Jump to content

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கோ


Recommended Posts

யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி கேக்கிறன் எண்டு குறை நினைக்காதீங்கோ.. இலை,குழைக்கு கோடை கால விடுமுறை குடுத்துட்டியள் அப்படியோ ?ஏன் கேக்கிறன் எண்டால் சைவக் கட்லட் செய்முறை கேக்கிறயள் அது தான்.. :(:(

Link to comment
Share on other sites

யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :( :(

எனக்கு கட்லெட் செய்வது தெரியாது ஆனால் கட்லெட் என்றபெயரில் கல்லுலட் செய்பவர்களை தெரியும் அவர்கள் விலசம் வேனுமா?

Link to comment
Share on other sites

யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :( :(

மரக்கறி கட்லட் செய்வத்தற்கு நீங்கள் உங்களுக்கு விருப்பமான மரக்கறிவகைகளை தெரிவு செய்யலாம். உதாரணத்திற்கு, பட்டாணி அவத்தது, இனிப்புச் சோளம் ரின், சிவப்பு அவரை ரின் (red kidney beans)

இவற்றை சேர்த்தால் சோயா இறைச்சி தேவை இல்லை.

தேவையான பொருட்கள்

சோயா இறைச்சி- அவித்தது 1கப்

(சோயா இறைச்சி சிலருக்கு அலர்ஜி ஆக இருக்கும், வீட்டில் யாருக்கும் அலர்ஜி இருக்கா என்று நன்கு

அறிந்த பின் இவற்றை சேர்ப்பது நல்லது)

உருளைக் கிழங்கு அவித்தது-5

கரட் துருவியது-3

லீக்ஸ் / வெங்காயத் தாள்- 1 மிகச் சிறிதாக வெட்டியது

வெங்காயம்-1 /2 சிறிதாக வெட்டியது

பச்சை மிளகாய்-4 சிறிதாக வெட்டியது

கருவேப்பிலை-சிறிதாக வெட்டியது

கொத்தமல்லி இலை-சிறிதாக வெட்டியது

மிளகு தூள்

மஞ்சள் தூள்

முட்டை -2

பாண் துகள்கள் (bread crumbs)

எண்ணெய்

செய்முறை

அவித்த உருளைக் கிழங்கை உருத்தி அதனுடன் துருவலாகிய கரட், சிறிதாக வெட்டிய லீக்ஸ்/வெங்காயத் தாள், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றுடன் தேவைக்கு ஏற்ப உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் (வேணும் என்றால் மிளகாய் தூள்) அதனுடன் முட்டை மஞ்சள் கருவையும் சேர்த்து பிசைந்தது எடுக்கவும். (முட்டை வெள்ளைக் கருவைத் தனியாக எடுத்து நுரை வரும் வரை அடித்து வைக்கவும்)

அளவான உருண்டைகலாகவோ அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப அளவில் உருட்டி எடுத்து முட்டை வெள்ளைக் கருவில் இரு பக்கங்களும் தோய்த்து அதன் பின் பாண் தூளை மேலே தூவி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

vegetableCutlet.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :lol: :lol:

-------

தேவையான பொருட்கள்

முட்டை -2

செய்முறை

அவித்த உருளைக் கிழங்கை உருத்தி அதனுடன் துருவலாகிய கரட், சிறிதாக வெட்டிய லீக்ஸ்/வெங்காயத் தாள், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றுடன் தேவைக்கு ஏற்ப உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் (வேணும் என்றால் மிளகாய் தூள்) அதனுடன் முட்டை மஞ்சள் கருவையும் சேர்த்து பிசைந்தது எடுக்கவும். (முட்டை வெள்ளைக் கருவைத் தனியாக எடுத்து நுரை வரும் வரை அடித்து வைக்கவும்)

அளவான உருண்டைகலாகவோ அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப அளவில் உருட்டி எடுத்து முட்டை வெள்ளைக் கருவில் இரு பக்கங்களும் தோய்த்து அதன் பின் பாண் தூளை மேலே தூவி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

eier.jpg

இந்த கட்லற்றுக்கு முட்டை சேர்ப்பதால் கோயில் திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி போன்ற விரதம் பிடிக்கும் நாட்களில் சாப்பிட முடியாது.

