர்கள் இன்னென்ன மாதத்திற்கான செலவுகளை ஏற்க வேண்டும் என தீர்மாணிக்காலாம், அது நீண்ட கால யாழ்கள ஓட்டத்திற்கும் நல்லது.

... முதலில் உமாமகேஸ்வரனில் தோன்றிய சார்புக்குழு, பின் மாத்தயா குழு, கருணா குழு ... என்று தொடர்ததே ... அழிவிற்கு முதல் காரணம் ... இது யாழில் வேண்டாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எழுதப்பட்டுள்ள கருத்துக்களை பார்க்கும்போது பலர் இந்தவசனத்தை கவனிக்கவில்லை போல்த்தெரிகின்றது. மோகன் ஒரு இடமும் ஓடிஒதுங்கமாட்டார், யாழ் இணையம் உள்ளவரை திரைமறைவிலாவது இருந்து செயற்பட்டுக்கொண்டுதான் இருப்பார். 'யாழ் இணையம்' மோகனின் குழந்தை. தனது குழந்தையைவிட்டு அவர் எங்குபோய்விடமுடியும்? உங்கள் கருத்துக்களில், தெளிவான சிந்தனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிழலி பற்றியோ வலைஞன் பற்றியோ இணையவன் பற்றியோ சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

இப்ப அவை என்ன சொல்ல வரினமெண்டால்.....மோகனும் அப்பப்ப வந்து அஞ்சாறு இடத்திலை தன்ரை வேலையை காட்டச்சொல்லி நிக்கினம்...அதுதான் உங்கை கொஞ்ச சிம்மசொப்பனங்களுக்கு வெட்டிக்கொத்தி நிமித்தி எடுக்கச்சொல்லினம்.

Link to comment
Share on other sites

மோகன், தயவுசெய்து புதிய நிர்வாகத்திடம் கையளிக்கும் முன்னர், திண்ணையை இல்லாது செய்து விடுங்கள்! இங்கு தான் நோய்கள் உருவெடுக்கின்றன ... கடந்த சில நாட்களாக யாழில் வந்த நோய்கள், திண்ணை மூலமே!

Link to comment
Share on other sites

மோகன், தயவுசெய்து புதிய நிர்வாகத்திடம் கையளிக்கும் முன்னர், திண்ணையை இல்லாது செய்து விடுங்கள்! இங்கு தான் நோய்கள் உருவெடுக்கின்றன ... கடந்த சில நாட்களாக யாழில் வந்த நோய்கள், திண்ணை மூலமே!

உந்த நோயை சில நேரங்களில் நீங்களும் அங்கை தொற்றுவிக்கிறினீங்கள் தானே ,,பிறகென்ன வெள்ளையாய் கொம்ப்ளைன்ட்

Link to comment
Share on other sites

ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

நான் அறிந்த வரையிலும் சுதந்திரமாக தமிழ் மக்களின் முதன்மைப் பிரச்சினை பற்றி விவாதித்து பொது அரசியல் அறிவை பங்குபற்றுதல் மூலம் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள களம் அமைத்துக் கொடுத்த ஒரு தமிழ் தளம் யாழ் மட்டுமே. இதை உருவாக்கி நீண்டகாலம் பொறுப்பெடுத்து நடாத்திய மோகன் அண்ணா அவர்களின் பங்களிப்பு உன்னதமானது.

அவரை நேரடியாக பார்த்ததில்லை. ஆனால் சில நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டபடி, அதைவிட யாழ் களத்தை நிர்வகித்த முறையில் நான் உணர்ந்து கொண்டதன்படி அவர் ஓர் உன்னத சாதனையாளன். மிகவும் உயர்ந்த பொறுப்புணர்வு உடையவர், நேர்மையானவர், கடின உழைப்பாளி, சிறந்த தகவல் தொழில் நுட்ப வல்லுநர், மிகச் சிறந்த நிர்வாகி என்பது அவரைப் பற்றி என் மனதில் இக்கணத்தில் தோன்றிய மதிப்பீடுகள். இப்படியான ஒருவர் கிடைப்பது மிக மிக அரிது. தமிழினத்தின் உயர் விழுமியங்களை பேணிவந்த யாழ்களம் தமிழினம் செய்த ஒரு பாக்கியம்தான்.

