Jump to content

பாதாள பைரவியும் ஹாரிபாட்டரும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பாதாள பைரவியும் ஹாரிபாட்டரும்
 

folder.jpg
 
 
          இன்று எனது மாமா வீட்டில் தொலைக்காட்சிகளை சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போது,சன் DTH ன் உருப்படியான சேனலான தமிழ் சினிமா கிளப்பை காண நேர்ந்தது.அதில் ஏதோ கருப்பு வெள்ளைத்திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.ஒரு நிமிடக்காட்சியைப்பார்த்ததும் தான் தெரிந்தது,அது பாதாள பைரவி என்ற தமிழ் டப்பிங் தெலுங்கு படம் என்று.நான் போன வாரம் இந்த படத்தின் அரைமணிநேரக்காட்சிகளை ,இதே சேனலில் பார்த்ததால்,எனக்கு இந்த படம் முழுவதையும் பார்க்க வேண்டுமென தோன்றியது.படத்தையும் பார்த்தேன்.என்னை வியப்புக்குள்ளாக்கி,ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல்,அவ்வளவு அருமையாக இழுத்துச்சென்றது இத்திரைப்படம்.
 
சரி,கதையை பற்றி சிறிதளவு சொல்லிவிட்டு ,நான் சொல்லவந்த கருத்தை தெரிவித்தால்,கொஞ்சம் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
உஜ்ஜயினி எனும் நகரத்தில்,ஒரு வறுமையான விவசாயி மகன்,ராமன்.அவனுக்கு அந்நாட்டு மன்னனின் மகளான,இந்துவின் மீது காதல்.இந்துவிற்கும்,ஒரு நிகழ்வுக்குப்பின் அவன் மேல் காதல் பிறந்துவிடுகிறது.ஆனால்,ஏழை என்பதால்,இந்துவின் தந்தை மறுத்து விடுகிறார்.என்ன செய்வது என்று அறியாமல் குழம்பிக்கொண்டிருக்கும்,ராமனைத்தேடி ஒரு மந்திரவாதி,அவனுடைய அஸிஸ்டென்ட் டிங்கிரியுடன்,நேபாளத்தில் இருந்து வருகிறான்.பாதள பைரவி எனும் தெய்வத்திற்கு நரபலி அளித்தால்,அந்த மந்திரவாதிக்கு,ஒரு சிறிய சிலை கிடைக்கும்.அதை வைத்து வேண்டினால்,அவன் முன் அத்தெய்வம் தோன்றி,அவன் நினைத்ததை எல்லாம் செய்யும்.ஆனால்,அத்தெய்வம்,பாதாளத்தின் அடியில் இருக்கிறது.அதன் கோவிலுக்கு செல்லவே எண்ணற்ற வீரதீர செயல்கள் செய்யவேண்டி இருக்கும்.அங்கு அந்த மந்திரவாதியின் சக்தி எடுபடாது.அந்த கோவிலினுள் நுழையவும்,அந்த தெய்வத்திற்கு நரபலி கொடுக்கவுமே,ராமனைத்தேடி வருவான்.ராமனிடம்,தந்திர வார்த்தைகளையும்,இந்துவை மணக்க உதவி செய்வதாகவும் சொல்லி மந்திரவாதியின் எடுபிடி டிங்கிரி,உஜ்ஜயினியிலேயே விட்டுவிட்டு பாதாள பைரவி கோவிலை நோக்கி இருவரும் செல்கின்றனர். எதுவும் அறியாத ராமனும் வழியில் எண்ணற்ற தடங்கள்கள்,சாகசங்கள் எல்லாம் செய்து கடைசியில்,அக்கோவிலை அடைகிறான்.அக்கோவிலை அடைந்ததும்,மந்திரவாதி,ராமனை அருகில் இருக்கும் குளத்தில்,குளித்துவிட்டு வருமாறு சொல்கிறான்.அக்குளத்தில்,ராமன் குளிக்கும்போது,ஒரு முதலை அவனை கொல்ல முயல்கிறது.



