Jump to content

சர்வதேச இருபது-20, ஓய்வுக்கான காலம் நெருக்குகின்றது" மஹேலவும் ஓய்வு


Recommended Posts

 'சர்வதேச இருபது-20, ஓய்வுக்கான காலம் நெருக்குகின்றது" மஹேலவும் ஓய்வு


இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன சர்வதேச இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Mahela--T20I-retirement-_zps8987baed.jpgஇலங்கை அணியின் சாதனை நாயகன் குமார் சங்கக்கார ஓய்வை அறிவித்துள்ள நிலையில் மஹேல ஜயவர்தனவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

பங்களாதேஷில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இருபது-20 உலகக் கிண்ணத் தொடருன் ஓய்வு பெறுவதாக அவரும் குறிப்பிட்டுள்ளார்.

ஐசிசி. யின் உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்திலேயே மஹேல ஜயவர்தனவின் ஓய்வு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு மஹேல மற்றும் சங்கக்கார ஆகியோர் இருபது-20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் ஜேர்சியுடன் ஜோடியாக புகைப்படமொன்றையும் பதிவேற்றம் செய்துள்ளது.

அப்புகைப்பட்டத்தில் 'இது இறுதி இருபது-20 உலக கிண்ணம், எண்ணுவதற்கு ஆரம்பிப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளதோடு இருவருடைய கையெழுத்துக்களும் காணப்படுகின்றன.

36 வயதான மஹேல ஜயவர்த்தன 49 இருபது-20  கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1,335 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் ஒரு சதமும் 8 அரைச்சதமும் அடங்கும்.

இலங்கை அணியின் முக்கி இரு புள்ளிகளாக காணப்பட்ட குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இருபது-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது இலங்கை இரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

http://www.virakesari.lk/?q=node/362204

Link to comment
Share on other sites

ஜெயவர்தனாவும் விடைபெறுகிறார்
மார்ச் 17, 2014.

 

மிர்புர்: சங்ககராவை தொடர்ந்து மகிளா ஜெயர்வதனாவும், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து விடை பெறுகிறார்.

இலங்கை அணியின் சீனியர் வீரர் மகிளா ஜெயவர்தனா, 36. கடந்த 1997ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், இதுவரை 143 டெஸ்ட் (11,319 ரன்கள்), 412 ஒருநாள் (11,512), 49 சர்வதேச ‘டுவென்டி–20’ (1335) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், வங்கதேசத்தில் நடக்கும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். சமீபத்தில் இலங்கையின் சங்ககரா, 36, சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கடந்த 2006ல் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் அறிமுகமான மகிளா ஜெயவர்தனா, முன்னதாக நடந்த நான்கு ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரிலும் பங்கேற்றார். எனவே இது இவரது கடைசி உலக கோப்பை (டுவென்டி–20) தொடர். கடந்த 2012ல் நடந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட இவர், இலங்கை அணியை பைனலுக்கு அழைத்து சென்றார்.

இதுகுறித்து ‘டுவிட்டரில்’ ஐ.சி.சி., சார்பில்

வெளியிட்ட செய்தியில், ‘இலங்கையின் மகிளா ஜெயவர்தனா, சகவீரர் சங்ககராவை போல, உலக கோப்பை (டுவென்டி–20) தொடருக்கு பின், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்,’’ என தெரிவிக்கப்பட்டது.

இலங்கை வீரர் திரிமான்னே கூறுகையில், ‘‘ஓய்வை அறிவித்துள்ள சங்ககரா, மகிளா ஜெயவர்தனா சிறந்த கிரிக்கெட் வீரர்கள். இவர்களது இடத்தை பூர்த்தி செய்வது கடினம்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/03/1395070368/MahelaJayawardeneretirementTwenty20.html

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஓய்வு கடிதத்தை கையளித்தார் ஜயவர்தன

Submitted by ceditor on Thu, 04/10/2014 - 10:43
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் அணித் தலைவருமான மஹேல ஜயவர்தன சர்வதேச இருபது-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறி தனது உத்தியோகபூர்வ ஓய்வு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரிக்கு இன்று காலை வழங்கியுள்ளார்.



கிரிக்கெட் சபையின்  நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லே டி சில்வா மஹேல ஜயவர்தனவிடம் இருந்து கடிதத்தை பெற்றுகொண்டார்.


மஹேல, சங்­கா அதி­ருப்தி

இலங்கை கிரிக்கெட் சபை­யினால் தங்கள் மீது விதிக்­கப்­பட்­டி­ருந்த ஊடகத் தடை குறித்து இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்­க­ளான மஹேல ஜெய­வர்­த­னவும் குமார் சங்­கக்­கா­ரவும் அதி­ருப்தி தெரி­வித்­திருந்தனர்.

5 ஆவது இருபது–20 உல­கக்­கிண்­ணத்­துடன் இலங்கை அணி­யினர் நேற்று முன்­தினம் தாய் நாடு திரும்­பிய போது கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே இரு­வரும் தங்கள் மீதான ஊட­கத்­தடை குறித்து அதி­ருப்தி தெரி­வித்­தனர்.