அவர் பொறுப்பிலிருந்து சற்று பின்வாங்குவது மிக மிகக் கவலையான விடயம். இந்த வெற்றிடத்தை இலகுவில் நிரப்பிவிட முடியாது என உணர்கிறேன்.

நிழலி நீண்டகாலம் மட்டுறுத்துனராக இருந்து பெற்ற அனுபவம் யாழ் களத்தை தொடர்ந்து கொண்டு செல்ல அவருக்கு நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன். சில தனிப்பட்ட நட்புகள், கொள்கைகள் அவரின் நிர்வாகத்தில் பிரச்சனைகளை கொடுக்காவிட்டால் அவரால் சிறப்பாக நடாத்த முடியும் என்ற நம்பிக்கை உண்டு.

அவ்வப்போது அளவாக, பொறுப்புடன் கருத்துக்கள் எழுதும் இணையவன் பற்றி அதிகம் அறியாவிட்டாலும், தைரியமாக கருத்துக்களைப் பகிரும் ரதி அவர்கள் இணையவன் மீது கூறிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது சொந்த அனுபவத்தின்படி, இணையவன் எனது சில கருத்துக்களை நீக்கும் பொது, சில வேளைகளில் தனி மடலில் மிகப் பொறுப்பான முறையில் அறிவித்திருந்தார். நிழலியும் சில வேளைகளில் அவ்வாறே அறிவிப்பது வழக்கம்.

எது எப்படியோ யாழ் களம் எந்தக் களையையும் இழக்காமல், மேன்மேலும் சிறப்புற வேண்டும்; இக்கட்டான சூழலில் எம்மினம் இருக்கும் போது அதன் மீட்சிக்கு தொடர்ந்து களம் அமைக்க வேண்டும் என்பதே எனது அவா.

Link to comment
Share on other sites

உந்த நோயை சில நேரங்களில் நீங்களும் அங்கை தொற்றுவிக்கிறினீங்கள் தானே ,,பிறகென்ன வெள்ளையாய் கொம்ப்ளைன்ட்

100%உண்மை! ... அதனால்தான் உதை நீக்க வேண்டிய கட்டாயத்தை கோருகிறேன்

Link to comment
Share on other sites

அடுத்தது இந்த யாழ் உறவோசை! ... வேண்டா பிரட்சனைகளை நாம் கிளப்பும் பகுதியாக உள்ளது!¬ ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையில்.... நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களையும், நிர்வாகத்தை விமர்சிப்பதையும் தடை செய்தால்.... பாதிப்பிரச்சினை தீர்ந்துவிடும்.

நிர்வாகதிடம் ஏதாவது, கேட்டு தெளிவு பெறவேண்டுமென்றால்.... அவரவர் தனிமடல்களில், கேட்டு தெளிவு பெறலாம்.

நாற்சந்தியில் நின்று நாறடிக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே என்ன பேசணும் ...............

என்ன எழுதணும் ......................என்று முதலிலேயே எழுதி தனி மடலில் அனுப்பிவிட்டால்..........

எமக்கும் வெட்டி ஒட்ட இலகுவாக இருக்கும். :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

<strong>நான் அறிந்த வரையிலும் சுதந்திரமாக தமிழ் மக்களின் முதன்மைப் பிரச்சினை பற்றி விவாதித்து பொது அரசியல் அறிவை பங்குபற்றுதல் மூலம் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள களம் அமைத்துக் கொடுத்த ஒரு தமிழ் தளம் யாழ் மட்டுமே. இதை உருவாக்கி நீண்டகாலம் பொறுப்பெடுத்து நடாத்திய மோகன் அண்ணா அவர்களின் பங்களிப்பு உன்னதமானது.