6jGPiQWwL7.png


போராடி அந்த முதலையைக்கொண்டவுடன் தான் தெரிகிறது,அது ஒரு பெண் என்று.அந்த பெண்ணிற்கு கிடைத்த சாபத்தால்,அவள் முதலையாக,அங்கு இருந்திருக்கிறாள்.இவன் முதலையை கொண்றதும்,அவள் சாபவிமோசனம் நீங்கி,மீண்டு வந்திருக்கிறாள்.அவள்,ராமனிடம்,அந்த மந்திரவாதியைப்பற்றிய உண்மையை சொல்கிறாள்.உண்மையை அறிந்த ராமன்,நயவஞ்சகமாக அந்த மந்திரவாதியை பலிகொடுத்து,பாதள பைரவியின் சிலையைப்பெற்று நாடு திரும்புகிறான்.
நாடு திரும்பியவன்,அச்சிலையை வணங்கி,தெய்வத்தை வரவைத்து,பெரிய மாயமாளிகை உருவாக்கி,திடீர் பணக்காரன் ஆகிறான்.நடந்ததை எல்லாம்,தன் உயிர்த்தோழனான,அஞ்சியிடம் தெரிவிக்கிறான்.பின்,ராஜாவை தன் மாய மாளிகைக்கு வரவைத்து,அவரின் மகளை அவனுக்கே மணமுடிக்க ஒப்புக்கொள்ள வைக்கிறான்.ஒரு நல்ல நாளில்,திருமணம் நடக்க ஆரம்பிக்கிறது.இதையெல்லாம் அறிந்த மந்திரவாதியின் எடுபிடி டிங்கிரி,உடனே தன் குருநாதரைத்தேடிச்செல்கிறான்.டிங்கிரியிடமிருந்த தொலைநோக்கி மூலம் தேடினால்,தமக்கு வேண்டியவர்கள் எங்கிருப்பார்கள் எனக்காட்டும்.அதில்,குருநாதர் இறந்து கிடப்பதை அறிந்து,அவரைத்தேடிச்சென்று,தன்னிடம் இருந்த சஞ்சீவி வேர் மூலம்,மந்திரவாதியின் தலையை ஒட்டவைத்து,உயிர்ப்பித்து,நடந்ததை அனைத்தும் கூறுகிறான்.உடனே,மந்திரவாதி உஜ்ஜயினியை நோக்கிச்செல்கிறான்.செல்லும் வழியில்,ஒருவன் தூக்கில் தொங்க முயற்சிப்பதைப்பார்த்த மந்திரவாதி, அவனிடம் யாரென்று கேட்கும்போது தான் தெரிகிறது,அவன் இந்துவின் தாய்மாமன் என்று.அவனுக்கு இந்துவின் மீது ஒரு கண்.அவனுக்கு இந்து கிடைக்காததால் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான்.
அவனிடம் நயவஞ்சகமாக பேசி,அந்த மந்திர டெலஸ்கோப் உதவியுடன்,ராமனிடம் இருக்கும் அந்த பாதாளபைரவி சிலையை எடுத்து வந்து தந்தால்,இந்துவை அவனுக்கு மணமுடிப்பதாக கூறுகின்றான்.அவன் பேச்சை நம்பி,இவனும் சென்று அந்த மந்திர சிலையை கொண்டுவந்து தருகிறான்.அதை வாங்கிய மந்திரவாதி,பாதாள பைரவியை அழைத்து,இந்துவையும்,அந்த மந்திர மாளிகையும்,தன்னையும் தன் உதவியாளன் டிங்கிரயையும்,தன் இருப்பிடமான, இமய மலைக்கு கொண்டு செல்லுமாறு வேண்டுகிறான்.சரியாகத்தாலி கட்டும் நரத்தில்,இந்து மற்றும் மாய மாளிகை மறைகிறது.ராஜா உட்பட அனைவரும்,ராமனைப்பிடித்துக்கொள்கிறார்கள்.

அப்போது அங்கே வரும்,இந்துவின் தாய்மாமன்,நடந்த விஷயங்களைத்தெரிவிக்கிறான்.பின்,ராமன் தன் நண்பன் அஞ்சியுடன்,மந்திரவாதியைத்தேடிச்செல்கிறான்.காடு மலையெல்லாம் அலைந்த கலைப்பில்,இருவரும் ஒரு இடத்தில் உறங்கினர்.
இந்துவின்மீது ஏற்கனவே காமத்துடன் இருந்த மந்திரவாதி,அவளைத்தன் மனைவியாக்க முயல்கிறான்.அவள் மறுக்கவே,மீண்டும் பாதாள பைரவியை அழைத்து,ராமனைக்கட்டி இங்கே கொண்டு வருமாறு வேண்டுகிறான்.ராமனும் அடுத்த நொடியில்,மந்திரவாதியின் முன் கட்டுண்டு கிடக்கிறான்.


