Jump to content

யாழ் இணையம் - 11ஆவது அகவை


Recommended Posts

அனைத்து யாழ் இணைய உறவுகளுக்கும்,

யாழ் இணையம் தனது 10ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று 11ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் - பல மேடு பள்ளங்களைக் கடந்து - தடைகளைத் தாண்டி - இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாய் - தமிழர்களின் விடுதலை உணர்வையும், தேசிய எழுச்சியையும் வெளிப்படுத்தும் களமாய் - உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாய் - யாழ் இணையம் உள்ளது.

தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது - பல்வேறு வளர்ச்சிப் படிகளை தாண்டி வந்துள்ளது. தொடங்கிய சில காலங்களிலேயே மறைந்து போகும் இணையத்தளங்களுக்கு மத்தியில் - 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இணையத்தளம் தொடர்ந்து இயங்குவது என்பது சாதாரண விடயமல்ல. ஆழ்ந்த அர்ப்பணிப்பு, விடா முயற்சி, பொறுமை, நோக்கம் தவறாமை - யாழ் இணைய உறவுகளின் அன்பும் ஆதரவும் - தளர்ந்து போகும் நேரங்களில் உற்சாகப்படுத்தும் நல்ல உள்ளங்கள் - ஆலோசனைகளை வழங்கி மெருகூட்டும் உறவுகள் - இத்தனையும் தான் இதனை சாத்தியமாக்கியது.

இன்று, இந்த வளர்ச்சியை - இந்த மகிழ்ச்சியை - கொண்டாடும் மனநிலையில் நாம் யாருமே இல்லை என்பதே உண்மை. எமது தமிழீழ நாடு - எமது மக்கள் - எமது போராளிகள் - எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான சூழல் எம்மை துயருக்குள் தள்ளியுள்ளது. நாள்தோறும் சிங்கள இனவெறி அரசால் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எமது போராளிகள் மிகுந்த நெருக்கடிக்குள்ளும் மண் மீட்கப் போராடி மாவீரர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். இழப்புச் செய்திகளையும், மக்களின் அவலங்களையும் தாங்கவேண்டிய ஒரு சூழ்நிலைக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனாலும், நாம் சோர்ந்துவிடவில்லை. சோரப்போவதுமில்லை. எமது எண்ணம், நோக்கு இரண்டும் மாறப்போவதுமில்லை.

எந்தச் சூழலாயிருந்தாலும் அந்தச் சூழலுக்கு ஏற்ப - தமிழ் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப - யாழ் இணையம் தன்னைத் தகவமைத்து உருவமைத்து வெளிப்படும். மண் மீட்புப் போருக்காய், இனப்படுகொலைக்கு எதிராய் எழுச்சிகொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களோடு யாழ் இணையமும் தன்னை ஒன்றிணைத்துள்ளது. மக்களின் இன்றைய உணர்வுகளை, எண்ணங்களை, எழுச்சியை காவும் ஒரு ஊடகமாய் தன்னை மையப்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகள், எழுச்சிப் போராட்டங்கள் போன்றவற்றுக்கு தன்னாலான ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்கி வருகிறது. தாயக விடுதலைக்கான இணையம் சார்ந்த கூட்டுமுயற்சிகளை ஊக்குவித்து வருகிறது. இதற்கு உறுதுணையாக யாழ் இணைய கருத்துக்கள உறவுகள் உள்ளார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு + எழுச்சிப் பேரணிகளுக்கான பதாகைகளை உருவாக்கினோம். கொட்டொலிகளை எழுதினோம். இணைய ஊடக பரப்புரைக்கான ஒத்துழைப்புகளை வழங்கினோம். மக்களின் அவலங்களை - தமிழரின் விடுதலை உணர்வை வெளிப்படுத்துவதற்கான களத்தை அமைத்துக்கொடுத்தோம். இனப்படுகொலை பற்றி தமிழக மக்களுக்கு தெரிவிக்க தமிழ் வலைப்பதிவைத் தொடங்கினோம். ஆங்கில வலைப்பதிவைத் தொடங்கினோம். "சிறிலங்காவைப் புறக்கணி" என்கிற முயற்சிக்கான ஆதரவை வழங்கினோம் - அதற்கான பதாகைகள் தயாரித்தோம் - அதற்கான இணையப்பக்கம் உருவாக்கினோம். இன்னும் இன்னும் எம்மாலானதைச் செய்துகொண்டிருக்கிறோம். நாம் என்றால் யார்? யாழ் இணைய உறவுகள் நீங்கள்.