அவரை நேரடியாக பார்த்ததில்லை. ஆனால் சில நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டபடி, அதைவிட யாழ் களத்தை நிர்வகித்த முறையில் நான் உணர்ந்து கொண்டதன்படி அவர் ஓர் உன்னத சாதனையாளன். மிகவும் உயர்ந்த பொறுப்புணர்வு உடையவர், நேர்மையானவர், கடின உழைப்பாளி, சிறந்த தகவல் தொழில் நுட்ப வல்லுநர், மிகச் சிறந்த நிர்வாகி என்பது அவரைப் பற்றி என் மனதில் இக்கணத்தில் தோன்றிய மதிப்பீடுகள். இப்படியான ஒருவர் கிடைப்பது மிக மிக அரிது. தமிழினத்தின் உயர் விழுமியங்களை பேணிவந்த யாழ்களம் தமிழினம் செய்த ஒரு பாக்கியம்தான்.

அவர் பொறுப்பிலிருந்து சற்று பின்வாங்குவது மிக மிகக் கவலையான விடயம். இந்த வெற்றிடத்தை இலகுவில் நிரப்பிவிட முடியாது என உணர்கிறேன்.

நிழலி நீண்டகாலம் மட்டுறுத்துனராக இருந்து பெற்ற அனுபவம் யாழ் களத்தை தொடர்ந்து கொண்டு செல்ல அவருக்கு நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன். சில தனிப்பட்ட நட்புகள், கொள்கைகள் அவரின் நிர்வாகத்தில் பிரச்சனைகளை கொடுக்காவிட்டால் அவரால் சிறப்பாக நடாத்த முடியும் என்ற நம்பிக்கை உண்டு.

அவ்வப்போது அளவாக, பொறுப்புடன் கருத்துக்கள் எழுதும் இணையவன் பற்றி அதிகம் அறியாவிட்டாலும், தைரியமாக கருத்துக்களைப் பகிரும் ரதி அவர்கள் இணையவன் மீது கூறிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. <span style="color: #006400">எனது சொந்த அனுபவத்தின்படி, இணையவன் எனது சில கருத்துக்களை நீக்கும் பொது, சில வேளைகளில் தனி மடலில் மிகப் பொறுப்பான முறையில் அறிவித்திருந்தார். நிழலியும் சில வேளைகளில் அவ்வாறே அறிவிப்பது வழக்கம்.எது எப்படியோ யாழ் களம் எந்தக் களையையும் இழக்காமல், மேன்மேலும் சிறப்புற வேண்டும்; இக்கட்டான சூழலில் எம்மினம் இருக்கும் போது அதன் மீட்சிக்கு தொடர்ந்து களம் அமைக்க வேண்டும் என்பதே எனது அவா.  

உண்மையில் இணையவன் நீங்கள் சொல்வது போல இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் மீள் பரிசீலனைக்கு நன்றிகள் அதே நேரம் யாழ் இணையத்தை வியாபார நோக்கோடு இயக்கக முயற்சிகள் எடுப்பதோடு கருத்துக்களத்தில் சில பிரச்சனைகளை தவிர்ப்பாதற்கு சில ஆலோசனைகளை முன் வைக்கலாமென நினைக்கிறேன்.

1) ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட புனைபெயர்களில் வந்தால் அவரின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டதும் அவரிற்கு எச்சரிக்கை கொடுத்து தடை செய்தல்.(யாராக இருந்தாலும்)

ஆமோதிக்கிறேன்

2)யாழ் இணையத்திற்கென வருகின்ற வாசகர்கள் அங்கு இருக்கும் படைப்புக்களிற்காகவே அதிகம் வருகிறார்கள். கருத்துக்களை பகிர்கின்றார்கள். எனவே நிருவாகம் ஒரு கருத்தாளனின் கருத்தையும் ஒரு படைப்பாளியின் படைப்பினையும் ஒரே தராசில் நிறுத்து தீர்ப்பு வழங்குவதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இதை தனிப்பட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

3)ஒருவர் தடை செய்யப்படும் பொழுது அவர் மற்றையை பகுதிகள் அனைத்திலும் கருத்து எழுதும் உரிமத்தை தடை செய்து அதே நேரம் அவர் தன் பக்கத்து நியாயத்தினையும் எடுத்துரைக்க வசதியாக உறவோசை பகுதியில் அவரை அனுமதித்தல்.