46252.jpg


அவனை,இநதுவின் முன்னே அடித்துத்துன்புறுத்தி,அவளைச்சம்மதிக்க சொல்கிறான்.அவளுக்கு ஒருநாள் டைம் கொடுத்து,நாளைநீ சம்மதிக்கவில்லை எனில் உன் ராமன் நரபலியாக்கப்படுவான் என எச்சரித்து செல்கிறான்.
அஞ்சி,எழுந்துப்பார்த்ததும் தன் நண்பன் ராமனை காணமால்,அந்த வனத்தில் தேடி அலைகிறான்.அப்போது 2 பூதங்கள்,அஞ்சியைப்பிடித்து அறிவுரைக்கேட்கிறார்கள்.அந்த பூதங்களிடம்,ஒரு ஜோடி மாய செருப்பும்,ஒரு மந்திர சால்வையும் இருக்கின்றது என்றும்,எதை யார் எடுத்துக்கொள்வது என்றும் புரியாமல் அஞ்சியை அழைத்ததாக கூறுகின்றன.அஞ்சி,அவர்களை ஏமாற்றி அந்த மந்திர சால்வையையும்,செருப்பையும் எடுத்துக்கொள்கிறான்.அந்த மந்திர சால்வையைப்போற்றி கொண்டால் மாயமாய் மறையச்செய்யும்.அந்த செருப்பு,நாம் வேண்டிய இடத்திற்கு கூட்டிச்செல்லும்.அஞ்சி அங்கிருந்து,ராமனுடைய இடத்திற்கு சென்று அவனை விடுவிக்கிறான்.பின் மந்திரவாதியின் சக்திகளெல்லாம் அடங்கியிருக்கும் அவனுடைய தாடியை நயவஞ்சகமாக பேசி எடுக்க வைத்து,பின் ராமனும் மந்திரவாதியும் கட்டிப்பிடித்து சண்டையிட்டு,மந்திரவாதியைக்கொண்டு அந்த மந்திரசிலையையும்,இந்துவையும் எப்படி மீட்கிறான் என்பதே கிளைமாக்ஸ்.


ராமனாக,மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் NTR.இந்துவாக மாலதி.மந்திவாதியாக நம்ம S.V.ரங்காராவ்.டைரக்சன் கத்ரி வெங்கட ரெட்டி.

 
இந்த படம் எடுத்த காலத்தில்,ஆங்கிலப்படங்களிலும்,இப்படிப்பட்ட தந்திரக்காட்சிகள் வந்திருக்குமா?என்பது ஆச்சரியமே.அவ்வளவு அருமையாக எடுக்கப்படிருக்கும்.இந்தப்படம் இப்போது,DIGITAL முறையில் வெளிவந்தாலும் கண்டிப்பாக நல்லபடியாக ஓடும் என்பதில்,எனக்கு துளி மாற்றுக்கருத்தும் இல்லை.அந்த காலத்திலேயே அற்புதமான,பிரம்மாண்டமான செட்கள்,அழகான ஒளிப்பதிவு,பிரம்மாண்ட மற்றும் சிறப்பான இசை.இதையெல்லாம் விட,நடனக்காட்சிகள் அவ்வளவு அற்புதமாக இருக்கும்.ராமன்,தன் மாய மாளிகைக்கு,ராஜாவை அழைத்துச்செல்லும் காட்சியில்,ஒவ்வொரு அரங்கிலும் ஒவ்வொரு நடனக்கலைஞர்கள் இருப்பார்கள்.அவர்கள் ஆடும் நடனம் அவ்வளவு,வளைவு ,சுளிவுடன் மனதை ஈர்ப்பது போலிருக்கும்.அந்த நடனமங்கைகளையும்,நடன மாஸ்டரையும் எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்.இத்தனைக்கும் இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1951 என்று கூறினால் நம்ப முடியுமா உங்களால்?

அந்த காலத்திலே,ஒரு சோகப்பாடலை,குறிஞ்சி,முல்லை,மருதம்,பாலை,நெய்தல் என ஐவகை நிலங்களிலும் படமாக்கி உள்ளார்கள்.நான் பார்த்ததிலேயே மிகப்பிரம்மாண்டமான இந்தியப்படம் என்றால் இதைத்தான் கூறுவேன்.அதே போல் உலக அளவில் நான் பார்த்த FANTASY,ADVENTURE  திரைப்படங்களில்,இதுவே என்னை அதிகம் கட்டிப்போட்டது.இந்த படம் தான் உலகத்திரைப்பட விழாவில் கலந்த முதல் இந்தியத்திரைப்படமாம்.கண்ணடிப்பாக இந்த படத்திற்கு அந்த தகுதி இருக்கிறது.
 