இது தொடர்பா மஹேல ஜயவர்தன தெரிவித்திருக்கையில், சங்­கா­வுக்கும் எனக்கும் ஊட­கங்­க­ளுக்கு கருத்­துக்­களை தெரி­விக்க கிரிக்கெட் சபை­யினால் கட்­டுப்­பாடு விதிக்­கப்பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் நாங்கள் உல­கக்­கிண்ண தொட­ருக்­காக பங்­க­ளாதேஷ் சென்­றி­ருந்த போது அங்கு இது உங்­களின் இறுதி இரு­பது–-20 உல­கக்­கிண்ண தொடரா  என கேட்­கப்­பட்­டது.

இதன்­போது எனது வயதை கருத்தில் கொண்ட நான் அடுத்த  உல­கக்­கிண்­ண த்தில் விளை­யாட முடி­யாது என்­பதால் ஆம் என்று பதி­ல­ளித்­தேன்.

ஆனால் இதை சரி­யாக புரிந்து கொள்­ளாத இலங்கை கிரிக்கெட் சபையின் செய­லாளர், எங்­க­ளிடம் இது குறித்து கருத்து எத­னையும் கேட்­காது ஊட­கங்கள் சில­வற்­றுக்கு எங்­க­ளைப்­பற்றி தவ­றான தக­வல்­களை கூறி­யுள்ளார்.  பொறுப்பு மிக்க அதி­காரி ஒருவர் இவ்­வாறு நடந்து கொண்­டமை எங்­க­ளுக்கு மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது. தொட­ருக்கு முன்­ன­தா­கவே நாம் மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்தோம்.

அதே­வேளை தேர்­வுக்­குழுத் தலைவர் சனத் ஜெய­சூ­ரிய எங்­களை அணுகி அக்­கு­ழப்­ப­நிலை குறித்து தெளி­வ­டைந்து கொண் டார்.

இதே­வேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த குமார் சங்கக்­கார,  மஹே­லவின் கருத்­துக்கு நானும் உடன் படு­கிறேன் எனவும் பத்­தி­ரிகை ஒன்று   கேட்ட கேள்­விக்கு இது எனது இறுதி உல­கக்­கிண்ணம் என்று மாத்திரமே பதில் அளித்திருந்தேன் என்றும் கூறினார். இதற்கு அப்பால் எந்தக் கருத்­தையும் தெரி­விக்­க­வில்லை. ஆனால் ஊட­கங்கள் சில தவ­றான விமர்­ச­னங்­களை தெரி­வித்­தி­ருந்­தமை மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது.

கிரிக்கெட் சபை மறுப்பு

இலங்கை கிரிக்கெட் சபை குறித்து இலங்கை அணியின் சிரேஷ்ட  வீரர் மஹேல ஜெய­வர்­தன வெளி­யிட்ட கருத்து தவ­றா­னது என இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.

மஹேல ஜெய­வர்­தன,  இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்­பாடு தொடர்பில் அதி­ருப்தி வெளி­யிட்டார்.
மேலும், தனக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்து ஊடகத் தடை தொடர்பில்  கவலை தெரி­வித்­த மஹேல, ஓய்வு குறித்த செய்தி விட­யத்தை கிரிக்கெட் சபை சரி­யான முறையில் கையா­ள­வில்லை எனவும் பொறுப்­புள்ள அதி­கா­ரி­களின் செயற்­பா­டுகள் குறித்தும்  வ­ருத்தம் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லை­யி­லேயே  மஹேல ஜெய­வர்­தன வெளி­யிட்ட கருத்து தவ­றா­னது என இலங்கை கிரிக்கெட் சபை நேற்று  அறி­வித்­தது.

இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் அதன் அதி­கா­ரி­களின் நற்பெயர்­க­ளுக்கு இழுக்கு ஏற்­ப­டுத்தும் வகையில் மஹேல வெளி­யிட்­டுள்ள கருத்­துக்கள் அமைந்திருக்­கி­ன்றன.

உலக இரு­பது–-20  கிண்ண தொடரின் போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்க இலங்கை கிரிக்கெட் சபை தடை விதித்­த­தாக மஹேல நேற்­றைய (நேற்று முன்தினம்) ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் தெரி­வித்தார்.
எனினும், கிரிக்கெட் வீரர் ஒருவர் ஓய்வு பெறு­வது போன்ற முக்­கிய தீர்­மா­னங்கள் எடுக்கும் போது முதலில் கிரிக்கெட் நிறு­வ­னத்­திற்கு அறி­வித்­தி­ருக்க வேண்டும் .

ஆனால், மஹேல ஜெய­வர்­த­னவும் குமார் சங்­கக்­கா­ரவும் தங்களது ஓய்வு அறிவிப்பை முதலில் ஊடகங்களுக்கே விடு த்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் சபை  குறிப்பிட்டிருந்தது.



ஓய்வு கடிதம்

இந்நிலையில்  மஹேல ஜயவர்தன  தனது உத்தியோகபூர்வ ஓய்வு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரிக்கு இன்று காலை வழங்கியுள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2014/04/10/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.