ஆமோதிக்கிறேன்

4)ஒருவரின் கருத்துக்களிற்கு அல்லது தனிமனித தாக்குதல் சம்பவங்களிற்கு வேண்டுமானால் நிருவாகம். முறைப்பாட்டு முறையை (றிப்போட்)ஏற்று நடவடிக்கையை எடுக்கலாம் அனால் படைப்புகளிற்கு கருத்தாளர்கள் நிருவாகத்திடம் முறையிடாமல் தங்கள் விமர்சனங்களையோ எதிர்வினைகளையோ பகிரங்கமாக வைத்த பின்னர் அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கலாம்.

ஆமோதிக்கிறேன்

இவை என்னுடைய ஆலோசனைகள்தான் பரிசீலிப்பது நிருவாகத்தை பொறுத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் யாழுக்கு சில நாட்களாக வர முடியவில்லை.... சொல்லாமல் கொள்ளாமலே நிறுத்தி விட்டார்களே என நினைத்தேன்.

மோகன் அண்ணா.... இவ்வளவு காலமாக யாழை மிகச்சிறப்பாக நிர்வகித்ததற்கு மிக்க நன்றிகள்.... :)

யாழை முடக்காமல் பொறுப்பான, நம்பிக்கைக்குரிய, அனுபவசாலிகளான நிழலி, இணையவன் மற்றும் வலைஞனிடம் பொறுப்பளித்தில் மிக்க மகிழ்ச்சி....கோடி நன்றிகள்.

நிழலி, இணையவன் மற்றும் வலைஞன்..... யாழை இன்னும் சிறப்பாக நிர்வகிக்க வாழ்துக்கள். என்னால் முடிந்தளவு உதவிகளை தேவையான பட்சத்தில் செய்துதவுவேன். முடியாவிட்டால், அகுதா கூறியது போல, நிட்சயமாக உபத்திரவம் இல்லாமல் இருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான, நல்ல செய்தி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொதுவான கருத்தியல் மாற்றத்துக்கான தளமாக யாழ் தனது பங்களிப்பை நல்கி வருகின்ற வேளையிலே அதனது இடைநிறுத்த அறிவித்தல் ஒரு இடைவெளியைத் தோன்றுவிக்கப் போகின்றதே என்ற அங்கலாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன் அண்ணா, தொடர்ந்து களத்தைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல இருக்கும் நிழலி, இணையவன் மற்றும் வலைஞன் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

பல படைப்பாளிகளையும், எழுத்தாக்கத்துறை சார்ந்தும் எம்மவர்களை வளர்த்தெடுத்ததில் பெரும் பங்கு யாழுக்கு உண்டு. யாழ் இணையமானது தமிழரின் அரசியல், பண்பாடு, பொருண்மியம் என விரிந்து வீரியத்தோடு பயணிக்க வேண்டிய காலமாகும். தமிழினம் தொடர்ந்து ஏமாறும் இனமாகவும், ஏமாற்றப்படுமினமாகவும் ஒற்றுமையற்றோராயும் இருக்கின்ற இந்தச் சூழலில் முகமறியாது கருத்தியல் தளத்திலாவது குழுநிலை வாதப் போக்குகளைக் கடந்து கருத்தியல் ரீதியாக ஒன்றாகப் பயணிக்கும் வாய்பை யாழ் உருவாக்க வேண்டும். அரசியல் சூனியமான நிலையில், எமக்கான அரசியலை யாரோ முன்னெடுப்பார்கள் என்ற எண்ணத்தில் தமிழினம் இசைவாக்கம் அடைந்துவரும் வேளையில் யாழின் ஆரோக்கியமான பணி அவசியமானது. தொடரும் களத்திடையே புதிய சிந்தனைகளும் புரிந்துணர்வான சொற்பிரயோகங்களுமாய் யாழ் களம் விரியட்டும். தமிழினம் விடுதலைபெறட்டும்………….