சரி தலைப்பிற்கு வருவோம்.இப்போது நம் ஊரில் ஒருவிஷயம் சில பதிவர்களால் தாருமாராக விமர்சிக்கப்பட்டு வருகிறது.அதாவது தென்னிந்தியப்படங்கள்,குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்குப்படங்கள்,எல்லாம் அப்படியே ஈயடிச்சான் காப்பியாக ஆங்கில,ஜெர்மானிய,ஈரானியத்திரைப்படங்ஙகளிலிருந்து திருடி எடுக்கப்படுகிறது.இப்போது அந்த காபியைக்கண்டுபிடிக்கும் முந்திரி கொட்டைகளிடம் நான் கேட்பது இதுதான்.நீங்கள் ஹாரிபாட்டரின் 8 பாகங்களையும் பார்த்திருப்பீர்கள்.அந்த 8 பாகங்களிலும் ஒரு காட்சி,கண்டிப்பாக வரும்.அதாவது ஒரு மாயக்கம்பளியை,ஹாரிபாட்டர் அணிந்தால்,அவன் உடலை யாராலும் பார்க்கமுடியாது.இந்த மாயக்கம்பளியை வைத்துதான் இந்த ஹாரிபாட்டர் சீரீஸ்களையே முடிப்பார்கள்.


Harry_Potter_and_the_Goblet_of_Fire_Post

இந்த ஹாரிபாட்டர் கதை எழுதப்பட்டு வெறும் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தான் ஆகிறது.ஆனால் இந்த பாதாள பைரவியில் வரும் மாயப்போர்வை கான்செப்ட் கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் பழமையானது.அப்படியானால்,ஹாரிபாட்டர் படம் இந்த பாதாள பைரவியின் காப்பி தானே?யாரிடம் உரிமை பெற்று ஹாரிபாட்டர் கதைகளை படமாக எடுத்தார்கள்?இப்படத்தின் தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இவர்கள் அனுமதி வாங்கியதுபோல் தெரியவில்லையே?காப்பி,காப்பி என ஹாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு மெயில்போடும் நீங்கள்,ஏன் இதற்கு மெயில் போடவில்லை,எதிர்ப்பை காட்டவில்லை? இதையெல்லாம் கேட்டால்,ஹாரிபாட்டர் படம் எடுத்தவன் நம்மூர் படத்த பாத்துட்டாலும்னு சொல்லுவாங்க!ஏன் அவன் பார்த்திருக்கக்கூடாதா?அவதார் எடுத்த ஜேம்ஸ் கேமரூன் அவதார் இனமக்களின் புளூ கலரை,நம்ம கண்ணனின் கலரின் மேல் இன்ஸ்பிரேசன் காரணமாக உருவாக்கினாராம்.நம்மைப்பார்த்து அவர்கள் எடுத்தால் இன்ஸ்பிரேசன்,நாம் எடுத்தால் காபி!!கேடுகெட்ட பிழைப்பு.
 


-X-Men-The-Last-Stand-Screencap-x-men-59

(இந்த மியுட்டண்ட்டிற்கு தான் அந்த சக்தி இருக்கும்-X-MEN)

அதற்கடுத்து இந்த படத்தில் ஒரு காட்சி வரும்.மந்திரவாதியின் பிடியில் சிக்குண்ட ஹீரோயின்,தன்னிடம் வந்து மனதை மாற்ற முயற்சிக்கும் அரக்கியர்களை வெளியேற்றி கதவை மூடிவிடுவாள் இந்து.அப்போது ,மந்திரவாதி,கதவை திறக்காமல்,தன் சக்தி மூலம் நேறே அந்த மூடிய கதவின் வழியே உள்ளே செல்வான்.இது ஒரு சிறு காட்சி தான்.ஆனால் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் X-MEN-DAYS OF FUTURE மற்றும் X-MEN-THE LAST STAND ஆகிய படங்களில் ஒரு மியூட்டன் இளம்பெண்ணிற்கு இதே சக்தி இருப்பது போல் காட்டியிருப்பார்கள்.
 
கண்டிப்பாக இந்த பாதாள பைரவி படத்தை காணுங்கள்.மிகத்தரம் வாய்ந்த,சிறப்பான திரைப்படம்.எப்படி ஆங்கிலத்தில் 12 ANGRY MAN,PSYCHO கருப்பு-வெள்ளைத்திரைப்படங்கள் சிறப்பானதோ,அதே போல நமக்கு இந்த திரைப்படம்.

 

 

 

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.