நாம் என்ன செய்தோம் என்பதை பட்டியலிடுவதல்ல நோக்கம். கூட்டுமுயற்சியாய் எம்மால் நிறைய செய்ய முடியும் என்பதை உணர்த்தவே இவற்றை பட்டியலிட்டோம். கூட்டுமுயற்சிகளை நாம் ஊக்குவிக்கிறோம். கூட்டுமுயற்சிகளை நாம் வரவேற்கிறோம். நாம் இன்னும் நிறைய செய்யவேண்டும் - என்ன செய்யவேண்டும், என்பதை எண்ணவேண்டியதே இன்றைய தேவையாகவுள்ளது. பயனுள்ள - செயற்திறனுள்ள - புதிய - வித்தியாசமான - தாயக விடுதலை நோக்கிய கூட்டுமுயற்சிகளுக்கு தன்னாலான ஒத்துழைப்பை யாழ் இணையம் வழங்கும்.

இந்த நேரத்தில், யாழ் இணையத்தை நடாத்துவதில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சிலவற்றையும் எடுத்துச்சொல்ல விரும்புகிறோம்:

1. யாழ் இணையத்தை பராமரிப்பதற்கு நாம் செலவிடும் நேரம். வேலை நேரம், குடும்பத்துக்கான நேரம், தனிப்பட்ட வேறு வேலைகள் இத்தனைக்கு மத்தியில் தான் நாம் யாழ் இணையத்தை இயக்குகிறோம். பலநேரங்களில் வேலையில் இருந்துகொண்டு, யாழ் இணையத்தள வேலைகளைச் செய்கிறோம் - குறிப்பாக கருத்துக்களத்தை மட்டுறுத்தும் வேலை. எனவே கருத்துக்கள உறவுகள் பொறுப்புணர்ந்து கருத்துக்களை எழுதுவீர்களானால் எமக்கு மட்டுறுத்தும் நேரம் மிச்சப்படும்.

2. யாழ் இணையத்தை நடாத்துவதற்கான பொருளாதாரச் செலவு. இணைய வழங்கிக்கான மாதாந்தச் செலவு, மென்பொருட்களுக்கான செலவு, இற்றைப்படுத்தலுக்கான செலவு என்று பல்வேறு செலவுகள். விளம்பரங்களூடாக இவற்றை ஈடுகட்டவே நாம் விரும்புகிறோம். எனவே, யாழ் இணைய உறவுகள், உங்களுக்கு தெரிந்த நிறுவனங்களினூடாக விளம்பரங்களைப் பெற்றுதந்தால் பயனுள்ளதாக அமையும்.

3. கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களால் வெளியிலிருந்து வரும் சில சிக்கல்கள். தொலைபேசி, மின்னஞ்சல்கள் ஊடான எச்சரிக்கைகள், வசவுகள், தனிப்பட்ட தாக்குதல்கள். இவற்றை நாம் கணக்கிலெடுப்பதில்லை. எனினும், கருத்துக்களத்தில் வைக்கப்படும் கருத்துக்கள் பொறுப்புணர்ந்து, பண்பான முறையில், நேர்மையாக வைக்கப்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

நிறைவாக, எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கு எமது அன்பையும் நன்றியையும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் யாழ் இணையத்தை மெருகேற்ற எமக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் அன்புள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எமது நன்றியைச் சொல்ல விரும்புகிறோம். மற்றும் கருத்துக்களத்தில் மட்டுறுத்தல் பணியில் இணைந்து, தமது நேரத்தை அதற்காய் செலவிடும் மட்டுறுத்துனர்களுக்கும் எமது நன்றி.

எமது மண்ணோடும் - எமது மக்களோடும் - எமது போராளிகளோடும் - நாம் என்றும் இணைந்திருப்போம்.

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்.

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.