யாழ் உறவுகளோடு இணைந்து

நொச்சியான்

Link to comment
Share on other sites

நான் யாழில் புது உறுப்பினராக இருந்தாலும் யாழை பலவருடங்களாக வாசிப்பவன். அதனை முடபோகிறார்கள் என்று அதிர்ந்தவர்களுள் நானும் ஒருவன். நிழலி உங்கள் முடிவு மிகவும் நன்று. உங்களுக்கு எங்கள் உதவி எப்போதும் இருக்கும். உங்கள் நிர்வாகத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கு. நிழலி, இளையவன், வலையன் முவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

திண்ணை, யாழுக்கு தேவையா???????????????

நல்ல கேள்வி தான் நெல்லையான்... ஆனால் திண்ணை இல்லாவிட்டால் இங்கே பல திரிகள் ஆரம்பித்து கருத்துக் களத்தைத் திண்ணையாக்கி விடுவார்களே? பிறகு கருத்துக் களத்தில் திண்ணை வேண்டுமா என்ற கேள்வி வரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணை, யாழுக்கு தேவையா???????????????

கிடங்குவெட்டி வளர்த்தநாய்மாதிரித்தான் இப்ப நாங்கள் திரியிறம்....திண்ணையுமில்லையெண்டால்???????என்ரை கடவுளே!!!!!!

வயித்தாலையடி,வாந்தியடி,சொறிசிரங்கு,அரைவிசர்,முழுவிசர் எல்லாம் எல்லா இடத்தையும் நாறடிச்சிடும்....திண்ணை வந்து ஒரு சுமைதாங்கி....அதிலை வந்துநிண்டு எல்லாரும் சத்தியெடுத்துட்டு...பிறகு உள்ளுக்கு வருவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிடங்குவெட்டி வளர்த்தநாய்மாதிரித்தான் இப்ப நாங்கள் திரியிறம்....திண்ணையுமில்லையெண்டால்???????என்ரை கடவுளே!!!!!!

வயித்தாலையடி,வாந்தியடி,சொறிசிரங்கு,அரைவிசர்,முழுவிசர் எல்லாம் எல்லா இடத்தையும் நாறடிச்சிடும்....திண்ணை வந்து ஒரு சுமைதாங்கி....அதிலை வந்துநிண்டு எல்லாரும் சத்தியெடுத்துட்டு...பிறகு உள்ளுக்கு வருவம்.

திண்ணையில் வந்ததும் கை கால் முகம் கழுவி உள்ளே வாருங்கள் என்று சொன்னால் நன்றாக இராதா அண்ணா?. . :icon_idea:

Link to comment
Share on other sites

திண்ணையில் நடக்கும் தனி நபர் வாக்குவாத பிரச்சனைகள், திரிகளுக்குள் புகக் கூடாது. திண்ணையிலோ தனி மடல்களிலோ தீர்க்கப்பட வேண்டும்.

அல்லது திண்ணையே வேண்டாம்.

கண்ணீர் சிந்தும் 'சீரியல்கள்' இங்கு வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலியின் கருத்தைப்பார்த்தால்

எலி புகுந்து விட்டது என்று வீட்டைக்கொழுத்தியது போலிருக்கு. :(

Link to comment
Share on other sites

தப்பிலியின் கருத்தைப்பார்த்தால்

எலி புகுந்து விட்டது என்று வீட்டைக்கொழுத்தியது போலிருக்கு. :(

களத்தில் பரவும் பிரச்சனைகள் பல திண்ணையிலே உருவாகின்றன. அதனை திண்ணையில் உள்ளவர்களே கழுவித் துடைக்க வேண்டும். வெளியில் கொண்டு வந்தால், மற்றவர்கள் தலையிடுவது தவிர்க்க முடியாதது.

திருத்தியத்தற்கான காரணம் - 'பல' எனும் சொல் சேர்க்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.