முட்டையும் போடாமல்..... கட்லற் செய்ய ஏலாதா?

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ernaehrung002.gifloves-chocolate-51.gif
Link to comment
Share on other sites

அவித்த உருளைக் கிழங்கை உருத்தி அதனுடன் துருவலாகிய கரட், சிறிதாக வெட்டிய லீக்ஸ்/வெங்காயத் தாள், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றுடன் தேவைக்கு ஏற்ப உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் (வேணும் என்றால் மிளகாய் தூள்) அதனுடன் முட்டை மஞ்சள் கருவையும் சேர்த்து பிசைந்தது எடுக்கவும். (முட்டை வெள்ளைக் கருவைத் தனியாக எடுத்து நுரை வரும் வரை அடித்து வைக்கவும்)

அளவான உருண்டைகலாகவோ அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப அளவில் உருட்டி எடுத்து முட்டை வெள்ளைக் கருவில் இரு பக்கங்களும் தோய்த்து அதன் பின் பாண் தூளை மேலே தூவி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

vegetableCutlet.jpg

நன்றி குட்டி இணைப்பிற்க்கு... சிறி அண்ணை சொன்னது போல் முட்டை இல்லாமல் பண்ண முடியதோ? முட்டை பார்த்தாலே சாப்பிடுவதை அப்படியே கிழே போட்டு விடுவன்... :lol:

நன்றி இணையவன் அண்ணா இணைப்பிற்க்கு...

Link to comment
Share on other sites

eier.jpg

இந்த கட்லற்றுக்கு முட்டை சேர்ப்பதால் கோயில் திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி போன்ற விரதம் பிடிக்கும் நாட்களில் சாப்பிட முடியாது.

முட்டையும் போடாமல்..... கட்லற் செய்ய ஏலாதா?

.

நன்றி குட்டி இணைப்பிற்க்கு... சிறி அண்ணை சொன்னது போல் முட்டை இல்லாமல் பண்ண முடியதோ? முட்டை பார்த்தாலே சாப்பிடுவதை அப்படியே கிழே போட்டு விடுவன்... :lol:

...

அது சரி... :lol: விரதம் பிடிக்கிற நாட்களிலையே கட்டாயம் கட்லட் சாப்பிட வேணும்? :lol: நல்லாத் தான் விரதம் போகுது போல இருக்கு... :lol: :lol: (சும்மா பகிடிக்கு)

கட்லட்க்கு முட்டை சேர்ப்பதன் காரணம், இரண்டு பதார்த்தை சேர்ப்பதற்கு... முட்டை இல்லாமல் என்றால்....

மஞ்சள் கரு இல்லாமல், செய்து பார்க்கலாம்... வெள்ளைக்கருவுக்குப் பதிலாக இரண்டு பக்கமும் பூசுவதற்கு சோளம் மா/ அல்லது கோதுமை மாவை சிறிதளவு நீரில் கரைத்து அதில் தோய்த்து அதன் பிறகு பாண் துகள்களை தூவி பொரித்துப் பாருங்கள், கொஞ்சம் மெதுமை குறைந்தே வரும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவூற வாயூற வில் 3 ம் பக்கத்தில் 9 ம் வரியில் " சைவ ரோல் செய்வது எப்படி " என்று போட்டிருக்கு. அதில் நல்ல செய் முறைகளும் முட்டைக்கு பதில் மரக்கறி சோஸ் செய்யும் முறையும் போட்டிருக்கு! பார்த்துச் செய்யவும்! :lol:

ரதியும் ஒரு நல்ல செய்முறை அதில் போட்டிருக்கிறா, ஆனால் பொருட்களின் அளவுகள் இல்லை, எல்லாம் தனது கை அளவுகலாம், முடிந்தால் அதை இரவல் வாங்கி உபயோகித்து விட்டு கொடுக்கவும்! :lol:

குட்டியின் செய்முறையும் நல்லம், கட்லட், ரோல், போண்டாவுக்கு காரட், பூசணி போடுவது எனக்கு ருசியில்லை! காரத்தை கெடுத்து விடும்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் முட்டை சைவமா அசைவமா

பண்ணை அறிவியல் துறையின் டாக்டர்.அஜீத் ரானடே அவர்கள் பண்ணைக் கோழி முட்டைகள் நிச்சயம் சைவம் என்றும் நாட்டுக் கோழி முட்டைகள் அசைவமாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்.மேலும் சொல்கிறார், "ஒரு பெட்டைக் கோழி முட்டையிட சேவலின் துணை தேவையில்லை. குறிப்பிட்ட பருவத்திற்குப் பின் சேவல் துணையின்றி முட்டை போட முடியும். இவ்வகையான முட்டைகள் சைவம். இவை உயிரற்ற முட்டைகள் (Non-fertile eggs.) என அறியப்படுகின்றன.இவை பண்ணைக் கோழிகளில் (English Hens) மிகப்பொதுவானவை.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சேர்மன் M.B.தேசாய் அவர்களுக்ம் இதை ஆமோதிக்கிறார். மேலும் வர்த்தகரீதியில் கோழிப்பண்ணைகள் இவற்றை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறார்.அண்ணல் காந்தி அடிகளும் முட்டையை சைவம் என ஏற்றுக் கொண்டுள்ளார். " சுத்தமான பால் சைவமாக இருக்கும் போது நிச்சயம் முட்டையும் சைவம்தான் என்றார்.

என்ன வேறுபாடு?

நாட்டுக் கோழி பிறந்து 22-28 நாளிலிருந்து முட்டையிடும். இவை சேவலுடன் இணைந்த பிறகே முட்டையிடுகின்றன. இத்தகைய முட்டையின் வளர்ச்சியானது சேவலுன் இணைந்த மூன்றாவது நாள் முதல் தொடங்குகிறது. நாட்டுக் கோழி முட்டையை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருபத்து ஒரு நாட்களுக்கு வைத்தால் கோழிக்குஞ்சு உருவாகி விடும் இத்தகைய கருவுள்ள முட்டைகள் அசைவம். ஆனால் பண்ணைக் கோழிகள் பிறந்த 18 நாளிலிருந்தே முட்டையிடத் தொடங்கி விடுகின்றன. இதனால் இவை உயிரற்ற முட்டைகளாதலால் சைவம் என்கிறார். டாக்டர்.ராணடே.

முட்டையின் சிறப்புகள்

ஒரு 100 கிராம் எடையுள்ள முட்டையில் புரோட்டீன் 12.04 கிராம், கொழுப்பு 11.15 கிராம் மற்றும் 158 கலோரி தாதுச்சத்து மற்றும் கார்போஹைடிரேட் 1.2 கிராம். மேலும் 74.57 அளவுக்கு உயர் வளப்புத்தன்மையானது.

மேலும் டாக்டர்.ராணடே "இதனால்தான் மருத்துவர்கள் முட்டையை சிறந்த ஆகாரமாக பரிந்துரைகின்றனர்." என்கிறார்.

மருத்துவக் குறிப்பு

டாக்டர்.ராணடே, தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலின் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்ற கூற்றை ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். உடலுக்குத் தேவையான தாதுச்சத்தையும் விட்டமின்-சி தவிர்த்த அனனத்து விட்டமின்களையும் முட்டை வழங்குகிறது" என்கிறார்.

சைவமுட்டையை எப்படி அறிவது?

ஒரு முட்டையை மின்சார பல்பின் அருகில் வைத்துப்பார்த்தால் முட்டையின் உள்ளே வெள்ளைக் கோடுகள் படலமாக தெரிந்தால் அது அசைவம். தெரியாவிட்டால் சைவம். நன்றி: மிட்டே

நன்றி: http://www.yarl.com/forum/index.php?showtopic=6971&pid=132430&mode=threaded&show=&st=&#entry132430

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.